Pages

Thursday, 31 January 2019

இயற்கையின் மைந்தன் தமிழன் !!!!!

உலகமே தமிழை தான் சூழ்ந்தும் உள்ளது.  

உலகமே தமிழை தான் சுமந்தும் உள்ளது. 

          -   அய்யனார் ( வால்வரின்). 


உலகில் 19000 தமிழ் பெயர்களை கொண்ட ஊர்கள்.
அது அன்றைய புகழ்மிக்க தேசங்கள்.
அற்புதமான காணொளி காணுங்கள்.


              தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                       தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
            - அய்யனார் (வால்வரின்)..


Monday, 21 January 2019

சூரியனை பற்றி அறிவோம் .

ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இது கிட்டத்தட்ட ஒரு கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும். இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செயல்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. கதிரவன், புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாக விளங்கி வருகிறது. 

கதிரவனின் நிறையில் மூன்றில் ஒரு பங்கு ஐட்ரசனும் (~73%) மீதமுள்ள பங்கில் பெரும்பாலும் ஈலியமும் (~25%) அவற்றுடன் சிறிய அளவிலான ஆக்சிஜன்கரிமம்இரும்பு மற்றும் நியான் உள்ளிட்ட கனமான தனிமங்களும் உள்ளன.

சூரியன் எனும் சூரன் .



நமது சூரிய குடும்பத்தின்  தலைவனாக இருக்கும் சூரியன் எனும் சூரனை பற்றியும் அது வேலை செய்யும் விதம் பற்றியும் சில தகவல்களை தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.

முதலில் இந்த பூமியின் மொத்த ஆற்றல் காண ஆற்றலின் மூலப்பொருளே  சூரியன் தான் என்று நாம் கேள்வி பட்டு இருந்தாலும் !!!!!

அது எப்படி என்பதை இன்னும் பல பேர் முழுதாக புரிந்து கொள்வதில்லை !!!!
அதாவது நாம் அன்றாடம் பல செயல்கள் செய்கிறோம் , படிக்கிறோம் ,
எழுதுகிறோம் , ஒடுகிறோம் , பேசுகிறோம் , பாடுகிறோம் ,
இது எல்லாவற்றிற்கும் ஆற்றல் தேவை படுகிறது அல்லவா...

அந்த ஆற்றலை நமக்கு கொடுத்ததே சூரியன் தான்.

அதாவது சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றல் தாவரங்களுக்கு
கடத்தப்படுகிறது.

 (சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றலை உள்வாங்க உலகில் இரண்டு உயிரினங்களால் தான் முடியும் ஒன்று தாவரம்.

இனொன்று கற்பனை கதாபாத்திரமான சூப்பர் மேன்)

அந்த ஆற்றல் தாவரத்தை உண்ணும் ,
மனிதனுக்கு அல்லது அதை உண்ணும் விலங்குக்கு கடத்தப்படுகிறது.

இந்த உலகம் மனிதனின் சிந்தனையில் உண்டானது என்றால் !!!!!
அந்த " சிந்தனையை சிந்திக்க "
மனிதனுக்கு ஆற்றலை கொடுத்ததே சூரியன் தான் !!!

அடுத்ததாக நீங்கள் சாலையில்  பார்க்கும் வாகனங்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை அல்லவா !!!!

அந்த ஆற்றல் அதுக்கு எப்படி கிடைக்கிறது .
 பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளில் இருந்து.

அந்த எரி பொருளுக்கு அந்த ஆற்றல் எப்படி வந்தது.?

லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் சூரிய ஆற்றலை உள்வாங்கி தேக்கி வைத்த மரம் , செடி ,கொடிகள் பூமியில் புதைந்து அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தில் உருவானதே பெட்ரோல் டீசல் போன்றவை.

 இவர்களுக்கான கச்சா எண்ணையில் ஒளிந்திருக்கும் சூரிய ஆற்றலால் தான் எல்லா வாகனங்களும் ஓட வைக்கிறது.

இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்வது தாவரங்களால் உற்பத்தி செய்பட்ட ஆக்சிஜனால் தான்.

அந்த ஆக்சிஜனை தாவரங்கள் சூரிய ஒளியை கொண்டே உற்பத்தி செய்கின்றன.

எனவே அவன் இல்லையேல் காற்று இல்லை ..
செடி கொடி இல்லை...
உலகில் எந்த ஆற்றலும் இல்லை எந்த உயிரினங்களும் இல்லை.

உலகில் பல வகை ஆன்மீக சமூகங்களில் சூரியனை வணங்குவது ஏன் என்று இப்போது புரிகிறதா?

நீங்கள் சூரியனை பூமி யுடன் ஒப்பிடுவதாக இருந்தால் பூமியை விட பல்லாயிரம் கணக்கான மடங்கு பெரியவன் சூரியன் ஆவான்.

 ஒரு சூரியனில் மொத்தம் 13 லட்சம் பூமிகளை அடக்க முடியும் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இதன் எடை பூமியை போல 333000 மடங்கு பெரியது.
இதன் விட்டம் 1391000 கிமி. மேலும் இதன் சுற்றளவு 4,366,813  கிமி.

ஆங்கிலத்தில் கூறும் Mass என்னும்
 (நிறை) என்று வரும் போது
 மாஸ் காட்டுவது சூரியன் தான் .

