Pages

Tuesday, 26 November 2019

வைரம் உறுதியானதா அல்லது கடினமானதா ????

வைரத்தை சுத்தியால் உடைக்க முடியுமா ?

ஒரு சுத்தியை வைத்து வைரத்தை உடைக்க முடியுமா ?







இந்த கேள்வியை  கேட்டால் உங்களில் பலபேர் " அதற்கு வாய்ப்பில்லை காரணம் உலகிலேயே மிக உறுதியான ஒரு பொருள் வைரம் " என்று பதில் சொல்லலாம் ஆனால் உண்மை அது அல்ல சுத்தியை வைத்து வைரத்தை உடைத்து பார்த்தீர்களேயானால் வைரம் உடைந்து போகும்.

அப்போ உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் என்று சொல்லப்படுவது உண்மை இல்லையா ? உண்மை எனில் வைரம் உடைந்தது ஏன் ?

காரணம் உலகிலேயே மிகவும் கடினமான பொருள் வைரம். ஆனால உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் அல்ல இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது.
(Diamonds are the "hardest " mineral but not "toughest" )

என்ன வித்தியாசம் இவையிரண்டுக்கும் ?

Friedrich Mohs ஒரு  mineralogist. இவர் பொருட்களுக்கு இடையிலான கடினத்தன்மையை அளக்க ஒரு அளவீடு கண்டு பிடித்தார் அந்த அளவீடின் பெயர் "mohs ". பொருட்கள் ஒன்றில் ஒன்று கீறலை ஏற்படுத்தும் தன்மையை வைத்து இந்த கடின தன்மை கான அளவீட்டை இவர் கண்டுபிடித்தார்.

உதாரணமாக" talc " யை எடுத்து கொண்டார். இருப்பதிலேயே மென்மையான பொருள். மற்ற எந்த பொருளை கொண்டும் talc ஐ சுரண்ட.. கீற முடியும். எனவே இதற்கு mohs அளவு 1 என்று கொடுத்தார். அடுத்ததாக gypsum எடுத்தார் . இது talc ஐ விட கடினமானது எனவே இதில் talc ஐ வைத்து கீற முடியாது சுரண்ட முடியாது ஆனால் மற்ற பொருட்களை விட இது மென்மையானது எனவே talc தவிர மற்ற பொருளை வைத்து சுரண்ட முடியும். எனவே இதற்கு நம்பர் 2 கொடுத்தார். அதாவது ஒரு பொருள் எந்த mohs எண்ணிக்கை அளவு கொண்டுள்ளதோ அதே பொருளை அல்லது அதற்கு கீழ் உள்ள பொருளை கீற முடியும் அதற்கு மேல் உள்ள பொருளை அல்ல .

இப்படி அவர் கொடுத்த வரிசை இதான்
talc, gypsum,calcite, fluorite, apatite, feldspar, quartz, topaz, corundum, மற்றும் 10 ஆவதாக diamond.

இருப்பதிலேயே உயர்ந்த அளவு 10 அந்த பத்தாவது இடத்தில் இருப்பது வைரம். அந்த அளவும் கூட மற்ற பொருட்களுடன் ஒப்பிட முடியாத அளவு மிக மிக அதிக உயரத்தில் இருக்கும் ஒன்று.

