Pages

Monday, 30 April 2018

அதிசயம் உலகில் சங்குகள் அரிசியின் அடியில் இருப்பதில்லை !!!!

சங்கு ஒருபோதும் அரிசியின் அடியில் இருப்பதில்லை, மேலேறி வந்து விடுகிறது, இந்த அதிசயம் ஏன் என்று தெரியவில்லை!!! எவருக்காவது அறிவியல் பூர்வமான விளக்கம் தெரிந்தால் பகிரவும் ...


தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
 தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)..


Friday, 27 April 2018

கருந்துளையில் !!! நாம் விழ நேர்ந்தால் என்னவாகும்?????

கடவுள் கருந்துளையில் !!! நாம் விழ நேர்ந்தால் என்னவாகும்?????

என்பதை அற்புதமான தொழில்நுட்பத்தில் கூறுவதை காணொளியில் காணுங்கள்.


   

           தமிழால் இணைவோம் !!!
            அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
      அறிவியலின் தேடல் தொடரும்.
               " வலியே வலிமை "
           -ஐய்யனார் (வால்வரின்)..

Thursday, 26 April 2018

தண்ணீர்ல இருக்கிற மீனை பார்த்திருப்பீங்க, ஆனால் தண்ணீரே இல்லாமல் மண்ணுக்கடியில் இருக்கும் மீனை இதோ பாருங்கள்

தண்ணீர்ல இருக்கிற மீனை பார்த்திருப்பீங்க, ஆனால் தண்ணீரே இல்லாமல் மண்ணுக்கடியில் இருக்கும் மீனை இதோ பாருங்கள்.

     தமிழால் இணைவோம் !!!
      அறிவால் உயர்வோம் !!!
              தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               " வலியே வலிமை "
          -ஐய்யனார் (வால்வரின்)..

Wednesday, 25 April 2018

"#செர்னோபில்_பயங்கரம்" (உலகின் மிக கொடூரமான விபத்து)

(உலகின் மிக கொடூரமான விபத்தாகிய செர்னோபில் அணு உலை விபத்து நடந்த தினம் இன்று 1986 ஏப்ரல் 26 அன்று நடந்த பயங்கர என்ன அதன் விளைவுகள் என்ன ??? 


"#செர்னோபில்_பயங்கரம்"


(உலகின் மிக கொடூரமான விபத்து)



''அறிவியல் ''-
இது சரியாக கையாண்டால் அள்ளி தரும் அரசன் .
 தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.
அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.
அப்படி மிக தவறாக அஜாக்ரதையாக கையாண்டு மிக பெரிய அடியை மனிதன் வாங்கி கட்டி கொண்ட ஒரு சம்பவம் தான் செர்னோபில் அணு உலை விபத்து.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று ரஷ்யாவின் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. உலகை திடுக்கிட செய்த மாபெரும் அழிவை ஏற்படுத்திய அந்த  விபத்து ...ரஷ்ய கம்யூனிச ஆட்சியையே வீழ்த்திய ஒன்று.
விபத்தின் கோர தாண்டவத்தை நேரில் கண்டவர்களை கதி கலங்க செய்த கொடூர விபத்து அது.
உலக அளவில் அணுவெளியீட்டு நிகழ்வில் 7 வது நிலையை அடைந்த ஒரே விபத்து அது.
உலக வரலாற்றில் இது வரை ஏற்பட்டுள்ள மாபெரும் விபத்துகளை டாப் டென் பட்டியட்டிலிட்டால்... செர்னோபில் க்கு அதில் முக்கிய இடம் உள்ளது.
இன்று வரை தனது பாதிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த விபத்து அது.

அணு கதிர் வீச்சின் கோர தாண்டவத்தை மக்களுக்கு ரத்தமும் சதையுமாக காட்டிய அந்த விபத்து ஏற்பட்டது முழுக்க முழுக்க மனித அஜாக்ரதையால் தான்.(குளிர்விக்கும் சாதனம் சரியாக வேலை செய்ய வில்லை என்று கொஞ்ச நாள் சப்பை கட்டு கட்டியது அரசு)
 'நியக்ளியர் ரியாக்டர் ' எனும் பெரும் பூதத்தின்  சக்தியை குறைத்து மதிப்பிட்டு விட்டது தான் அங்கே நடந்த முதன்மையான தவறு.
அன்று இரவு அங்கே நடந்தது என்ன ?ஏன் அந்த அணு உலை வெடித்தது?
வெடித்த பின் அதன் விளைவு என்னவாக இருந்தது?
வாருங்கள் அன்றைக்கு இரவை கொஞ்சம் நெருக்கமாக சென்று பார்க்கலாம்.

செர்னோபில் இன் அணுஉலைகள் இருந்த இடம் அது.
மொத்தம் 4 அணுஉலைகள் இருந்தன ஒவொன்றும் 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டவை . அதில் அந்த குறியிட்ட 4 ஆவது அணுஉலை மிக சமீபமாக அமைக்க பட்டு இருந்தது. அணு உலையில் பணியாற்றி கொண்டிருந்த பணியாளர்களுக்கு அந்த நிமிடம் வரை எப்பவும் போல அது ஒரு சாதாரண இரவு ஷிபிட்.

உலையில் இருந்து கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த கண்ட்ரோல் ரூம் இல் அந்த மூவர் இப்போதைக்கு குறிப்பிட தகுந்தவர்கள். அதில் முதலாமவர் வயதான ஷிபிட் ஃபோர்மேன் அவர்தான் அங்கு தலைமை . அடுத்தவர்
சீனியர் கண்ட்ரோல் இன்ஜினீர் . ரியாக்டர் ஏற்படுத்தும் அபரிமிதமான சக்தியை கட்டுப்படுத்தும் வல்லுநர். மூன்றாமவர் டெபுடி சீப் இன்ஜினீர்.
மூவருமே இன்னும் சில நிமிடத்தில் ஒரு வரலாற்று பிழையை செய்ய போகிறார்கள்.

கொஞ்சம் அதிருப்தியில் இருந்த டெபுடி இன்ஜினீரை பார்த்தார்  கண்ட்ரோல் இன்ஜினீர் ,

"என்ன செய்வது ..சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாரே" என்றார் கடுப்புடன்.