காரணம் மொத்த சூரிய குடும்பத்தின் மொத்த மாஸில் அதாவது நிறை கொள்ளவு 99.8 % சூரியனின் உடையது.

மீதமுள்ள 0.2 % நிறை தான் சூரிய குடும்பத்தின் மொத்த கிரகங்களின் நிறை ஆகும்.

" தலைவன் " என்பவன் தனது கூட்டத்தின் அதிக பட்ச சுமையை தான்  சுமக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறானா சூரியன் !!!!!!

சூரியனின் மொத்த ஆயுட்காலம்
 1000 கோடி ஆண்டுகள் ,
அதில் 500 கோடி ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது ஒரு நடுத்தர வயது ஆளாக இருக்கிறான் சூரியன்.

 நமது பால் வெளியில் மிதக்கும் பல கோடி நட்சத்திரங்களில் ஓன்றான சூரியனை அதன் வெப்பம் மற்றும் அளவு நீளத்தை பொருத்து அதை G2 வகை என அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

என்ன தான் பெரிய சைஸ் அதாவது அளவு என்றாலும் தொடர்ந்து எரிவதால் இது சில ஆயிரம் ஆண்டுகளில் எரிந்து போய் இருக்க வேண்டுமே..

 எப்படி 1000 கோடி ஆண்டுகள் சூரியானால் தொடர்ந்து எரிய முடியும். இங்கே தான் பொருளை ஆற்றலாக மாற்றும் ஐன்ஸ்டைன்

சமன் பாடு E=mc 2 ஐ நினைவு கூற வேண்டும்.

ஒரு கிலோ நிலக்கரியை கொண்டு சில மணி நேரம் எரிக்கலாம் என்றால்..

அந்த ஒரு கிலோ நிலக்கரியை முழுதாக ஆற்றலாக மாற்ற முடிந்தால் அதை வைத்து ஊருக்கே மின்சாரம் கொடுக்கலாம்...

அதுவும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக.
இது தான் பொருள் ஆற்றல் விதி இதை விளக்க தான் அந்த சமன்பாடு. (ஹிரோஷிமா அணுகுண்டில் பயன்படுத்தபட்டது சில அவுன்ஸ் யுரேனியம் தான் .
அதை வைத்து தான் அவ்வளவு பெரிய பேராற்றலை எடுத்தார்கள் என்பதை அறிக)

ஆனால் இது ஒரு மிக மிக
மெதுவாக ஆமை கூட அல்ல அடிபட்ட ஆமை வேகத்தில் நடக்கும் ஒரு ஸ்லோ ப்ராஸஸ்.

அதாவது முன்பு சொன்ன ஒரு கிலோ நிலக்கரியை கொண்டு இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கிளாஸ் தண்ணீரை சுட வைக்க சொன்னால் அதற்கு குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

அதனால் தான் இவ்வளவு பொறுமையாக சூரியனில் ஆற்றல் நடக்கிறது.

சூரியனில் ஆற்றல் அணுக்கரு இணைவு எனும் செயல் மூலம் உண்டாகிறது.

சூரியன் ஒரு மிக பெரிய ஹைட்ரஜன் பாம்முக்கு சமம்.
இரண்டிலும் ஒரே வழிமுறை தான் நடக்கிறது.
 சூரியன் ஒரு மகா ( மெகா )
ராட்சத  நியூக்லியர் ரியாக்டர்.
வாருங்கள் அந்த ரியாக்டருக்குள் என்ன நடக்கிறது .

அது எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்கலாம்.
(எதற்கும் கொஞ்சம் உஷாராக பாருங்கள் தன்னை நேருக்கு நேர் உற்று பார்ப்பவர்களின் விழித்திரை செல்களை கொன்று அவர்களை நிரந்தர குருடாக மாற்றும் ஆற்றல் பெற்றவன் அல்லவா அவன்)
அவனே சூரியன் ஆவான்.

சூரியனில் உள்ளே மொத்த அளவை பந்து போன்ற அதன் மையப்பகுதி வரை மூன்று அடுக்குகளாக பிரிக்கலாம்.

சூரியன் வேலை செய்யும் விதத்தை புரிந்து கொள்ளும் முன் அதில் உள்ள அடுக்குகளை பற்றி தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

ஒரு உதாரணத்திற்கு ஒரு சப்போட்டா பழத்தை எடுத்தது கொள்ளுங்கள். அதன் மையப்பகுதியில் விதையும் ,
அதற்கு மேல் உள்ள சதை பகுதி ,
பிறகு மேலே போர்த்த பட்டுள்ள தோல் பகுதி என 3 அடுக்கை காணலாம் அல்லவா .

கிட்ட தட்ட அதே போல சூரியனின் மையத்தில் உள்ளது கோர் பகுதி
 ( விதை பகுதியை போல) அதற்கு மேலே உள்ள பகுதி  ரேடியேட்டிவ் ஜோண். (Radiative zone) (சப்போட்டா சதை பகுதி ) .பிறகு கடைசி மேல் அடுக்கில் உள்ளது கன்வக்டிவ் ஜோன்.( Convective zone)(தோல் பகுதி).

இதில் கோர் பகுதி சூரியனின் ஆரத்தில் 25 சதம் ஆகும் அடுத்ததாக சொன்ன R. A ஜோன் 45 சத பகுதியையும் கடைசியாக உள்ள கன்வக்ட்டிவ் ஜோன் 30 சத ஆரத்தையும் கொண்டது.

