Pages

Friday, 31 August 2018

சர்க்கரை நோய் என்பது வியாதி இல்லை !!!!

சர்க்கரை வியாதி இல்லை !!!


20 வயதில் சர்க்கரை அளவு - 120 .
30 வயதில் சர்க்கரை அளவு - 120 + (10 வருடங்கள்) 50 : 170 .
40 வயதில் சர்க்கரை அளவு 170+50 : 220 .
50 வயதில் சர்க்கரை அளவு 220 +50 :270.
அல்லது தைராய்டு சுரப்பு குறைந்து ,
அது சர்க்கரையை சமன் செய்தால் குறையும் !!!!!

இது உடலின் இயற்கை நியதி !!!!
20 வயதில் சர்க்கரை அளவு 120 எனில் 50 வயதில் !!!!
அதே 120 எப்படி இருக்க முடியும்,
 உடம்பு என்பது உழைப்பிற்குச் சமமான மாற்றம் இருக்க வேண்டும்.

ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ஏற்பட வேண்டும்.
 இல்லை என்றால் என்ன ஆகும்.
பல ஆயிரம் வருடங்களாக மக்கள் இவ்வாறு வாழ்கிறார்கள்.
இதை வர்த்தகம் கொள்முதல் மூலம்
கார்பரேட் நிறுவனம் மருத்துவம் என்ற பெயரில் அனைவருக்கும் தவறாக  கூறி பணம் சம்பாதிக்கிறது.
இது ஒரு ஏமாற்று வேலை ஆகும்.
மக்களே விழித்து கொள்ளுங்கள்.


தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 28 August 2018

தூங்கும் முறைகளை அறிவோம்.

தூங்கும்போது நாம் செய்யும் இந்த 4 தவறுகள்,உடலுக்கு ஆபத்தானது என்பதை மறந்துவிடாதீர்கள்!

வணக்கம் நண்பர்களே,
ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 
7-8 மணி நேரம் உறங்க வேண்டும்.
அப்பதான் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் அனைவருக்கும் சரியான முறையில் தூங்க வேண்டும்.

இன்று அதை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.எவ்வாறு சரியான முறையில் உறங்க வேண்டும் என்று,இந்த தவறுகளை மீண்டும் திரும்பவும் செய்யாமல் தூங்கினால் உடல் நன்றாக இருக்கும்.




தூங்கும் போது வலது பக்கத்தில் தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால் !!!



கால்களை மடக்கிக்கொண்டு தூங்குவதை விருப்பமாக கொண்டவர்கள்,

மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கால்களை மடக்கி தூங்குவதற்கு பதிலாக கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து கொண்டு தூங்கலாம்.



சிலர் சாப்பிட்டவுடன் 
தூங்குவதை பழக்கமாக வைத்திருப்பார்கள்.
அவ்வாறு உடனடியாக உறங்குவது கூடாது.
சிலர் வேலை பார்த்துட்டு தாமதமாக வந்து இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டு தூங்க இருப்பவர்கள் என்ன செய்வது என்று கேட்பார்கள்.
அப்படி யாராவது இருந்தால் அவர்கள் இடது பக்கமாக உறங்கவேண்டும்,
அப்பொழுது தான் உணவு மெதுவாக வயிற்றுக்குள் சென்று செரிக்க ஆரம்பிக்கும்.
வலது பக்கம் உறங்கினால் உணவு வேகமாக செரிக்க வயிற்றினுள் சென்றுவிடும்.
இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது.



எப்பொழுதும் சாப்பிடும் போது மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுதல் வேண்டும்.
ஏனெனில் அப்பொழுதுதான் வாயில் சுரக்கும் நீர் சாப்பாட்டுடன் கலந்து வயிறு சென்று நன்றாக செரிக்கும்.
இதுவே சரியான முறை.
ஆனால் நம்மில் பலர் இதை பின்பற்றுவதில்லை.
குழந்தைகளை இப்பொழுதிருந்தே மெதுவாக சாப்பிட பழக்கினால் தன அவர்கள் சாப்பிடும் சாப்பாடு செரிமானமும் ஆகும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வர்.


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 26 August 2018

மகாபாரதம் மர்மம் !!!! மகாபாரதம் போர் நடக்க காரணமாக இருந்தது பீஷ்மரா அல்ல சகுனியா!

மகாபாரதம் போர் நடக்க காரணமாக இருந்தது பீஷ்மரா அல்ல சகுனியா!




மகாபாரத போருக்கு காரணமாய் இருந்தது சகுனிதான் என்று நாம் நினைத்து கொண்டிருக்குகிறோம். ஆனால் உண்மையில் மகாபாரத போருக்கு முழு காரணமும் பீஷ்மர்தான். மகாபாரத போர் ஒரு சங்கிலித்தொடராய் பல சம்பவங்களின் நீட்சியாய் நடந்தது. இந்த வினையை முதலில் விதைத்தது பிதாமகர் பீஷ்மர்தான். குரு வம்சத்தை காப்பேன் என சபதமெடுத்த பீஷ்மர் இறுதியில் அதன் அழிவுக்கு அவரே காரணமாய் அமைந்தார்.



பீஷ்மரின் சபதம்

தன் தந்தைக்கு அவர் விரும்பிய மீனவ பெண்ணான சத்தியவதியை மணம் முடித்து வைக்க தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பேன் என்று சபதம் பூண்டார். மேலும் குருவம்சத்தை காக்க அதன் அரியணையில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சபதம் எடுத்தார்.



சகுனி

மகாபாரத போருக்கு முழுமுதற் காரணமென கூறப்படும் சகுனியை அவ்வாறு மாற்றியதே பீஷ்மர்தான் என்பது கசப்பான உண்மை. அதற்கு காரணம் அவர் அஸ்தினாபுரத்தின் அரியணையின் மேல் வைத்திருந்த விசுவாசம். கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்க காந்தார நாட்டு மன்னன் சுபாலனின் மகள் காந்தாரியை பெண் கேட்டு சென்றார் பீஷ்மர். கண் தெரியாத மாப்பிளைக்கு பெண் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும் பீஷ்மர் மேல் உள்ள பயத்தால் காந்தாரியை கட்டயாப்படுத்தி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்.


சகுனியின் சிறைவாசம்

சகுனி அவரின் தந்தை மற்றும் சகோதரர்களை கொல்ல நினைத்த பீஷ்மரை ஒரு வம்சத்தையே அழிப்பது அரியணைக்கு நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கூறியதால் அவர்களை சிறையில் தள்ளி தினமும் ஒரு கவளம் சாப்பிடும் ஒரு குடுவை நீரும் கொடுக்கும்படி உத்தரவிட்டார். அந்த உணவிற்காக அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் தங்களுக்கு நேர்ந்த அவமானத்திற்காக பழிவாங்க நினைத்த சுபாலன் அந்த உணவை சகுனிக்கு மட்டும் கொடுத்து உயிர்வாழ செய்தார். ஏனெனில் அஸ்தினாபுரத்தை அழிக்க, குறிப்பாக பீஷ்மரை அழிக்க சகுனியின் புத்திசாலிதனத்தால் மட்டும்தான் முடியும் என்று நம்பினார்.




சூதாட்டம்

பீஷ்மர் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று சூதாட்ட மண்டபத்தில் திரௌபதியை காக்காமல் போனதுதான். எந்த தர்மமும் ஒரு பெண்ணுக்கு அதர்மம் நடக்கும்போது அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் பீஷ்மர் சூத்தின் போது தன் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு திரௌபதியை கௌரவர்களிடம் இருந்து பாதுகாக்காமல் விட்டுவிட்டார். இதுதான் பின்னாளில் குருவம்சத்தையே அழித்தது. அஸ்தினாபுர அரியணையை காப்பேன் என அவர் எடுத்த சபதம்தான் அதன் அழிவிற்கு காரணமானது.


பீஷ்மரின் முடிவு

தான் மேற்கொண்ட சபதத்தால் தன் வம்ச விருட்ஷங்கள் தன் கண் முன்னே சாய்வதை கண்டார் பீஷ்மர். இறுதியில் தன் பேரன்கள் கையாலேயே அம்புபடுக்கையில் வீழ்த்தப்பட்டார். போர் முடிந்து 54 நாட்களுக்கு பிறகு அவர் உயிர் உலகை விட்டு பிரிந்தது. ஒருவன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் தர்மத்தை கடைபிடிப்பவனாக இருந்தாலும் தான் கொண்ட தர்மத்திற்காக பிற உயிர்களை துன்புறுத்துபவன் நிலை என்னவாகும் என்பதற்கு பீஷ்மரே சிறந்த உதாரணம்.

Saturday, 25 August 2018

அறிவியல் உண்மை !!! முட்டையின் ரகசியம் !!!

முட்டையை வேகவைக்கும் பொழுது வெள்ளைக் கருவும் , மஞ்சள் கருவும் எப்படி ஒன்றுக்கொன்று சேராமல் இருக்கின்றன ????



முட்டைக்குள் இருக்கும் இரு கருக்களும் வெவ்வேறு வெப்பநிலையில் திடம் அடைவதால் தான் அவை ஒன்றுக்கொன்று சேராமல்  கிடைக்கின்றன.
மஞ்சள் கரு !!!!
வெள்ளைக் கருவைவிட தாமதமாகத்தான் திடம் அடையும்.
ஆப்பாயில் ரகசியம் புரிந்ததா?


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Monday, 20 August 2018

Frmi_paradox என்றால் என்ன... ??

Frmi_paradox என்றால் என்ன... ????


