Pages

Tuesday, 26 March 2019

சிவனுக்கு சொந்த ஊர் இதுதான்…

சிவனுக்கு சொந்த ஊர் இதுதான்…



சிறப்பு மிக்க சிவத்தலங்களுள் முக்கியமான முதன்மையான ஸ்தலம் உத்திரகோசமங்கை. உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில் என்னும் பெரு மைமிக்க கோயில் இது. சிவனின் அடி முடி காண முடியாது என்பதற்கேற்ப இத்தலத்தின் பெருமையும் சிறப்பும் சொல்ல சொல்ல நீண்டுக் கொண்டே இருக்கும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி… காசியில் இறந்தால் முக்தி.. திருவண்ணா மலையாரை நினைத்தாலே முக்தி. ஆனால் உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது. 1087 தலம் இருந்தாலும் இது தான் நடராஜருக்கு சொந்த ஊர் என்கிறார் மாணிக்கவாசகர். இந்த ஆலயத்தில் மட்டும் மாணிக்கவாசகருக்கு தனி சன் னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வேதவியாசர், மிருகண்டு முனிவர், அரு ணகிரிநாதர், பராசரர் போன்ற மாமுனிகள் இத்தல ஈசனிடம் அருள் பெற்றுள் ளனர்.. திருவிளையாடற்புராணத்தில் வரும் வலைவீசி மீன்பிடித்த படலம் இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆதிகாலத்தில் உருவான முதல் கோயில் இது. ஆதி சிதம்பரம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நடராஜர் இங்கு ஆடிய பிறகே சிதம்பரத்தில் ஆடினார் என்றும் சொல்கிறார்கள். மகா பாரதப் போர் கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. அதன் பிறகே கலியுகம் பிறந்தது. அனால் கலியுகம் பிறப்பதற்கு முன்பே மகாபாரதத்திற்கு முந்தைய காலமான இராமா யணக் காலத்திலேயே இந்தக் கோவில் இருந்ததற்கான கல்வெட்டு குறிப்புக்கள் உள்ளன. சூரியன், சந்திரன், செவ்வாய் என மூன்று கிரகங்கள் மட்டுமே இத்தலத்தில் இருப்பதால் நவக்கிரகங்கள் 9 என்று அறியப்படாத காலத் திலேயே உருவாக்கப்பட்ட தலம் என்பது நிரூபணமாகிறது..

இராவணனின் மனைவி மண்டோதரி இத்தலத்து இறைவனை வணங்கி சிவபக்தனான இராவணனை இத்திருத்தலத்தில் மணம் புரிந்தாள் என்பதால் இக்கோயில் இராமாயண காலத்திலேயே இருந்ததாக அறியலாம்.

சிவப்பெருமான் உமையவளுக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இது. உத்தரம் என்பது உபதேசம் கோசம் என்பது ரகசி யம் மங்கை என்பது பார்வதி தேவி. இவை மூன்றும் இணைந்து உத்தர கோச மங்கை என்னு பெயரை பெற்றுள்ளது. இறைவன் இறைவிக்கு வேதத்துடன் நாட்டியமும் காட்டி அருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மங்களநாதர். இறைவி மங்கள நாயகி. இந்த ஆலயத்தில் மட்டும் இறைவனும் இறைவியும் தனித் தனியாக தனி சன்னிதியில் காட்சி தருகிறார்கள். விமானம், கோபுரம் கூட தனி தனியாக உள்ளன.

மூலவர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் உருவானவர். இந்த சுயம்பு லிங்கம் 3000 வருடங்களுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மூன்று மூர்த்தங்கள். மங்களேஸ்வரர், மங்களேஸ்வரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே (நடராசர்) மரகதப்பச்சை, தீர்த்தமும் பச்சை. தல விருட்ச மான இலந்தை மரமும் (3000 வருடங்களுக்கு முந்தையது) பச்சை என மூன் றும் ஒற்றுமையாக அமைந்திருக்கிறது..

இங்கு ஐந்தரை அடி உயரமுள்ள நடராசர் திருமேனி மரகதத்தால் ஆனது. உலகிலேயே பெரிய மரகதக் கல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார் கள். மரகதம் மிகவும் மென்மையானது. விலை மதிப்பில்லாதது… சாதாரண ஒலி கூட மரகதத்தை உதிர வைக்கும் என்று சொல்வதால் அதற்கு ஊறு ஏற் படாமல் சந்தனக்காப்பு இடப்படுகிறது. அதனாலே இச்சிலையானது உளி கொண்டு செதுக்காமல் மனத்தால் நினைத்து உருவாக்கப்பட்டது என்றும் சில ஆன்மிக பெரியவர்கள் சொல்வதுண்டு.

வருடம் முழுவதும் சந்தனக்காப்பில் காட்சியளிக்கும் மரகத நடராஜர் வருடம் ஒருமுறை ஆருத்ரா தரிசனத்தில் மட்டுமே சந்தனக்காப்பு களைந்து தரிசிக்க முடியும். உச்சிக்காலத்தில் நடைபெறும் லிங்க அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும். நித்ய அபிஷேகத்துக்கும், சாமி உற்சவ உலாவுக்கும் பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலையும் உண்டு நடராஜர் கோயிலுக்கு பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனியாக உள்ளது.

