Pages

Monday, 22 March 2021

இந்தியாவின் 29 மாநிலங்கள் யாவை?

 இந்தியாவின் 29 மாநிலங்கள் யாவை?

  1. ஆந்திரா (ஹைதராபாத்)
  2. அருணாச்சல பிரதேசம் (இட்டாநகர்)
  3. அஸ்ஸாம் (டிஸ்பூர்)
  4. பீகார் (பாட்னா)
  5. சத்தீஸ்கர் (ராய்ப்பூர்)
  6. கோவா (பனாஜி)
  7. குஜராத் (காந்திநகர்)
  8. ஹரியானா (சண்டிகர்)
  9. இமாச்சலப் பிரதேசம் (சிம்லா)
  10. ஜம்மு & காஷ்மீர் (ஸ்ரீநகர் {கோடைகாலம் }, ஜம்மு{குளிர்காலம் } )
  11. ஜார்க்கண்ட் (ராஞ்சி)
  12. கர்நாடகா (பெங்களூர்)
  13. கேரளா (திருவனந்தபுரம்)
  14. மத்திய பிரதேசம் (போபால்)
  15. மகாராஷ்டிரா (மும்பை)
  16. மணிப்பூர் (இம்பால்)
  17. மேகாலயா (ஷில்லாங்)
  18. மிசோரம் (ஐஸ்வால்)
  19. நாகாலாந்து (கோஹிமா)
  20. ஒடிசா (புவனேஸ்வர்)
  21. பஞ்சாப் (சண்டிகர்)
  22. ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்)
  23. சிக்கிம் (காங்டாக்)
  24. தமிழ்நாடு (சென்னை)
  25. தெலுங்கானா (ஹைதராபாத்)
  26. திரிபுரா (அகர்தலா)
  27. உத்தரகண்ட் (டெஹ்ராடூன்)
  28. உத்தரபிரதேசம் (லக்னோ)
  29. மேற்கு வங்கம் (கொல்கத்தா)

நோட்டா என்றால் என்ன என்பதன் விளக்கம்



ஜனநாயக முறைப்படி "நோட்டா" என்பது மிக முக்கியமான தேவையான ஓன்று.

கட்சிகள் அவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு நிறுத்தி இருக்கின்ற வேட்பாளர்கள் ஒருவரும் சரியில்லை, அவர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதை நாம் வெளிப்படுத்தும் உரிமை நமக்கு இருக்கின்றது.

இதன் காரணமாக.., இவனும் சரியில்லை அவனும் சரியில்லை , இருப்பதில் ஒருத்தனை தேர்ந்தெடுப்போம் என்ற அவலம் நீங்கும். கட்சிகளும் சரியான நபரை நிப்பாட்டும். இதுவே சிறந்த ஜனநாயகம் .

அப்படிப்பட்ட முக்கியமான நோட்டாவை நமது நாட்டில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

நோட்டா என்பது நமது தமிழகத்தை பொறுத்தவரை..., எது கூடுதல் வாக்கு வாங்குகிறது " பாஜக வா , நோட்டாவா" என்ற அடிப்படையிலேயே நோட்டா பார்க்கப்படுகின்றது.

நோட்டாவை சரியாக பயன்படுத்தும் முறை :

ஒரு தொகுதியில் நிற்கும் வேற்பாளர்கள் அனைவரையும் விட, நோட்டா அதிகமான ஒட்டு வாங்கினால் அந்த தொகுதியில் நிற்கும் அனைத்து வேற்பாளர்களும் தகுதி நீக்கம் (ஆயுற்கால தகுதி நீக்கம் அல்லது குறைந்தபட்சம் இரண்டு தேர்தல்களுக்காவது தகுதி நீக்கம்) செய்யப்பட்டு , புதிதாக வேற்பாளர்கள் நிறுத்தப்பட்டு மறுதேர்தல் அந்த தொகுதிக்கு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தால் மட்டுமே நோட்டா என்பது சரியான ஒன்றாக இருக்கும்.

அப்படியில்லை என்றால் நோட்டாவுக்கு போடுவதும் , செல்லாத வாக்கும் ஒன்றுதான்.