இந்த கோர்... அப்புறம் ரேடியோ ஆக்டிவ் ஜோன் ..மற்றும் கன்வக்ட்டிவ் ஜோன் தவிர சூரியனின் வலிமண்டலத்தை எடுத்து கொண்டால்
அதுவும் மூன்று அடுக்கு உண்டு.

சூரியனை சுற்றி உள்ள முதல் அடுக்கு
போடோஸ்பியர்.
அதற்கு அடுத்த லேயரின் பெயர் குரோமோஸ்பியர்.
கடைசி அடுக்கில் உள்ளது பெயர் கொரோனா.
இந்த கோரோனா வில் வெப்ப நிலை ஆச்சரியாமாக சூரியனை விட பல மடங்கு அதிகம்.

இப்போது சூரியனில் ஆற்றல் உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதை பார்கலாம்.

சூரியனில் ஆற்றல் உற்பத்தி என்பது கற்பனை செய்யவே பிரமிப்பாக இருக்கும் அளவு சக்தி வாய்ந்தது.

அதாவது ஒரு லட்சம் கோடி மெகா டன் அணுகுண்டுகளை ஒரு சேர வெடிக்கும் அளவு ஆற்றல் சூரியனில் இருந்து ஒவ்வொரு வினாடிக்கும் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது என்றால் யோசித்து கொள்ளுங்கள்.

அதன் மையப்பகுதி
(core) 1.5 கோடி டிகிரி செல்ஸியஸும் அடுத்த அதுக்கான ரெடியேட்டிவ் இல்
 70 லட்சம் டிகிரி செலிசியஸ் உம். மேலடுக்கான கன்வக்ட்டிவ் இல் 20 லட்சம் டிகிரி செல்ஸியஸும் இருக்கிறது.


அப்படியே அதன் மேற்பரப்பில் இருக்கும் போடோஸ்பியரில் 6000 டிகிரி செல்சியஸ் இருக்கிறது.

அப்புறம் ஆச்சரியமாக  அதற்கும் மேல் உள்ள வளிமண்டலம் கொரோனா வில் 30 லட்சம் டிகிரிக்கு மீண்டும் அதிகரிக்கிறது.

சூரியன் முழுக்க முழுக்க ஹைட்ரஜென் எரிபொருளை முதன்மையாக கொண்டு இயங்கும் ஒரு ரியாக்டர்.
9 கோள்களையும் இழுத்து பிடித்து சுற்றி கொண்டிருக்கும் அதன் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை அதன் மையப்பகுதியான கோர் இல் இருந்து உண்டாகிறது.

 அந்த கட்டுகடங்கா ஈர்ப்பு விசையால் மையத்தை நோக்கி அது அனைத்தையும் ஈர்த்த வண்ணம் இருக்க அதன் எரி பொருளான ஹைட்ரஜன் அணுவில் ஈர்ப்பு காரணமாக ஒன்றை ஒன்று அணுக்கள் இணைவு நடக்க காரணமாக உள்ளது.

சூரியன் எதனால் ஆனது என்று பார்த்தால் !!!!!!!

 இன்றைய நிலவர படி சூரியனில் 70 சதம் ஹைட்ரஜன் , 28 சதம் ஹீலியம் உள்ளது மேலும் 1.5 சதம்
கார்பன் ,நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளது அப்புறம் 0.5 சதம் நியான் ,இரும்பு,
மெக்னிசியம்,மற்றும் ஸல்பர் தொடங்கி இதர கனமான தனிமங்கள் உள்ளது.


சூரியனின் அதீத ஈர்ப்பு விசையால் ஹைட்ரஜனின் மற்றும் ஹீலியத்தின் அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணையும் அந்த நிகழ்வு
கீழ் வரும் சில படிகளாக வரிசையாக நடக்கிறது.

( அடுத்து பார்ப்பது கொஞ்சம் வேதியியல் ( கெமிஸ்ட்ரி )
பாட புத்தகத்தை படித்ததை போல இருக்கும்
அனுசரித்து படிங்க )

முதல் நிலை :


ஹைட்ரஜன் அணுவில் ஒரு புரோட்டானை ஒரு எலக்ட்ரான் சுற்றி வரும் என்று நமக்கு தெரியும் அல்லவா...

அப்படி இரண்டு ஹைட்ரஜனின் புரோட்டான்கள் ஒன்று சேர்ந்து முதல் நிலையில் ஒரு டியுடேரியம் (deuterium) அணு உண்டாகிறது .

(டியுடேரியம் அணு என்றால் என்ன?
Heavy hydrogen என்று அழைக்க படும் இது ஒரு ஹைட்ரஜன் ஐசோடோப் அதாவது  ஒரு புரோட்டானும்  மையத்தில் ஒரு நியுட்ரானும் கொண்ட ஹைட்ரஜன் அணு தான் அது.

சாதாரண ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் நியூட்ரான் இருப்பது இல்லை.
நமது கடல் தண்ணீரில் 6420 ஹைட்ரஜன் அணுவிற்கு ஒரு deuterium உள்ளது.

அடுத்ததாக இந்த முதல் நிலையில் பாசிட்ரானை (positron)உண்டாகிறது.

