Pages

Wednesday, 28 February 2018

விண்வெளியில் நீரை எவ்விதம் மறுசுழற்சி செய்கிறார்கள்....

விண்வெளியில் நீரை எவ்விதம் மறுசுழற்சி செய்கிறார்கள்....


அறிவியலின் தேடல் தொடரும் !!!!
  " வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).

Monday, 26 February 2018

இதயத்தின் அடைப்பை அகற்ற ஒரு விஞ்ஞான தொழில்நுட்பம்

இதயத்தில் உள்ள இரத்தமானது இதயத்தின் துடிப்பை துண்டிக்கிறது. காரணம் இரத்தம் உறைந்து போகிவிடுகிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த உறைந்த இரத்தத்தை அகற்ற விஞ்ஞான தொழில்நுட்ப வியூகம் இது.
காணொளியை காணுங்கள்.


அறிவியலின் தேடல் தொடரும்
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)

அறிவியல் விஞ்ஞான புரட்சியில் மீண்டும் ஒரு அதிசயம் !!!

அறிவியல் விஞ்ஞான புரட்சியில் மீண்டும் ஒரு அதிசயம் !!!
என்னவென்றால் தொடர்பு கதிர்வீச்சு மூலம் நமது தொடும் உணர்வை கொண்டு இயங்க கூடிய தொழில்நுட்பம்.


           அறிவியலின் தேடல் தொடரும்
                " வலியே வலிமை "
-ஐய

கடவுளின் படைப்பில் உருவான நாம் அறியாத அதிசயங்கள்

கடவுளின் படைப்பில் உருவான நாம் அறியாத  அதிசயங்கள் 

அற்புதமான காணொளி !!!


    அறிவியலின் தேடல் தொடரும் 

                  " வலியே வலிமை "

            - ஐய்யனார் (வால்வரின்).

Sunday, 25 February 2018

அற்புதமான பொது அறிவு

அற்புதமான

     பொது அறிவு



👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  *ஒட்டகப்பால்*.

👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
*கங்காரு எலி*.

👉துருவக் கரடிகள் அனைத்துமே *இடது கை* பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – *கரடி*.

👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் *கார்பன் மோனோ ஆக்சைடு* என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் *பிறந்தநாள்* அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு *மூன்று இதயம்* இருக்கும். அதன் ரத்தம் *நீல நிறத்தில்* இருக்கும்.

👉குரங்குக்கு இரண்டு *மூளை* இருக்கிறது.

👉சூரியனின் வயது *470* கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய *பாறைகளை* கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.

👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் *ஜூலியஸ் சீசர்*. அதனால்-தான் இந்த முறைக்கு *சீசரியன்* என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் *அழுதால்* கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் *100* கேள்விகள் கேட்கும்.

👉தைவான் நாட்டில் உள்ள *மூன்யூச்* மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு *சிங்கம்*. ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் *15* ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் *சிங்கம்* கர்ஜிக்கும்.

👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – *சிங்கம்*.

👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் *ரத்தத்தால்* எழுதப்பட்டது.

👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – *ஒட்டகம்*.

👉இலைகள் உதிர்க்காத மரம் – *ஊசி இலை மரம்*.

👉காட்டு வாத்து *கருப்பு* நிறத்தில் தான் முட்டையிடும்.

👉குளிர் காலத்தில் *குயில்* கூவாது.

👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் *மூன்று மாதங்கள்* மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற *மோனாலிச ஓவியம்* இடது கையால் வரையப்பட்டது.

👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி *ஒன்பது நாள்* வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.

👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – *இதயம்*.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – *இதயம்*.

👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் *3100* பேர் தான்.

👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – *ஈரிதழ் சிட்டு*.

👉வால்டிஷ்ணி மொத்தம் *32* ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉ஒருதலைமுறை என்பது *33* ஆண்டுகள்.

👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – *புருஸ்லீ*.

👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை *குளிக்காமல்* தன் கூட்டுக்குள் நுழையாது.

👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி *ஆரஞ்சு* நிறத்தில் இருக்கும்.

👉சீல்வண்டுகள் *17* ஆண்டுகள் தூங்கும்.