இந்தக் கோயிலின் மற்றுமொரு விசேஷம் தாழம்பூ சாற்றி வழிபடும் முறை. சிவனின் அடிமுடி காண பிரம்மாவும், விஷ்ணுவும் செல்வதற்கு முன்பே இத்தலம் உருவாக்கப்பட்டதால் தாழம்பூவுக்கு இத்தலத்தில் தோஷ மில்லை என்று சொல்கிறார்கள்…பொய்யுரைத்த தாழம்பூவுக்கு சிவன் சாப விமோசனம் கொடுத்ததால் இத்தலம் சாப விமோசனம் அளிப்பதை உணர்த் தும் தலம் என்றும் சொல்கிறார்கள்.
இயன்றபோது உத்தரகோசமங்கை சென்று மங்களேஸ்வரரை தரிசித்து வாருங்கள். மங்களம் உண்டாகும்.


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

சிவலிங்கத்திற்கும் , பவர் பட்டன் என்னும் தொடக்க போத்தானுக்கும் உள்ள அதிசயம்

சிவலிங்கத்திற்கும், சிஸ்டத்தின் பவர் பட்டனுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு தெரியுமா?!

சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர்.


இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.




பவர் பட்டன்: ஒரு குறிப்பிட்ட சாதனத்தை செயல்படுத்த மற்றும் செயலிழக்கச் செய்ய பயன்படும் இயக்க பொத்தானாக இருக்கிறது. பழைய கால மற்றும் சில சுவர் பொத்தான்களில் 1 மற்றும் ௦ என குறிப்பிடப்பட்டிருக்கும்.



அதாவது, தொலைக்காட்சியோ அல்லது லைட் மற்றும் பேன் போன்ற சாதனங்களில் ௦ என்பது இயக்கமற்ற நிலையையும், 1 என்பது இயக்க நிலையையும் குறிக்கும்.

மேலோட்டமாக நாம் பவர் பொத்தானை பார்க்கும் பொழுது அப்படி தான் தோன்றும். ஆனால், சிவலிங்கத்துடன் இதன் வடிவத்தை ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு பல அற்புத விஷயங்கள் புலப்படும்.



சிவலிங்கம் மற்றும் பவர் பட்டன் இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டுள்ளது. அதே போல் ஒரு பொத்தான் தொடக்கமாகவும், முடிவாகவும் உள்ளது. தொடக்கமும் சிவனே, முடிவும் சிவனே என்பதை உணர்த்தவே இந்த பொத்தான் இப்படி வடிவமைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 14 March 2019

அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்

1. மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
2. எலக்ட்ரான் - J.J.தாம்சன்
3. மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
4. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
5. ஈர்ப்பு விதி - நியூட்டன்
6. பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
10. நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
15. செல் - ராபர்ட் ஹூக்
16. தொலைபேசி - கிரகாம்பெல்
17. மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
18. ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
19. குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
20. தொலைகாட்சி - J. L. பெயர்டு
21. அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
22. போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23. டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
24. இன்சுலின் - பேண்டிங்
25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் (இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
26. இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி
27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
28. வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
30. பாக்டீரியா - லீவன் ஹூக்
31. குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
32. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
33. புரோட்டான் - ரூதர்போர்டு
34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
36. ரேடியோ - மார்கோனி
37. கார் - கார்ல் பென்ஸ்
38. குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு - ஆட்டோஹான்
40. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி
41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்
             தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                       தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
            - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 3 March 2019

சிவன் உண்மையிலே யார்?

 சிவன் உண்மையிலே யார்?


இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்படி ஒரு

முடிவுக்கு வர முடிவதில்லையோ !!!

அவ்வாறே சிவனை பற்றியும் ஒரு

முடிவுக்கு வருதலும் மிகவும்

சிரமமாகவும்.

சிவனை அறிந்த

உலகம் மூன்று விதமாக அவரை

பார்க்கின்றது.

சிவனை யோகிகள் ஆதி யோகி

என்றும் உலகை முதன் முதலில் உருவாக்கியவர்  என்றும் !!!

சிவன் தான் முதன் முதலில்

யோகங்களை கண்டுபிடித்தவர்

என்றும், மனிதனும் இறை நிலைக்கு

உயர இவரே வித்திட்டவர் என்றும்

சொல்லப்படுகிறது.

சிவனை தமிழ் நாட்டு சித்தர்கள்

இயற்கையாகவும், பிரபஞ்சமாகவும்,

இறைவனாகவும் பார்க்கின்றனர்.

சிவனை பக்தி மார்க்கத்தில்

உள்ளவர்கள் முழு முதல் கடவுளாக

பாக்கின்றனர்.
இவரை அனைத்து

உலகையும் உயிரையும் படைக்க

காரணக்கர்த்தா என்றும் இவரே

அனைவருக்கும் படி அளக்கிறார்

என்றும் நம்பப்படுகிறது.

உலக கடவுளுக்கு எல்லாம் கடவுளாக விளங்கும் பெரும் கடவுளாக " சிவன் "
திகழ்கிறார்.

உலகில் உள்ள அனைத்து மதத்திலும்  சமுதாயத்திலும் , புராணங்களிலும் ,
இதிகாசத்திலும்  சிவனுக்கு என்று ஒரு பெயர் உண்டு.
இதை அனைவரும் ஏற்க தான் வேண்டும்.