"இன்னோரு முறை சொல்லி பார்கலாம் எதற்கும்"

அவர்கள் பேசி கொண்டு மேலும் ஒரு முறை போர்மேன் ஐ நெருங்கி மீண்டும் அதை சொன்னார்கள்

"சார் மன்னிக்கணும் குறைந்தது 600 மெகா வாட் சக்தியாவது இருக்கணும் நாம பரிசோதனை பன்றதுக்கு ஆனா இப்போ வெறும் 200 மெகா வாட் பவர்ல இருக்கும் போது செக்கிங் .என்பது சரியான முறை அல்லவே"

அவர்கள் அன்றிரவு செய்து கொண்டிருந்தது என்ன தெரியுமா? பரிசோதனை(safety test ).அதாவது அவசர காலத்தில் பவர் இழப்பின்  போது டீசல் ஜெனரேட்டர்கள் ஆன் ஆகி கூலிங் பம்புகளை  இயக்கும் வரை டர்பைன் ஜெனரேட்டர் அந்த கூலிங் பம்புகளை இயக்கும் அளவு சக்தி கொண்டவையா என்பதை தான் அவர்கள் பரிசோதனை செய்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
இந்த சோதனைக்கு ரியாக்டர் தனது பவர் இல் 25 சதமாவது இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆய்வின் போது தனது திறனில் 1 சததிற்கும் கீழே அது சென்று இருந்தது.

அந்த தலைமை அதிகாரி நிமிர்ந்து பார்த்து சொன்னார்.

"பாரா மீட்டர்கள் பற்றி எனக்கு சொல்லி தாராதீர்கள் தலைமை அதிகாரியாக பாரா மீட்டர் என்ன என்பதையே நான் மாற்ற நிர்ணயிக்க முடியும்"

அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து அந்த உலையை சூடேற்றி வேடிக்கை பார்த்தார்கள் . உள்ளே குளிர்விக்கும் தண்ணீர் சப்ளை குறைந்தது பற்றியும் கவலை கொள்ள வில்லை. தண்ணீரை கொதிக்க வைத்து ஆவியாக்க வெப்பத்தை உண்டு பண்ணும் அந்த ரியாக்டர் தனக்குள் அளப்பரிய வெப்பதையும் அழுத்தத்தையும் சேர்த்து கொண்டே வந்தது.

பூதத்தை அடக்கி பார்க்க ஆசை பட்டவர்கள் மந்திர கோலையும் தூர எறிந்தது அவர்கள் செய்த மிக பெரிய தவறு. இங்கே மந்திர கோல் என்று நான் சொன்னது கண்ட்ரோல் ராடுகளை. இவைகள் தான் அணு உலையின் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ரெண்டுமே. அந்த கண்ட்ரோல் ராடு களையும் அவர்கள் உள்ளே செலுத்தாமல் வெளியே எடுத்தது விட்டார்கள்.
கண்ட்ரோல் ராட் என்றால் என்ன ? ரியாக்டரின் தத்துவம் என்ன ? டர்பைன் ஜெனரேட்டர்??

பொறுங்கள்...
இப்போது மணி 1.18 am அணுஉலை வெடிக்க இன்னும் 5 நிமிடம் உள்ளது. வாருங்கள் அதற்குள் ஒரு பொதுவான  அணுஉலை என்றால் என்ன அதன் இயங்கு தத்துவம் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விட்டு மீண்டும் செர்னோபில் வந்து விடலாம்.

ஒரு பவர் பிளான்ட் இல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பின் பெயர் தான் ஜெனரேட்டர்.
மின் உற்பத்தி நடக்க ஜெனரேட்டர் சுழல வேண்டும்.
அந்த ஜெனரேட்டரை சுழற்ற தான் அதனுடன் டர்பைன் என்ற அமைப்பு இணைக்க பட்டு இருக்கும்.
அந்த டர்பைன் எப்படி சுற்றும்?
அதில் வேகமாக நீராவியை பீச்சி அடித்தால்  அந்த விசையில் தாக்க பட்டு அது சுற்றும்.
அந்த நீராவி எப்படி உற்பத்தி ஆகும் ?
 நீரை சூடாக்கினால் ஆகும் . அந்த நீரை சூடாக்க தான் அந்த நியூக்ளியர் ரியாக்டர் .
அதாவது ரியாக்டரில் உண்டாகும் வெப்பத்தால் நீராவி உண்டாகும் அந்த நீராவியை டர்பைனில் பீய்ச்சி டர்பைனை வேகமாக சுழற்றினால் அதனுடன் இணைக்க பட்ட ஜெனரேட்டர் சுழன்று மின் உற்பத்தி நடக்கும்.

ஒரு ரியாக்டர் ,ஒரு எக்ஸ்சேஞ்ர் ஒரு டர்பைன் , ஒரு ஜெனரேட்டர் கொண்ட மொத்த அமைப்பு தான் ஒரு பவர் பிளாண்ட்.

இதில் அந்த நியூக்ளியர் ரியாக்டர் எப்படி அவ்வளவு வெப்பத்தை தருகிறது? அணு கரு பிளவு மூலமாக .
அணு கரு பிளவென்றால் என்ன ? அது எப்படி நடக்கிறது ?
சொல்கிறேன்..

ஒரு கனமான தனிமமாகிய யுரேனியம் 235 ஐ எடுத்து கொண்டு அதை நியூட்ரான் கொண்டு தாக்கினால் அது யுரேனியம் 236 ஆக மாறுகிறது. இந்த U236 இது ஒரு நிலைத்தன்மை அற்ற யூரேனியத்தின் ஐசோடோப். எனவே நீண்ட நேரம் நிலைத்து இருக்காமல் பேரியம் மற்றும் க்ரிப்ட்டான் அணுவாக மாறுகிறது .அப்படி மாறும் போது எக்க சக்க ஆற்றலை வெளியிடுகிறது. கூடவே 3 பிரீ நியூட்ரான்களையும் வெளியிடுகிறது.