இந்த பாசிட்ரான் என்பது என்ன?
இதை ஒரு எதிர் எலக்ட்ரான் என்று சொல்லலாம்.
எலெக்ட்ரானின் அதே எடை கொண்ட  எலக்ட்ரான் போலவே உள்ள ஆனால் அதே சமயம் பாசிட்டிவ் சார்ஜ் இல் உள்ள ஒரு துகள் தான் இந்த பாசிட்ரான்.

மேலும் இது ஒரு பக்கா எதிர்வினை துகள் .
 தனக்கு நிகரான எலெக்ட்ரானை இது நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் !!!!!இரண்டும் , ஒன்றோடு ஒன்று அடித்து மாய்ந்து கடைசியில் தடயம் தெரியாமல் முழுக்க முழுக்க ஆற்றலாக மாறி போகும் தன்மை கொண்டவை.

இந்த முதல் நிலையில் இது தவிர கூடுதலாக ஒரு துகள் வெளியே வருகிறது.

அது நமது தமிழ் நாட்டில் போராட்டத்தில் மிக பரிச்சியமான பெயர் ...நியூட்ரினோ.

இரண்டாவது நிலை :

இரண்டாவது நிலையில் ஒரு புரோட்டான் மேலே சொன்ன அந்த ஒரு டியுடேரியம் அணுவுடன் இனைந்து ஹீலியம் 3 என்ற அணுவை உண்டாகிறது.
(இதில் இரண்டு புரோட்டான் ஒரு நியூட்ரான் இருக்கும்.)
இதில் கூடுதலாக காமா கதிர்கள் வெளிவருகின்றன.

மூன்றாவது நிலை :

இதில் இரண்டு ஹீலியம் 3 அணுக்கள்  ஒன்று சேர்ந்து ஹீலியம் 4 அணுக்களை உண்டு பண்ணுகிறது.

(ஹீலியம் 4 என்பது 2 புரோட்டான்.. 2 நியூட்ரான்களை கொண்டது.) மேலும் இரண்டு 2 புரோடங்களை வெளியிடுகிறது.

மேலே சொன்ன மூன்று நிலைகள் மூன்று நிகழ்வுகள் சூரியனின் 85 சத ஆற்றலை உண்டு பண்ணுகிறது.
மீதி 15 சத ஆற்றலை பின் வரும் 3 நிலைகள் மூலமாக உற்பத்தி செய்கிறது. வாங்க இன்னொரு 3 நிலையை பார்ப்போம்.

நிலை ஒன்று :

ஒரு ஹீலியம் 3 அணுவும் ஒரு ஹீலியம் 4 அணுவும் இனைந்து பெரிலியம் 7 என்பது  உண்டாகிறது. (இவை 4 புரோட்டான் 3 நியூட்ரான் கொண்டது)
மேலும் இதில்  கூடுதலாக காமா கதிர்கள் வெளிவருகின்றன.

நிலை இரண்டு :

ஒரு பெரிலியம் 7 அணுவானது  ஒரு எலெக்டரா அணுவை பிடித்து வைத்து கொண்டு
லித்தியம் 7 என்ற அணுவாக மாறுகிறது (இது 3 புரோட்டானையும் 4 நியூட்ரானையும் கொண்டது.
மேலும் இதில் கூடுதலாக நியூட்ரினோ வெளிவருகிறது.

நிலை மூன்று :

லித்தியம் 7 ஆனது ஒரு புரோட்டான் உடன் இனைந்து இரண்டு ஹீலியம் 4 அணுவை உண்டு பண்ணுகிறது.

இங்கு தான் ஒன்றை கவனிக்க வேண்டும்.

கதை ஆரம்பிக்கும் போது இரண்டு ஹைட்ரஜன் அணுவில் தானே தொடங்கினோம்.

அப்போ முடிவில் நமக்கு கிடைக்கும் ஹீலியம் 4 ...
எப்படி பார்த்தாலும் ஆரம்பத்தில் நாம் எடுத்து கொண்ட எடைக்கு சமமாக தானே இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் 7 சத எடை இழப்பு நடக்கிறது .
எங்கே சென்று என்றால் அந்த 7 சதம்  அது ஐன்ஸ்டைன் பார்முலா படி முழுக்க முழுக்க ஆற்றலாக மாறி விட்டது.

அந்த ஆற்றல் தான் சூரியனில் இருந்து நமக்கு பல வடிவங்களில் கிடைக்கிறது. கண்ணால் பார்க்க கூடிய ஒளியாக.... x rey வாக ,அல்ட்ரா வைலட்டாக, இன்பிரா ரெடாக, மைகிரோ வேவ் ஆக,ரேடியோ வேவ் ஆக, காமா வேவ் ஆக இப்படி பல ரூபங்களில்..

ஒளி போட்டான் எனும் சிப்பமாக அதாவது பொட்டளங்களாக பூமியை அடைய 8 நிமிடம் எடுத்தது கொள்கிறது.

 ஆனால் அவைகள் சூரியனின் கருவில் (core) உருவாகி நகர்ந்து அதன் மேல் பாகத்தை அடைய 40000 ஆண்டுகள் எடுத்தது கொள்கிறது என்பது ஆச்சரியம் தான். அதன் உருவாக்கம் அவ்வளவு ஸ்லோ ப்ராஸஸ்...