சிவனை பற்றி உலக கடவுளின் வரலாற்று புராணங்களில் கூறியது.

எகிப்து :

பண்டைய எகிப்தியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபட்டு வந்தனர். அக் கடவுள்களுள் முக்கியமான கடவுள் ரே (Re) எனும் சூரியக் கடவுள் ஆவார்.
இவர் சிவனின் படைப்பில் உருவானவர் என்றும் நம்பப்படுகிறது.
சூரியக்கடவுளாக எண்ணும் எகிப்திய
மக்களின் ரே கடவுள் அவர்களின் வழியில் வந்தவர்கள் இவர் எல்லாம்.
எகிப்தியக் கடவுள்களின் அதிபதியாக அமுன் (amun) என்பவர் கருதப்பட்டார். அமுன் கடவுளுக்கும் ரே கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கருதப்பட்டது.
இதன் காரணமாக அமுன் அமுன்-ரே எனவும் அழைக்கப்பட்டார். காற்றின் கடவுள் சூ(Shu) என்பவர் ஆவார்.

 இசிஸ் (Isis), எனும் கடவுள் மாயாயாலங்களின் கடவுளாகக் கருதப்பட்டார்.
இது கிருஷ்ணரை குறிக்கும்.
ஹதொர் (Hathor) எனும் பெண் தெய்வம் மகிழ்ச்சிக்கான கடவுள் ஆவார்.
 ஹதொர் இசைக்கும் நடனத்திற்கும்,ஆன தெய்வமாகவும் கருதப்பட்டார். இது சரஸ்வதியை குறிக்கும்.
மரணத்திற்கான கடவுளாக ஒசிரிஸ் (Osiris) எனும் கடவுள் கருதப்பட்டார்.
இது எமதர்மரை குறிக்கும்.

வானத்தின் கடவுளாக நட்(Nut) எனும் பெண் தெய்வம் வணங்கப்பட்டார்கள். நட் எனும் பெண் தெய்வத்தின் சகோதரனும் , கணவனும்   பூமியின் கடவுளாக வணங்கப்பட்டார்கள் .
 இக் கடவுளின் சிரிப்பினாலேயே பூமியில் பூமி அதிர்வுகள் ஏற்படுவதாக பண்டைய எகிப்தியர்களால் நம்பப்பட்டது.
இது பார்வதியின் சிரிப்பாக ஆகும்.
நட் என்னும் எகிப்திய பெண் கடவுள் பார்வதியை குறிக்கும்.
அவர்களுடைய சகோதரனும் , கணவனும் என்பது விஷ்ணு , சிவனை குறிக்கும்.
இது போல் எகிப்திய புராண கதைகளிலும் சிவனை பற்றிய தகவல்கள் உள்ளது.

கிரேக்கம் :


ஜீயஸ் - இந்திரன்
நமது கலாச்சாரத்தில் இந்திரன் எனும் கடவுள் நீருக்கு அதிபதியானவர். மழை மற்றும் இடி மின்னல் இவரது சக்தி ஆகும். இவரை கடவுகளின் அரசன் என்று அழைப்பார்கள். இது போலவே கிரேக்க நாட்டு கலாச்சாரத்தில் ஜீயஸ் எனும் கடவுள் மழை மற்றும் இடி சக்தி பெற்ற கடவுளாகவும், தேவர்களின் அரசனாகவும் கருதப்படுகிறார்.


ஹெர்குலஸ் - கிருஷ்ணன்
மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டவர் இந்தியாவில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவின் கதையினை கிரேக்க நாட்டிற்கு எடுத்து சென்று, ஹெர்குலஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின் ஹெர்குலஸ் கதைகள் கிரேக்க நாட்டின் புராணக் கதைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாம். ஹெர்குலஸ் மற்றும் கிருஷ்ணாவின் இடையே பல ஒற்றுமைகள் ஏற்படுவதனால், ஹெர்குலஸ் என்பவர் கிருஷ்ண பரமாத்மா தான் என்று கருதப்படுகிறது.




பிரம்மா, விஷ்ணு, சிவன் : ஜீயஸ், ஹேட்ஸின் மற்றும் போஸிடான்
இந்திய கலாச்சாரத்தில் எப்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றவர்கள் முக்கிய கடவுள்களாக கருதப்படுகின்றனரோ, அதேப் போல கிரேக்க நாட்டில் ஜீயஸ், ஹேட்ஸின் மற்றும் போஸிடான் போன்றவர்கள் மூன்று முக்கிய கடவுள்களாக கருதப்படுகின்றனர்.  இவர்கள் தான் நம்முடைய பிரம்மன் , விஷ்ணு ,சிவன்.
நம்முடைய இதிகாசம் , புராணங்களின் இவர்களுக்கு என்றே அடிப்படை தான்
பிரம்மலோகம் , கைலாயம் மற்றும் வைகுண்டம்  போன்று  உருவகுக்கப்பட்டிருக்கின்றனர்.



ஆயுதம்

தேவர்களின் அரசனான இந்திரனின் வஜ்ராயுதம் போலவே, கிரேக்க நாட்டின் மழைக் கடவுளான ஜீயஸும் தனது கையில் ஒரு ஆயுதம் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருமே இந்த ஆயுதத்தை மழை மற்றும் இடியினை உருவாக்கப் பயன்படுத்தியதாய் கூறப்படுகிறது.