👉யானை, குதிரை *நின்று* கொண்டே தூங்கும்.

👉நீர் நாய் *ஒன்றரை* நிமிடம் மட்டுமே தூங்கும்.

👉டால்பின் *ஒரு கண்* விழித்தே தூங்கும்

👉புழுக்களுக்கு *தூக்கமே* கிடையாது.

👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் *6* மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Thursday, 22 February 2018

தமிழை மறந்த தமிழனின் " ஆக்கம் " இதுவே

தமிழின் ஆக்கம் !!!!
இன்றை தமிழ் மக்களுக்கு சிலருக்கு தமிழை பேசவோ அல்லது படிக்கவோ , எழுதவோ  தெரியாது.
காரணம் அண்டைய நாடுகளின் மொழியின் மோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
தமிழில் பேச அவர்கள் தயாராக இல்லை. மற்றவர்களை போலவே ஆங்கிலத்தை விரும்புகிறார்கள்.
உண்மையில் தமிழை முழுமையாக அறியாதவர்கள்  " தமிழை புறக்கணிப்பதாக எண்ணி கொண்டு ஆங்கிலத்தை கற்று அறிந்து கொள்கிறார்கள் "

இன்றைய மக்களுக்காக இந்த பதிவுகள்.
தமிழின் எழுத்துக்களும் , அதன் உருவ வடிவங்களும்
அதனின் அதிசய பெருமைகளை அறிவோம்.

தமிழை பிழையின்றி எழத எளிய வழிகளுக்கான PDF files.
https://drive.google.com/file/d/1TK2NlijeVDIjkPgrlF7YdQWfjldWFUgF/view?usp=drivesdk


தமிழ் இலக்கணம் (1) என்றும் இனிக்கும் .pdf
https://drive.google.com/file/d/1-azaOVvkRZdNH9NSy5XG2LC78UNSToK0/view?usp=drivesdk


தமிழ் இலக்கணம் (2)என்றும் இனிக்கும். .pdf
https://drive.google.com/file/d/1UkFvcdrbi24TZfpZVtQze1iYDjtMhxXM/view?usp=drivesdk


தமிழ் இலக்கணம் (3)என்றும் இனிக்கும்.pdf
தமிழிலக்கணமும் , உரையமைப்பும்.
https://drive.google.com/file/d/1zRpVfKhzgqt_S3_J8PWLprAMushY92C5/view?usp=drivesdk



தமிழ் எழுத்து பயிற்சி.pdf
https://drive.google.com/file/d/1G9N4aEhPiZH2C_erLv-hxOQrqkJpNM7b/view?usp=drivesdk



தமிழ் எழுத்து பயிற்சி 2 .pdf
https://drive.google.com/file/d/1kOfNmUv7X9CUqumJyXpQiDJNwFTgJMao/view?usp=drivesdk


தமிழ் எழுத்துக்களும் ,படமும் .pdf
இயற்கையில் கடவுளின் படைப்பில் உருவான தமிழ் மொழி
கடவுளின் மொழியே !!!
https://drive.google.com/file/d/1kVEUnVJ4C7UVRIQ1_9AqcGni9iymXWJN/view?usp=drivesdk


தமிழ் மரபு.pdf
https://drive.google.com/file/d/16au8GLFKwx-rOhZG6mKPzLmSHJ0bQrKI/view?usp=drivesdk


தமிழ் மரபுத்தொடர்கள்.pdf
https://drive.google.com/file/d/1EEULG4ugDNBhLCZLLVjHjkz3qtkAvZjg/view?usp=drivesdk


ல, ள, ழ ,ர, ற ,ந, ண, ன - வேறுபாடுகள்.pdf
https://drive.google.com/file/d/1scifzlQkdbCBcVEfDiA5jc-VyYXIMOBO/view?usp=drivesdk



அறிவியல் இயற்பியலின் இயக்க விதியின் எளிமையான விஞ்ஞான அதிசயம் .

அறிவியல் இயற்பியல் இயக்க விதி !!! மற்றொரு அதிசயம். மிகவும்  எளிமையான யோசனை. அற்புதமான கண்டுபிடிப்பு.

அதற்கான காணொளியை கீழே
பதிவிடுகிறேன்.