மேலும் இது தவிர charged particals சிலதை சூரியன் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே இருக்கிறது
உதாரணம் நியூட்ரினோ, மற்றும்  புரோட்டான்கள்.

சூரியனின் மேற்பரப்பு
நெருப்பு அயல்களை உண்டாக்கி கொண்டே இருக்கும் .

ஒவ்வொன்றும் கிட்ட தட்ட பூமி அளவு பெரியது சில நேரம் அவைகள் பூமியை நோக்கி சிதறுதல் துண்டு.
2003 இல் ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை அடைந்து அணைத்து தொலை தொடர்புகளையும் தற்காலிகமாக துண்டித்து பதம் பார்த்தது.

சூரியன் பூமியை போல் இல்லாமல் ஒரு கச்சிதமான வடிவம் கொண்ட ஒரு மிக துல்லியமான உருண்டை வடிவம் கொண்டது.

இதன் மேல் பகுதியில் பள்ளமான இருண்ட ..
குளிர்ந்த பகுதியும் காணப்படுவதுண்டு அதற்குக் பெயர் (sun spot ) சூரிய புள்ளிகள்.

 இவைகள் பெரும்பாலும் தீவிரமான காந்த புலத்தை கொண்டவை
(பூமியை விட 5000 மடங்குஅதிகம்) இவை ஒரு ஸ்பாட் இல் நுழைந்து அடுத்த ஸ்பாட்டில் வெளிவரும்.

பொதுவாக இந்த காந்த புலம் சூரியனுக்குள் சுழலும் வாயுகளால் உண்டாகிறது.
இந்த சன் ஸ்பாட் கள் 11 ஆண்டுகள் ஒரு முறை இடைவெளியில் காண கிடைக்கிறது.

மேலே சொன்ன 6 நிலைகளில் என்ன நடக்கிறது என்பதை எளிமையாக சொல்லவேண்டும் என்றால் லேசான தனிமங்கள் ஒன்று சேர்ந்து கனமான தனிமங்களாக உருவாகி கொண்டிருக்கின்றன .

அந்த நிகழ்வில் தொடர்ச்சியாக ஆற்றலை வெளியிட்டு கொண்டிருக்கும் முயற்சியில் ஒருபக்கம் எரிபொருள் அழிந்து கொண்டே வர சூரியனுக்கு உள்ளே மேலும் மேலும் கனமான தனிமங்கள் உண்டாகி கொண்டே போகிறது.

சூரிய அழிவுக்கு பின்னாளில் காரணமாக இருக்க போவது இந்த கனம் கூடிய விஷயங்கள் தான்.

என்ன தான் சூரியன் பெரிய சூரனாக இருந்தாலும் அது நம்மை பொறுத்த வரை மட்டும் தான். இந்த பறந்து விரிந்த பால் வெளி திரளில் அந்த பிரமாண்ட பிரபஞ்சத்தில் இது ஒரு தூசு...

இதை விட அளவிலும் சக்தியிலும் 10000 மடங்கு பெரிதான நட்சத்திரங்கள் நமது பால் வெளியில் உண்டு.

ஒளியே !!!!
ஒரு முறை குறுக்கே கடந்து போக ஒரு லட்சம் ஆண்டுகள் எடுத்து கொள்ளும் இந்த பிரமாண்ட பால் வெளி திரளில் ஒரு ஓரமாக தனது குடும்பத்துடன் சுற்றி வருகிறான் சூரியன்.

அவன் பால் வெளியை ஒரு முறை சுற்றி வரவே 22 கோடி ஆண்டுகள் எடுத்தது கொள்கிறான் (ஆண்டு பயணம்!!)

தனது வாழ்நாளில் இதுவரை 20 சுற்றுகள் தான் வந்திருக்கிறான். இதே இடத்தில தனது போன சுற்றின் போது நம்ம பூமியில் டைனோசர்கள் நடமாடி கொண்டிருந்தன.

சூரியனின் அழிவு:

சாதாரணமாக சூரியனின் அளவும் வெப்பமும் அதன் ஆரம்ப நாளில் இருந்தே படிப்படியாக அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
எல்லா நட்சத்திரமும் ஒரே மாதிரியான முறையில் தான் அழிகின்றன.

நமது சூரியன் அதற்கு விதி விலக்கல்ல..
ஒரு காலத்தில் தனது எரிபொருள் தீர்ந்து போய் இதன் மேல் பகுதி உப்ப தொடங்கும் அந்த நிலையில் இதன் பெயர் ரெட் (red giant )சிகப்பு அரக்கன். அது எவ்வளவு பெரிதாக உப்பும் என்றால் சனி கிரகம் வரை அது அடைத்து கொள்ளுமாம்  இதன் ஆரம்... இப்போ இருப்பதை விட 100 மடங்கு பெரிதாக இருக்கும் என்கிறார்கள்.

அதன் பின் அதன் எரி பொருட்கள் தீர்ந்து போய்..
வெளிப்பகுதி வெடித்து சிதறி உள் பகுதி இறுகி வெள்ளை குள்ளன் (white, dwarf,) நிலையை அடையும் பிறகு மேலும் குளிர்ந்து கிட்டத்தட்ட கண்ணுக்கே தெரியாத கருப்பு குள்ளன் (black dwarf) நிலையை அடையும்.