அந்த மூன்று நியுட்ரான்ங்கள் மேலும் வேறு U 235 அணுவுடன் மோதி முன்பு போலவே நிறைய ஆற்றலும் 3 ஃபிரி நியுட்ரானையும் உண்டு பண்ணுகிறது.
அந்த நியூட்ரான்ங்கள் மீண்டும்.............
மேலே இரண்டு வரிகள் டிட்டோ .

இப்படி தொடர்ந்து நடக்கும் நிகழ்விற்கு பெயர்தான் செயின் ரியாகஷன். இதை கண்ட்ரோல் பண்ண தான் கண்ட்ரோல் ராடு. இது கேடியம் மற்றும் போரான் பொருட்களால் செய்ய பட்டு இருக்கும் .இது ரியாக்டரில் உள்செலுத்த படும் போது நியுட்ரானை உறிஞ்சி செயின் ரியாக்சனை கட்டுக்குள் கொண்டு வரும்..
இப்படி ரியாக்டரில் உண்டான வெப்பம் எக்ஸ்சேஞ்சரில் நீருக்கு கடத்த பட்டு டர்பைன் ஜெனரேட்டர் சுழற்ற பட்டு மின் உற்பத்தி நடக்கிறது.

போதும்...

5 நிமிடம் முடிந்து விட்டது இப்போ மீண்டும் செர்னோபில்......

செர்னோபிலில்.... பரிசோதனையில்.....
டர்பைன் ஜெனரேட்டர் திறனை பரிசோதிக்கும் நேரத்தில் ரியாக்டரின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளை வேண்டும் என்றே அணைத்து வைத்திருந்தார்கள். சோதனை தொடங்கிய போது 25 சதம் திறன் இருக்க வேண்டிய ரியாக்டர் மிக குறைந்த திறன் உடன் இருந்தது .சோதனை தொடங்கிய 30 செகண்டில் எதிர் பாராமல் ஏற்பட்ட பவர் சர்ஜ் ஒன்றால் ரியாக்டரின் செயின் ரியாக்சனை கட்டுப்படுத்தும் கருவிகள் செயலிழந்தன.

அங்கே சோதனையே.. அவசர காலத்தில் ஓடி கூலிங் பம்புகளை இயக்கும் தானியங்கி ஜெனரேட்டர் 30 வினாடியில் இயங்கி பின் 40..45 வினாடிகளில் முழு வேகம் பிடித்து பம்புகளை இயக்குகிறதே அந்த இடைப்பட்ட நேர இடைவெளியை டர்பைனின் ஜெனரேட்டர்கள் (பவர் இல்லாத போது ஏற்கனவே செயல் பட்ட பழைய விசையை கொண்டு) நிரப்ப முடியுமா என்று தான். ஏற்கனவே இந்த சோதனையை 2 முறை செய்து அவர்கள் தோல்வியை தழுவி இருந்தார்கள். இம்முறை அணுஉலையை புதிய முறையில் மேம்படுத்தி இருந்தார்கள் என்பதால் மீண்டும் இதை சோதித்தார்கள்.

ஆனால்...

இம்முறை நடந்தது தான் கடந்ததை விட மிக மோசம். ரியாக்டர் சுத்தமாக கட்டுப்பாடு இழந்து தனது செயின் ரியாக்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. விளைவாக அதன் core வெப்பமயமாகி அதன் எரி பொருளை தாங்கி நிற்கும் குழாய்களை சப்தமாக வெடித்தது. உள்ளே இருந்த எரி பொருட்கள் தன்னீருடன் இனைந்து வெப்பத்தால் பெரும் நீராவியாக மாறியது.

அதிகாலை 1.23 ..

அனுஉலை தனது அதீத வெப்பம் மற்றும் அழுத்ததை தாங்க முடியாமல்
முதல் வெடிப்பை நிகழ்த்தியது. சில வினாடிகள் கழித்து இன்னும் பிரம்மாண்டமாய் இரண்டாவது வெடிப்பும் நடந்தது. அணு உலையின் 1000 டன் மேற் கூரை பெயர்த்து கொண்டு போனது. 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் பாதிக்க பட்டு ரியாக்டரை போர்த்தி இருந்த க்ராபைட் லேயர் தீ பற்றி எரிய தொடங்கியது.(அந்த தீ பின்னால் 9 நாட்கள் தொடர்ந்து எரிந்தது )

மந்திர பிடிக்குள் சிக்கி இருந்த பிசாசு தப்பி போவதை போல இவ்வளவு நாளாக கடும் பாதுகாப்பில் வைக்க பட்டு இருந்த 20 வகையான கதிரியக்க பொருட்கள் காற்றில் சுதந்திரமாக கரைந்து சென்று பரவியது. சுற்று வட்டாரத்தில் காற்றில் மண்ணில் நீரில் ஆசை தீர கலந்தது.

கண்ட்ரோல் ரூமில் இருந்தவர்கள் உலை பகுதிக்கு ஓடி வந்து பார்த்த போது அங்கே அந்த பயங்கரத்தை பார்த்தார்கள் .தன்னுடன் பணியாற்றிய பணியாளர்கள் இப்போது தனக்கே அடையாளம் தெரியாமல் குரலை வைத்து தான்  அடையாளம் காணும் அளவு முகங்கள் வெப்பத்தில் வெந்து கருகி போய் துடித்து கொண்டு  இருந்தார்கள். அணு உலையின் கூரை பிய்தெரிய  பட்டு இரவு வானின் நட்சத்திரங்கள் தெரிந்தது.

விபத்து நடந்த போது ஏற்பட்ட வெடிப்பில் 30 பேர் இறந்தார்கள் . ஆனா இது எல்லாம் சுனாமி க்கு முன் கடல் உள்வாங்கும் போது சில சில்லறை மீன்கள் சாவதற்கு சமம் .
நிஜ மான சுனாமி பாதிப்பு அது கரையில் வந்து அடிக்கும் போது தான் அது போல ..கதிர்வீச்சின் பாதிப்பு அது பரவும் போது தான் .
அதன் விபரீத விளைவுகள் தெரிய வருவது அப்போது தான்.