அறிவியலின் தேடல் தொடரும்.
                        " வலியே வலிமை "
                        -ஐய்யனார் (வால்வரின்)

உயிர்களில் மருத்துவ ஆய்வு என்னும் பயோமெடிக்கல் டெக்னாலஜி ஒரு விஞ்ஞான முன்னேற்றம் ..

உயிர்களில் மருத்துவ ஆய்வு  என்னும் ஆங்கிலத்தில் கூறும்

பயோமெடிக்கல் டெக்னாலஜி ஒரு முன்னேற்றம் .. 

உடனடியாக காயத்தை ஆற்றும் ஒரு பசை கண்டுபிடிப்பு. விலங்கு சோதனை நடவடிக்கை மிகவும் சாதகமான முடிவுகளை அளித்துள்ளது. இப்போது மனிதர்கள் மீதான சோதனை தொடங்கியுள்ளது. திறந்த இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
அதற்கான காணெளியை கீழேயே பதிவிடுகிறேன்.

 
மேலும் நம்முடைய அறிவியலின் தேடல் தொடரும்.
                     " வலியே வலிமை "
                            -ஐய்யனார் (வால்வரின்)

Monday, 19 February 2018

ஒளியின் வேகம் எப்படி இருக்கும் ???

ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்தால் இதனை கடக்க இவ்வளவு நேரமாகும்....

காணொளியை காணுங்கள்.

  அறிவியலின் தேடல் தொடரும்.
     " வலியே வலிமை "
            -ஐய்யனார் (வால்வரின்)

அறிவியல் விஞ்ஞானியான எடிசன் பற்றிய தகவல்கள்



“உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு,அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.”


இந்த பிரபலமான வாசகத்துக்கு சொந்தகாரர் இந்த உலகமே என்றும் மறக்காத தோமஸ் அல்வா எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டுபிடித்ததன் மூலம் அறியபட்டவர். என்றும் இந்த உலகம் இருக்கும்வரை இவரது கண்டுபிடிப்புக்களும் இவரும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களால் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியபட்ட தோமஸ் அல்வா எடிசன் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வாசித்து பார்த்தபோது, எனக்கு தனித்து அவரை கண்டுபிடிப்பாளர் என மட்டுமே அழைக்கத் தோன்றவில்லை

எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி என்பதை எல்லாம் தாண்டி, எடிசன் ஒரு சிறந்த தொழில் முனைவர் அல்லது சிறந்த தொழில் அதிபராகவும் அறியப்பட்டிருக்க வேண்டியவர். வேறு பல விஞ்ஞானிகளிலிருந்து இவர் வேறுபடவும் எண்ணில் அடங்காத கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவும், அவருக்கு உதவி செய்தது இந்த விஞ்ஞான அறிவு மட்டுமல்ல, அவரது வணிக மூளையும்தான்!

எடிசனின் முதல் கண்டுபிடிப்பு யாரும் பெரிதாக அறியாத வாக்கு பதிவு இயந்திரம். இந்த இயந்திரம் நடைமுறைக்கு வர அமெரிக்க அரசியல்வாதிகள் அனுமதி கொடுத்திருப்பின், தேர்தல் நடைபெற்று முடிந்தவுடனேயே முடிவுகளை விரைவாக அறிந்துகொள்ள முடிந்திருப்பதுடன்,  மேலதிக பல தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க கூடியதாக இருந்திருக்கும். ஆனால், இதை எடிசன் கண்டுபிடித்து அமெரிக்க அரசியல்வாதிகள் முன்பு காட்ட்டிய போது, “இதில் எங்களுக்கு சாதகமான மாற்றம் தரக்கூடிய எதுவுமேயில்லை” என்று கைவிரித்ததுடன், வேறு எதையும் கண்டுபிடித்து தாருங்கள் என்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் எடிசனிடமிருந்த வணிக மூளை விழித்து கொண்டது. அப்போது அவர் சொன்ன வாசகம்தான் அவர் வாழ்நாளில் பெரிய மாற்றத்துக்கு வழிகோலியது என்று சொல்லலாம்