பிரபஞ்சம் குறித்து கருத்துக்கள் சொன்னவர்கள் பலர் ..அதில் Fermi paradox கள் மிக பிரபலம்.
இந்த தலைப்பை பற்றி பல பேர் பல கருத்துக்கள் சொல்லி இருந்தாலும் இப்போது நாம் குறிப்பாக Fermi யை நாடுவதற்கு காரணம் உண்டு. அதை அறிய முதலில் fermi பற்றி 4 வரிகள் தெரிந்து கொள்வோம்.

இவர் ஒரு Italian-American physicist . முழு பெயர் Enrico Fermi.
statistical mechanics  இல் புகழ் பெற்ற இவர் தான் நியூட்ரினோவின் இருப்பை பற்றி முதலில் எடுத்து சொன்னவர். உலகின் முதல் நியூக்ளியர் ரியாக்டரை கட்டமைத்தது வேறு யாரும் அல்ல இவர் தான். மேலும் "manhattan project " பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் அதாவது முதல் அணுகுண்டு உருவாக்கம் அதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1938 நோபல் பரிசை பெற்ற விஞ்ஞானி இவர்.
இவரிடம் ஒரு தனி தன்மை இருந்தது அதாவது சின்ன சின்ன நடைமுறை  டேட்டாகளை வைத்து பெரிய பெரிய விஷயங்களை கணிபதில் கில்லாடி.
உதாரணமாக முதல் அணுகுண்டு சோதனையின் போது அதன் சக்தி என்னவாக இருந்தது என்பதை பிற்பாடு நிறைய ஆய்வுகள் எல்லாம் செய்து பார்த்து சொன்னார்கள் ஆனால் வெடி நடந்த நேரத்தில் fermi காற்றில் சில சின்ன சின்ன துண்டு காகிதங்களை பறக்க விட்டு வேடிக்கை பார்த்து விட்டு அது காற்றில் பயணிக்கும் தூரத்தை வைத்து காற்று அழுத்தம் மாறுபாட்டையும் அதன் மூலம் வெடிப்பின் சக்தியையும் கிட்ட தட்ட சரியாக அப்போதே ஆய்வுகள் ஏதும் இன்றி சொன்னார்.

அப்படி பட்டவர் 1950 இல் இந்த பிரபஞ்சத்தில் நாம் நோக்கி இன்று வரை நாம் அறிய கிடைத்த தகவலை வைத்து சொன்ன சில (ஒன்றுக்கொன்று முரண்பாடான) கருத்துக்கள் தான் Fermi paradox.

முதலில் ubservable univarse பற்றிய சில சின்ன சின்ன( ! ?) டேட்டாகள் :
முதலில் இந்த அண்டதின் வயது எவ்ளோ தெரியுமா ? 13.82 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது இந்த பிரபஞ்சம் தோன்றி. அதாவது 1382 கோடி ஆண்டுகள்.  பிக் பேங் வெடிப்புக்கு பின் பிரபஞ்சம் விரிவடையும் வெகம் கூடி கொண்டே போவதால் இன்று நமது பிரபஞ்சம் 9300 கோடி ஒளியாண்டுகள் அளவு பறந்து விரிந்துள்ளது.  இந்தளவுக்கான பரப்பளவை கற்பனை செய்வது கடினம். இது மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு அளவு. இதில் உள்ள மொத்த நட்சத்திரத்தின் எண்ணிக்கையை எழுத நீங்கள் 10 பக்கத்தில் 26 சைபர் போட்டு பிறகு அதனை septillian களாக மாற்ற வேண்டும். (மொத்தமாக ஒரு 60 சைபருக்கு மேல் தேறும்.)
அண்டத்தில் உள்ள மொத்த காலக்சியின் எண்ணிக்கை 100 பில்லியன்.  இதில் 50 sextillian பூமி போன்ற கிரகங்கள் உள்ளன.

நம்ம பால் வெளி திரள்வரை மட்டும் பார்த்தோமேயானால் கூட 100 இலிருந்து 400 பில்லியன் நட்சத்திரங்களும் 100 பில்லியன் பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. நமது கேலக்சியின்  வயது 13.21 பில்லியன் ஆண்டுகள். இதன் பரப்பளவு 1 லட்சம் ஒளி ஆண்டுகள் அளவு அகலம்.
இந்தளவு கற்பனைக்கு எட்டாத பரப்பளவில் நாம் மட்டும் தான் தனி ஆள் என்பது முட்டாள் தனமான கருத்து என்கிறார் பெர்மி . அவர் கருத்து படி 1ஐ தொடர்ந்து 16 சைபர் போட்டு அந்தளவு எண்ணிக்கையிலான மேம்பட்ட உயிரினங்கள் இந்த அண்டத்தில் இருக்கலாம் என்கிறார்.
சரி அப்படியானால் ஏன் நம்மை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை?  அதற்க்கு பல காரணங்கள் சொல்கிறார் Fermi.
வரிசையாக சிலதை பார்ப்போம்.

☯ இந்த பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. நாம சில லட்சம் வருடமா தான் இங்க இருக்கோம். ஆதாவது நமக்கும் முன்பு பல கோடி ஆண்டுகள் ஏலியன் இந்த கிரகத்தை ஆண்டு அனுபவித்து விட்டு போய் விட்டன நாம தான் இங்க கால தாமதமாய் வந்து இருக்கிறவங்க.

☯ கினற்றுக்குள் இருக்கும் தவளை எவ்ளோ சுத்தி வந்தாலும் வெளி உலகில் உள்ள உயிரினம் பற்றி அவைகளால் அறிய முடியாது என்பதை போல வெளி என்பது நம் அறிவுக்கு எட்டியத்தை விட மிக பெரியது . இதில் வெளியில் ஒரு குறிப்பிட்ட தொலைவு தாண்டி நம்மால் எதையும் கண்டுகொள்ள முடியாத படி தனிமை படுத்த பட்ட ஒரு இடத்தில் தான் நாம் வாழுகிறோம். நாம் அறிந்த அண்டம் வெறும் ஒரு கிணறு தான்.

☯ நம்மை போல சாதாரணமாக வாழ்வது குடியிருப்பு அமைப்பது இதெல்லாம் "அவர்களை "பொறுத்த வரை மிக மிக பின் தங்கிய நிலை... காரணம் அவர்கள் நம்மை போல பழைய மாடலாக வெறும் 3 டைமன்ஷனில் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் நம்மால் இப்போதைக்கு அண்டமுடியாத வேறு வகை உயர்ரக பரிமாணத்தில் வாழ்பவர்கள். பிரபஞ்சத்தை நம்ம ரேஞ்சுக்கே வச்சி யோசிக்கறது நமது பிழை

☯ அங்கே ரெண்டு வகை ஏலியன்கள் உள்ளார்கள் அதில் ஒருவகை வேட்டையாடுபவை...ஆக்ரமிப்பவை. அதனால் மற்ற சாதா வகை வேற்று ஜீவிகள் தங்கள் இருப்பை மற்றும் இருப்பிடத்தை காட்டி கொடுக்கும் எந்த சிக்னலையும் அவைகள் வெளியிடுவது இல்லை.

☯ நம்மால் வெறும் காதால் கேட்க முடியாத கண்ணால் பார்க்க முடியாத ஆனால் நம்மை சுற்றியே இருக்கும் ஒரு ரேடியோவின் மின்காந்த அலை போல அவைகள் அண்டத்தில் நம்மை சுற்றி பரவி இருக்கிறார்கள் அவர்களை கண்டு கொள்ளும் அளவு நமக்கு தான் தொழில்நுட்பம் போதவில்லை

☯ மானின் நடமாட்டத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் ஒரு புலி போல அவர்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ளாமல் நம்மை முற்றுலுமாக கண்காணித்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாம் அவர்களை ஆராய்வதை பற்றியும் அவர்களுக்கு தெரியும்.

☯ இது கொஞ்சம் சுவாரஷ்யமானது... அதாவது அவர்கள் நம்மை எப்போதோ தொடர்பு கொண்டு விட்டார்கள் நாமளும் பதில் சொல்லியாச்சு... அதனுடன் சில பல ஒப்பந்தம் கூட போட்டாச்சு ஆனால் நம்ம அரசாங்கம் அதை நம்மிடம் இருந்து  மறைக்கிறது .

☯ மேம்பட்ட உயிரினங்கள் நிறையவே இருக்கின்றன ஆனால் அதீத இடைவெளி காரணமாக நாம் அவர்களை இன்னும் அடைய முடியவில்லை.  ரொம்ப தொலைவில் உள்ளார்கள்.

இப்படி போகிறது Fermi Paradox .
அண்டத்தை பொறுத்த வரை அதன் மர்மத்தை கண்டுபிடிப்பது இன்றைய மனிதனுக்கு சாத்தியம் இல்லை என்றே படுகிறது. அண்டத்தை ஒப்பிடும் போது மனிதனின் கால கட்டம் மிக சின்னது. ஒரு 1 லட்சம் பக்கம் கொண்ட மகா புத்தம் ஒன்றில் இரு வரிகளை படித்து விட்டு கதை புரியவில்லையே என்று சொல்வது போல நாம் இந்த குறுகிய கால கட்டத்தை அளந்து ஒன்றும் கிடைக்காமல் தினறுகின்றோமா ?? நிஜமான கதை மொத்த மனிதன் இனம் அழிந்தும் பல கோடி ஆண்டுக்கு பின் தான் தொடங்க இருக்கிறதா ..? அல்லது நாம் தான் வெறும் ஆரம்பமா மற்றவைகளின் வரவு இனி தானா ?
அவ்வபோது பூமியை பார்வையிடுவதாக சொல்ல படும் ஏலியன்கள் எல்லாம் யார் அது நாமே தானா ?? அதாவது எதிர்காலத்தில் மேம்பட்ட இனமாக மாறிய நாம் டைம் டிராவல் செய்து நம்மையே கடந்த காலத்தில் காண அவ்வபோது வருகை தருகிறோமா ?? அல்லது நாம் பார்க்கும் உணரும் மொத்த பிரபஞ்ச நிதர்சனமும் ஒரு மாய தோற்றமா? ???