சொர்க்கம், நரகம்

மனிதர்களின் பாவப் புண்ணிய செயல்களுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் என்று தண்டனைகள் வழங்கப்படுவது போல, கிரேக்க நாட்டுக் காலச்சாரத்திலும் தண்டனை பூமி, சொர்க்க பூமி என கூறப்படுகிறது.


லக்ஷ்மி - அஃப்ரோடைட்

நமது புராணத்தில் லக்ஷ்மி எப்படி கடலில் தோன்றியவர் எனவும், அழகு மற்றும் அன்பிற்கான வழிபாட்டுக் கடவுளாக திகழ்கிறாரோ அதே போல கிரேக்க நாட்டில், அஃப்ரோடைட் எனும் பெண் கடவுள் கடலில் பிறந்து/தோன்றி, அன்பிற்கான கடவுளாக வணங்கப்படுகிறார்.




முருகன் மற்றும் ஏரிஸ்

ஏரிஸ் என்பவர் கிரேக்க கடவுள் ஜீயஸின் சேனாதிபதி . அதாவது நம்முடைய இந்திரனின் சேனாதிபதி.
 பெற்றோரிடம் சண்டையிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆயினும், ட்ரோஜன் போரில் தீயவர்களை அழிக்க இவர் எதிர்த்து போரிட்டதாக புராண கூற்றுகள் கூறுகின்றன. இதே போல தான் முருகன் தனது பெற்றோரிடம் சண்டையிட்டுப் பிரிந்து சென்றார், ஆயினும் தேவர்களை காப்பதற்காக சூரனை அழிக்க எதிர்த்து போரிட்டார். இந்த இரு செயல்களும் ஒன்று போலவே அமைந்திருப்பது மிகவும் வியக்கத்தக்க உண்மை ஆகும்.


திரௌபதி - ஹெலன்

நமது  புராணமான மகாபாரதத்தின் பாஞ்சாலி கதாப்பாத்திரம் போல, கிரேக்க நாட்டில் 'ஹெலன் ஆப் ட்ராய்' என்பவருக்கு ஏற்பட்ட அநீதியின் காரணமாக 'வார் ஆப் ட்ராய்' என்ற போர் நிகழ்ந்துள்ளது. இதனால் அந்த ஊரே தீக்கிரையாகிப் போனது. மகாபாரதத்திலும் திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாக தான் குருச்சேத்திரப் போர் நடந்து ஓர் ஊரே தீக்கிரையாகிப் போனது.



கர்ணன் மற்றும் அக்கிலிஸ்

கர்ணன் எப்படி வெற்றிக்காகவும், உயர்வுக்காகவும் போரிட்ட ஓர் மாவீரானாக திகழ்ந்தாரோ. அதேப்போல கிரேக்க நாட்டின் அக்கிலிஸ் மாவீரனாக இருந்தார். இவர்கள் இருவரும் நேர்மையானவர்களாக இருப்பினும் தவறான பக்கம் இருந்து போரிட்டவர்கள். இவர்கள் இருவரும் யுத்தத்தில் அம்புகள் மார்பில் எய்ததால் மரணம் அடைந்தவர்கள்.


துவாரகா மற்றும் அட்லாண்டிஸ்
ஆகிய இந்த இரு நகரங்கள் போரின் முடிவில் ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை சீற்றத்தினால் அழிந்து போயின. இந்த நிகழ்வுகள் அனைத்துமே இந்தியா மற்றும் கிரேக்க புராணங்களுக்கு இடையே ஒத்துப்போவது உண்மையிலேயே மிகவும் வியக்கத்தக்கதாக தான் இருக்கிறது.

அந்த அடிப்படையில்
ஜீயஸ் என்னும் கிரேக்க உயர்ந்த கடவுளான இந்திரன்
சிவபெருமானின் படைப்பில் உருவானவர் என்று புராணம் விளக்கி உள்ளது.

யூதம் :

யூதம் (Judaism, எபிரேய மொழியில் יהודה, "ஜெஹூதா" (Yehudah), யூடா, என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; இலத்தீன் மொழியில் "லுதாயிஸ்மஸ்") என்பது பண்டைய ஒரு கடவுள் கொள்கை உடைய, ஆபிரகாமிய சமயம் ஆகும்.

இது தோராவை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது (டனாக் அல்லது எபிரேய வேதாகமம் என்ற பெரிய உரையில் தோரா ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற நூல்களின் பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் துணை நூல்களாகவுள்ளன. இது யூதர்களுடைய, சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பத்தாவது பெரிய சமயக் குழுவாக யூதம் இருக்கிறது.

மரபுவழி யூதமானது, தோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.

யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.

யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது. வெண்கலக் காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில், யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது. யூதம், ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்.

 கிறிஸ்தவத்தின் தாய் மதம் !!!  யுதம்.
உலகில் உயர்ந்த மனிதனாக விளங்கும் இன்றை கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து அவர் பிறப்பதற்கு முன்பே யூத கடவுள்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் , மறைக்கவும் முடியாத ஒன்று .
இயேசுவின் தாய் மொழி
எபிரேய மொழியே !!!! இது தமிழ் மொழியில் இருந்து உருவானது.