அதாவது ஒரு உதாரணத்திற்கு பள்ளி வகுப்பில் 10 மாணவர்கள் வெவேறு உயரத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை உயர அடிப்படையில் வரிசையாக நிற்க வைக்கிறார் ஆசிரியர். இதில் முதல் இடத்தில் இருபவனை விட இரண்டாம் இடத்தில் இருப்பவன் கிட்ட தட்ட அரை அடி உயரம் இருக்கிறான். அப்புறம் 3 ஆவது ஆள் இரண்டாம் ஆளை விட கிட்ட தட்ட முக்கால் அடி உயரம் அப்புறம் 4 ஆவது ஆள் அடுத்த ஆள் அடுத்த ஆள் எல்லாமே கிட்ட தட்ட தனது முன்னால் உள்ளவனை விட  1 அடி உயர வித்யாயசத்தில் மாறி மாறி வருகிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள் . ஆனால் அந்த 10 ஆவது ஆள் மட்டும் 9 ஆவது ஆளைவிட திடீரென 100 அடி 200 அடி உயரமாக பிரமாண்டமாக நிற்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் எப்படி இருக்கும் .mohs அளவில் வைரம் மற்ற பொருட்களை விட அந்த அளவில் கடின தன்மையில் உயர்ந்து நிற்கிறது. (Mohs Graphs படத்தை பாருங்கள் புரியும் )தனக்கு முந்திய இடத்தில் இருக்கும் ரூபியை விட 140 மடங்கு அதிக உறுதி கொண்டது வைரம். எனவே கடினத்தன்மையில் மற்ற எந்த பொருளும் வைரத்திற்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது.

இதற்கு அர்த்தம் என்னவென்றால் உலகத்தில் இருக்கும் என்ற பொருளை வைத்தும் வைரத்தின் மேல் நாம் கீறளை ஏற்படுத்த முடியாது. ஆனால் வைரத்தை கொண்டு எந்த பொருளையும் கீற முடியும். ஒரு கிரைண்டிங்  மெஷின் சான கல்லில் வைரத்தை வைத்து அழுத்தி பிடித்தால் சான கல் முழுதும் தேய்ந்து அழிந்து விடும் ஆனால் வைரத்தின் மேல் சிறு கீறளை கூட அதனால் உண்டாக்க முடியாது அவ்வளவு கடினமானது வைரம்.

ஆனால்......

வைரம் உடைக்க முடியாத உறுதியானது அல்ல. என்ன காரணத்தினால் வைரம் மிகவும் கடினமானதாக இருக்கிறதோ அதே காரணத்தால் தான் வைரம் உடைந்தும் போகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா .?
முதலில் வைரம் இவ்வளவு கடினமாக இருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அவைகளுக்குள் இருக்கும் அனு பிணைப்பு மிகவும் குறுகிய இடத்தில் நெருக்கமாக இருப்பது தான்.. ஒரு சின்ன அறையில் 100 பேரை போட்டு அடைத்த மாதிரி அணுக்கள் அடைத்து கொண்டு இருக்கும். அங்கே அணுக்கள் நகர இடம் ஏதும் இல்லை. ஒரு ஸ்டீல் பொருளில் அடி விழும் போது அதில் உள்ள அணுக்கள் நகர்ந்து கொடுத்து உடையாமல் கொஞ்சம் வளைந்து கொடுத்து தப்பிக்கும். ஆனால் வைரத்தின் அணுக்கட்டமைப்பு வளைந்து கொடுக்க இடம் கொடுக்காததனால் உடைந்து போகிறது.

அதேசமயம் வைரத்தை கண்ட மேனிக்கு நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடைத்து விடவும் முடியாது. சரியான கோணத்தில் வைத்து அடித்தால் மட்டுமே வைரம் உடையும். அது என்ன சரியான கோணம் ?

உதாரணமாக ஒரு கரும்பை எடுத்துகொள்ளுங்கள் அதை குறுக்கு வாட்டத்தில் அரிவாளை கொண்டு பிளந்தால் என்ன ஆகும் ? இரண்டாக பிளந்து விடும். ஆனால் கரும்பை நடுவில் வெட்டினால் என்ன ஆகும் கரும்பு இரண்டு துண்டாக வெட்டப்படும் ஆனால் பிளக்க படாது.
இதே போல வைரமும் ஒரு மரதுண்டு போல உள்ளே வரிகளை கொண்டது நேர் வாட்டத்தில் வைத்து அடித்தால் வைரத்தை பிளந்து விட முடியும் (cleaving direction ).
ஆனால் படுக்க வாட்டில் வைரத்தை வைத்து அடித்தால் அதை உடைக்க முடியாது.

அதாவது வேறு வழியில் சொல்ல வேண்டுமென்றால் வைரத்தை பிளக்க முடியும் ஆனால் உடைக்க அல்ல.

