Pages

Friday, 19 November 2021

கஜினி முகமது படை மற்றும் இராஜராஜசோழன் படை இதில் எது வலிமையானது ???

 பதில் : இராஜராஜசோழனின் படையே....


அருண்மொழிவர்மன் என்கின்ற இயற்பெயரைத் தாங்கிய பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் (கி.பி 947 — கி.பி 1014)


கஜினி முகமது (கி.பி 971 – கி.பி 1030)


பொதுவாக பேரரசு விரிவாக்க நோக்கத்தில் படையெடுப்பவர்கள் எதிரிகளின் கோட்டைகள் மற்றும் ராணுவ நிலைகளையும் தான் தாக்குவார்கள்.

ஆனால் கஜினி முகம்மது பிற நாட்டு வளங்களை கொள்ளையடித்தே தனது நாட்டை வளப்படுத்துவதே நோக்கம் என்பதால்,பெரும்பாலும் செல்வவளம் மிக்க பகுதிகளையே தாக்கினான். (பஞ்சாபை தனது அரசுடன் இணைத்துக் கொண்டது உள்ளிட்ட ஒரு சில அரிதான விதிவிலக்குகள்)செளராஷ்டிரம், கன்னோசி, மதுரா, தானேஸ்வர் ஆகிய பகுதிகளையும் வெற்றிபெற்று கொள்ளையடித்துச் சென்றான்.

இந்த நோக்கத்தில்தான் கி.பி 1025 இல் சோமநாதர் சிவன் கோயிலின் மீது தாக்குதல் நடத்துகிறான். எதிர்த்து நின்ற ஆயிரக்கணக்கானோர் கொஞ்சமும் கருணையின்றி கஜினியின் படைகளால் கொன்று குவிக்கப்பட்டு கோயில் சூறையாடப்பட்டது.

பேரரசர் ராஜராஜ சோழனின் போர்கள்

விசயாலய சோழன் பின்வந்த சோழர்களின் சோழப் பேரரசை உலகமே வியக்கும் வண்ணம் அமைத்து நிலைபெறச் செய்தார் பேரரசன் இராசராசன்.

  1. ராஜராஜன்
  2. காந்தலூர் கொண்டான்
  3. அழகிய சோழன்
  4. மும்முடிச்சோழன்
  5. ராஜ சர்வக்ஞன்
  6. சோழநாராயணன்
  7. அபயகுலசேகரன்
  8. அரித்துர்க்கலங்கன்
  9. அருள் மொழி
  10. ரணமுக பீமன்
  11. ரவி வம்ச சிகாமணி,
  12. ராஜ பாண்டியன்
  13. ராஜ கேசரிவர்மன்
  14. சோழேந்திர சிம்மன்,
  15. ராஜ மார்த்தாண்டன்
  16. ராஜேந்திர சிம்மன்
  17. ராஜ விநோதன்
  18. உத்தம சோழன்
  19. உத்துக துங்கன்
  20. உய்யக் கொண்டான்,
  21. உலகளந்தான்
  22. கேரளாந்தகன்,
  23. சண்ட பராக்கிரமன்
  24. சத்ருபுஜங்கன்
  25. சிங்கனாந்தகன்
  26. சிவபாத சேகரன்
  27. சோழகுல சுந்தரன்
  28. சோழ மார்த்தாண்டன்
  29. திருமுறை கண்ட சோழன்
  30. சன நாதன்
  31. ஜெயகொண்ட சோழன்
  32. தெலிங்க குலகாலன்
  33. நித்ய விநோதன்
  34. பண்டித சோழன்
  35. பாண்டிய குலாசனி
  36. பெரிய பெருமாள்
  37. மூர்த்தி விக்கிரமா பரணன்
  38. சத்திரிய சிகாமணி
  39. கீர்த்தி பராக்கிரமன்

ஆகிய பட்டப் பெயர்களை தாங்கிய பேரரசர் மாவீரன் ராஜராஜ சோழன் தனது பேரரசின் விரிவாக்கத்தின் பொருட்டு பிற நாடுகளை வெற்றி பெறும் நோக்குடன் நிலையான படையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எட்டாண்டு கால ஏற்பாட்டுக்கு பின்னர்,திருவனந்தபுரத்தில் உள்ள காந்தளூர் சாலை என்னுமிடத்தில் போர் புரிந்து வெற்றி பெற்றார்.