கிறிஸ்த்து என்பது ஒரு பெயர் அல்ல மாறாக அது ஒரு பட்டமாகும். இது கிரேக்க மொழியில் ஆசிர்வதிக்கப்பட்டவர் என பொருளுள்ள "கிறிஸ்தோஸ்" என்பதலிருந்து தமிழுக்கு மறுவியதாகும். கிறிஸ்தோஸ், மசியக் (משיח) என்ற எபிரேய பதத்தின் அல்லது ம்சிகா (משיחא) என்ற அரமைக் பதத்தின் கிரேக்க மொழிப்பெயர்பாகும். இது மெசியா என்ற தமிழ் பதத்தின் மூலமாகும். மெசியா என்பது கடவுளால் தெரிந்துக் கொள்ளப்பட்ட தீர்கதரிசி, அரசர், அல்லது தலைமைக் குரு வை குறிக்கும்.

கடவுளின் மகன் என்னும் ஒரு மனிதன்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கடவுளின் மகன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இயேசு தன்னை கடவுளின் மகன் என சில வேலைகளில் மட்டுமே குறிப்பிடுகிறார், பல சந்தர்ப்பங்களில் இயேசு கடவுளை தந்தை என அழைத்தார். கிறிஸ்தவர் இதனை இயேசு கடவுளின் மகன் என்பதற்கு ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். நைசின் விசுவாச அறிக்கையின் படி இயேசு "கடவுளோடு உட்பவித்தவர்"
உண்மையில் தலைசிறந்த மனிதர் இயேசு.
இவர் கடவுள் இல்லை என்பது உண்மை.


யூத கடவுள் எபிரெயர் !!!

பிற கடவுள்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள்,   ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

இவரின் பிறப்பிற்கு காரணம் இயற்கையின் தந்தை என போற்றப்படும் சுயம்புவாக உருவாக்கிய நம்முடைய சிவபெருமான் தான்.
இதை யூத மக்களும் ஏற்ப்பார்கள்.
இதில் இயற்கையின் தந்தை என குறிப்பிட்டப்படுவது சிவனை !!!!

ஒரு கடவுள் தான் ஆதி கடவுளான யோகிய அவர்.
 அனைத்து மதமும்  கூறும் மொழியின் ,
அடிப்படையில் வெவ்வேறு பெயர்களை கொண்டு உள்ளதால் தான் இன்றை மத கலவரம் !!!!!

இஸ்லாமியம் :

அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது. அதை போன்றே பன்மையும் இல்லை. இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.

'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.

பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெறச் செய்தது. "பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான்.

لا إله إلا الله محمد رسول الله

தமிழில்: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

பொருள்: (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்.

"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் அறுதித்தூதர்" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.

அல்லாஹ் தன்னை பற்றி புனிதமிகு குர்ஆன்(இறை வேதத்தில்) அறிமுகம் செய்யும்பொழுது தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகிறான்.

இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தம் கடவுளிடம் உடல் , உயிர் , ஆன்மா இவை அனைத்தையும் கடவுளுக்கே அற்பணிப்பது என்ற பொருள் ஆகும்.
இஸ்லாம் என்றால் உண்மை பொருள் அமைதி ,பாதுகாப்பு ,சரண் அடைதல் என்ற பொருள்.
அனைத்தையும் இயக்குபவரே இறைவன் ஒருவன்.
உடல் , பொருள் ஆவி அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைப்பதே இஸ்லாமியர்களின் தலைசிறந்த கடமை.
இஸ்லாம் என்பது மதம் இல்லை !!!!
இது ஒரு மார்க்கம். இதை உணராத மனித விலங்குகள் தான் மதவெறிகளை உருவாக்கி வருகிறார்கள்.
உலகில் மிக வேகமாக பரவிய மார்க்கம் இதுவே !!!!
குரான் உலகிலே அதிகமாக மனப்பாடம் செய்யப்பட்ட புத்தகம்.
இஸ்லாமியர்கள் கண்டிப்பாக குரான் தெரிந்து இருக்க வேண்டும்.
குரானில் சொல்லப்பட்டது எனவொன்றால் இஸ்லாமிய அல்லாதவர்களிடமும் அன்பு காட்டிவதே மனித தன்மை என்று கூறிப்படுகிறது.
முகமது நபிகள் தான் இஸ்லாமிய தந்தையாக போற்றப்படுபவர்.
இஸ்லாமிய மார்க்கம் உருவானது அதாவது இஸ்லாமியம் தோன்றியதே கிபி.622 ஆண்டு தான்.
அல்லாஹ் அவர்களுக்கு மொத்தம் 99 புனித பெயர்கள் உள்ளது. இது தனி சிறப்பாகும்.
குரானில் கூறப்பட்டுள்ள ஒரே பெண்மணி கிறிஸ்துவர்களின் இயேசுவின் தாய் மேரி மாதா தான் .
அல்லாஹ் அவர்களுடைய புனித பெயர் அனைத்தும் சிவபெருமனை போற்றும் திருமந்திரம் தான்.
இதில் 100 சதவீதம் ஒற்றுமை உடைய பெயர் ஆதியானவன்  என்பதாகும்.
விளக்குகிறேன் கவனியுங்கள்.

(அரபி மொழியில்) .              பொருள்

الأول                                              The First                 

ஆங்கிலத்தில் !!!                  தமிழில் !!!                       
Al-Awwal                          ஆதியானவன்.