விபத்து நடந்த சில மணி நேரத்தில் இதை சாதாரண தீ விபத்து போல நினைத்து தீ அணைப்பு படை ஒன்று ஹெலிகாப்டரில் வந்து நீரை பீச்சியது.
அப்போது....
நீர் அனைபதற்கு பதிலாக ரியாக்ட் ஆகி நிலைமை இன்னும் மோசமானதை கண்டு தீ அணைப்பு படை மிரண்டது. இது சாதாரண தீ விபத்து அல்ல என்பதை புரிந்து கொண்டது.

 ஆனால் புரிந்து கொண்ட  போது காலம் கடந்து விட்டிருந்தது. அணைக்க வந்த அந்த முதல் குழு அங்கேயே இறக்க நேரிட்டது.
 அவர்கள் ஊற்றிய தண்ணீரில் கதிரியக்கம் கலந்து அங்கிருந்த டினிப்பர் நதிகளில் கலந்து சோவியத் நாடுகளை தாண்டி ஐரோப்பாவில் உள்ள சுவீடன் வரை பரவி இன்னும் நிலைமையை மோசமாக்கியது.

முதலில் நடந்தது பெரிய விபத்து அல்ல அது ஒரு சாதாரண விபத்து தான் என்பதை போல அரசாங்கம் நடந்து கொண்டது ஆனால் ஏப்ரல் 27-ல் அதாவது விபத்து நடந்த அடுத்த நாள் பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களை அரசு அப்புற படுத்தியது. எனினும், விபத்துபற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதற்குள் அவர்கள் உடலில் கதிரியக்கம் போதிய அளவு தாக்கி இருந்தது.

ஏப்ரல் 28 அன்று சுவீடனை சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் இதை கவனித்து விட்டு கேள்விகள் எழுப்பின .
இதற்கு மேலும் முழு பூசனியை மறைக்க முடியாது என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்ததை ஒத்து கொண்டது.

இனி பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுவதை தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்த 36 மணி நேரத்தில் இந்த வெளியேற்றலை தொடங்கியது . விபத்து பகுதியில் இருந்து 30 கி.மி சுற்று வட்டாரத்தில் ஒரு மாதம் கழித்து மொத்தம் 1 லட்சத்தி 16 ஆயிரம் பேரை வெளியேற்றி இருந்தது அரசு. பின்னாளில் இந்த விபத்தால் மொத்தமாக இடப்பெயர்ச்சி செய்ய பட்ட மக்களின் எண்ணிக்கை 135000 பேர் என்று கணக்கெடுப்பு தெரிவித்தது.

இடிந்த உலையை உடனே சமாதி கட்டி மூடினார்கள் அதோடு நில்லாமல் அதை சுற்றி கான்கரீட் வளைவு குடோன் ஒன்று (உள்ளே அமெரிக்க சுதந்திர தேவி சிலை வைக்கும் அளவு பெரிய குடோன் போன்ற அமைப்பு) வைத்து மூடினார்கள் . அரசாங்க சொத்தில் மிக பெரிய பங்கு இந்த விபத்தை சரி செய்யவே செலவாகி போனது. சொல்ல போனால் விபத்திற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் உலகத்தாரால் பாராட்ட பட்டது.
இருந்தும் நியூக்ளியர் பூதத்தின் பிடியில் மக்கள் சிக்குவதை யாராலும் தடுக்க முடிய வில்லை.
அதன் விளைவுகள் வெளிப்பட்ட போது கதிர்வீச்சு ருத்ர தாண்டவம் ஆடி இருப்பது தெரிந்தது.

விபத்து நடந்த அடுத்த சில தினங்களில் அயிராகணகாண மக்கள் இறந்து போனார்கள்.
கதிரியக்க நேரடி பாதிப்புக்கு ஆளானவர்கள் தோல் கழட்டி கொண்டு வந்தது .தலை முடி கையோடு வந்தது .ரத்தமும் சீழும் ஆக பேதி போனார்கள் .கடுமையான சிதர்வதை அனுபவித்து இறந்தார்கள்.

இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. காற்று, நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது.

பொதுவாகவே அணுஉலைகளை பாதுகாப்பு காரணமாக 25 ஆண்டுகளுக்கு தான் பயன்படுத்துவார்கள் அதன் பின் அதன் ரியாக்டர்களை கொண்டு போய் பூமியில் ஆழமாக குழி தோண்டி கான்க்ரீட் சமாதி கட்டி புதைத்து விடுவார்கள். அப்படி புதைக்க பட்ட உலையை 5000 வருடம் கழித்து திறந்தால் கூட அதே கதிர் வீச்சு பாதிப்பை கொண்டு அழிக்க தயாராக இருக்கும். நியூக்ளியர் பவர் என்பது நிஜமாகவே ஒரு பூதம் தான் அதற்க்கு ஒரு முறை உயிர் கொடுத்துவிட்டால் பிறகு அதை அழிக்க முடியாது கடைசி வரை சிறையில் போட்டு பூதம் வெளியேறாமல் காக்க வேண்டியது தான்.

மனிதன் என்றால் அவனுக்கு ரெண்டு கை ரெண்டு கால் இந்த இடத்தில் கண் இந்த இடத்தில் பல் என்று இருக்கும் மனிதனின் கட்டமைப்பு திட்டத்தையே கதிரியக்கம் செல்களில் ஊடுருவி மாற்ற கூடியது.
விளைவாக அதன் பின் பிறந்த பல குழந்தைகள் இது வரை மனித வரலாற்றில் பார்திராத புதிய வடிவமைபோடு ஏதோ ஏலியன் போல பிறந்தார்கள். அவர்களை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் அணு சக்தியை பற்றிய நீங்காத கிலியை ஏற்படுத்தியது. (உதாரணத்திற்கு சில படங்களை இணைத்து இருக்கிறேன் பாருங்கள்)

 அப்பகுதிகளில் வசித்தவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக் கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைவிட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ் விபத்தின் மூலம் வெளியேறியுள்ளது.

அடுத்த வரும் 70 ஆண்டுகளில் கேன்சார் ரேட்டிங் 28 % உயர இந்த விபத்து காரணமாக இருக்க போகிறது என்று நிபுணர்கள் கணித்தார்கள்.