பிரபஞ்சத்தின் மர்மங்களுக்கு முடிவே இல்லை.

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 19 August 2018

நோய்கள் பற்றிய தகவல்கள்.

உலகில் தோன்றிய முதல் மனிதனின்  அகத்தியர் !!!!



Akattiyar Nature chap !!!!

Siddhar flyover !!!!

நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் இயற்கையாகவே 3
சக்திகள் உள்ளன..

இயங்கு சக்தி. -32 %
செரிமான சக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்
இருந்தால்,அந்த செரிமான
சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு
சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக
மாறி விடும்....மேலும் நாம்
ஓய்விலிருந்தால் ...
இயங்கு
சக்தியின் அளவான 32%...
நோய்
எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில்
குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண
காய்ச்சலுக்கெல்லாம் ஆண்டிபயாடிக் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள்
மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த
செயல்முறையின்போது (Process)
நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில்
நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்
சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /
கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில்
சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,
நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது
சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகள்
மற்றும் கிருமிகளை
வெளியேற்றும் வேலையில்
ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான்
நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running
Nose)
ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும்
கிருமிகளை வெளியேற்ற சுரந்த
நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த
நீரைத்தான் பலர் கண்களில் நீர்
தானாகவே வடிகிறது என
கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது
திட வடிவமாக (Solid) மாறுகிறது.
இதைத்
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis
(Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க
நமது உடலானது காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக்
கருதி
அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம்
என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய
கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற
முடியாதபோது நமது உடல்
சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.
இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள
கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம்
வெளியேறிவிடும். இந்த
சளியையும்
நாம் வியாதி எனக் கருதி
மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம். அந்த
மருந்துகள் சளியை கட்டியாக
மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும்.
அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை
காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப்
(Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது
நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம்
தடைபடும்.

இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)
என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான
சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும்.
அப்போது இந்த மூச்சிறைப்பு
அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான்
ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம்
உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம்
சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில்
அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான்
மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது
உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள்
மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்
இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள்
கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான்
கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்
என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை
ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு
(Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும்
நேபுளேசர் (Nebulizer) வடிவில்
தற்காலிக நிவாரணம்
பெறுகிறோம். பல காலமாக
தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.
இப்போதும் காய்ச்சல் மூலம்
இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி.
மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக்
கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர்
சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்
நாம் மருந்துக்களை
உட்கொள்கிறோம். அந்த திடக்
கழிவுகளை
கரைக்க முயற்சி
மேற்கொள்ளும்போது வலி
ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று
பரிசோதனை மேற்கொள்
வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)
எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து
மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா
என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு
இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே
இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்
(Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை
இயக்கத்தை புரிந்துகொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு
பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது"
ஏனென்றால் அந்த பொருள்
இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது
ஆரோக்கியத்தை
மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும்
கழிவுகளை நம் உடம்பானது
எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி
அதை தடுக்க முயற்சிக்கும்போ
ததான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது
உடலால் கட்டியாக்கப்படும். பிறகு
நமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம்
வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த
கட்டிகளை மற்றும் நமது உடலில்
தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு
கழிவுகளை வெளியேற்ற
முயற்சிக்கும்போது அந்த இடத்தில்
வலி ஏற்படும். சிலநேரம் நமது
எதிர்ப்பு சக்தி போதுமான அளவில்
இல்லையென்றால் நமது உடலின்
இயக்க சக்தி
தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி
ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும்
செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான்
தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால்
மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும்
பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே
எடுக்கிறார்களோ அவர்களுக்கு
Typoid,
Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma
அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த
புற்றுநோய் (Blood Cancer) போன்ற
தொந்தரவுகள்
ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு
வெளியேற்றத்துக்கு நாமே
தடையாக
இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை
கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 18 August 2018

மூலகை எரிப்பொருள் கண்டுபிடிப்பு !!!

தமிழ் மக்களின் அறிவியல் திறமையும் , அறிவும் உலகம் அறிந்த ஒன்று !!!!!
இன்று தமிழ் தேசத்தின் ஒருவரின் அற்புதமான கண்டுப்பிடிப்பு உலகம் அறியாத உண்மை.

மூலிகை எரிபொருள்.


                        திரு. ராமர்.

மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு
21 ம் நூற்றாண்டின் மிக பெரிய சாதனை மறைக்கப்பட்ட வரலாறுகள் !!!!!!

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய திரு. ராமர் பிள்ளை,
1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார்.
விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர்.
அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்…
தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
இதற்கிடையே நண்பர்கள் மூலம் டச்சு நாட்டின் மிக முக்கிய ஆய்வகத்தில் இவரது மூலிகை எரிபொருள் சோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அமெரிக்காவில் காப்பு உரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார், ராமர் பிள்ளை.

அந்தக் காப்புரிமையைப் பெறக் காத்திருக்கும் ராமர்பிள்ளையை சென்னை சூளைமேட்டில் சந்தித்துப் பேசினோம். ’மூலிகை எரிபொருள் ஃபார்முலா, மூலப்பொருட்களைத் தெரிவிக்கவேண்டும் என்று எனக்கு
ஏகப்பட்ட நெருக்கடிகள் கழுத்தை நெரித்தன.
என் அம்மா, தம்பி,தங்கைகளையும் கூட அவர்கள் நிம்மதியாக விடவில்லை.
என் மீது மோசடி வழக்கு, சகோதரர் மீது பொய் கொலைவழக்குப் போட்டனர்.
 ஒரு தங்கையின் கணவரையும் கொலை செய்தனர்.
இவ்வளவையும் தாண்டி இன்று நண்பர்கள் உதவியால், எனது கண்டுபிடிப்பு உலக அரங்கில் அங்கீகாரத்துக்குக் காத்திருக்கிறது…” என்று குதூகல மாகப் பேசிய ராமர்
பிள்ளை, தொடர்ந்து…

நன்றி : ஜூனியர் விகடன்
”என் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்ட டச்சு நாட்டில் உள்ள டேனிஷ்டெக்னாலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள், நேரடியாக சென்னைக்கே வந்தார்கள்.
அவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினேன்.
மூலிகை எரிபொருள் உருவாக்குவதற்கு முன்னர் அந்தத் தண்ணீரை சோதித்தார்கள்.
அது எரியவில்லை.
பின்னர் நான் மூலிகை பெட்ரோல் செய்து காட்டியதும், அதை பரிசோதித்த அவர்கள், தண்ணீர்தான் எரிபொருளாக மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர்.
அதைத் தங்கள் ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்து எனக்கு ஆய்வறிக்கை அளித்தவர்கள்,
‘உங்கள் கண்டுபிடிப்பால்,
மிகக் குறைந்த செலவில் எரிபொருளை உருவாக்க முடியும்.
 இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளீர்கள்!’
என்று எனக்குக் கடிதம் அனுப்பினர் .
(நம்மிடம் அந்தக் கடிதத்தை
காட்டுகிறார்). மேலும், ‘மற்ற மாற்று எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில்,
என்னுடையது தான் மிகக் குறைந்த செலவில் பெட்ரோல் தயாரிக்கக்கூடியது’ என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்தான் காப்புரிமை பெற, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘வேர்ல்ட் இன்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ஆர்கனைசேஷ’னுக்கு (ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அந்தஸ்து பெற்றது) விண்ணப்பித்தேன்.

அவர்களும் இந்த எரிபொருளால் இயந்திரத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று ஆய்வு செய்து, அதைத் தங்கள் ஜர்னலில் பதிப்பித்துள்ளனர். இந்தப் பதிப்பு எல்லா நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய காப்புரிமை அதிகாரிகளும் என்னைத் தொடர்புகொண்டார்கள். உலக நாடுகள் ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், இந்தியாவும் காப்புரிமை தரத் தயாராக உள்ளதாக வாய்மொழியாகச் சொன்னார்கள்.

அதோடு, பல்வேறு நாடுகளில் இருந்தும் என்னைப் பற்றி தங்கள் தூதரகம் வாயிலாக விசாரித்துத் தொடர்பு கொள்கிறவர்கள்,’மூலிகை எரிபொருள் தயாரிப்பு ஃபார்முலாவை தர வேண்டாம், உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருகிறோம், நீங்களே செய்து கொடுங்கள்’ என்றும்
கூறுகிறார்கள்.

ஆனால், காப்புரிமை முறைப்படி வரட்டும் என்று காத்திருக்கிறேன்.
கலப்பட பெட்ரோலை வேறு ஒரு இடத்தில் இருந்து பெற்று, விநியோகித்ததாக என் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது. ஆனால், டச்சு நாட்டில் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர்கள் மேற்கொண்ட சோதனையை கோர்ட்டில் காட்டினோம். அப்போது, ‘ஐரோப்பிய நாடுகளின் தர அடிப்படையில் என்னுடைய மூலிகை எரிபொருளை பரிசோதித்து ஆய்வறிக்கை கொடுத் துள்ளனர். அதில் வெறும் நான்கு சோதனையைக்கூட நடத்தும் வசதி இந்தியாவில் இல்லை. பிறகு எப்படி இது உண்மையில்லை?’ என்று அரசு தரப்பைக் கேட்டபோது, அவர்களால் பதில் கூற முடியவில்லை.
இந்த 10 ஆண்டுகளில் என் மூலிகை எரிபொருளை நவீனப்படுத்தியுள்ளேன்.