சேரர்கள் பாண்டியர்களை வென்ற பின்னர் இலங்கை மீது படை எடுத்தார். ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தலைநகரான அனுராதபுரம் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து இலங்கையின் வடக்குப் பகுதியும் வீழ்ந்தது. அப்பகுதிக்கு மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டது.

மேலைச் சாளுக்கியருக்கு எதிராக தனது மகன் ராசேந்திர சோழன் தலைமையில் வலிமையான படையை அனுப்பினார் இராசராசன். மேலைச் சாளுக்கியர் படை சிதறி ஓடிய பின் அவர்களுடைய தளபதி கேசவன் கைது செய்யப்பட்டார். சத்தியாசிரயனின்(மேலைச்சாளுக்கிய மன்னர்) மற்றொரு போர் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

இப்போரின் விளைவாக துங்கபத்திரை ஆறு சோழப் பேரரசுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் இடையேயான எல்லையானது.

இராசராசன் படையெடுப்பு தென்னிந்தியா தாண்டி மாலத்தீவுகள் என்று அழைக்கப்பட்ட மாலைத் தீவுகளை வென்றன. முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகள் இராசராசனால் கைப்பற்றப்பட்டன. இப்படையெடுப்புக்கு பெரிதும் காரணமாக இருந்தது இராசராசனின் வலிமைமிக்க கடற்படையகும்.

  • இதுவரை அமைந்த தமிழ் பேரரசுகளிலேயே தமிழ் தேசிய இனத்தின் மணிமகுடமாக அமைந்த சோழப் பேரரசு ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் உலகெங்கும் தனது புலிக் கொடியை பறக்க விட்டது.
  • தனது தந்தை இராஜராஜ சோழனின் வழிகாட்டுதலின்படி ராஜேந்திர சோழன் (கஜினி முகமதுவை போல்)படை எடுத்த நாடுகளை கொள்ளையடித்து நிர்மூலமாக்கி பேரரசுடன் இணைத்துக் கொண்டிருக்கவில்லை.
  • ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் (கஜினி முகம்மது சோமநாதர் சிவன் கோயிலை தாக்கிய அதே ஆண்டில்) ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனேசியப் பகுதி) வென்றான்.
  • கடாரத்து (தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி) ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவரப்பட்டன. கொள்ளை அடிக்கவில்லை அவனுக்கு பணிந்த மன்னர்கள் அளித்த பரிசுகள் தான்.
  • மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன் சோழப் பேரரசுடன் இணைத்து ஆட்சி செய்யவில்லை.
  • மாற்றாக பொருளாதார வளர்ச்சி நோக்கத்தில் வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளின் கடல் பகுதிகள் வழியே சோழப் பேரரசின் வணிகர்கள் பயணம் செய்யும்பொழுது அந்தந்த நாடுகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு அந்த மன்னர்களும் பணிந்தனர்.
  • இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.
  • சோழர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ சமயத்தைப் பரப்பியதாக எந்தக் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.

கஜினி முகமதுவின் படைகளோடு ஒப்பிடுகையில் ராஜராஜ சோழனின் படை பிரிவு குறைந்தபட்சம் எட்டு மடங்காவது வலிமையானது.