பொதுவாக பெரிய அளவு நட்சத்திரங்கள் அழியும் போது ஈர்ப்பு விசையால் தனக்குள் தானே இறுக தொடங்கி..

ஒரு கட்டத்தில் நிறையும் ஈர்ப்பும் முடிவிலியாக மாறி ப்ளாக் ஹோல் ஆக மாறுகிறது.

அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும்  நட்சத்திரங்கள் பிளாக் ஹோளாக மாறாது

அவை நியூட்ரான் குண்டுகளாக நின்று விடும்.
நியூட்ரான் குண்டு என்பது அதீத நிறை கொண்ட ஒரு இறந்த நட்சத்திரம்.

 அதில் ஒரு குண்டூசி முனை அளவு மண்ணை ஒட்டி எடுத்தால் அதன் எடை கிட்ட தட்ட எவரெஸ்ட் சிகரம் அளவு இருக்கும் . அவ்வளவு அடர்த்தியை கொண்டது நியூட்ரான் குண்டு.

நமது சூரியன் பிளாக் ஹோளாக மாற இப்போது இருப்பதை விட 10 மடங்கு இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் இல்லையேல் இதன் ஈர்ப்பு விசை பிளாக் ஹோளாக மாறுவதற்கு போதுமானது அல்ல.

பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு தூசாக இருக்கலாம் ஆனால் நம்ம சூரிய குடும்பத்திற்கு அவன் தான்
ஆற்றல் மூலம் ..
ஆதிமூலம் .. எல்லாம். அதாவது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி கொண்டிருக்கும் சூரன்.


சில Light years'க்கு முன்பு வெடித்து சிதறிய ஒரு நட்சத்திரத்தின் துண்டு தான் நமது பூமியும், மற்ற கோல்களும்.... நம் பூமியில் இருக்கின்றன தாதுக்கள் அணைத்துக், அந்த நட்சத்திரத்தில் nuclear fusion reaction மூலம் உருவானவை.....எனவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் எல்லாம் ஒருகாலத்தில் நட்சத்திரமாக எரிந்துக்கொண்டிருந்தவை.... ....


இந்த பதிவுகளை வழங்கிய
புகழ்மிக்க அறிவியல் ஆய்வாளர் 
என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

கடவுளின் படைப்பில் இயற்கை தனக்கான கட்டளை சரியாக செய்து கொண்டு இருக்கிறது.

          தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Saturday, 19 January 2019

சூடாக்கும் போது பால் ஏன் பொங்குகின்றது? நீர் ஏன் பொங்குவதில்லை?

பால் ,  நீர்
       
                       
              


               

1. பாலைக் காய்ச்சும் போது அது ஏன் பொங்குகின்றது?

பால் என்பது நீர், புரதம், மாப்பொருள், கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய ஒரு கலவை ஆகும்.

பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதனால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.

நீரின் கொதிநிலை 100 பாகை செல்சியஸ் ஆகும். ஆனால், பாலில் இருக்கின்ற கொழுப்பானது 50 பாகை செல்சியசிலேயே உருக ஆரம்பித்து விடுவதுடன் இந்த கொழுப்பானது மெல்லிய படலமாக மாறி பாலின் மேற்பரப்பில் காணப்படும்.

எந்த ஒரு திரவத்தையும் கொதிக்க வைக்கும் போது அந்த திரவத்தில் காற்றுக் குமிழ்கள் மேலே வரும்.

இதேபோல்,பாலை கொதிக்க வைக்கும் போதும் காற்றுக் குமிழ்கள் மேற்பரப்பில் உருவாகும்.

இதேவேளை, பாலின் மேற்பரப்பில் கொழுப்பு உருகி படலமாக படிவதால் காற்றக் குமிழ்கள் வெளியேறுவதை அது தடை செய்யும்.எனவே, சிறிய காற்றுக் குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி கொழுப்பு படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகின்றது.

இப்போது ஒரு சந்தேகம் எழுந்துள்ளதா?

2. பாலை தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கும் போது ஏன் பொங்குவதில்லை?

பாலை ஒரு மேசைக்க கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் கொழுப்பினால் படலம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும் எனவே, உருவாகும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும் அதனால், பால் பொங்குவதில்லை.

இப்போது மற்றுமொரு சந்தேகம் எழுந்திருக்குமே!


         


3. நீரை கொதிக்கவைக்கும் போது ஏன் நீர் பொங்குவதில்லை?

நீரில் கொழுப்போ, மாப்பொருளோ, புரதங்களோ இல்லை.

எனவே மேற்பரப்பில் எந்த படலமும் படியாது. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம்.

எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.

இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. வடிவேல் அவர்களுக்கு !!!! 
               மிக்க நன்றி !!!!!


           தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                      தமிழ் வாழ்க !!!
       அறிவியலின் தேடல் தொடரும்.
                   வலியே  " வலிமை "
             - அய்யனார் (வால்வரின்)..


பூமியில் வைரங்கள் எங்கிருந்து வருகின்றன ?.....




வைரங்கள் எரிமலைகளில் இருந்து வெளி வருகின்றன. பூமிக்கு அடியில் அதிக அளவு வெப்பம், அழுத்தம் ஆகியவற்றால் உருவாகும் வைரங்கள் எரிமலைகள் வெடிக்கும்போது பூமியின் மேற்பரப்பிற்கு வருகின்றன.