முன்பு ₹.16 ரூபாய் !!!  மூலிகை எரிபொருளைத் தயார் செய்தேன். இப்போது வெறும் ₹. 8 ரூபாய் !!!!!!!

லட்சக்கணக்கான லிட்டர்களை தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த மூலிகை எரிபொருள் நிச்சயம் ஐரோப்பிய யூனியன் தரத்தில் இருக்கும்.
13 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னை, டெல்லி, ஹைதராபாத்தில் நான் நடத்திய ஆய்வுகள், தோல்வியடைந்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.
அப்போது அதிகாரிகள், ‘ஒரு குழாயில் பெட்ரோலை மெழுகால் அடைத்து வைத்ததாகவும்,தண்ணீர் வெப்பநிலையில் மெழுகு உருகியபோது பெட்ரோல் கலந்ததாகவும்’ சொன்னார்கள்.

 டச்சு விஞ்ஞானிகளிடம் இதைக் கூறியபோது, ‘சமையல் உப்பைக்கொண்டு தண்ணீரை அடைத்து வைக்க முடியும் என்பதுபோல அது ஒரு தவறான வாதம்’ என்றனர்.
நான் இந்திய அரசிடம் எனது கண்டுபிடிப்புக்கு பாதுகாப்புதான் கேட்டேன்.பாதுகாப்பு அளித்தால், முழுக் கண்டுபிடிப்பையும் தருவதாகக்கூறினேன். இப்போது காப்புரிமைக்காக என் முழுக் கண்டுபிடிப்பையும் சர்வதேச அமைப்பிடம் கொடுத்துள்ளேன். எனது வழக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. தீர்ப்பு வரும்போது மக்களுக்கு நிஜம் புரியும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவன் எப்படி இப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் தான் நம் நாட்டில் மெத்தப் படித்தவர்களிடம் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டம், தொல்லைகள்,அவமானங்கள் எல்லாம் பட்டேன்.
இந்திய அரசாங்கம் என் கண்டுபிடிப்பை புறக்கணிக்கிறது என்றார்.

ஆனால், எனது கண்டுபிடிப்பை எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்துவான்!” என்கிறார் ராமர் பிள்ளை.

அடுத்தடுத்து பல சர்சைகளை சந்தித்த மனிதர், இப்போது சர்வதேச அளவில் சவாலுக்குப் போயிருக்கிறார்… பார்க்கலாம்… நல்லது நடந்தால் நாட்டுக்குப் பெருமை!


குறிப்பு :
தானிஷ் பல்கலைகழகம் இவரின் ஆராய்ச்சியை உறுதிபடுத்தி குறைந்த விலையில் மாற்று எரிபொருள் தயாரிக்க முடியும் என்று சான்றிதல் வழங்கியுள்ளது.



       தமிழால்  இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

கருந்துளை இருந்து மின்நிலையம்

கருந்துளை இருந்து மின்நிலையம்



பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த பொருட்களில் black hole களுக்கு முக்கிய இடம் உண்டு.  அண்டத்தில் ஆங்காங்கே சுற்றிதிரிந்து கொண்டு எதையும் உறிஞ்சி குடித்து தள்ளும் மகா அரக்கர்கள் அவை.
அவைகளின் மகா சக்தியை நாம் பயன் படுத்தி கொள்ள முடியுமா ? அது வெளியிடும் ஆற்றலை பயன் படுத்தி மின்சாரம் எடுக்க ஏதும் வாய்ப்புகள் உண்டா ?
நிச்சயம் அப்படி ஒரு வாய்ப்பு இல்லை. காரணம் பார்க்கவே முடியாத அளவு,  ஒளியை கூட தப்பி போக விடாமல் தனக்குள் இழுத்து சுருட்டிக்கொள்ளும் அளவு (அதாவது பூமியின் எஸ்கேப் வேலாசிட்டி 11.2 என்பதை போல அதன் எஸ்கேப் வெலாசிட்டி 3 லட்சம் கி. மி / வினாடியை விட கூட அதிகம் என்பதால் அதன் ஈர்ப்பை மீறி ஒளி கூட வெளி வருவது இல்லை ) இந்தளவு ஆற்றலை கொண்ட அரக்கனிடம் நெருங்கி அதன் ஆற்றலை கடன் வாங்குவது என்பது சற்றும் வாய்ப்பு இல்லாத ஒரு யோசனை.

ஆனால் அதில் ஒரு சின்ன எதிர்கால சாத்தியம் இருக்கிறது.
அதாவது உசைன் போல்டை ஓட்ட பந்தயத்தில் ஒரு 5 வயது சிறுவன் ஜெயிக்க முடியுமா ??
விடை : நிச்சயம் முடியாது .
மைக் டைசனை 10 வயது பையன் அடித்து விழுத்த முடியுமா?
விடை : ‘டிட்டோ ‘
ஆனால் இதை கொஞ்சம் பாருங்கள் உசைன் போல்ட் பல கிலோ மீட்டர் ஓடி வந்து களைத்து விழ போகும் தருவாயில் இருக்கிறார். அந்த கடைசி நிமிடங்களில் ஒரு 5 வயது சிறுவனை போட்டியில் இறக்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள் (ரொம்ப அநியாயமான போட்டி தான் ) இப்போ அந்த சிறுவன் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றால் விடை : ஆம் நிச்சயமாக.
அதே போல மைக் டைசன் பல நூறு குத்துகள் வாங்கி விழ போகும் கடைசி நேரத்தில் ஒரு சிறுவனை வைத்து அடித்து விழுத்த முடியும்.

அதே போல தான் கருந்துளைகள் அழிய போகும் தங்கள் கடைசி காலங்களில் நம்மால் நெருங்க கூடிய அளவில் ஆற்றல் உமிழ்ந்து கொண்டிருக்கும் என யூகிக்கலாம் அல்லவா ?
என்னது கருந்துளையின் அழிவா ? இதுவே ஒரு சரியான கருத்தாக தெரியவில்லையே என்கிறீர்களா ? ஆம் கருந்துளையை அழிப்பது என்பது ஒரு ஆவியை கொல்வதற்கு  ஒப்பான செயல் . ஏற்கனவே செத்தவன் தான் ஆவி ஆவான் ஆவியை எப்படி சாகடிக்கிறது.  கருந்துளைகளும் கூட ஆவிகள் போல தான் அவைகள் நட்சத்திரங்களின் ஆவிகள் . அதாவது மிக பெரிய நட்சத்திரங்கள் தங்கள் எரிபொருள் தீர்ந்து போய் வெடித்து சிதறி தனது நிறையை தாங்க முடியாமல் தன் வாலையே விழுங்கும் பாம்பு போல தனது ஈர்ப்பு விசையால் தானே தகர்க்க பட்டு நொறுங்கி நொறுங்கி கடைசியில் கருந்துளையாகின்றன. (நமது சூரியன் அழியும் போது ஆற்றல் போதாமையால் கருந்துளை ஆகாது வெறும் நியூட்ரான் குண்டாக மாறும். கருந்துளையாக மாற நமது சூரியனை விட 6 யிலிருந்து 10 மடங்கு அதிக பெரிதாக இருக்க வேண்டும் )

கருந்துளைகள் கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்றும் அவைகள் அதன் மூலம் படிப்படியாக கரைந்து கொண்டே வருகின்றன என்றும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொன்ன போது மற்ற பெரிய அறிஞர்கள் அதை மறுத்தார்கள் ஆனால் கால போக்கில் பல ஆய்வுக்கும் ஆதாரத்திற்கும் பின் ஒத்து கொண்டார்கள். (இப்பொது அந்த ரெடியேஷன் பெயர் ஹாக்கின்ஸ் ரெடியேஷன் .)
ஒரு கருந்துளை எவ்வளவு பெரிசோ அவ்வளவு சீக்கிரம் வேகமாக அழிந்து விடும் என்பது ஆச்சரியமான உண்மை. அவைகள் அளவு குறைய குறைய வெப்பத்தை அதிகம் உமிழ்கின்றன.
கருந்துளைக்குள் ஒரு பொருளை தூக்கி போட்டால் அதன் நிறைக்கேற்ற ஆற்றலை கருந்துளை வெளியிடுகிறது. இந்த செயலின் மூலம் அதன் நிறை படி படியாக குறைகிறது. கரைந்து வரும் சோப்பு போல அதன் ‘நிகழ்வு எல்லை ‘ பகுதிகள் கரைந்து கொண்டே வருகின்றது. அதன் கடைசி மூச்சில் நடப்பது என்ன வென்று பார்த்தால் லட்சக்கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கும் அளவு ஆற்றலை கடைசியாக உமிழ்ந்து விட்டு கருந்துளை அடியோடு காணாமல் போகும். அந்த கடைசி நிலையில் அதன் அளவு கண்ணுக்கு தெரியாத மைக்ரோ அளவு மட்டுமே இருக்கும்.

இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது கிட்ட தட்ட நம்ம சூரியன் அளவுள்ள பிளாக் ஹோல் வெப்பநிலை என்ன தெரியுமா ??
அதில் நடக்கிற வேலையை பார்த்தால் பயங்கர சூடாக இருக்கும் என்று நினைத்தால் அதான் இல்லை. அது கிட்ட தட்ட  minus 250 டிகிரி அளவு குளிர்ந்து இருக்கும். ஒளி முதல் கொண்டு எதையும் வெளியிட்டு பழக்கம் இல்லாத பிளாக் ஹோல் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் கூட வெளி விடுவது இல்லை (முன்பு சொன்னதை தவிர்த்து ) . அதாவது தெர்மோ டைனமிக்ஸ் பாஷையில் சொல்லனும்னா இது ஒரு பக்கா” black body “பொருள் .
இதனால் என்ன பிரச்னை என்றால் ஒரு நன்கு வளர்ந்த பிளாக் ஹோல் தனது மிக மிக குறைந்த ஹாக்கின்ஸ் ரெடியேஷன் வெளியீட்டை கொண்டு படி படி யாக அழிய எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஆண்டுகள் அதாவது 1 ஐ தொடர்ந்து 66 சைபர் .
(நமது பிரபஞ்சத்தின் இன்றைய தேதிக்கு வயதே கிட்ட தட்ட 1300 கோடி ஆண்டுகள் தான் )

அவ்வளவு நாள் காத்திருந்தால் நிச்சயம் நமக்கு வயதாகி விடும் என்பதால்  தேட வேண்டிய வேறு வாய்ப்பு என்ன வென்றால்….
ஆதி கால பிரபஞ்ச உருவாக்கத்தின் போது நடந்த ஓழுங்கற்ற தகர்வால் ஆதி காலத்தில் உண்டான ஒரு வயதான பிளாக் ஹோலை தேடி பிடிக்க வேண்டும். அது அழிய போகும் கட்டத்தில் காமா கதிர்களையும் வெப்பத்தையும் உமிழ்ந்த படி இருக்கும். இப்பொது அது கருப்பு அல்ல ஓரளவு கண்ணுக்கு தெரியும் ஒரு வெந்தழல்.
இப்போது இது கொடுத்து கொண்டிருக்கும் ஆற்றல் 10 ஆயிரம் மெகா வாட். இதை ஒரு பேச்சுக்கு நாம் பயன் படுத்த முடியும் என்றால் 10 மிக பெரிய மின் நிலையங்களை இயக்கலாம்.

10 பெரிய பவர் பிளான்டுக்கு சக்தி கொடுக்கும் அந்த பிளாக் ஹோல் அளவில் எவ்வளவு இருக்கும்
தெரியுமா ?
ஒரு அனுவின் உட்கரு அளவு.
(ஒரு அணுவை விடவும் அதன் உட்கரு பல நூறு மடங்கு சிறியது .ஒரு அணு யானை அளவு பெரிதாக இருக்கும் என்றால் அதன் உட்கரு ஒரு கொசு அளவு தான் இருக்கும் )
ஆனால் அதே சமயம் அதன் நிறை கிட்ட தட்ட இமய மலை அளவு பெரிதாக இருக்கும்.
இந்தளவு நிறை அதே சமயம் இவ்வளவு சிறிய உருவம் இப்படி ஒரு விசித்திர பொருளை பூமியில் கொண்டு வந்து வைத்தால் என்னாகும் தெரியுமா ?அதன் நிறை காரணமாக ஈர்க்க பட்டு பூமிகுள் மையத்தை நோக்கி ஊடுருவி செல்லும் அதன் நுண்ணிய அளவு உடலமைப்பு அது ஊடுருவி செல்ல உதவியாக இருக்கும்.
பிறகு மையத்தை வேகமாக கடந்து ஓடி மீண்டும் பூமி மையத்தால் பிடித்து ஈர்க்க
படும் . அதாவது பல முறை அலைவுறும் ஒரு ஊசலாட்டத்திற்கு ஆளாகும்.
எனவே இதை வைப்பதற்கு சரியான இடம்… நமது சுற்றுவட்ட பாதையாக தான் இருக்கும் . (கூடவே கழுதை முன் காரட்டை கட்டி தொங்க விடுவதை போல அதை கவர்வதற்கு ஒரு நிறையை தொங்க விட வேண்டும்.)

10 ஆயிரம் மெகாவாட்டை கொடுக்கும் ஒரு அணுக்கரு அளவு பொருள் நினைத்து பார்க்க நமக்கு அதிசயமாக இருக்கலாம் ஆனால் பிரபஞ்சத்தில் இது ஒரு சாதாரண சாத்தியம் .
ஆனாலும் இன்று வரை நாம் அப்படி ஒரு ஆதிகால கருந்துளையை கண்டு பிடிக்க வில்லை மேலும் 10 ஆயிரம் மெகா வாட் வெளியிடும் ஒரு பிளாக் ஹோல் ஒரு வேளை ப்ளூட்டோ அளவு பக்கத்தில் இருந்தாலும்  அதை கண்டுபிடிப்பது சிரமம்.
எனவே மேலே சொன்னது கருத்தியல் ரீதியான சாத்தியம் என்றாலும் நடைமுறையில் “கருந்துளை மின்நிலையம் ” அமைக்க நாம் நீண்ட எதிர் காலத்திற்கு காத்திருக்க வேண்டி வரும்.

(தகவல் உதவி : “காலம் ஒரு வரலாற்று சுருக்கம்” புத்தகம் – ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.

இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 17 August 2018

நெல்லின் வரலாறு அறிவோம்

நெல்லின் வரலாறு அறிவோம்





 

( paddy ) நெல் அல்லது ,

 அரிசி என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும்.


இது இலெமுரியா என்கின்ற குமரி கண்டம்  தோன்றியது.





   இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும்.

    இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும்.

வரலாறு

   உலகில் முதன் முதலாக தமிழக தேசத்தின் நெல்,
 ஆசிய நெல் ,
ஆப்பிரிக்க நெல் என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.
தமிழக நெல் கிமு.20,000 க்கு தோன்றியது.

ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே !!!
தமிழ் தேசத்திற்கு பிறகே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும்

     ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதி என்று இன்று அழைக்கப்படும் பண்டைய இலெமுரியா என்னும் குமரிகண்டம் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.
இலெமுரியா கண்டத்தில் வாழ்ந்த ஔவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.
நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன.

     ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 – 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை.

     அரேபியர்களால் கி.பி 7 – 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன. ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர்.

     15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.
          தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 16 August 2018

பச்சையாக வெங்காயம் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் !

பச்சையாக வெங்காயம் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் !



அன்றாட சமையலில் உபயோகிக்கும் ஒரு பொருள் தான் வெங்காயம் .இந்த வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் ஒரு அறிய மருந்தாகவும் பயன்படுகிறது .இதில் சல்பர் அதிகம் உள்ளது மேலும் வைட்டமின் சி , பி 6 , பையோடின் ,போலிக் அமிலம் ,கிரோமியம் , கால்சியம் ,நார்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது . இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து இக் கட்டுரையை படியுங்கள் .

வெங்காயம் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைட்களின் அளவை குறைக்கும் , இதில் உள்ள சல்பர் ரத்தத்தை சுத்திகரிக்கும் ,மேலும் ரத்த தட்டுகள் உரைவதை தடுக்கும் .இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவும் ,மாரடைப்பு வராமல் தடுக்கும் .





வெங்காயத்தில் உள்ள அலச்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசக்குழாய் தசைகளை அமைதி படுத்தி ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அலெர்ஜி பிரச்சனைகளிருந்து விடுவிக்கும் .மேலும் இது சளி , இருமல் , தும்மல், மூக்கு ஒலுகள்போன்றவற்றை தடுக்க பெரிய உதவியாக இருக்கும் .மேலும் இதில் உள்ள மைக்ரோவியல் தன்மை உணவினால் உண்டாகும் நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது .இதில் உள்ள பைட்ரோ கெமிகல் அல்சர் அபாயத்தையும் குறைக்கும் .

வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆகையால் தினமும் சிறிது பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும் .மேலும் இதில் உள்ள அன்டி செப்டிக் ,அன்டி மைக்ரோவியால் பண்புகள் காசநோய் உண்டாக்கும் மைக்ரோ பாக்டீரியாக்களை செயல் இளகச் செய்யும் அகவே காசநோய் உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அந்த நோய் குணமாகும் .

வெங்காயத்தில் கரோளிகள் மற்றும் சோடியம் மிகவும் குறைவு மேலும் இது கொழுப்புகள் அற்றது இது ரத்த நாளத்தின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது .மேலும் இது ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது .இதில் உள்ள பைட்ரோ கெமிக்கலான டை சல்பைட்கள் ,ட்ரை சல்பைட்கள் ,காசிடின் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் இதனால் உடலில் இருக்கும் வீக்கங்கள் குறைந்து புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும் .


வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் சரிமான கோளாறுகளான பசியின்மை , வயிற்று ஒப்பிசம் ,சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்றவை தடுக்கப்படும் .மேலும் இதில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து ரத்தசோகையை சரி செய்ய உதவும் .ஆகவே உடலில் ரத்தம் குறைவாக் உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள் .இறுதியாக இது உயர் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது .

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

நம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்? GoogleLocation

நம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்? GoogleLocation.



 
மொ பைலின் GPS-ஐ ஆஃப் செய்துவைத்திருக்கும் சமயங்களிலும், மொபைலுக்கு லொகேஷன் சார்ந்த நோட்டிஃபிகேஷன்கள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைவரும், ஏதேனும் ஒரு சமயத்தில் இதைக் கண்டிருப்பர். நம்முடைய மொபைல் போனின் இருப்பிடத்தை, மொபைல் அப்ளிகேஷன்கள் அறிந்துகொள்வதற்கு உதவும் டூல்தான் GPS. கூகுள் மேப்ஸ், வெதர் ஆப்ஸ், டாக்ஸி ஆப்ஸ் போன்ற அப்ளிகேஷன்கள் இதன் உதவியுடன் நம்முடைய லொகேஷனை மேப் செய்கின்றன. எனவே, GPS ஆன் செய்து இருக்கும்பொழுது, நம்முடைய தகவல்களை இந்த ஆப்கள் பயன்படுத்திக்கொள்ளும். அதில் கூகுளும் ஒன்று. இந்த ஆப்களைப் பயன்படுத்தும்போது மட்டும், GPS-ஐ ஆன் செய்வதும், பின்னர் அதனை ஆஃப் செய்துவைப்பதும்தான் பலரது வழக்கம்.