“மனித சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் கண்டுபிடிப்பேன். மற்றையவற்றை நான் தொடவும் மாட்டேன்” என்று கூறினார். தோமஸ் அல்வா எடிசன் இதற்கு பிறகுதான் தன் வணிக மூளையையும் பயன்படுத்தி பல்வேறுபட்ட அவசியமான கண்டுபிடிப்புகளின் மூலகர்த்தாவாகிப் போனார். இதற்கு மேலாக, எடிசன் தன் கண்டுபிடிப்புகளில் சம்பந்தப்படாத கண்டுபிடிப்பாளர்களை தட்டி கொடுத்து ஊக்குவித்ததுடன், தன்னுடன் தனது கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களை ஒரு வணிக முதலாளி போல ஒடுக்கவும் தவறவில்லை.

போனோகிராப் (ஒலிப்பதிவு செய்யும் கருவி) மற்றும், பேசும்படத்தின் அடிப்படையில் அமைந்த இவரது சில நிமிடங்கள் ஓடக் கூடிய படங்கள் போன்ற கண்டுபிடிப்புக்களின் மூலமாக விஞ்ஞான உலகின் வசூல் சக்கரவர்த்தியாக பணம் கொழிக்கும் ஒருசில விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார். மனிதகுல தேவையை முன்னிலைப்படுத்தி கண்டுபிடிப்பை செய்வேன் என்று சொல்லிய எடிசன், தன் கண்டுபிடிப்புக்களை சந்தைப்படுத்தவும், பணம் உழைக்கவும் அவரது கண்டுபிடிப்புக்களில் ஒன்றான பேசும் படங்களைக் கொண்டு கவர்ச்சிப்பெண்களை பயன்படுத்தி படங்களை எடுத்தார் என்பதும் உபரிதகவல்.
தனது கண்டுபிடிப்புகளில் தலையீடு செய்யும் கண்டுபிடிப்பாளர்களை ஒரு தொழிலதிபர் ஏனைய புதிய திட்டங்களை கொண்டுள்ள சிறு அல்லது புதிய  தொழிலதிபர்களிடம் பணத்தைக்கொட்டி வாங்குவதைப்போல, அன்றைய காலத்தில் குறித்த கண்டுபிடிப்பாளர்களின் வறுமையை பயன்படுத்தி விலைக்கு வாங்குவதை ஒரு உத்தியாகவே கொண்டிருந்தார். அதுபோல, பிற்காலங்களில் தனது கண்டுபிடிப்புகளில் உதவக்கோரி திறமையானவர்களை இனம்கண்டு இணைத்துக்கொண்டு தன் கண்டுபிடிப்புகளை பூர்த்திசெய்த பின்பு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானம், பெயர் என்பவை கிடைக்க செய்யாமல் செய்த சம்பவங்களும் அவரது வரலாற்றில் நிறையவே உள்ளன.

அவர் காலத்தில், ஆங்கிலேயே ஆட்சியின் கீழிருந்த நாடுகளுக்கு வரும் அமெரிக்க இளம் சமூகத்தின் ஹீரோவாக எடிசன் இருந்தார் என்று அப்போதைய பிரபல எழுத்தாளர் வில்லியம் செக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் போது, எடிசன் அப்போதைய அமெரிக்க இளம் வர்க்கத்திடம் ஒரு விஞ்ஞானியாக பார்க்கபட்டத்தை விட, ஒரு சிறந்த தொழில் முனைவராக பார்க்கபட்டார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்க இளைஞர்களுடன் செக்ஸ்பியர்  உரையாடும் போது, அவர்கள் எடிசனை விட சிறந்த தொழில் முனைவர் இந்த உலகத்தில் இல்லை என்ற மனப்பாங்குடன் இருந்ததாக குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு தனது ஆளுமை மூலமாக அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார் தோமஸ் அல்வா எடிசன்.
ஆனால், எந்த தருணத்திலும் தோமஸ் அல்வா எடிசன் தான் ஒரு தொழில் முனைவனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ வரலாறுகள் காட்டி விடக் கூடாது என்பதிலும் முனைப்பாக செயல்பட்டார் என்பதனை பதிவு செய்ய வேண்டும்.

