Pages

Friday, 30 August 2019

உலகின் முதல்மொழி என்னும் கடவுளின் மொழி தமிழ்.

உலகின் முதல்மொழி..

மொழிகளுக்கெல்லாம்  தாய்மொழி..
தமிழே இந்தியாவின் மூத்தமொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.
“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று மொழியியல் அறிஞர் #நோவாம்_சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.
நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே #தேவநேயப்பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டறிந்து அரிய உண்மைகள் பற்பல.
அதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில #ஆதாரங்கள்:-
1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.
2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழமையானதாக இருத்தல்.
3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.
4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல்[எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)
6.வேற்றுமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.
7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.
8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.
9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.
10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.
11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.
12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]
13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]
இப்படியான, பல்வேறு உறுதியான காரணங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிவும் ஆகும்.









முதல் இராசேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள்.





                தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                          தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "
                - அய்யனார் (வால்வரின்)..

பழந்தமிழரின் அளவை முறைகள்

பழந்தமிழரின் அளவை முறைகள் ....




முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

எண் வாய்பாடு

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
10பூரியம் - 1 முக்கோடி
10 முக்கோடி - 1 மகாயுகம்
மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்

மேலரை(அரை)
மேற்கால்(கால்)
மேலரைக்கால்(அரைக்கால்)
மேல்வீசம்(வீசம்)
3/4 - முக்கால்
1/2 - அரைக் கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒரு மா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும்.

கீழ்வாயிலக்கம் ( கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு - கீழ்வாய் இலக்கத்தின் பெயர்)
1/640 - கீழரை
1/280 - கீழ்க்கால்
1/2560 - கீழரைக்கால்
1/5120 - கீழ் வீசம்
1/102400 - கீழ் முந்திரி
1/1075200 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்
இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.

எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி - 11 மும்மி
11 மும்மி - 7 அணு
1 அணு - 9 குணம்
1 குணம் - 5 பந்தம்
1 பந்தம் - 6 பாகம்
1 பாகம் - 7 விந்தம்
7 விந்தம் - 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் - 60 வெள்ளம்
1 குரல்வளைப்படி - 60 வெள்ளம்
1 வெள்ளம் - 100 நுண்மணல்

நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

உளுந்து (grain) - 65 மி. கி.
குன்றிமணி - 130 மி. கி.
மஞ்சாடி - 260 மி.கி.
மாசம் - 780 மி.கி.
பனவெடை - 488 மி.கி
வராகனெடை - 4.2 கி.
கழஞ்சு - 5.1 கி.
பலம் - 41 கி. (35 கி.)
கஃசு அல்லது கைசா - 10.2 கி.
தோலா - 12 கி.
ரூபாவெடை - 12 கி.
சேர் - 280 கி.
வீசை - 1.4 கி.கி.
தூக்கு - 1.7 கி.கி.
துலாம் - 3.5 கி.கி.

பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.
32 குன்றிமணி = 1 வராகன் = 1.067 கிராம்
10 வராகனெடை = 1 பலம் = 10.67 கிராம்
8 பலம் = 1 சேர் = 85.33 கிராம்
5 சேர் = 1 வீசை = 426.67 கிராம்
1000 பலம் = 1 கா = 10.67 கிலோகிராம்
6 வீசை = 1 துலாம் = 2.560 கிலோகிராம்
8 வீசை = 1 மணங்கு 3.413 கிலோகிராம்
20 மணங்கு = 1 கண்டி (பாரம்) = 68.2667 கிலோகிராம்

நிலவளவை
இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்
12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்
40 மரக்கால் = 1 புட்டி
1 குழி - 100 சதுர அடி
1 மா - 100 குழி (10000 சதுர அடி)
1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி
1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்
நாணயம்
1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்

பிற்கால நாணய அளவை
1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு

தமிழறிந்த அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும்  இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.



            தமிழால் இணைவோம் !!!
              அறிவால் உயர்வோம் !!!
                       தமிழ் வாழ்க !!!
      அறிவியலின் தேடல் தொடரும்.
                   " வலியே வலிமை "
           -ய்யனார் (வால்வரின்)..

இலெமூரியா என்னும் நமது " பரதக்கண்டம் "

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!           

விளக்கங்கள் 


நீர் ஆரும் கடல் உடுத்த நிலம் மடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனம் என திகழ்பரதக் கண்டம் அதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

விளக்கம்:

ஒலி எழுப்பும் கடலை ஆடையாக உடுத்துகின்ற நிலமாகிய பெண்ணின் அழகு ஒளிருகின்ற சிறப்பு பொருந்திய முகமாக திகழ்வது பரதக்கண்டம். அதில் தெற்கு நாடுகள் பிறை போன்ற நெற்றியாகும். அவற்றில் சிறந்த திராவிட நாடு அந்த பிறை போலும் நெற்றியில் நல்ல மணம் பொருந்திய திலகமாக திகழ்கிறது. அந்த திலகத்தின் வாசனை போல அனைத்து உலகமும் இன்புற்றிருக்க எல்லாத்திசைகளிலும் புகழ் மணக்க இருக்கின்ற (புகழ் பெற்ற) தமிழ் ஆகிய பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் திறத்தைக் கண்டு எங்கள் செயலை மறந்து வாழ்த்துகிறோம்.








               தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும்.
      எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
      எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை                                            ஆளும்.
                     வலியே  " வலிமை "
               - அய்யனார் (வால்வரின்)..


புறநானூற்றுத் திணைகள்



கரந்தை :
பகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்
காஞ்சி :
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவது காஞ்சித் திணையாகும்
கைக்கிளை :
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர்
தும்பை :
பகை வேந்தர்கள் இருவரும் வெற்றி ஒன்றையே இலக்காக் கொண்டு கடும் போர்ப் புரிவது தும்பைத் திணையாகும்
நொச்சி :
பகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும்
பாடாண் :
பாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், மறம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும்
பெருந்திணை :
பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர்
பொதுவியல் :
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறபப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும்
வஞ்சி :
பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைத்தலையிலே சூடிப் போரிடப் புகுவது வஞ்சித் திணையாகும்
வாகை :
போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணையாகும்
வெட்சி :
பகை நாட்டின்மீது போர் தொடங்குமுன் அந்நாட்டில் உள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன் வெட்சிப்பூச் சூடிய தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்துவரச்செய்வது வெட்சித் திணையாகும்.