(UNSCEAR ) அதாவது United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation  என்ற அமைப்பு இறுதியாக மொத்தமாக இந்த விபத்தின் கத்திரியக்கத்தால் பாதிக்க பட்டவர்கள் எத்தனை பேர் என்று பதிவு செய்தது . அது கொடுத்த கணக்கு எவ்வளவு தெரியுமா?
மொத்தம் 6 லட்சம் பேர்.

 இப்படி பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின.
அதுமட்டும் அல்ல விபத்து நடந்து இதனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன.
அதன் பாதிப்பு இன்னும் 20000 வருடத்திற்கு நீடிக்கும் என கிலியேற்றுகிறார்கள்.

கடைசியாக,

ஒரு அறிவியல் காதலனாக ..இந்த கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.

'அறிவியல்... '
இது சரியாக கையாண்டால் அள்ளி தரும் அரசன் .
 தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.

அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.

இந்த பதிவுகளை உருவாக்கிய அன்பு தோழர்  திரு.ரா.பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
             
              தமிழால் இணைவோம் !!!
              அறிவால் உயர்வோம் !!!
                       தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                   " வலியே வலிமை "
               -ஐய்யனார் (வால்வரின்)..

நாம் அறியாத பட்டப்படிப்புகளின் வகைகள் !!!!!

நாம் அறியாத பட்டப்படிப்புகளின் வகைகள் !!!!!


1.அகச்சுரப்பியியல் – Endocrinology
2.அடிசிலியல் – Aristology
3.அடையாளவியல் – Symbology
4.அண்டவியல் – Universology
5.அண்டவியல் – Cosmology
6.அணலியல் – Pogonology
7.அருங்காட்சியியல் – Museology
8.அருளரியல் – Hagiology
9.அளவீட்டியல் – Metrology
10.அற்புதவியல் – Aretalogy
11.ஆடவர் நோயியல் – Andrology
12.ஆய்வு வினையியல் – Sakanology
13.ஆவணவியல் – Anagraphy
14.ஆவியியல் – Spectrology
15.ஆறுகளியல் – Potamology
16.இசையியல் – Musicology
17.இந்தியவியல் – Indology
18.இயற்பியல் – Physics
19.இரைப்பையியல் – Gastrology
20.இலக்கிலி இயல் – Dysteleology
21.இறை எதிர் இயல் – Atheology
22.இறைமையியல் – Pistology
23.இறைமையியல் – Theology
24.இன உறுப்பியல் – Aedoeology
25.இன்ப துன்பவியல் – Algedonics
26.இனப் பண்பாட்டியல் – Ethnology
27.இனவியல் – Raciology
28.ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29.உடலியல் – Physiology
30.உடற் பண்டுவஇயல் – Phytogeography
31.உடற்பண்பியல் – Somatology
32.உடுவியக்கவியல் – Asteroseismology
33.உணர்வகற்றியல் – Anesthesiology
34.உயிர் மின்னியல் – electro biology
35.உயிர்ப்படிமவியல் – Paleontology
36.உயிர்ப்பொருளியல் – Physiology
37.உயிர்மியியல் – Cytology
38.உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39.உயிரித்தொகை இயக்க இயல் – Population Dynamics
40.உயிரிய இயற்பியல் – Biophysics
41.உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42.உயிரிய வேதியியல் – Biochemistry
43.உயிரிய வேதிவகைப்பாட்டியல் – Biochemical taxonomy
44.உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45.உயிரியப் பொறியியல் – Bioengineering
46.உயிரியல் – Biology
47.உயிரினக் காலவியல் – Bioclimatology
48.உயிரினச் சூழ்வியல் – Bioecology
49.உருவகவியல் – Tropology
50.உருள்புழுவியல் – Nematology
51.உரைவிளக்கியல் – Dittology
52.உளவியல் – Psychology
53.ஊட்டவியல் – Trophology
54.எகிப்தியல் – Egyptology
55.எண்கணியியல் – Numerology
56.எரிமலையியல் – Volconology
57.எலும்பியல் – Osteology
58.எலும்பு நோய் இயல் – Osteo pathology
59.எறும்பியல் – Myrmecology
60.ஒட்பவியல் – Pantology
61.ஒப்பனையியல் – Cosmetology
62.ஒலியியல் – Phonology
63.ஒவ்வாமை இயல் – Allergology
64.ஒழுக்கவியல் – Ethics
65.ஒளி அளவை இயல் – Photometry
66.ஒளி இயல் – Photology
67.ஒளி உயிரியல் – Photobiology
68.ஒளி விளைவியல் – Actinology
69.ஒளி வேதியியல் – Photo Chemistry
70.ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71.ஓசையியல் – Acoustics
72.கசிவியல் – Eccrinology
73.கட்டடச்சூழலியல் – Arcology
74.கடப்பாட்டியல் – Deontology
75.கடல் உயிரியல் – Marine biology
76.கடற் பாசியியல் – Algology
77.கண்ணியல் – Opthalmology
78.கணிப்பியல் – Astrology
79.கதிர் மண்டிலவியல் – Astrogeology
80.கதிர் விளைவியல் – Actinobiology
81.கரிசியல் – Hamartiology
82.கரிம வேதியியல் – Organic Chemistry
83.கருத்தியல் – Ideology
84.கருதுகை விலங்கியல் – Cryptozoology
85.கருவியல் – Embryology