பூமியின் மேற்பரப்பிலிருந்து 160 முதல் 480 கி.மீ.வரை ( 100 முதல் 300 மைல் வரை) ஆழத்தில் வைரங்கள் உருவாகின்றன. கிம்பர்லைட் என்று அழைக்கப்படும் எரிமலைக் கற்களின் உள்ளே வைரங்கள் உருவாகின்றன.

பொதுவாக எரிமலைகள் வெடித்து எரிமலைக் குழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்றன. தனியாக வைரம் ஏதேனும் காணப்படுமானால், அது கிம்பர்லைட் பாறையில் இருந்து பிரிந்து அடித்து வரப்பட்டதாக இருக்கும்.

உலகில் 20 நாடுகள் வைரங்களை உற்பத்தி செய்கின்றன. ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, போட்ஸ்வானா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக வைரம் உற்பத்தி செய்யும் ஐந்தாவது  நாடாக ஆப்ரிக்கா உள்ளது.

வைரங்கள் தூய்மையான கரியினால் ஆனவை. அவ்வாறுதான் பென்சில்களில் எழுதும் பகுதியைத் தயாரிக்க உதவும் கிராஃபைட் என்ற பொருளும் கரியினால் ஆனதே. ஆனால் அவற்றில் கரி அணுக்கள் மாறுபட்ட முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

உலகில் நாம் அறிந்திருந்த பொருள்களிலேயே மிகவும் கடினமானது வைரமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் வைரத்தை விடக் கடினமான பொருள் ஒன்றினை பரிசோதனை சாலையில் உருவாக்கினர்.

அக்ரிகேடட் கார்பன் நானோ ராட்ஸ் (ACNR)என்னும் இப்பொருள் மிகவும் கடினத்தன்மை கொண்ட கார்பன் மூலக்கூறுகளை 2226 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பப்படுத்தி, அழுத்தம் கொடுத்து  உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும் 60 அணுக்களைக் கொண்டுள்ளது. இந்த அணுக்கள் எண்கோண வடிவிலும் அறுகோண வடிவிலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. மிகச் சிறிய கால்பந்துகளைப் போன்று அவை தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது.   மிகவும் கடினத்தன்மை கொண்ட இந்த (ACNR) என்ற பொருள் பெரிய முயற்சி இன்றி மிக எளிதாக வைரத்தை அறுத்துவிடுகிறது.
 
               

ஆங்கிலத்தை நேசிக்கும் தோழர்களுக்கு ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களின் மூலம் உள்ள உலக அதிசயத்தை காண்போம்.

A   to  Z 



A  இதே வடிவில் எகிப்திய மொழியிலும் ஒரு எழுத்து இருக்கிறது.

B  குரூப் ரத்தம் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் மட்டும் இல்லை.

C என்ற பெயரில் சீனாவில் ஒரு ஆறு ஓடுகிறது .

D என்ற பெயரிலும் அமெரிக்காவின் லிங்கன் நகரில் ஒரு ஆறு ஓடுகிறது.

 F ஃபுளோரின் குறியீடு .
 
J கோஷம் போடும் எழுத்து.

K பிளையிங் ஷட்டிலைக் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானியின் பெயர்.

N இரத்தப் பிரிவுகளில் அபூர்வமானது.

O தாமரை இலை இந்த வடிவில் இருக்கும் .

P பாஸ்பரஸ் குறியீடு.

Q ஆங்கில எழுத்துக்களில் மிக குறைவாகப் பயன்படும் எழுத்து.

R ருவாண்டா நாட்டுக் கொடியில் இந்த எழுத்து இருக்கும்.

S அட்லாண்டிக் பெருங்கடல் இந்த வடிவில் இருக்கிறது.

 T சாலையில் இந்த குறியீடு இருந்தால் அந்த சாலை முடிகிறது என்று பொருள்.

 U என்ற பெயரில் இங்கிலாந்தில் மரங்கள் உள்ளன.

V இந்த வடிவில்  தான் பறவைகள் கூட்டம் பறக்கும்.

W  காசியோப்பியா உடுக்கணம் இந்த வடிவில் இருக்கிறது.

X பெருக்கல் குறிக்கு இந்த வடிவம்தான்.

Y இந்த வடிவில்தான் வானிலிருந்து சூறாவளி பூமியை நோக்கி மையம் கொண்டு தாக்கும்.

 Z என்பது ஒருவகை பாதுகாப்பு பிரிவு.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

தொழில்நுட்பத்தில் புதிய சாதனம். மிதிவண்டியின் !!! புதிய பயன்பாடு .

அறிவியல் உலகத்தில்  இயற்பியலின் பல்வேறு தொழில் நுட்பத்தை ஏற்படுத்திய விஞ்ஞானம் மேலும் ஒரு புதிய சாதனம்.
மிதிவண்டி !!!
புதிய பயன்பாடு .
அற்புதமான காணொளியை கண்டு மகிழுங்கள்.
                 

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

வெளவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்குகின்றன ?

வௌவால். 