நோட்டாவை மேற்கண்டவாறு செயல்படுத்தினால் மட்டுமே , தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேற்பாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க வேண்டுமே என்ற பயம் இருக்கும் . இல்லை என்றால் அடுத்த தேர்தலில்கூட நிற்க முடியாமல் போய்விடுமே என்ற பயத்தில் நல்லது செய்ய முற்படுவார்கள் .

இதுவே சிறந்த ஜனநாயகம்.

ஆனால் சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நமது அரசியல்வாதிகள் தங்களுக்கு பாதகமாக உள்ள ஒன்றை துணிந்து செயல்படுத்த விரும்புவார்களா என்ன ..?



இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.சேகு அவர்களுக்கு மிக்க நன்றி !!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Sunday, 21 March 2021

ஏசுதாஸின் 'ஹரிவராசனம் ' உண்மையில் அப்பாடல் என்ன கூறுகிறது?

 

-

ஹரிவராசனம் பாடலுக்கான பொருள்

--------------------

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்

அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

சரணகீர்த்தனம் பக்தமானஸம்

பரணலோலுபம் நர்த்தனாலயம்

அருணபாசுரம் பூதநாயகம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர்.

உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரே உயிர்களின் வேந்தரே,

அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பிரணயசத்யகம் பிராணநாயகம்

ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்

பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

துரகவாகனம் சுந்தரானனம்

வரகதாயுதம் தேவவர்ணிதம்

குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திருஉருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்

திரிநயன பிரபும் திவ்யதேசிகம்

திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களைத் தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்;

அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பவபயாபகம் பாவுகாவகம்

புவனமோகனம் பூதிபூசணம்

தவளவாகனம் திவ்யவாரணம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர்,

இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர்.

வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீங்கள்.

அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்

களபகோமளம் காத்ரமோகனம்

களபகேசரி வாஜிவாகனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்

ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்

ச்ருதிமனோகரம் கீதலாலசம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.





இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.ராமநாதன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Monday, 15 March 2021

சங்கக் காலப் பாடல்களில் தற்போதைய சென்னை எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது?

சங்ககாலத்தில் சென்னை என்னும் நகரம் இல்லை. 

ஆனால் இன்றைய சென்னையில் உள்ள ஊர்களும் சங்காலத்தில் இருந்த சங்க பெயர்களும்.

மயிலாபூர் - மயிலை, 

திருவல்லிக்கேணி - அல்லிக்கேணி, திருவெற்றியூர் - ஒற்றியூர், திருவான்மியூர் -வான்மீகியூர், 

போன்ற கடற்கரை கிராமங்கள் இருந்தன. இவை ஆழ்வார்கள், நாயன்மார்கள், பதிகங்களில் இடம் பெற்றுள்ளன .


        தமிழால் இணைவோம் !!!

           அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 14 March 2021

பொம்பெயி (Pompeii) மக்கள் ஏன் கல்லாக மாறினார்கள் என்பதை பற்றி வரலாறு

 

பாம்பீ அல்லது பொம்பெய் அல்லது பாெம்பெயி.... நான் நீங்கள் கேள்வியில் கேட்ட பெயரையே குறிப்பிடுகிறேன்.

பொம்பெயி (Pompeii) மக்கள் என்பவர்கள் யார்?ஏன் அவர்கள் கல்லாக மாறினார்கள்? என்பவை பற்றி இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

வரலாறு பாடப் புத்தகத்தில் நாம் மொகஞ்சதாரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்திருப்போம். இந்நகரம் மண்ணில் புதையுண்டு அழிந்து போன ஒரு நகர நாகரிகம் என்பது நாம் அறிந்ததே.... ஏறத்தாழ இதேபோன்றுதான் பொம்பெயி நகரமும் வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோய் அழிந்துபோனது.......

அப்பொழுதைய ரோம் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட நகரம் தான் பொம்பெயி... தற்போதைய இத்தாலி நாட்டின் கட்டுப்பாட்டில் காட்சி தளமாக உள்ளது பொம்பெயி.......

இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடா கடற்கரையின் அருகில் ஒரு மிகப்பெரிய மலை உள்ளது.....அது ஒரு சாதாரண மலை அல்ல பல ஆபத்துக்களை நிகழ்த்திய எரிமலை.....அந்த எரிமலையின் பெயர் வெசுவியஸ் மலை(Mount Vesuvius)...