எடிசனின் மேற்கூறிய முனைப்புக்கு மிக சிறந்த உதாரணமாக, மின்குமிழ் கண்டுபிடிப்பை எப்படி வரலாறுகளில் பதிவு செய்தார் என்கிற ஒரு உதாரணமே போதுமானதாக இருக்கும். மின்குமிழை கண்டறிந்த எடிசன் அதனை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என சிந்தித்தார். அதற்கு, எல்லோரிடத்திலும் மின்சாரம் இருக்கவேண்டியது அவசியம் என்பதனை உணர்ந்து கொண்டார். ஆனால், அவருக்கு மின்குமிழை இயக்கும் மின்சாரத்தின் யுத்தி முழுமையாக வசப்படவில்லை. இந்த இடத்தில்தான் தொழில் முனைவோன் எடிசன் முன்னிலை பெறுகிறார். அமெரிக்க அரசியல் சபைக்கு தனது கண்டுபிடிப்பான மின்குமிழை கொண்டு சென்று, அங்கிருந்த அனைவரையும் தன் மின்குமிழால்தான மின்சாரமே இயங்குகிறது என நம்ப வைக்கிறார். இதன் விளைவாக, மின்சாரத்தை கண்டுபிடித்தவர்களால் கூட செய்ய முடியாத ஒன்றை எடிசன் செய்து காட்டினார். அது மக்களிடம் தனியே மின்குமிழை மட்டும் கொண்டு சேர்க்காமல், மின்சாரத்தையும் அமேரிக்கா முழுவதும் கொண்டு சேர்த்தார். எடிசனின் கீழாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்வழங்கல் அமெரிக்கா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டது. ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கு வெளிச்சம் கொண்டுத்தவர் என்கிற புகழ் எடிசனை வந்து சேர்ந்தது. ஆனால், அந்த புகழுக்கு பின்னால் மின் நிலைய அனுமதியை சலுகை அடிப்படையில் பெற்று, மின்சாரத்தை மக்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்கி பெற்றஇலாபத்தை புதைத்துக் கொண்டார். இதனால், ஒரு இலாபவாதி மக்களின் இலட்சியவாதியாக மாறிப்போனார்.

விஞ்ஞானி எடிசன் தன் வணிக மூளையின் உச்சத்தை பயன்படுத்தியது, தான் கண்டுபிடித்த சீமேந்து கலவையுடன் கூடிய கான்கிரீட் என்கிற கட்டுமான கலவையில்தான். அப்போது இந்த தொழிலில் அவருக்கு நிறையவே போட்டியாளர்கள் இருந்தார்கள். எடிசன் வெறுமனே இதை கண்டுபிடித்ததுடன் நின்றுவிடவில்லை. அவர் இந்த தொழிலில் ஈடுபட்ட நபர்களை வெற்றி கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நினைத்தார். அதற்கு மக்களின் வறுமையை கையில் எடுத்தார். அதாவது, வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த செலவில் தான் கண்டுபிடித்த கலவையை பயன்படுத்தி வீடுகளை கட்டி தருவதாக வாக்களித்து கட்டியும் கொடுத்தார். ஆனால், இதற்க்கு பின்னால் தெரியாதவொரு உண்மை ஒழிந்திருந்தது. அதற்கு அவர் கையிலெடுத்த ஆயுதம் கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate social responsibility) ஆகும். அதாவது , பெரிய கட்டுமான நிறுவனங்களை அணுகி, அவற்றின் விளம்பர உத்திக்கு வறியவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை ஒரு நிபந்தனையுடன் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். நிறுவனங்கள் தங்களை மக்களிடம் விளம்பரபடுத்திக்கொள்ள எடிசனின் யோசனையை ஏற்றுக்கொண்டன. அவர் விதித்த ஒரே நிபந்தனை, தனது சீமெந்து கலவையை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இதனால், தவிர்க்க முடியாமல் எடிசனின் கலவைக்கு சந்தையில் கேள்வி எழுந்ததுடன், காலப்போக்கில் அந்த கலவை போட்டியாளர்களை ஓரம்கட்டி சந்தையில் முன்னணி கலவையாக மாற்றம் பெற்றது

எடிசன் மட்டுமல்ல இன்றைய காலத்தில் வாழும் பல பிரபலங்கள் தங்களை பிரபல்யம் செய்து கொள்ள இந்த வணிக தந்திரங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே எடிசன் போல கண்டுபிடிப்பாளர் என்கிற போர்வைக்குள் வாழவிரும்பும் வணிகவியலாளர்கள் அல்ல.