பறக்கும் பாலூட்டியான வெளவாலுக்கு கால்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை.
பறப்பதற்கு ஏற்ற வகையில் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் சவ்வால் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக மரக்கிளைகளைப் பின்னங்கால்களால் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்படித் தொங்கும் போது எதிரிகளின் கண்களுக்குச் சட்டென்று இவை புலப்படுவதில்லை.
அது மட்டுமின்றி, பறவைகளைப்போல நிலத்திலிருந்து வெளவால்களால் பறந்து செல்ல முடியாது.
தலைகீழாகத் தொங்கி கொண்டிருக்கும் போது எளிதாகப் பறந்து சென்று விட முடியும்.
தலைகீழாகத் தொங்கும் போது குறைவான சக்தியே செலவாகிறது என்பதாலும் வெளவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன.

     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

உலகிலே அதிசய பாறை என்னும் தமிழ் தேசத்து மணிபாறை !!!!


உலகில் தமிழ் தேசம் ( நாடு)
புனித தன்மை உடையது என்பது
உலகமே அறிந்து ஒன்று.
கடவுளின் படைப்பில் இயற்கையும் ,
இயற்கையின் படைப்பில்
தமிழ் தேசமும் என்றும் சிறப்புடையதாகும்.
நாம் அறியாதவைகள் பல ,
அதில் நாம் அறிந்தவைகள் சில !!!!!
இந்த காணொளியை காணுங்கள். அதிசய மணிபாறையின் தகவல்கள். 

                          

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 9 January 2019

மரங்களின் தெரியாத ரகசியங்கள்

உலகில் அதிசயம் ஆயிரம்.
அறியாதவை பல்லாயிரம் !!!
அதில் நான் கண்ட  அற்புதமான காணொளி மரங்களின் வாழ்க்கை !!!!
நீங்களும் இந்த காணொளியை கண்டு மகிழ்ந்து அனைவருக்கும் பகிரவும்.



            தமிழால் இணைவோம் !!!
             அறிவால் உயர்வோம் !!!
                    தமிழ் வளர்க !!!
                    தமிழன் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
                வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

இலுப்பை மரத்தின் சிறப்பும் மற்றும் அழிவின் விளிம்பில் இலுப்பையும்

இலுப்பை மரம்  !!!  அழிவின் விளிம்பில் . 

               


பூ முதல் விதை வரை.


         

விதை !!!


        இலுப்பை மரம்
  இலுப்பை பூ

              செடி




பழம் மற்றும் விதைகள். 





"  இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது ."

இலுப்பையின் தாயகம் தமிழகம்.
இது தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது.
நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது.
இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன.
ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியது.
இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ , விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு  ஆகிய
அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது.

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை.
முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர் தான் பலன் தரும்.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை" என்பது பழமொழி உண்டு.

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும்,
இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும்.
 ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம்.
இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று  எரிபொருளாக பயன்படக்கூடியது.
 இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல்  மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு ,
காயம்  ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்புநீரை தாங்குவதால்
 இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு  இலுப்பை மரங்கள் வரை விளைச்சல்  ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம் தான்.

ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது .
அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.

இதை ஒரு பணம்  மரம் என்று கூறினால் அது மிகையாகாது.

வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள் தான்.

இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.

கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்.....

இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் சேலம் திரு. ஜெயசீலன். அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Sony நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தி உள்ள " வில்லை குவி " அதாவது ஆங்கிலத்தில் 'கான்டாக்ட் லென்ஸ்'


👁👀  Sony நிறுவனம் புதியதாக 

அறிமுகப்படுத்தி உள்ள
" வில்லை குவி " அதாவது ஆங்கிலத்தில் 'கான்டாக்ட் லென்ஸ்' 
இதில் நாம் தினமும் காணும் காட்சிகளை காணொளி பதிவு ( Videos Record )  செய்து கொள்ள முடியும் வகையில் இன்றைய தொழில்நுட்பம் பிரத்யேகமாக உருவாக்கி உள்ளது.  
                      
   

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

வால் நட்சத்திரத்தின் ‘வால்’ எப்படித் தோன்றுகிறது ???


வால் நட்சத்திரத்தின் ‘வால்’ எப்படித் தோன்றுகிறது?


வால்நட்சத்திரம் என்பது பனிக்கட்டியைப் போன்றது. இதில் தூசு, மண், பாறைகள், பல வகை வாயுக்கள் போன்றவையும் இருக்கும். சூரிய மண்டலத்தின் எல்லையில், சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது வால் நட்சத்திரத்துக்கு வால் இருக்காது. தலை மட்டுமே இருக்கும். சூரியனைச் சுற்றிவிட்டு, மீண்டும் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து, சூரியனை நோக்கிச் செல்லும் போது தான் வால் உருவாகும்.
சூரியனின் ஈர்ப்பு விசையால் வேகம் அதிகரிக்கிறது. சூரியனின் வெப்பமும் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்கத் துகள்களும் வால்நட்சத்திரத்தைத் தாக்க ஆரம்பிக்கும் போது, அவற்றிலுள்ள தூசுகளும் வாயுக்களும் வெளியேறுகின்றன. அப்போது இந்த வால் போன்ற பகுதி தோன்றுகிறது. சூரியனைச் சுற்றிவிட்டு, வெகு தொலைவுக்குச் செல்லும்போது வால் மறைந்துவிடுகிறது. அதாவது சூரியனுக்கு அருகில் வரும்போது வால் தோன்றுகிறது, தொலைவில் இருக்கும் போது வால் மறைந்துவிடுகிறது,



 
        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..