படம்:வெசுவியஸ் எரிமலை(நன்றி:கூகுள்)

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெசுவியஸ் எரிமலையை ஒட்டி பல நகரங்கள் இருந்துள்ளது....அதில் குறிப்பிடத்தக்க பெருநகரங்களாக பொம்பொயி (Pompeii) நகரமும், ஹெர்குலேனியம்(Herculaneum) நகரமும் ஆகும்....இங்கே பல நகரங்கள் உருவானதற்கு முக்கிய காரணம் நேப்பிள்ஸ் (Naples) கடற்கரையே.... ஆதலால் இக்கடற்கரையை ஒட்டி அப்போதைய கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை.. இருப்பினும் பொம்பெயி நகரில் மட்டும் ஏறத்தாழ 25000 பேர் வாழ்ந்திருப்பார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்....இந்த நேப்பிள்ஸ் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த நகரத்தார்கள் உணவகம், கலைநிகழ்ச்சி கூடம்,துறைமுகம், விளையாட்டு அரங்கம், பொதுக்கழிப்பிடம் என்று கட்டட அமைப்பிலும், நாகரிக வளர்ச்சியிலும் செல்வ செழிப்பாக புகழ்பெற்றிருந்தார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறாக எப்பவும் பரப்பரப்பாக இருந்து கொண்டிருந்த நேப்பிள்ஸ் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த நகர வாசிகள் .....அந்த கடற்கரையை ஒட்டியுள்ள..,நான் முதலிலே குறிப்பிட்ட வெசுவியஸ் எரிமலையால் ஏற்படும் ஆபத்தை உணரவில்லை.....ஏனெனில் வெசுவியஸ் எரிமலை அப்பொழுதைய காலகட்டத்தில் அதாவது கி.மு 79 க்கு முன்பு 40க்கும் மேற்பட்ட முறை அவ்வப்போது புகையை கக்கிய வண்ணம் இருந்தது..... இந்த எரிமலையை ஒட்டி வசிக்கின்ற மக்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணம்...., அறிவியல் வளராத காலகட்டம் என்பதால் அந்த எரிமலையை கடவுளுக்கு நிகராக அம்மக்கள் நினைத்தனர்.. கடைசியில் தான் தெரிந்தது அந்த எரிமலை கடவுள் அல்ல தங்களின் உயிரை பறிக்க வந்த எமன் என்று.......

கி.மு 79 ஆம் ஆண்டு ஒரு நாள் வழக்கம் போல் பொம்பெயி மக்களுக்கு அன்றைய விடியல் விடிந்தது....., ஆனால் அந்த விடியல் தான் இவர்களுக்கு கடைசி விடியலும் கூட..காலை 8 மணி இருக்கும் பெரும் சப்தத்துடன் வெசுவியஸ் எரிமலை புகையை கக்கியது...அந்த எரிமலையை ஒட்டி உள்ள மக்களின் அலட்சியப்போக்கால் இது "ஏதோ கடவுளின் திருவிளையாடல்" என்று நினைத்து கொண்டு தங்களது பணிகளை வழக்கம் போல் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பறவைகள் அனைத்தும் வானில் வட்டமிட்டு எச்சரிக்கை விடுகின்றது....

நண்பகல் 1 மணி இருக்கும்...கொஞ்சமாக வந்த புகை பெரும் சப்தத்துடன் கரும் புகையாக மாறி அதிக அளவில் வெளியேறுகிறது..... தற்போது மக்களுக்கு பயம் ஏற்பட்டு பரப்பரப்புடன் தப்பிக்க முற்படுகின்றனர்....கொஞ்சம் கொஞ்சமாக புகை ஏரிமலையை ஒட்டியுள்ள பொம்பெயி போன்ற நகரங்களுக்கு பரவவும் செய்தது.... எரிமலை வெடித்து நெருப்பு பிழம்புடன், எரி கற்களையும் மழையாக வாரி இறைக்கின்றது..... தப்பிக்க நினைத்த மக்கள் எரிமலையில் இருந்து வெளியிடப்பட்ட CO2 கலந்த புகையால் ஆங்காங்கே முடங்குகின்றனர்.