  • சோழர்களின் படை ஏறக்குறைய 15 லட்சம் வீரர்களையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானை படையினரையும் குதிரைப் படைகள் மற்றும் காலாட் படையினரையும் கொண்டிருந்தன.
  • இவை இல்லாமல் காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப் படைகள் இருந்தது. ஒவ்வொரு பிரிவும் 1000-2000 வீரர்களையும் 500-1000 குதிரைகளையும் கொண்டிருக்கும்.இவர்கள் பின்புல பாதுகாப்பு அரணாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் செயல் புரிந்தனர்.
  • மருத்துவர் அணி - 200-300 மருத்துவர்கள் மருந்துப்பொருட்களை வண்டிகளில் இழுக்கும் குதிரைகளுடன் காணப்படுவர். போர்க்களங்களில் காயமடைந்த சோழப்பேரரசின் ராணுவ வீரர்களுக்கு உதவிபுரியும்.இதுபோன்ற படைப்பிரிவு உலகின் வேறு எந்த அரசிலும் இடம்பெற்றிருந்ததா என்று தெரியவில்லை.

கஜினியின் படைகள் இந்த அளவுக்கு வலிமை பெற்று விளங்கவில்லை.

ஒவ்வொரு முறை சிந்து நதியைக் கடந்து வருவதற்கு பெரும் பாடுபட்ட கஜினிமுகமது கங்கை நதியை கடக்க ஆயிரக்கணக்கான யானைகளை நதியில் இறக்கி அவற்றின் மீது லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை நடக்க வைத்துச் சென்ற சோழப்பேரரசின் வியூகத்தை கேட்டு நடுங்கிப் போயிருப்பார்.

கஜினி முகமதுவின் வட இந்திய போர் வெற்றிகளை ராஜராஜசோழன் அறிந்தாலும் அவரது போருக்கான தேவை பட்டியலில் கஜினிமுகமதுவின் பகுதிகள் எதுவும் இல்லை.

பேரரசின் புகழ் பரப்புதல் வணிகம் மற்றும் பண்பாட்டு நோக்கங்களுக்காக செம்மைப்படுத்தப்பட்ட சோழர்களின் அத்துமீறல் இல்லாத (படையெடுத்த நாடுகள் மீது)ராணுவத்தை ஒப்பிட்டால் முகமது கஜினியின் படை பாகுபலி படத்தில் வரும் காளகேயர் படைகளை போல காட்டுமிராண்டித்தனமான வன்மத்துடன் படையெடுத்த நாடுகளை சூறையாடிய நாசகாரப் படைகள்.

இவ்வளவையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட முகமது கஜினி, கடின முயற்சி எடுத்து கங்கைக் கரையைத் தாண்டி வந்து சோழர்களிடம் மிதி வாங்கி சிக்கி சின்னாபின்னமாகி சிதறி ஓடி தனது கனவுகளை சிதைத்துக் கொள்ள விருப்பம் இல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றிருப்பார்.

ராஜராஜ சோழனின் (மற்றும் ராஜேந்திர சோழன்)இலக்கில் தன்னுடைய பெயர் இல்லை என்பதே கஜினிமுகமதுவுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருந்திருக்கும்.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.குமரேசன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



Tuesday, 2 November 2021

யார் இந்த இயேசு ?

 ஏராளமான கானானிய மதங்கள் உருவான கானான் தேசத்தில் பெத்லஹேமில் பிறந்து உலகின் அதிக மக்கட் தொகையை கொண்ட முதன்மையான மதமாகியுள்ளது கிறிஸ்தவம் .மக்களை தேடி தேடி பரப்பிய முதல் மதம் கிறிஸ்தவம் தான்.