இது சிவனை குறிக்கிறது.
 அனைத்து மதங்களும் மறைமுகமாகவும் , நேர்முகமாக வணங்கும் ஒரே கடவுள் சிவபெருமான் ஒருவரே !!!!!

இந்த திருமந்திரம் அனைத்து மதங்களையும் ஒன்று இணைக்கும் வல்லமை படைத்தது.

            இறைவன் ஒருவனே !!!!
              அதும் நம் சிவனே !!!!!


 ஓம், ஓம்

நமசிவாய, சிவ சிவ வார்த்தைகள்

ஒருவனுக்கு சிவ தரிசனம் கிடைக்க

உதவுகின்றது என்றே

நினைக்கின்றேன்.

ஆம் சிவனை இவ்வுலகில் உள்ள

அனைத்து மனிதர்களும் காண

முடியும்.

அதற்கு யோகம்,தியானம், தவம்

மற்றும் அவரது பெயர்கள் உதவி

செய்கின்றது.

சிவன் எங்கும் உள்ளான் உங்கள்

உள்ளும் உள்ளான்.

எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ

அது உன்னுள்ளும் உள்ளது.

இதை தான் பகவத் கீதையில் அண்டமும் ,பிண்டமும் ஒன்று என்று கூறியுள்ளார்கள்.

நான் தான் இறைவன்/ நான் கடவுள்

(அகம் பிரம்மாஸ்மி)

நீ எதை தேடுகிறாயோ ???
அதுதான்
நீ....
நீ அதுவாக இருக்கிறாய் .

(தத்வமசி).

ஆதலால் தான் நம்ம பாட்டி அவ்வை

"உடம்பிலே உத்தமனை காண்"

என்கிறார்.

நமது சித்தர்களும் சிவ தரிசனத்தை

பெற்றவர்கள் தான்.

இந்த சிவ தரிசனத்தை தான் இறை

தரிசனம், ஒளி தரிசனம், இறை

வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி

என்று பலவாறு குறிப்பிடுகின்ற

னர்.

சிவன்  எங்கு என்று தேட வேண்டாம்.
எங்கேயும்
செல்லத்தேவை இல்லை

 ஏன் உனில்

அவன் உங்கள் உள் தான் இருக்கிறான்.

இந்த உண்மை அனைத்து

மதங்களிலும் ஒளிந்திருந்தாலும்

சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

யூதர்களின் புனித நூலும்

இறைவன் அனைவரிலும் உள்ளான்

என்றே குறிப்பிடுகிறது.

(இந்த யூத புனித நூலின்

தாக்கத்தால் உருவானவை தான்

பைபிள் மற்றும் குரான் .

யூத சமூகத்தினர் உருவ வழிப

கிருத்துவம் இறைவன் ஒளியாக

உள்ளான் என்கிறது (God is light).

அல்லாவின் ஒளியை ஊதி அணைக்க

முடியாது என்று குரானும் இந்த

சிவ ஒளியையே குறிக்கின்றது.

நான் இங்கு சில மதங்களை எடுத்து

காட்டுவதற்கு காரணம் அங்கும் சில

ஆன்மீக விடயம் உள்ளது

என்பதற்காகவே.

உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.



யார் யார் சிவம்....நீ.....நான் சிவம்

என்று பாடலும் வந்துவிட்டது.

மதத்தை பார்க்காமல் மனிதனை

மனிதனாக பார்த்தலே-

இறைவனுக்கு செய்யும்

மிகப்பெரிய வழிபாடாகும்.

நீங்கள் எந்த இறைவனையும்,

அல்லாவையும், கர்த்தரையும்,

சாமியையும் கும்பிடாமலும் இறை

தரிசனத்தை பெற முடியும்.

யோகம், ஆன்மீகமே உங்களுக்கு

உண்மையான சிவ/இறை தரிசனத்தை

காட்டும்.

உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம்,

ஒளியை காணலாம், நீங்களும்

சிவனாகலாம்.உண்மையை

உணரலாம். அதற்கு சிவ ராத்திரி

உகந்தது என்று கூறப்படுகிறது.


சிவபெருமான் பிறந்தது எப்படின்னு தெரியுமா?
உண்மையில் யாருக்கும் தெரியாது.
ஏன் கடவுளுக்கும் தெரியாது.
கடவுளுக்கு எல்லாம் கடவுளாக விளங்குபவர் சிவனே !!!!!

சிவ பெருமான் அடி முடி காண முடியாதவர் என்றும் அவருக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.


ஆனால் இந்த பூமியில் முதன் முதலில் அவர் எவ்வாறு தோன்றினார் என்ற கதையும் நாம் இதுவரை அறிந்ததில்லை. அது பற்றிய புராணக் கதையை, அந்த வரலாறை தெரிந்து கொள்வோம்.

சிவபெருமான் எப்பொழுது பிறந்தார்?

இந்து மதம் உலகின் உயர்ந்த மதங்களில் ஒன்று. இந்து மதத்தில் தான் உலகின் மிக உயர்ந்த கருத்துக்கள் பலவும் ஆய்ந்து அலசப்படுகின்றன. இதில் தான் பண்டை கால வேதங்களான ரிக்வேதம், யசூர் வேதம், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்ற நான்கு வகை சமஸ்கிருத வேதங்களும், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளும் அதில் அடக்கம்.