86.கல்வி உளவியல் – Educational Psychology
87.கலைச்சொல்லியல் – Terminology
88.கழிவியல் – Garbology
89.கனி வளர்ப்பியல் – Pomology
90.கனிம வேதியியல் – inorganic chemistry
91.கனியியல் – Carpology
92.கனியியல் – Pomology
93.காளானியல் – Mycology
94.காற்றழுத்தவியல் – Aerostatics
95.காற்றியக்கவியல் – Aerodynamics
96.காற்றியல் – Anemology
97.கிறித்துவியல் – Christology
98.குடல் புழுவியல் – Helminthology
99.குருட்டியல் -Typhology
100.குருதி இயல் – Haematology / Hematology.
101. கண் தொடர்பான தொழில்நுட்பப்படிப்பு    - Aptometri( ஆப்டோமெட்ரி).
102.குளுமையியல் – Cryology
103.குற்றவியல் – Criminology
104.குறிசொல்லியல் – Parapsychology
105.குறிப்பியல் – Cryptology
106.குறியீட்டியல் – Iconology
107.கெல்டிக் சடங்கியல் – Druidology
108.கேட்பியல் – Audiology
109.கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
110.கையெழுத்தியல் – Graphology
111.கொள்ளை நோயியல்- Epidomology
112.கோட்பாட்டியல் – Archology
113.கோளியல் – Uranology
114.சங்குஇயல் – Conchology
115.சமயவிழாவியல் – Heortology
116.சரி தவறு ஆய்வியல் – Alethiology
117.சாணவியல் – Scatology
118.சிலந்தி இயல் – Araneology
119.சிலந்தியியல் – Arachnology
120.சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology
121.சீனவியல் – Sinology
122.சுரப்பியியல் – Adenology
123.சூழ் வளர் பூவியல் – Anthoecology
124.சூழ்நிலையியல் – Ecology
125.செதுக்கியல் – Anaglyptics
126.செய்கை இயல் – Dactylology
127.செல்வ வியல் – Aphnology
128.செல்வவியல் – Plutology
129.செவ்வாயியல் – Areology
130.செவியியல் – Otology
131.சொல்லியல் – Lexicology
132.சொல்லியல் – Accidence
133.சொற்பொருளியல் – Semasiology
134.தசையியல் – Myology
135.தண்டனையியல் – Penology
136.தமிழியல் – Tamilology
137.தன்மையியல் – Axiology
138.தன்னியல் – Autology
139.தாவர உள்ளியல் – Phytotomy
140.தாவர நோய் இயல் – Phytopathology
141.தாவர வரைவியல் – Phytography
142.தாவரஊட்டவியல் – Agrobiology
143.தாவரவியல் – Botany
144.திணைத் தாவர இயல் – Floristics
145.திணையியல் – Geomorphology
146.திமிங்கில இயல் – Cetology
147.திருமறைக் குறியீட்டியல் – Typology
148.திருமனையியல் – Naology
149.திரைப்படவியல் – Cinimatography
150.தீவினையியல் -Ponerology
151.துகள் இயற்பியல் – Particle physics
152.துகளியல் – Koniology
153.துதிப்பாவியல் – Hymnology
154.துயிலியல் – Hypnology
155.தூய இலக்கியல் – Heirology
156.தூள்மாழை இயல் – Powder Metallurgy
157.தேர்தலியல் -Psephology
158.தேவதை இயல் – Angelology
159.தேவாலயவியல் – Ecclesiology
160.தேனீ இயல் – Apiology
161.தொடர்பிலியியல் – Phenomenology
162.தொண்டை இயல் – Pharyngology
163.தொல் அசீரியர் இயல் – Assyriology
164.தொல் உயிரியல் – Palaeontology
165.தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166.தொல் பயிரியல் – Paleobotany
167.தொல் மாந்தவியல் – Paleoethnology
168.தொல் மீனியல் – Paleoichthylogy
169.தொல் விலங்கியல் – Palaeozoology
170.தொல்தோற்ற இனவியல் (மாந்த – மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171.தொல்லிசையியல் – Ethnomusicology
172.தொல்லியல் – Archaeology
173.தொல்லினவியல் – Paleethnology
174.தொல்லெச்சவியல் – Archaeozoology
175.தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176.தொழில் நுட்பவியல் – Technlogy
177.தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178.தொழு நோயியல் – Leprology
179.தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180.தொன்மவியல் – Mythology
181.தோட்டுயிரியியல் – Astacology
182.தோல்நோயியல் – Dermatology
183.நச்சியியல் – Virology
184.நடத்தையியல் – Praxeology
185.நரம்பியல் – Neurology
186.நல்லுயிரியல் – Pneumatology
187.நலிவியல் – Astheniology
188.நன்னியல் – Agathology
189.நாடி இயல் – Arteriology
190.நாணயவியல் – Numismatology
191.நாளவியல் – Angiology
192.நிகழ்வியல்- Chronology
193.நிலத்தடி நீரியல் – Hydrogeology
194.நிலநடுக்கவியல் – Seismology
195.நிலாவியல் – Selenology
196.நிலை நீரியல் – Hydrostatics
197.நீத்தாரியல் – Martyrology
198.நீர் வளர்ப்பியல் – Hydroponics
199.நீர்நிலைகளியல் – Limnology
200.நீராடல் இயல் – Balneology
201.நுண் உயிரியல் – Microbiology
202.நுண் வேதியியல் – Microchemistry
203.நுண்பொருளியல் – Micrology
204.நுண்மி இயல் – Bacteriology
205.நுண்மின் அணுவியல் – Micro-electronics
206.நூல் வகை இயல் – Bibliology
207.நெஞ்சக வியல் – Cardiology
208.நெடுங்கணக்கியல் – Alphabetology
209.நெறிமுறையியல் – Aretaics
210.நொதி இயல் – Enzymology
211.நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212.நோய் இயல் – Pathology
213.நோய்க்காரணவியல் – Aetiology
214.நோய்க்குறியியல் – Symptomatology
215.நோய்த்தடுப்பியல் – Immunology
216.நோய்த்தீர்வியல் – acology
217.நோய்நீக்கியல் – Aceology
218.நோய்வகையியல் – Nosology
219.நோயாய்வியல் – Etiology
220.நோயியல் – Pathology
221.படஎழுத்தியல் – Hieroglyphology
222.படிகவியல் – crystallography
223.பணிச்சூழ் இயல் – Ergonomics
224.பத்தியவியல் – Sitology
225.பயிர் மண்ணியல் – Agrology
226.பயிரியல்-Phytology
227.பரியியல் – Hippology
228.பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229.பருவ இயல் – Phenology
230.பருவப் பெயர்வியல் – Phenology
231.பல்லியல் – Odontology
232.பழங்குடி வழக்கியல் – Agriology
233.பழம்பொருளியல் – Paleology
234.பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235.பறவை நோக்கியல் – Ornithoscopy
236.பறவையியல் – Paleornithology
237.பனிப்பாளவியல் – Glaciology
238.பாசி இயல் – Phycology
239.பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240.பாம்பியல் – Ophiology
241.பார்ப்பியல் Neossology
242.பாலூட்டியல் – Mammalogy
243.பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244.பாறையியல் – Lithology
245.பாறை அமைவியல் – Petrology
246.பிசாசியல் – Diabology
247.பிளவையியல் – Oncology
248.புத்த இயல் – Buddhology
249.புத்தியற்பியல் – New physics
250.புதிரியல் – Enigmatology
251.புதைபடிவ இயல் – Ichnology
252.புல உளவியல் – Faculty Psychology
253.புல்லியல் – Agrostology
254.புவி இயற்பியல் – Geo physics
255.புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256.புவி வடிவ இயல் – Geodesy
257.புவி வளர் இயல் – Geology
258.புவி வேதியியல்- Geo-chemistry
259.புவியியல் – Geography
260.புவிவெளியியல் – Meteorology
261.புள்ளியல் – Ornithology
262.புறமண்டிலவியல் – Exobiology
263.புற்று நோய் இயல் – Cancerology
264.பூச்சி பொட்டு இயல் – Acarology
265.பூச்சியியல் – Entomology
266.பூச்சியியல் – Entomology
267.பூச்சியியல் – Insectology
268.பெயர்வன இயல் – Acridology
269.பெரு வாழ்வியல் – macrobiotics
270.பேயியல் – Demonology
271.பொதுஅறிவு இயல் – Epistemology
272.பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273.போட்டியியல் – Agonistics
274.போதனையியல் – Patrology
275.மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276.மண்டையோட்டியல் – Craniology
277.மண்ணியல் – Pedology
278.மண்புழையியல் – Aerology
279.மணி இயல் – Campanology
280.மணிவியல் – Gemology
281.மதுவியல் – Enology (or Oenology)
282.மர ஒளி வரைவியல் – Photoxylography
283.மரபு இயைபியல் – Genecology
284.மரபு வழியியல் – Geneology
285.மரவரியியல் – Dendrochronology
286.மரவியல் – Dendrology
287.மருத்துவ அளவீட்டியல் – Posology
288.மருத்துவ நோயியல் – Clinical pathology
289.மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290.மருந்தாளுமியல் – Pharmacy
291.மருந்தியல் – Pharmacology
292.மருந்து வேதியியல் – Medicinal chemistry
293.மலையியல் – Orology
294.மழையியல் – Ombrology
295.மனக்காட்சியியல் – Noology
296.மனநடையியல் – Nomology
297.மன்பதை உளவியல் – Social Psychology
298.மன்பதையியல் – Sociology
299.மனைவளர்உயிரியல் – Thremmatology
300.மாந்த இனவியல் – Ethnology
301.மாவியல் – Morphology
302.மானிடவியல் – Anthropology
303.மின் ஒலியியல் – Electro-acoustics
304.மின்வேதியியல் – Electrochemistry
305.மின்னணுவியல் – Electronics
306.மீனியல் – Ichthyology.
307.முகிலியல் – Nephology
308.முட்டையியல் – Oology
309.முடியியல் – Trichology
310.முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311.முதியோர் கல்வியியல் – Andragogy
312.முதுமையியல் – Gerontology
313.முரண் உயிரியல் – Teratology
314.முரணியல் – Heresiology
315.முறையியல் – Systomatology
316.முனைப்படு வரைவியல் – Polarography
317.மூக்கியல் – Rhinology
318.மூதுரையியல் – Gnomology
319.மூப்பியல் – Gerontology
320.மூலக் கூறு உயிரியல் – Molecular biology
321.மெய் அறிவியல் – Philosophy
322.மெய்ம்மி நோயியல் – Histopathology
323.மெய்ம்மியியல் – Histology
324.மேகநோயியல் – Syphilology
325.மொழியியல் – Philology
326.மோப்பவியல் – Olfactology
327.ரூனிக்கியல் – Runology
328.வகையியல் – Taxology
329.வண்ணவியல் – Chromatology
330.வழக்குப் பேச்சியல் – Dialectology
331.வழிபாட்டியல் – Liturgiology
332.வளி நுண்மியல்- Aerobiology
333.வளிநுகரியியல் – Aerobiology
334.வாந்தியியல் – Emetology
335.வாய்நோயியல் – Stomatology
336.வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337.வான இயற்பியல் – Astrophysics
338.வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) – Aerophilately
339.வானியல் – Astronomy
340.வானிலை இயல் – Neteorology/ Astrometeorology
341.வானோடவியல் – Aerodonetics
342.விசை இயக்க இயல் – Kinetics
343.விண்கற்களியல் – Aerolithology
344.விண்ணுயிரியியல் – Astrobiology
345.விண்பொருளியல் – Astrogeology
346.விந்தையியல் – Thaumatology
347.விலங்கியல் – Zoology
348.விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) – Agronomics
349.வெளிற்றியல் – Agnoiology
350.வேதியியல் – Chemistry
351.வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352.வேர்ச்சொல்லியல் – Etymology .

அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்.,
அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.
நவீன விலங்கியல் - பி.எஸ்சி.,
மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் -

பி.எஸ்சி.,
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.
வேளாண்மை பொறியியல் - பி.டெக்.
வேளாண்மை - பி.எஸ்சி.,
வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ.,
பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ.
மானுடவியல் - பி.ஏ.,
ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
அரபு - பி.ஏ.,
ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ.,
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.டெக்.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.,
ஆட்டோமொபைல் டெக்னாலஜி - பி.டெக்.
வேளாண்மை - பி.அக்ரி.,
கட்டடக்கலையியல் - பி.ஆர்க்.,
ஆயுர்வேத மருந்தாளுகை - பி.பார்ம்
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.ஏ.எம்.எஸ்
நூலக அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,
பார்மசி - பி.பார்ம்.,
பிசியோதெரபி - பி.பி.டி.,
சித்த மருத்துவமும் அறுவை சிகிச் சையும் - பி.எஸ்.எம்.எஸ்.,
வங்கி மேலாண்மை - பி.காம்.,
பயோ இன்ஜீனியரிங் - பி.இ.,
பயோ டெக்னாலஜி - பி.டெக்.
பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
பயோகெமிஸ்ட்ரி - பி.எஸ்சி.,
உயிரி அறிவியல் - பி.எட்.,
பயோ டெக்னாலஜி - பி.டெக்.
பயோடெக்னாலஜி - பி.எஸ்சி
தாவரவியல் - பி.எஸ்சி.,
தொழில் நிர்வாகம் - பி.பி.ஏ.,
தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.பி.ஏ., (சி.ஏ)
தொழில் மேலாண்மை - பி.பி.எம்.,தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர்