உண்மையில் இயேசு எப்போதும் மதம் பரப்பியது இல்லை அவர் யூத போதனைகளை செய்தார் , ஜோகோவா கடவுளின் புகழ் பாடிக் கொண்டிருந்தார் . கிறிஸ்தவ மதத்தை அவர் தோற்றுவிக்கவும் இல்லை பரப்பவும் இல்லை. இயேசு இறக்கும் வரையில் அவர் யூதமதத்தினையே பின்பற்றினார் இன்றைய கிறிஸ்தவர்களின் எந்த வழிபாட்டு முறையும் அவர் போதித்தது அல்ல.அப்போது இஸ்ரேலில் யூத மதம் தவிர வேறு எந்த மதமும் இல்லை. இயேசு யூதராக ஞானஸ்தானம் செய்து மதத்தில் இணைத்துக் கொண்டார். இவரது சகோதர் ஜோசப் தான் இவருக்கு யூதராக ஞானஸ்தானம் செய்து வைத்தார். நீண்டகாலமாக இயேசுவிற்கு ஞானஸ்தானம் தள்ளிக் கொண்டே போனது. ஜோர்டன் நதிக்கரையில் நீராடி புனித சடங்குகளை இயேசு செய்து அருட்செய்தி சொல்ல ஆரம்பித்தார் . இயேசு தன் வாழ் நாள் முழுவதும் யூதர்களின் கடவுளான ஜோகாவா வை தான் வழிபட்டார். கிறிஸ்தவர்கள் இயேசு வழிபட்ட ஜோகாவாவை ஏன் வழிபடுவதில்லை.ல்

தன்னைக் கடவுளாகவோ தூதுவராகவோ இயேசு அறிவித்ததில்லை. அவர் யூத மதத்தின் நற்செய்திகளை கூறினார். ஜோகாவாவின் புகழை பரப்பிக் கொண்டிருந்தார். அப்போதைய இஸ்ரேல் ரோமானியர்களின் அடிமையாய் இருந்தது. அவர்கள் டெம்பிள் மவுண்ட்டில் யூதர்களின் இரண்டாவது கோவிலையும் தகர்த்து அங்கு ரோமானிய மத வீனஸ் கோவிலை கட்டினர். மீண்டும் அங்கு யூதக் கோவில் கட்ட யூதர்கள் முனைந்தனர். இயேசுவை பின்பற்றும் யூதர்கள் அவரை மெசியா என நம்பினர். அதாவது யூத மத நூல் தோராவின்ப்படி உலகை மீட்க மெசியா வருவார். அவர் தான் இயேசு என்று அவரை பின்பற்றுபவர்கள் நம்பினர். அவரே மீண்டும் பிறந்து மொத்த மக்களையும் நல்வழிப்படுத்துவார் என்று பைபிளும் குரானும் கூறுகிறது. அதே வேளையில் குரான் இயேசு இறைதூதர் தான் கடவுளின் மகனல்ல என்கிறது அவர் மீண்டும் பிறந்து இஸ்லாமை பரப்பி மக்களிடம் சேர்ப்பார் . யூதர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்கவில்லை. இதனால் தான் யூதர்களை மொத்தமாக இஸ்ரேலிலிருந்து விரட்டியடித்தனர். ஹிட்லரும் படுகொலை செய்தார். அவர்களும் இறைதூதர் ஒருவர் உலகை யூத மயமாக்குவார் என்று காத்திக்கொண்டிருக்கின்றனர். அவர் இஸ்ரேலில் தான் பிறப்பார். அதற்காக தான் மீண்டும் இஸ்ரேலில் யூதர்கள் குடிபுகுந்துள்ளனர். இந்த இறைத்தூதர் வருகை ஹிந்து மதத்தின் கல்கி அவதாரத்தினை தழுவி தான் பல மதங்களில் வைத்துள்ளனர்.

இயேசு இறந்தபின் அவரை பின்பற்றும் யூதர்கள் ஜோகோவா வழிபாட்டை விட்டுவிட்டு இயேசுவை வழிபடத் தொடங்கினர். தனி வழிபாட்டு முறைகளை அமைத்து ஊர் ஊராக சென்று மதம் பரப்பினார்கள்.அன்பு செலுத்தி மதம் பரப்புதல் , அடிமைப் படுத்தி மதம் பரப்புதல் , வாள்முனையில் மதமாற்றுதல் , பொருள் கொடுத்து உதவி செய்து மதம் பரப்புதல் , பயமுறுத்தி மதம்மாற்றுதல் என முறையிலும் மதம் மாற்றியுள்ளனர். இயேசு எப்போதும் மதம் பரப்புங்கள் என்று கூறியதே இல்லை. பைபிளை தங்கள் இஷ்டம் போல் பாதிரியார்கள் மாற்றி அமைத்துக் கொண்டே இருந்தனர் பைபிளின் முழு அடிப்படை யூதர்களின் தோராவிலிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது .

கிறிஸ்தவர்கள் எப்போதும் தங்கள் மதத்தினை பரப்பும் சிந்தனையிலே உள்ளார்கள். தற்போது ஐரோப்பிய , அமேரிக்க கிறிஸ்தவர்கள் பெரிதும் மாறியுள்ளனர். ஹிந்துக்களை போல் மத சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இந்திய கிறிஸ்தவர் அவ்வாறு இருப்பதில்லை .

மூட நம்பிக்கைகள் அதிகம் இருக்கிறது கிறிஸ்தவர்களிடம் பூமி உருண்டை என்று சொன்னதிற்கு கொன்றவர்கள் ஆயிற்றே. மதம் பரப்ப முதலில் பணம் செலவழிக்கின்றனர். அதுவே அவர்கள் கிறிஸ்தவராக மதம் மாறிய பின் இறைவனுக்கு காணிக்கை , பங்கு தொகை கொடு என மத போதகர்கள் கறந்து விடுகின்றனர். இந்தியாவில் மதபோதகர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதித்துள்ளனர் . அதே வேளையில் மாற்று மதத்தினரிடம் சிறிது கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள். கிறிஸ்தவ பள்ளிகளில் ஹிந்து மாணவர்கள் போட்டு வைப்பதற்கும் , பூ வைப்பதற்கும் ,கயிறு கட்டியதற்கும் கொலை வெறி தாக்குதல் நடத்துவார்கள்.

கிறிஸ்தவ பள்ளிகளில் தீபாவளிக்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் கட்டாய பரீட்சை இருக்கும். முதல் நாள் மிகவும் தாமதப்படுத்தி தான் மாணவர்களை வெளியேற்றுவார்கள். தீபாவளியை கொண்டாடமல் அவர்கள் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம். கோவில் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை கட்டாயம் என்றாலும் வேண்டுமென்றே பள்ளி நடத்துவார்கள். அன்று விடுமுறை எடுக்கவும் விட மாட்டார்கள். மதம் மாறினால் நன்றாக படிக்கலாம். கஷ்டப்படும் குடும்பத்து மாணவர்களிடம் மதம் மாறினால் கஷ்டங்கள் போய் விடும் என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். அவ்வாறு மாறுபவர்களுக்கு பள்ளியில் நிறைய சலுகைகள் தருவார்கள். அதை பார்த்து மற்ற மாணவர்களுக்கும் ஆர்வம் வரும்.

தமிழ் போர்வையில் வீரமா முனிவர் என்ற பாதிரியார் மதம் பரப்பினார். அன்பு போர்வையில் அன்னை தெரசா மதம் பரப்பினார். எப்படியும் கடைசியில் தெரசா மதம் மாற்றி விடுவார். மதம் மாற்றாமலே சேவை செய்திருக்கலாம். மாற்று மதத்தினர் மீது வெறுப்பை உமிழும் மதப்போதகர்கள் அதிகம். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை காபி அடித்து மதத்தில் புகுத்துவார்கள்.

நாட்டின் அதிசயமான கோவில்களும் மசூதிகள் இருந்தாலும் வேடிக்கை பார்க்க கூட உள்ளே செல்ல மாட்டார்கள். அந்தளவு மூளைச்சலவை செய்ய்பட்டிருப்பார்கள். இவர்கள் என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இயல்பாகவும் மதசகிப்புதன்மையோடும் இருப்பார்கள் என்று தெரியவில்லை.




இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ராஜமருதவேல் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..