சிவ புராணம்

திருமுறைகள் என்பது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அடியார்களும், இறைவனின் மனதிற்கு உகந்தவர்ககளின் மூலமாக இறைவனே நேரடியாக தந்த சில போதனைகளும் அடக்கம். அவ்வாறு அருளப்பட்டட புராணங்கள் பன்னிரெண்டு திருமுறைகளாகத் தொகுப்பட்டன. அதில் சிவபுராணம் என்பது எட்டாம் திருமுறையாகும். அதில் சிவபெருமானது பெருமை முழுவதுமாக கூறப்பட்டிருக்கிறது.



மாணிக்கவாசகர்

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந்நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது.


பிரம்மன்

பல யுகங்களுக்கு முன் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கும், அவரது தந்தையான பார்கடல் அதிபன் பரந்தாமனுக்கும் ஒரு பெரும் பிரச்சனை உருவெடுத்தது. அது யாதெனில் இருவரில் பெரியவர், அதாவது பெருமை மிக்கவர் யார்? என்பதுவே அந்த போட்டி. தன்னைப் படைத்த தந்தை மகா விஷ்ணுவிடமே தனது தோள் வலிமையைக் காட்டிக் கொண்டிருந்தார். படைக்கும் கடவுள் நான்முகன். அப்பொழுது தேவலோகத்தில் ஒரு அதிசயம் தோன்றியது.


ஜோதி வடிவம்

கண்ணிமைக்கும் கண நேரத்தில் ஒரு சோதி வடிவம் அவர்கள் முன்னே தோன்றியது. ஆயிரமாயிரம் சூரியனின் ஒளி சுவாலையுடன் நெருப்பு வடிவமாக, ஆனால் குளிர்ச்சி பொருந்தியதாக அது விளங்கியது. அந்த லிங்க வடிவத்தைக் கண்டவுடன் காக்கும் கடவுளும் படைக்கும் கடவுளும் முடியைக் காண ஒருவரும், அடியைக் காண ஒருவரும் முடிவெடுத்து ஆதியும் அந்தமும் அற்ற அந்த சோதியைத் தொடந்தனர். தேடல் பல யுகங்கள் தொடரவே இறுதியில் அலைந்து களைத்த இருவரும் தம்மை விட பெரிய சக்தி இவரே என அறிந்து அவன் பாதம் பணிந்தனர்.


அவரே சிவம்.

இதுவே இறைவனின் முதல் லிங்க தரிசனமாக அறியப்படுகின்றது. சரி அப்படியானால் பிரம்மனும், விஷ்னுவுமாகிய அவர்கள், தங்கள் இருவரையும் விட சக்திமிக்க மூலவனை அறிந்திருக்கவில்லையா? அப்படி ஒருவர் இருப்பதே அவ்விருவருக்கும் தெரியாதா? இல்லை சிவம் என்ற சர்வசக்தி மிக்க இறைவன் அன்றுதான் பிறந்தாரா?
“இல்லை” என்பதே உண்மை .

சிவனே முதல்வன் அவனே தலைவன் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவே ஏற்பட்ட விளையாட்டு இது. உலகம் என்பது இங்கு மண்ணையும் வெறும் மனிதரையும் குறிப்பதல்ல. தேவர், அசுரர். கந்தர்வர், முனிவர், கிரகங்கள் அசுடதிக்கு பாலகர்கள், யக்சர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் உணர்த்தவே இந்த திருவிளையாடல்.


விஷ்ணு

ஆதியும் அந்தமும் அற்ற அந்த பரம்பொருளின் பெயர் சிவன் என்று சைவர்கள் அழைக்கிறார்கள். அந்த ஆதிப்பரம்பொருளையே சங்கு சக்கரம் தாங்கிய விஷ்ணுவின் மூலமாகக் கண்டு அவரையே மகாவிஷ்ணு என்றும் அழைப்பர் வடகலை தென்கலை நாமம் தரித்த வைணவ சிரோண்மணிகள். ஆதியும் அந்தமும் அற்ற, உயர்வும் தாழ்வும் அற்ற, இகமும் பரமும் அற்ற, இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஆதி பரம்பொருளே ஈசன் என்று அழைக்கபடுகின்ற பரப்பிரம்மம்.


அர்த்தநாரீஸ்வரர்

இவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. எனில் இவர் அர்த்தநாரியா?

(இரண்டும் கலந்த அலித்தன்மையானவரா) என்ற கேள்வி எழுகின்றதா?

மனிதரில் தான் ஆணும் பெண்ணும் உண்டு. பூமிதனில் படைக்கப் பெற்ற மற்ற உயிரினத்திலும் ஆணும் பெண்ணும் உண்டு. இவையனைத்தும் இறைவனின் படைப்பு. இப்படி இருபிரிவுகள் உலகில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் தான் தேவை.

ஏனெனில் உலகின் சுழற்சி என்பது உயிர்கள் தோன்றுவதில் தான் உள்ளது. ஒவ்வொரு வகை உயிரினமும் தனது வம்சத்தை விருத்தி செய்ய இனப்பெருக்கம் செய்கின்றது. அவ்வாறு உயிரினம் உண்டாக ஆண், பெண் அமைப்புகள் உயிரினங்களில் வேண்டும். அவ்வாறு இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்க உயிரினங்கள் இருபாலாக படைக்கப்பட்டன.