முதல் காரணம், தேவையில்லாமல் மொபைல் சார்ஜ் குறையும். இரண்டாவது, நம்முடைய லொகேஷனைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் எந்த ஆப்பிற்கும் இருக்காது. ஆனால், கூகுள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நீங்கள் கூகுள் மேப்ஸ் வசதியைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், GPS-ஐ ஆன் செய்திருந்தாலும், ஆஃப் செய்திருந்தாலும், அதனால் உங்கள் லொகேஷனைக் கண்டறிய முடியும்.

உதாரணமாக நம் மொபைல் GPS-ஐ ஆஃப் செய்துவிட்டு, சத்யம் தியேட்டருக்குப் படம் பார்க்கச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். உடனே சிறிதுநேரத்தில் அதை மோப்பம் பிடித்து, Rate Sathyam Theatre' என புஷ் நோட்டிஃபிகேஷன் வரும். நாம் சத்யத்தில் படம் பார்ப்பது கூகுளுக்கு எப்படித் தெரியும். இத்தனைக்கும் நாம் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தவில்லை; கூகுளில்கூட தேடவில்லை; ஆனாலும், கூகுளுக்கு எப்படி நம் இருப்பிடம் தெரிகிறது. இந்தக் கேள்விக்கான பதில் இந்தக் கட்டுரையின் இறுதியில். ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு, கூகுளின் சில சூட்சுமங்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

*பலரும் அறியாத டைம்லைன்*

ஃபேஸ்புக், ட்விட்டர் டைம்லைன் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத இன்னொரு டைம்லைனும் இருக்கிறது; அது கூகுள் டைம்லைன். கடந்த ஒரு வருடத்தில், ஏதேனும் ஒரு தேதியைச் சொல்லி, அப்போது எங்கு இருந்தீர்கள் எனக் கேட்டால் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா. ஆனால், கூகுள் சரியாகச் சொல்லும். அதுவும் எப்படி, காலை 9 மணிக்கு சென்ட்ரலிலிருந்து கிளம்பி, 10 மணிக்குத் தாம்பரத்தில் இறங்கி, மீண்டும் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசென்றது வரை அத்தனையையும் துல்லியமாகச் சொல்லும். இதை கூகுள் மேப்ஸின் டைம்லைனில் பார்க்கமுடியும்.

இதற்கு நீங்கள் எப்போதும் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தியிருக்க வேண்டும், மொபைல் இன்டர்நெட் வேண்டும், GPS ஆனிலேயே இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. இதில் எது இருக்கிறதோ, அதைவைத்து கூகுளே நம் தகவல்களைக் கணித்து இந்த டைம்லைனில் அப்டேட் செய்துவிடும். இவ்வளவு துல்லியமாக நாம் எங்கு செல்கிறோம், எப்போது செல்கிறோம் போன்ற விவரங்கள் எல்லாம் எதற்காக கூகுளுக்குத் தெரியவேண்டுமா என நினைத்தால், இந்த டைம்லைனை நிறுத்தவும் முடியும். அதாவது, நம்முடைய லொகேஷன் ஹிஸ்டரியை நிறுத்திவைக்கவும் ஆப்ஷன் தந்திருக்கிறது கூகுள். அதைப் பயன்படுத்தி, இந்த டைம்லைன் அப்டேட் ஆவதைத் தடுக்கலாம். ஆனால், கூகுள் நம்மை டிராக் செய்வதைத் தடுக்க முடியாது. நம்மைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேதான் இருக்கும். இதைச் சமீபத்தில் உறுதிசெய்திருக்கிறது AP செய்திநிறுவனம். அந்நிறுவனம் நடத்திய சோதனையில், நாம் லொகேஷன் ஹிஸ்டரியை ஆஃப் செய்திருந்தாலும்கூட, கூகுள் தொடர்ந்து கண்காணிப்பது தெரியவந்துள்ளது. இதை ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலுமே கண்டறிந்துள்ளனர். இது கூகுளின் பயனாளர்களை முழுமையாக ஏமாற்றும் செயல் என்கின்றனர் டெக் நிபுணர்கள்.

*ஏன் கூகுள் இப்படிச் செய்கிறது?*

விளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும். நம்முடைய தகவல்களை வைத்துக்கொண்டுதான் கூகுள் நமக்குச் சரியான விளம்பரங்களைக் காட்டுகிறது; அதை வைத்துதான் வருமானம் ஈட்டுகிறது. நம்முடைய கூகுள் தேடல்கள், கூகுள் ஆப்களின் பயன்பாடு ஆகியவற்றின் தகவல்களை இதற்காகப் பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான் நம் இருப்பிடம். உதாரணமாக, சென்னையில் இருக்கும் ஒரு நபருக்கும், மதுரையில் இருக்கும் ஒரு நபருக்கும் ஒரே விளம்பரங்களைக் காட்டமுடியாது அல்லவா. இருவருக்கும் அவர்களின் தேவைக்கேற்ற துல்லியமான விளம்பரங்கள் காட்டினால்தான், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டமுடியும். இதற்காகத்தான் நம்முடைய இருப்பிடம் சார்ந்த தகவல்களைக் கண்காணிக்கிறது கூகுள். ஆனால், நாமே இதை வேண்டாம் என்றாலும்கூட தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!

தற்போது இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள கூகுள், லொகேஷன் ஹிஸ்டரி என்பது பயனாளர்களின் விருப்பம் சார்ந்த ஒரு வசதிதான். அது வேண்டாம் என்றால், பயனாளர்கள் அதனை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கான வழிகள் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே இருக்கின்றன. கூகுள் மேப்ஸ் மூலமாக மட்டுமே கூகுள் பயனாளர்களின் இருப்பிடம் சார்ந்த தகவல்களை எடுப்பதில்லை. கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் காலண்டர், கூகுள் போட்டோஸ் என எந்த ஆப்பில் லொகேஷன் ஆப்ஷனைப் பயன்படுத்தினாலும், அது கூகுளின் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால், அவையெல்லாம் மேப்ஸ் டைம்லைனில் காட்டப்படாது. இவை முழுமையாக நிறுத்தப்பட வேண்டுமென்றால், கூகுளின் ஆக்டிவிட்டி கன்ட்ரோல் பகுதிக்குச் சென்று, Web & App Activity' (க்ளிக் செய்க) என்ற ஆப்ஷனை நிறுத்திவிடலாம்" என விளக்கமளித்திருக்கிறது. இதன்மூலமாக கூகுள் நாம் செல்லும் தினசரி இடங்களைக் கண்காணிப்பதை வேண்டுமானால் நிறுத்தமுடியும். ஆனால், முக்கிய இடங்களுக்குச் செல்லும்போது அந்தத் தகவல்கள் தானாக கூகுளுக்குச் சென்றுவிடும்.

*சரி... அந்த GPS மேட்டர்?*

இதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால், GPS ஆஃப் செய்துவைத்திருக்கும்போதும் கூகுள் எப்படி நம் இருப்பிடத்தைக் கண்டுகொள்கிறது. இந்தப் பிரச்னை பல ஆண்ட்ராய்டு பயனாளர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், குவார்ட்ஸ் இணையதளம்தான் 2017-ல் முதன்முதலில் இதனை நிரூபித்தது. உடனே இதனை கூகுளின் கவனத்துக்கும் கொண்டுசென்றது. கூகுளும் இதை ஒப்புக்கொண்டது. அப்போதுதான் நம் இருப்பிடத்தை கூகுளால் எப்படி வேண்டுமானாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியவந்தது. கூகுள் இதற்காக செல் ஐடி (Cell ID) என்ற கான்செப்டைப் பயன்படுத்தியது.

அதாவது GPS மொபைலில் ஆன் ஆகியிருக்கும்போதெல்லாம், அதன்மூலம் நம் லொகேஷன் தெரியும். ஆஃப் ஆகியிருக்கும்போது, அதற்கு மாற்றாக நம் மொபைல் நெட்வொர்க்குகளின் டவர்கள் மூலமாக இதை அறிந்துகொள்ளும். இதற்காகத்தான் செல் ஐடியைப் பயன்படுத்தியது கூகுள். இதனால் நம்மால் எப்போதுமே கூகுளின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பமுடியாது. இந்தப் பிரச்னை வெளியே தெரிந்தபோது இதுகுறித்து விளக்கமளித்த கூகுள், நாங்கள் கடந்த 11 மாதங்களாகத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதைக் கைவிடவும் இருக்கிறோம். மேலும், Cell ID மூலமாகப் பயனாளர்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டாலும், அவற்றைப் பயனாளர்களின் சேவைக்காகவே பயன்படுத்துகிறோம். அவர்களுக்குச் சரியாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, தகவல்களை அனுப்புவது போன்றவற்றிற்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். மற்றபடி இந்தத் தகவல்கள் கூகுளின் சர்வர்களின் எங்கேயும் பதிவாகாது" என்றது. ஆனால், இப்போதும் நம்மால் GPS அற்ற இடங்களில் கூகுளின் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கமுடியும். அது எப்படி என்பது கூகுளுக்கே வெளிச்சம்....

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 14 August 2018

சஞ்சீவி வேர் பற்றி தகவல்கள்

சஞ்சீவி வேர் இறந்தவரையே உயிர்பிக்கும் மருந்து.

ஒடுகின்ற தண்ணீரில் எதிர் திசையில் வரும் வேர்.