எப்போதுமே வணிகம் என்கின்றவொன்று சரியான முறையில் பயன்படுத்தபட்டதாக வரலாறே இல்லை. போட்டியாளனாக இருக்கும் ஒருவனை வீழ்த்தவும், தங்களை சரியாகப் பலப்படுத்தி கொள்ளவும், ஒருவனை அடக்கி ஆளவுமே வரலாறுகளில் வணிகம் என்பது சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தோமஸ் அல்வா எடிசன் என்கிற கண்டுபிடிப்பாளன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா ?

இயற்பியல் கோட்பாடுகளும் இயக்கவிதியின் காணொளிகளும்

அறிவியலின் இயற்பியல் கோட்பாடுகள் தெரிவிக்கவும் இயக்க விதியின் காணொளி !!! 


விண்வெளி பற்றிய அறிவுத் தகவல்கள்


*விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்*

நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய சில தகவல்கள் இங்கே..

1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர்காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத்தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக்கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண்வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ்மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன. எத்தனை எத்தனையோ புதுமைகள் கிடைக்கப்பெறலாம். வளர்ந்து வரும் விஞ்ஞானமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

அறிவியலின் தேடல் தொடரும்.
                 “ வலியே வலிமை “
-ஐ

Saturday, 17 February 2018

உயர்தர அறிவியலின் தொழில்நுட்பம்



சாலை பாதுகாப்பு கூடிய தொழில்நுட்ப அறிவியலின் வியூகம்.


        அறிவியலின் தேடல் தொடரும்.
     " வலியே வலிமை "
           -ஐய்யனார் (வால்வரின்)

Friday, 16 February 2018

புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) பற்றி அறியாதவை.

சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) பிறந்த தினம் (மார்ச் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


# ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் (1879) பிறந்தார். தந்தை ரசாயனத் தொழிற்சாலை உரிமை யாளர். படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. அப்பா தந்த காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்துவந்தார். இளம் வயதில் வயலின் கற்றார்.

# உறவினர் ஒருவர் இவருக்கு கணிதம், அறிவியல் கற்பித்த தோடு, பல நூல்களை படிக்கச் சொன்னார். இதனால் கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் பிறந்தது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக்கில் பயின்றார். காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

# இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது. அதுவரை ஏற்கப்பட்டுவந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படைக் கொள்கைகளை இவரது கோட்பாடு மாற்றியமைத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

# குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

# பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

# இவரை யூத இயற்பியலாளர் என்று முத்திரை குத்திய ஹிட்லர் நிர்வாகம் இவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதனால், 1933-ல் அமெரிக்கா சென்றார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இணைந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றார். ஒருங்கிணைந்த புலக்கோட்பாடு விதியை 1950-ல் வெளியிட்டார்.

# ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.

# எளிமையானவர். ரயிலில் 3-வது வகுப்பில்தான் செல்வார். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்!

# மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார். தன் அறையில் காந்திஜியின் படத்தை மாட்டிவைத்திருந்தார். ‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.

# இவரது உடல்நிலை 1955 ஏப்ரலில் மோசமானது. ‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். மருத்துவமனையில் அடுத்த நாள் காலை அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 76.


          அறிவியலின் தேடல் தொடரும்.
               " வலியே வலிமை "
                   -ஐய்யனார் (வால்வரின்)
  

விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்


*விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்*

நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய சில தகவல்கள் இங்கே..

1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர்காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத்தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக்கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண்வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ்மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன. எத்தனை எத்தனையோ புதுமைகள் கிடைக்கப்பெறலாம். வளர்ந்து வரும் விஞ்ஞானமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

அறிவியலின் தேடல் தொடரும்.
                 “ வலியே வலிமை “
                    -ஐய்யனார் (வால்வரின்)