நண்பகல் 3 மணி இருக்கும்... தற்போது அந்த நகரம் முழுவதும், அழுகுரலும், கூச்சலுமாக இருக்கிறது....எல்லா இடமும் எறிகற்கலும், புகையும், சாம்பலுமாய் காட்சி அளிக்கிறது. CO2 வாயுவால் மக்கள் சுவாசிக்கவே சிரமப்படுகின்றனர்.... எரிமலை சீற்றம் அதிகரித்து அங்குள்ள மக்கள் ஒவ்வொருவராக இறக்கவும் செய்கின்றனர். எரிகற்கலால் அங்குள்ள மாடமாளிகைகள் அனைத்தும் தரைமட்டமாகிறது....

மாலை 5 மணி இருக்கும்....ஒட்டு மொத்த பொம்பெயி நகரமும், எரிமலை சீற்றத்தால் நரகமாக காட்சியளிக்கிறது....நகரவாசிகள் அனைவரும் இறக்கின்றனர்....அந்த இரவு விடிவதற்குள் ஒட்டுமொத்த பாெம்பெயி நகரமும் எரிமலை சாம்பலால் மூடப்படுகிறது...

இந்த எரிமலை சீற்றத்தால் பொம்பெயி நகரத்துடன், ஹெர்குலேனியம், ஒப்லொன்டிஸ் போன்ற நகரங்களும் எரிமலை சாம்பலால் மூழ்கடிக்கப்பட்டது.. மேலே வெசுவியஸ் எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை வரைபடத்தில் நிழலிட்டு காட்டப்பட்டுள்ளதை கவனித்தால் நன்கு புரியும்....... இம்மக்கள் கப்பல் மூலம் தப்பிக்க வழி இருந்தும் தப்பிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் பலத்த காற்றின் காரணமாக CO2 கலந்த எரிமலை புகை விரைவில் அங்கு பரவி இவர்களை நகர முடியாமல் செய்துவிட்டது........

சில நூறு ஆண்டுகள் ஓடியது....எரிமலை சாம்பலினால் எரிமலையை ஒட்டியுள்ள நிலப்பரப்பு வளமிக்க மண்ணாக மாறி செடி, கொடி, மரங்கள் வளர்ந்து "பச்சைப்பசெல்" என்று காட்சியளித்ததால் வெசுவியஸ் எரிமலை ஏற்படுத்திய அழிவை காலப்போக்கில் மக்களும் மறந்தனர்....அது மட்டும் இல்லாமல் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டும் அங்கு மக்கள் இன்னமும் பெரும் அளவில் வாழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றனர். இத்தாலி நாட்டின் வெசுவியஸ் எரிமலையை ஒட்டியுள்ள நகரங்களின் இன்றைய நிலை கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக மண்ணுக்குள் உறங்கி கொண்டிருந்த பொம்பெயி நகரமானது......, கி.பி 1748 இல் புதைப்பொருட்கள் தோண்டும் குழுவால் புதையலுக்காக பொம்பெயி அமைந்த பகுதியில் தோண்டுகின்றனர்....ஆனால் புதையலுக்கு பதிலாக சாம்பலால் மூடப்பட்ட எலும்பு கூடுகள்தான் கிடைக்கிறது.....இதனால் அந்நாட்டு அரசானது தொல்லியல் ஆய்வுக்கு அந்த இடத்தை உட்படுத்துகின்றனர். பல தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். முதலில் கட்டடங்களும், பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது..., பல ஆண்டுக்கு பின்புதான் இந்த மனித எலும்பு கூடுகள் பலவற்றை கண்டுபிடித்தனர்..இந்த எரிமலை விபத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் 20000த்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்..ஆனால் இதுவரை 1500க்கும் அதிகமான எலும்பு கூடுகள் மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

1800 ஆண்டுகள் ஆகியும் இந்த எலும்புக் கூடுகள் எரிமலை சாம்பலினால் போர்த்தப்பட்டு பாதுகாப்பாக இருந்துள்ளதுதான் ஆச்சரியம்...அந்த சாம்பலின் வெப்பத்தாலும், சாம்பலில் உள்ள உப்புக்களாலும் இவை மம்மிக்கள் போன்று பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது..... இருப்பினும் பல மனித எலும்பு கூடுகள் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

மற்றபடி இங்கே கேள்வியில் கேட்டுள்ளது போன்று பொம்பெயி மக்கள் கல்லாக எல்லாம் மாறவில்லை.... மாறாக கல்லாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்...அது எப்படி கல்லாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்களா.....