எனவே திரைப்படத்தில் யாராவது வைரம் உடைந்து விட்டது எனவே இது போலி என்று காட்டினால் அதை நம்பி உங்கள் வைரத்தை உடைத்து பார்க்காதீர்கள்.

இந்த பதிவுகளை வழங்கிய
புகழ்மிக்க அறிவியல் ஆய்வாளர் 
என் அன்பு தோழர்
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

          தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



Friday, 1 November 2019

தமிழ்நாடு உருவான வரலாறு !!!

1956 நவம்பர் 1ம் தேதி (தமிழ்நாடு  உருவான தினம்)

உலகில் தமிழ் தேசம் ( நாடு)
புனித தன்மை உடையது என்பது
உலகமே அறிந்து ஒன்று.
கடவுளின் படைப்பில் இயற்கையும் ,
இயற்கையின் படைப்பில்
தமிழ் தேசமும் என்றும் சிறப்புடையதாகும்.
நாம் அறியாதவைகள் பல ,
அதில் நாம் அறிந்தவைகள் சில !!!!!



பூமி தாய்க்கு மகனாக பிறந்த குமரியனின் இந்த குமரிக்கண்டம்.
இயற்கையில் பாதி அழிந்தாலும் ,
அதே இயற்கை எங்களுடைய மரபுகளை வாழ வைக்க உதவுகிறது. 
உலகை ஆண்ட எம் இனம்.
 சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்  ஒன்றாக்கி இந்த  திராவிட தேசத்தை தமிழ்தேசமாகவே அழைத்தார்கள்.
அதாவது தமிழகம் என்று.
காலப்போக்கில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.  ஒருமைப்பட்ட தமிழ்தேசம் ஆங்கிலப்பிடியில்
 " மெட்ராஸ் பட்டினமாக உருவாகியது.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன.
 திராவிடம் பிளவு கண்டது.
தமிழ் தேசத்தை ,
 ஆங்கில ஆட்சி !!!!
மெட்ராஸ் பட்டணம் என்று  பெயர் மாற்றம் செய்தார்கள்.
இந்திய தேசம் சுதந்திரம் கண்ட பிறகு ,
திரு. கண்டன் சங்கரலிங்கனார் என்ற போராளி மீண்டும் தமிழ் தேசத்திற்கு
" தமிழ் நாடு " என்று மாற்றம் செய்ய போராடினார்.
பிறகு  திரு.கண்டன் சங்கரலிங்கனார் போராட்டத்திற்கு கிடைக்கப்பட்ட வெற்றியாக  நவம்பர் 1ம் தேதி தமிழகம் மீண்டும்  தமிழ்நாடாக உருவானது.
தமிழர்கள் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் .
தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.
நமது முன்னோர்களும் , மூதாதையர்களும்  ஆண்ட இந்த உலகை.
பிளவுகளை ஏற்படுத்திய நமது மரபை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்
இந்த உலக மக்கள் .
உலகமே நம்முடைய மரபை புனிதமாக மதிக்கிறது.
உலக மக்களுக்கு தெரியவில்லை !!!
நாம் எதிர்ப்பது நம்முடைய முன்னோர்களின் மரபுகளை !!!!!!
ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் இந்த நாள்.
தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை விழாவாக இந்நாளை கொண்டாட வேண்டும்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடுவது போல இதனை வெகு சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும்.
உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தினத்தை அறிய செய்வோம்.

இரண்டே அடியில் உலகை அடக்கியவன்
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல்  மாமன்னன் திரு.வள்ளுவன். 
குறள் !!!

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
குறள் 731
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம் !!!!!

நம்முடைய உரிமைகளை பறித்தவர்களிடம் கூறுவோம் !!!
தனி உரிமைகளை உருவாக்க தனி நாடாக தனித்து இருக்கும் தமிழ்நாடு என்றும் தனி நாடு தான்.


           எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.

                  தமிழ் அறிந்தாரிடம் !!!

      தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.                               " வலியே  " வலிமை "
            - அய்யனார் (வால்வரின்)..