அந்த இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டே அந்தந்த உயிரினங்களின் வழித் தோன்றல்கள் சீராக உருவாகின்றன. இப்பொழுது பரம்பிரம்மத்திற்கு வருவோம். இனப்பெருக்கம் செய்யவே உயிரினங்கள் ஆண் பெண்ணாக படைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம்.

இவை அனைத்திற்கும் மூலவரான இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவருக்கு கருப்பையில் பிள்ளை சுமந்து வம்சம் வளர்க்க வேண்டியது இல்லை. எனவே அவர் ஆண் என்றோ பெண் என்றோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் அவர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகின்றோம்.



துர்க்கை

பர பிரம்மத்தின் ஆண் உருவகமே ஆதிசங்கரன்.

இந்த ஆதிசங்கரனே பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், அழித்தல் தொழில் செய்யும் கால பைரவனாகவும் அவதரித்திருக்கின்றார்.

பர பிரம்மத்தின் பெண் உருவகமே ஆதிஷக்தி (சீதளாதேவி என்றும் அழைப்பர்).

இவளே சரசுவதியாகவும், லெஷ்மியாகவும், துர்க்கையாகவும் அவதரித்திருக்கின்றார்.

திருமூலனின் திருமந்திரம் தனது வழினெடுகிலும் உருகி சீராட்டுவது இந்த பரப்ரம்மத்தையே.

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேரா தார்.

என புரிந்து மனிதன் தனது மறுபிறப்பை தவிர்க்க வெண்டுமாயின் இந்த பிறவிலேயெ இறைவனைப் பற்ற வேண்டும் என வள்ளுவம் குறிப்பது இந்த பரம்பொருளையே.


அல்லாஹ்

இங்கு சிவம் என்று எவர் அழைக்கப்படுகிறாரோ, அந்த பரம்பொருளே இஸ்லாத்தில் "அல்லாஹ்" என்று விளிக்கப்படுகிறார்.

அவரே வைஷ்ணவத்தில் விஷ்ணு என்றும், அந்த பரம்பொருளே கிருஸ்தவத்தில் "ஜெகோவா" என்று அழைக்கப்படுகிறார்
அதாவது  இயேசு கிருஸ்துவர் உருவாக காரணமே இவர் தான். அதை யூதர்களும் அறிவார்கள்.
(வாசகர்கள் குழம்ப வேண்டாம்). பற்பல நாடுகளும், பல மொழிகளும், மக்களும், காலமும் பரப்ரம்மத்திற்கு வழங்கியிருக்கும் பெயர்கள் வெவ்வேறு.
உலகமே இன்று  அவரை வணங்கி கொண்டு தான் இருக்கிறது.

"அவன் ஒருவனே".

அவனே ஆதியும் அந்தமும் அற்ற, உயர்வும் தாழ்வும், இகமும் பரமும் அற்ற இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஆதிப்பரம்பொருள ஈசன் என்று அழைக்கப்படுகின்ற பரப்பிரம்மம்.






இறப்பு என்பது உயிர் இழப்பல்ல, அது உடல் இழப்பு. அகால மரணங்களைத் தவிர மற்ற மரணங்களை நாம் அழுவதை விடுத்துப் பறை அடித்து ஆடிப்பாடி கொண்டாடுவதே தமிழர் மரபு. ஏனெனில் நம் முன்னோர் இறப்பு-பிறப்புப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். அதாவது உயிரானது ஆக்கப்படுவதும் இல்லை மற்றும் அழிக்கப்படுவதும் இல்லை. நம் உயிரானது பல் வகையான உடல்களுக்குள் நம் வினைகளுக்கேற்ப பிறப்பு-இறப்பு(கர்மா) சக்கரத்தில் மாட்டிப் பிறவிப்பிணியால் தொடர்ச்சியாக அவதியுறுகின்றது.

இவ்வாறான பிறவிப்பிணியை 'முற்றுப்பெற்ற குரு' முகாந்திரமாக நீக்கி, நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இது மனிதப் பிறப்பிற்கே சாத்தியம். ஆதலாலேயே மனிதப் பிறப்பு என்பது மிகவும் அரிதானதாகும். இந்த மனிதப் பிறப்பெடுக்க முன் நம் ஆன்மாவானது மனிதரல்லாத எண்ணிலாப் பிறப்புக்களை எடுத்துள்ளது என்கின்றனர் சித்தபெருமக்கள். பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புலுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்கிறார் ஆசான் மாணிக்கவாசகப் பெருமான்.

"அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும்..
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தலாயின்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!"
- ஆசான் ஓளவையார்

பசித்திருந்து நோன்பு இயற்றுவதே தவம். பசித்தோர்க்கு உணவளிப்பதே உயர்ந்த தானம். தானமும் தவமும் செய்பவர்க்கு இறையருள் கைகூடும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தானமும் தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் இறையுடன் இரண்டறக் கலத்தற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆசான் ஓளவையார் பெருமாட்டி

பிறவியே அறியாமை மிகு பேதமையென்றும், அந்தப் பிறப்பு-இறப்பு(கர்மா) எனும் பிணியை நீக்கி நாம் வெற்றி பெறுவதே உயர்ந்த அறிவென்கிறார் பிறவிப்பிணி நீக்கிய மகான் திருவள்ளுவப் பெருமான்.

''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.''
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருமூலர் பெருமான்.

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

              தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..