சஞ்சீவி மூலிகை


இராமாயணத்தில் இந்த மூலிகைக்காக ஒரு மலையையே பெயர்த்தெடுத்த கதையினை அறிவீர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையை சஞ்சீவினி மூலிகை, எமனை வென்றான் மூலிகை, தசையொட்டி மூலிகை என்று வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிட்டிருக்கின்றனர்.இதன் இலையானது சிறுவேப்பிலை போல இருக்குமாம். இது குத்து செடியாகும். இந்த செடியின் இலையின் சாறினை அகால மரணமடைந்தவரின் நாசியில் ஒரு சிட்டிகை விட்டு ஊத உயிர் பெற்று எழுந்து விடுவார்களாம். இது தவிர இந்த மூலிகையின் சாறினை வெட்டுப் பட்ட இடத்தில் தடவ அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதுடன் அவர் உறங்கி எழுந்தவர் போல புத்துணர்ச்சியுடன் எழுவார் என கூறப் பட்டிருக்கிறது. மூர்ச்சை அடைந்தவர்களுக்கு இந்த மூலிகையினால் விசிற மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார்களாம். இந்த மூலிகையில் பட்டு வரும் காற்றினை சுவாசித்தாலே ஆயுள் விருத்தியும், காயசித்தியும் கிடைக்குமாம்.
சஞ்சீவி வேர் பற்றி அற்புதமான காணொளி !!!
நீர்ரோட்டத்தை எதிர்த்து போக கூடியது.







தமிழால் இணைவோம் !!!
      அறிவால் உயர்வோம் !!!
       தமிழ் வாழ்க !!!
எதிர்க்க துணிந்தால் தமிழ்
 மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!! 
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.
     அறிவியலின் தேடல் தொடரும்.
      வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 11 August 2018

ஆஞ்சநேயரோ பிரம்மச்சாரி.ஆனா அவருக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கார்.அந்த சுவாரஸ்ய கதை தெரியுமா!

ஆஞ்சநேயரோ பிரம்மச்சாரி.ஆனா அவருக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கார்.அந்த சுவாரஸ்ய கதை தெரியுமா!


ஆஞ்சநேயர் என்று சொன்னாலே நம்முடைய மனதுக்குள் சில குதூகலங்களும் மகிழ்ச்சியும் வந்து ஒட்டிக் கொள்ளும். ஆனால் அவர் மிகப்பெரிய மாவீரன் என்பதை நாம் மறந்துவிடவே கூடாது.

அத்தகைய ஆஞ்நயேர் வாயுக் குலத்தில் பிறந்தவர் என்பது போன்ற சில புராணக் கதைகள் நமக்குத் தெரிந்திருந்தாலும் அவரைப் பற்றிய பலரும் அறியாத சுவாரஸ்யக் கதைகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. ஆஞ்சநேயர் இறைவன் ஹனுமான் என்றும் அழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயர் பற்றி சில சுவாரசியமான உண்மைகள் !!!!

உடல் முழுக்க குங்குமம்

ராமரின் உடல் நலனுக்காக அவருடைய தேகம் முழுவதும் குங்குமம் பூசிக்கொண்டார். ஹனுமான் ராமரின் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சீடர் ஆவர். ஒருமுறை சீதை தன்னுடைய நெற்றியில் குங்குமம் வைப்பதைக் கண்டார், ஹனுமான் ஏன் என்று கேட்டார். ராமரின் நீண்ட ஆயுளுக்காகத் தான் என்று சீதை பதில் சொன்னார். எனவே ஹனுமான், ராமருக்கு அவரது அன்பை நிரூபிக்க அவரது உடம்பு முழுக்க குங்குமம் பூசிக்கொண்டார். ஏனென்றால், உடலில் குங்குமம் பூசிக்கொண்டால், ராமர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வார் என்று சீதை சொன்னதை தான் ஆஞ்சநேயர் அவ்வாறு புரிந்து கொண்டார்.

வஜ்ராயுதம்

'ஹனுமான்' என்ற பெயர் உண்மையில் சிதைந்துவிட்டது. சமஸ்கிருதத்தில், 'ஹனு' என்பது 'தாடை' மற்றும் 'மான்' என்றால் 'சிதைந்து போகும்' என்றும் பொருள். ஹனுமான் தாடை சிதைந்ததாக அறியப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு எதிராக இந்திரன் வஜ்ராயுதத்தை பயன்படுத்திய போது இது ஏற்பட்டது. இந்திரன் வானத்தை வஜ்ராயுதமாகப் பயன்படுத்தி ஹனுமானை பூமியில் நேராக எறிந்தார்.

ஆஞ்சநேயரின் மகன்

அவர் ஒரு பிரம்மச்சாரி என்றாலும், அவருக்கு ஒரு மகன் 'மகார்தவாஜா' இருந்தார். ஹனுமான் இலங்கையை தன வாலில் கொண்ட தீ கொண்டு எரித்த பிறகு, வாலை குளிர்விக்க கடலில் நனைத்த போது, ஹனுமானின் வியர்வையை ஒரு மீன் விழுங்க அம்மீனின் மகார்தவாஜா என்ற பெயரிலேயே கருத்தரிக்கப்படுகிறார்.


ராம பக்தன்

ஒருமுறை, ராமன், ஆஞ்சநேயருக்கு சாவை பிரகடனம் செய்தார்.

ராமர் அரசரான பிறகு, அரசவையில் ஹனுமானிடம் விஷ்வாமித்திரா தவிர அனைத்து முனிவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க கேட்டார். வழக்கமாக நாரதர் இருவர் இடையிலான பிரச்சனைகளை உருவாக்கும் இயற்கை கொண்டவர், ஹனுமான் வாழ்த்து தெரிவிக்க, ஆனால் அது விஸ்வாமித்திராவை பாதிக்கவில்லை என்றாலும் நாரதரின் வார்த்தைகளால், ராமனின் குருவான விஷ்வாமித்திரர் ஆஞ்சநேயருக்கு மரண சாபம் விதித்து அம்பு எய்து கொள்ளும்படி சபித்தார். அவ்வாறு செய்த பொது ஒரு அம்பும் ஆஞ்சநேயரை பாதிக்கவில்லை, ஏனென்றால் ஹனுமான் ராமனுக்கு மானசீகமாக இருந்ததால் தான்.

ராமாயணம்

ஹனுமான் உருவாக்கிய ராமாயணம் - வால்மிகியின் ராமாயணத்தை ஒப்பிடுகையில் ஒரு உயர்ந்த பதிப்பு. லங்காவில் யுத்தம் முடிந்த பின்னர், ஹனுமான் எம்பெருமானை வணங்குவதற்காக ஹிமாலயத்திற்குச் சென்றார். இராமனின் கதையை தனது நகங்களால் ஹிமாலய சுவர்களில் பதித்திருந்தார். வால்மீகி அதை காண வந்தபோது சுவர்களைப் பார்த்து வியப்படைந்தார். ஹனுமான் அன்பினால் எழுதிய ராமாயணம் று வால்மீகி எழுதிய ராமாயணத்தை காட்டிலும் உயர்ந்தது என்று உணர்ந்தார் ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை.


பீமன்

ஹனுமான் (ஆஞ்சநேயர்) மற்றும் பீமன் இருவரும் சகோதரர்கள். பீமன் வாயு பகவானின் மகன் ஆவார். ஒரு நாள் பீமா் தனது மனைவிக்காக பூக்களை தேடி அலைந்து கொண்டிருந்தார். அங்கே ஒரு குரங்கு தூங்கிக் கொண்டிருந்தது. அதனிடம் வாலை நகர்த்தும்படி அவர் கேட்டார். ஆனால் குரங்கினால் அதை கேட்க முடியவில்லை மேலும் பீமனை நகரும்படி பதிலளித்தது. பீமன் கோபத்தின் உச்சத்துக்கு சென்றார் பலமாக வாலை நீக்க முயன்றார் ஆனால் பலமான பீமனால் அதனை நீக்க முடியவில்லை. எனவே, அவர் ஒரு சாதாரண குரங்கு அல்ல, அது ஹனுமானை தவிர வேறில்லை என்று உணர்ந்தார். ஹனுமான், பீமனின் கர்வத்தையும் அகந்தைகளையும் அகற்றுவதற்காக அங்கே பொய் சொன்னார். ஹனுமான் தனது அண்ணன் அன்றி வேறு இல்லை என்று உணர்ந்து, ஹனுமான் மீது தனது அன்பை காட்டினார்.

மஹாபாரத கதை - யாருடைய பக்தி சிறந்தது?

மஹாபாரத கதை - யாருடைய பக்தி சிறந்தது?


 
சூதாட்டத்தில் துரியோதனனிடம் தோற்ற பாண்டவர்கள், வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழ்ந்து வந்தார்கள். காட்டில் இருந்தாலும் குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இதில் பீமன் எப்போதும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவதால், அவன் பிரார்த்தனையில் கலந்துக் கொள்வதில்லை.

பொறுத்துப் பார்த்த தருமரோ, ஒருநாள் "நீ பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்துக் கொண்டார். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான். "நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான். அங்கு சென்ற அருச்சுனனிடமும் "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர்.

ஏமாற்றத்துடன் அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர். வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்து வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான். அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார்.

"இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன். "நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவாரா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது தண்டாயுதத்தை (கதையை ) தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்" என்று உரக்கக் கத்தினான்.

உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று இதன் மூலம் நிரூபணம் ஆயிற்று.

Friday, 10 August 2018

மகாபாரதம் !!! கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர் பற்றி தெரியுமா?

மகாபாரதம் !!!

கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர் பற்றி தெரியுமா?