வரலாற்று ஆய்வாளர்கள் எரிமலை சாம்பலில் புதையுண்ட பொம்பெயி நகரை அகழ்வாராய்ச்சி செய்த போது..., எரிமலை சாம்பலினால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிக்கள் போன்ற மனித எலும்பு கூடுகளை கையாளும் போது சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு பாரிஸ் சாந்துவை(plaster of paris) கரைத்து அந்த மனித எலும்புக் கூடுகள் மீது பூசி மாேல்டிங் செய்து விட்டனர்......மேலும் இது பொம்பெயி நகர மக்கள் தங்களது கடைசிநேர உயிர் போராட்டத்தை விளக்கவும் வழிவகுக்கும். ஆதலால் தொல்லியல் ஆய்வாளர்கள் பாரிஸ் சாந்துவை தங்களது ஆய்வுக்கு ஒரு காரணியாக பயன்படுத்தியுள்ளனர். ஆய்வாளர்கள் பாரிஸ் சாந்துவை காலம் காலமாக பயன்படுத்தியும் வருகின்றனர்.... கீழே உள்ள படம் அதற்கான விளக்கத்தை தெளிவாக காட்டும்,

பொம்பெயி மக்கள் இறக்கும் போது அடைந்த வலியையும், வேதனையையும் பாரிஸ் சாந்து சேர்மத்தை பயன்படுத்தி மோல்டிங் செய்து ஆய்வாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது கல் நெஞ்சத்தையும் உருக வைத்துவிடும். கீழே சில படங்களை இணைக்கிறேன் பாருங்கள்.

⬆️ஒரு தாய் தன் குழந்தையை கடைசியாக தன் மீது சுமந்த வண்ணம் இறந்துள்ளார்.

⬆️வலியால் ஒரு அறையில் குழந்தைகள் முதற்கொண்டு துடித்து இறந்துபோன காட்சியை இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நபர் வேதனையுடன் பார்க்கும் காட்சிதான் இது..

⬆️உயிர் பயத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபடி சோகமாக அமர்ந்த நிலையில் இறந்த ஒரு இளைஞரின் காட்சி தான் இது.

⬆️தம்பதியினர் இருவர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிய வண்ணம் இறந்துபோன காட்சிதான் இது. போதும்டா சாமி நம் எதிரிக்கு கூட இது போன்ற ஒரு துயரச்சம்பவம் வரக்கூடாது.

படம்: ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொம்பெயி நகரின் வீதி....

270 ஆண்டுகளாக இத்தாலியில் தொடரும் இந்த தொல்லியல் ஆய்வானது இன்றும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கூட பொம்பெயி நகரில் துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..அதன் படம் கீழே....

மேலும் இந்திய சிற்பக்கலையுடன் ஒத்துப்போகும் ஏனைத்தந்தத்துடன் கூடிய இலட்சுமி சிலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...இன்று வரையில் கலை அரங்கம், விளையாட்டு கூடம், உணவு விடுதி, நூலகம், கோவில்கள், டைல்ஸ் பதிக்கப்பட்ட மாட மாளிகைகள், கண்கவர் ஓவியங்கள், சிற்பங்கள், பாண்டங்கள் என ஆய்வாளர்கள் பொம்பெயி நகரில் புதைபொருட்களை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.... ரோம பேரரசு செல்வ செழிப்பாக வாழ்ந்தனர் என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்களாக காட்சியும் படுத்தியுள்ளது இத்தாலிய அரசு.

உலக நாடுகள் பல இந்த ஆய்விற்காக ஆதரவு கரம் நீட்டியுள்ளது. UNESCO-வும் இந்த பொம்பெயி நகரை உலக பாரம்பரிய களமாக அறிவித்து பெருமை சேர்த்துள்ளது......

ஆதலால் முக்கியமான உலக சுற்றுலா தளங்களில் இத்தாலியில் உள்ள இந்த பொம்பெயி நகரமும் ஒன்று என்றால் அது மிகையாகாது....ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.....கோராவாசிகள் யாரேனும் வெளிச்சுற்றலா செல்ல முடிவு செய்திருந்தால் இந்த இடத்திற்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்...

நன்றி.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.இராஜபதி இரா அவர்களுக்கு  மிக்க நன்றி !!! 

    தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Saturday, 13 March 2021

சாலைகளில் வரையப்படும் இடைவெளி விட்ட கோடுகள் மற்றும் தொடர் கோடுகள் பற்றி குறிப்பு

 

விடுபட்ட கோடுகள்

ஒரு சாலையில் இதுபோல கோடுகள் இடைவெளி விட்டு மத்தியில் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு வாகனம் செல்லும்போது அங்கு அதை முந்திச் செல்லலாம்.

தொடர் கோடு

இதே நடுவில் தொடர் கோடு போட்டிருந்தால் அங்கு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லக் கூடாது.

பெரும்பாலும் வளைவுகளில் இக்கோடு வரையப்படும்.

மஞ்சள் கோடு

இந்த கோடு இருந்தால் ரொம்ப முக்கியமான தேவையில் நீங்கள் வாகனங்களை முந்திச் செல்லலாம்.

பொதுவாக இந்த மஞ்சள் கோடுகள் சாலைகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் போடுவர்.

இரட்டை மஞ்சள் கோடு

இப்படி இரண்டு மஞ்சள் கோடுகள் போட்டிருந்தால் அது மிகவும் அபாயகரமான பகுதி.

மிக கவனமா போங்கன்னு அர்த்தம்.

பெரும்பாலான வளைவுகளில் இக்கோடுகள்‌ இருக்கும்.

இங்கு கண்டிப்பா ஓவர் டேக் பண்ணக்கூடாது என்பது பொருள்.


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 12 March 2021

பூமியின் மிகவும் தாழ்வான பகுதி எது?

 

மரியானா அகழி (Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 மீட்டர்கள் ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் 108.6 மெகாபாசுக்கல் ஆகும்.

இது கடல் மட்டத்தில் உள்ள பொது வளிமண்டல அமுக்கத்திலும் 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பு : உலகின் மிக உயரமான பகுதி எவரெசுட்டு சிகரம் இதன் உயரம் : 8,848 மீட்டர்கள்.

இதை விட 2,000 மீட்டர்கள் இந்த மரியானா அகழி ஆழமுடையது.

இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.தூயா அவர்களுக்கு மிக்க நன்றி !!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


மதம் மாற்றம் பற்றி ஒரு சிறு குறிப்பு

 மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரின் கடனோ , நோயோ தீருவதில்லை, விபத்தோ இறப்போ தடுக்கப்படுவதில்லை, எனினும் மதத்தை பரப்ப இத்தனை விளம்பரம், பிரச்சாரம் (குறிப்பாக கிறிஸ்தவத்தில்) ஏன்?

ஒரு குட்டி கதை.

ஒரு பைத்தியம் ஒரு பாழும் கிணற்றுக்கு அருகில் நின்று 2000, 2000, 2000 என்று எண்ணி கொண்டிருந்தானாம். அவ்வழியே போய் கொண்டிருந்த ஒருவர் இவன் என்னத்த எண்ணி கொண்டு இருக்கிறான் என்ற ஆவலில் 'என்ன 2000, 2000 என்று சொல்லிகிட்டே இருக்கே?' என்று கேட்டார். அதற்கு அந்த பைத்தியம் கிணற்றை காண்பித்தது. அவர் கிணற்றில் பணத்தை தொலைத்து விட்டானோ என்று எட்டி பார்த்தார். பைத்தியம் சட்டென்று அவரை கிணற்றுக்குள் தள்ளி விட்டு, 2001, 2001, 2001 என்று எண்ண ஆரம்பித்தது. இப்படி தான் மதம் மாறுபவனுக்கும் மாற்றுபவனுக்கும் உள்ள நிலை.

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டம் தான்!


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.வெங்கி நடராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Thursday, 11 March 2021

மயிலாஞ்சி' என்றால் என்ன?

 

மயிலாஞ்சி என்றால் மருதாணி என்று பொருள். இந்த அழகிய தமிழ்ச்சொல் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

பை (=பசுமை, அழகு, நிறம்) + இலை + ஆசு (=எழுது) + இ = பயிலாச்சி >>> மயிலாஞ்சி = பச்சையாக எழுதினால் அழகிய நிறம் தரும் இலை = மருதாணி இலை.





இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.திருத்தம் பொன் சரவணன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!



       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..