மகாபாரதத்தில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்கள் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் ஆவர். கிருஷ்ணருடைய தங்கையை அர்ஜுனன் திருமணம் புரிந்தார் என்பதற்காக அல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு வெறும் உறவினர்களை போல அல்லாமல் நெருங்கிய நண்பர்களை போல், குரு - சிஷ்யன் போல அற்புதமானதாய் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்குள்ளயே போர் மூண்டது.


ஆம், தாங்கள் கொடுத்த வாக்கிற்காக இருவரும் மூவுலகுமும் நடுங்க பயங்கரமாய் போர் புரிந்தனர். இந்த போர் ஏற்பட காரணமாய் இருந்ததே கிருஷ்ணரின் சகோதரியும், அர்ஜுனனின் மனைவியுமான சுபத்திரைதான். அவர்கள் ஏன் போர் புரிந்தனர்? இறுதியில் யார் வென்றார்? அவர்களின் போரை யார் நிறுத்தினார்? என உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு இங்கே விடையை காணலாம்.


காலவர் விசுவிசுவாமித்திரரிடம் சீடராய் இருந்தார். அனைத்தையும் கற்றுக்கொண்டு யோகாவலிமையை பெற்ற பின் தன் குருவிடம் விடைபெற்றுக்கொண்டு குருகுலம் விட்டு செல்ல தயாரானார். குருகுலம் விட்டு செல்வதற்கு முன் குருவிற்கு குருதட்சணை கொடுக்கவேண்டியது அவசியம். எனவே விசுவாமித்திரரிடம் குருதட்சணையாக என்ன வேண்டுமென்று அவர் வினவியபோது விசுவாமித்திரர் 500 வெள்ளை குதிரைகள் வேண்டுமென கேட்டார். இது மிகவும் எளிதான ஒன்று என்று காலவ முனிவர் நினைத்தபோது பிறகுதான் அந்த தகவலை கூறினார் விசுவாமித்திரர், அந்த குதிரைகளின் காதுகள் மட்டும் கருப்பாய் இருக்கவேண்டுமென்று.

விசுவாமித்திரர் கேட்ட குருதட்சணையை நிச்சயம் தருவதாக கூறிவிட்டு குருகுலம் விட்டு குதிரைகளை தேடிச்சென்றார் காலவ முனிவர். அனைத்து பிரதேசங்களிலும் வெள்ளை குதிரைகள் மட்டுமே இருந்தது, எந்த இடத்திலும் அவருக்கு விசுவாமித்திரர் கேட்ட குதிரைகளை போல கிடைக்கவில்லை. குருதட்சணை கொடுக்க இயலாததால் வேள்வி தீ வளர்த்து அதில் விழுந்து உயிர்துறக்க முடிவெடுத்தார் காலவர்.

காலவர் வேள்வி தீ வளர்த்த போது அங்கே வந்த சாண்டில்ய முனிவர் அவரை தடுத்து அவரின் முடிவுக்கான காரணத்தை கேட்டார். வெண்புரவிகள் கிடைக்காததால் குருதட்சணை கொடுக்க முடியாமல் போனதையும், அதனால்தான் தான் இந்த முடிவிற்கு வந்ததாகவும் காலவர் கூறினார். அவரின் நிலை கண்டு பரிதாபப்பட்ட சாண்டில்யர் தன் திவ்யசக்தி மூலம் ஏயாதி நாட்டில் விசுவாமித்திரர் கேட்டது போல குதிரைகள் உள்ளதாக கண்டறிந்து கூறினார். சாண்டில்ய முனிவருக்கு நன்றி கூறிவிட்டு ஏயாதி தேசத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார் காலவர்.

ஏயாதி தேசத்தில் அவர் கேட்டதுபோல குதிரைகள் இருந்தது, ஏயாதி மன்னனும் காலவரை வரவேற்று அவரின் வேண்டுகோளுக்கிணங்க குதிரைகளை அளித்தார். மேலும் தன் வீரர்களை அவருடன் செல்லும்படி கூறினார். குதிரைகளுடன் புறப்பட்ட காலவர், செல்லும் வழியில் ஓய்வெடுக்க ஒரு இடத்தில தங்கினார். காலை எழுந்ததும் கடவுளை வணங்க அருகில் இருந்த ஆற்றில் அவர் இறங்கியபோது அந்த வழியே தன் மனைவிகளுடன் வானத்தில் சென்றுகொண்டிருந்த கந்தர்வன் சித்திரசேனன் காலவரை கவனிக்காமல் அவர் கையில் ஏந்தியிருந்த நீரில் தன் உமிழ்நீரை துப்பிவிட்டு சென்றுவிட்டான். கோபத்தின் உச்சிக்கே சென்ற காலவர் உடனே சாபமிட எண்ணினார். பின் தான் சாபமிடுவதை விட கிருஷ்ணரிடம் முறையிடுவது சிறந்தது என கிருஷ்ணரிடம் சென்றார்.

கிருஷ்ணரிடம் சென்ற காலவர் தனக்கு நேர்ந்த அவமானத்தை கூறினார், அதனை கேட்டு கோபமுற்ற கிருஷ்ணரோ இன்று மாலைக்குள் அவன் சிரம் உன் காலில் கிடக்கும் என்று கூறிவிட்டு கோபத்துடன் சித்திரசேனனை தேடிச்சென்றார். இது எதையும் அறியாத சித்திரசேனன் வானில் சுற்றிக்கொண்டிருக்க, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாரதர் சித்திரசேனனின் தவறையும் அதற்காக அவன் உயிர் கிருஷ்ணருடைய கைகளால் பறிக்கப்பட போவதையும் கூறினார். அதிர்ச்சியடைந்த சித்திரசேனன் செய்வதறியாது திகைக்க நாரதர் கிருஷ்ணருடைய சகோதரி சுபத்திரையிடம் சென்று உதவி கேட்கும்படி யோசனை கூறினார்.
நாரதர் கூறியபடி சுபத்திரையிடம் சென்ற சித்திரசேனன் எதையும் முழுமையாக கூறாமல் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னை காப்பாற்றும்படியும் சுபத்திரையை வேண்டினான், நடந்தவற்றை அறியாத சுபத்திரை கவலைபடாதீர்கள் என் கணவர் அர்ஜுனன் உங்களை பாதுகாப்பார் என வாக்களித்துவிட்டார். அப்பொழுது அர்ஜுனன் அங்கே வர சுபத்திரை தான் வாக்களித்ததையும், எதுநேர்ந்தாலும் சித்திரசேனனை பாதுகாக்க வேண்டுமென்பதையும் கூறினார். அர்ஜுனனும் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் தன் மனைவியின் வாக்கை காப்பாற்றுவதாக கூறினான்.

அர்ஜுனன் சித்திரசேனனை பாதுகாக்க வாயிலில் நிற்க அங்கே வந்த கிருஷ்ணரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான். கிருஷ்ணர் தான் காலவ முனிவருக்கு கொடுத்த வாக்கையும், அதற்காக சித்திரசேனன் கொல்லப்பட வேண்டியதையும் கூறினார். அர்ஜுனனும் தான் சுபத்திரைக்கு கொடுத்த வாக்கை பற்றி கூறி தன்னால் சித்திரசேனனை ஒப்படைக்க முடியாது என்று கூறி மன்னிப்பு கோரினான். கோபமடைந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம் யுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தார்.
தன் மனைவிக்கு கொடுத்த வாக்கிற்காக தன்னுடைய பரந்தாமனேயே எதிர்க்க துணிந்தான் அர்ஜுனன். இருவருக்கும் போர் தொடங்கியது, கிருஷ்ணர் நாராயணன் ஆயிற்றே மிகவும் உக்கிரமாக போர் புரிந்தார். அர்ஜுனனும் சாதாரணமானவன் அல்லவாயிற்றே, கிருஷ்ணருக்கு இணையாக அவனும் இணையாக போரிட்டான். மாலை நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது. இவர்களின் போர் மூவுலகையும் அஞ்ச செய்தது. தன்னால் கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதே என வருந்திய சுபத்ரைக்கு திடீரென ஒரு யோசனை எழுந்தது.

அர்ஜுனனும், கிருஷ்ணரும் மூர்க்கமாய் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்தார்கள் யார் வெல்வார் என எவராலும் கூற இயலாத அளவிற்கு அவர்களின் திறமை இருந்தது. அந்த தருணத்தில் அவர்களுக்கு இடையில் போய் நின்றார் சுபத்திரை. இருவரும் உடனே போரை நிறுத்த கிருஷ்ணரின் அருகில் சென்று அவர் காதில் தன் யோசனையை கூறினார் சுபத்திரை. சுபத்திரையின் யோசனையை கேட்டு மகிழ்ந்த கிருஷ்ணர் ஆயுதத்தை கீழே போட்டார், அந்த யோசனையை கேட்ட அர்ஜுனனும் ஆயுதத்தை கீழே போட்டார்.

சுபத்திரையின் யோசனைப்படி சித்திரசேனன் கிருஷ்ணரிடம் ஒப்படைக்கப்பட்டான். கிருஷ்ணர் அவனை அழைத்துக்கொண்டு காலவரிடம் சென்று அவரின் கால்களில் சித்திரசேனனின் தலை படும்படி விழச்செய்தார். கிருஷ்ணரின் வாக்கின்படி சித்திரசேனனின் சிரம் காலவரின் காலில் விழுந்தது. காலவரும் சித்திரசேனனின் தவறை மன்னித்தார். உயிர்தப்பிய சித்திரசேனன் இனி இதுபோன்று நடந்துகொள்ள மாட்டேன் என்றுகூறிவிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். காலவரும் வெண்புரவிகளுடன் தன் குருதட்சணையை கொடுக்க விசுவாமித்திரரின் குருகுலம் நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!! 
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..