அப்ளிகேஷன் - பி.பி.எம்.,
வாணிபக் கணக்கு - பி.காம்.,
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி.,
கேட்டரிங் சயின்ஸ் - ஓட்டல் நிர்வாகம் - பி.எஸ்சி
செராமிக் டெக்னாலஜி (சுயநிதி) - பி.டெக்.
கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
கெமிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக்.
ரசாயன தொழில்நுட்பம் - பி.டெக்.
வேதியியல் - பி.எஸ்சி.,
சிவில் இன்ஜினியரிங் - பி.இ.
கிளினிக்கல் இன்ஜினியரிங் - பி.இ
கிளினிகல் நியூட்ரிசன் - பி.எஸ்சி
உணவூட்டம் மற்றும் உணவுக் கட்டுப்பாட் டியல் - பி.எஸ்சி.,
கூட்டுறவு - பி.காம்.,
கூட்டுறவு - பி.ஏ.,
வணிகவியல் - பி.காம்.,
வணிகவியலும் கணக்கியலும் - பி.காம்.,
வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம் - பி.காம்.
வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் - பி.காம்.,
வணிகவியல் மற்றும் இ-காமர்ஸ் - பி.காம்.
வணிகவியல் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செகரட்டேரியல் ப்ராக்டீஸ் -

பி.காம்.,
கம்ப்யூட்டர் உதவியுடனான கட்டமைப்பு பொறியியல் - பி.இ.,
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் - பி.சி.ஏ.,
கம்ப்யூட்டர் அறிவியல் - பி.எஸ்சி
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.இ
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி
கார்ப்பொரேட் பொருளாதாரம் - பி.ஏ.,
காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பாஷன் டெக்னாலஜி - பி.எஸ்சி.,
ஆடற்கலை - பி.எப்.ஏ.,
பாதுகாப்பு மற்றும் வியூகவியல் - பி.ஏ.,
பல் அறுவை சிகிச்சை - பி.டி.எஸ்.,
பொருளாதாரம் - பி.ஏ.,
பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி - பி.ஏ.,
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்(சுயநிதி) - பி.இ.
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (சான்ட்விச்) - பி.இ.
எலக்ட்ரானிக் மீடியா - பி.எஸ்.சி
எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சயின்ஸ் - பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் - பி.எஸ்சி
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் - பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்(சுயநிதி) - பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் - பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.டெக்
எலக்ட்ரானிக்ஸ்சயின்ஸ் - பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் - பி.இ.எஸ்
ஆங்கிலம் - பி.ஏ.,ஆங்கிலம் - பி.லிட்
ஆங்கிலம் - பி.ஏ. (ஹானர்ஸ்)
ஆங்கில மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் - பி.ஏ.,
ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஏ.,
பாஷன் தொழில் நுட்பம் - பி.டெக்.,
பாஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைன் - பி.எஸ்சி.,
நிதி கணக்கியல் - பி.சி.ஏ.,நுண்கலை - பி.எப்.ஏ.,
பயர் இன்ஜினியரிங் - பி.இமீன்வள அறிவியல் - பி.எப்.எஸ்சி.,
புட் ப்ராசஸ் இன்ஜீனியரிங் - பி.டெக்.,
உணவு தயாரிப்பு - பி.எஸ்சி
உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் - பி.எஸ்சி.,
உணவு தொழில் நுட்பம் - பி.டெக்.,
உணவு தொழில் நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.,
பிரெஞ்சு இலக்கியம் - பி.ஏ.,
பொது சட்டம் - பி.ஜி.எல்.,
ஜெனிடிக் இன்ஜினியரிங் - பி.இ.,
ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் - பி.இ.,
புவியியல் -பி.எஸ்சி.,
சுற்றுலா புவியியல் மற்றும் பயண மேலாண்மை - பி.எஸ்சி.,

இந்தி - பி.ஏ.,
ஹிந்தி - பி.ஏ. (ஹானர்ஸ்)
இந்தி இலக்கியம் - பி.ஏ.,
வரலாற்றுக்கல்வி (ஹிஸ்டாரிகல் ஸ்டடிஸ்) - பி.ஏ.,
வரலாறு - பி.ஏ.,
வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.ஏ.,
ஹோம்சயின்ஸ் - பி.எஸ்சி., ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாகம் - பி.எஸ்சி
ஹோட்டல் மேனேஜ்மென்ட் - பி.எஸ்சி.,
ஹோட்டல் நிர்வாகம் - கேட்டரிங் டெக்னாலஜி - பி.எஸ்சி
இந்திய கலாசாரம் - பி.ஏ.,இந்திய இசை - பி.ஏ.,
இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி - பி.டெக்.
இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி(சுயநிதி) - பி.டெக்.
தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் - பி.எஸ்சி.,
இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் - பி.இ.,
தொழிற்சாலை பாதுகாப்பு - சான்றிதழ் படிப்புகள்
தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.எஸ்சி.,
தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் - பி.ஐ.எஸ்.எம்.,
தகவல் தொழில்நுட்பம் - பி.டெக்.
தகவல் தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
தகவல் தொழில்நுட்ப மேலாண்மை - பி.எஸ்.
தகவல் தொழில்நுட்பம்(சுயநிதி) - பி.டெக்.

இதழியல் - பி.ஏ.,
லெதர் டெக்னலாஜி - பி.டெக்.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் - பி.எல்.ஐ.எஸ்சி.,
மலையாள இலக்கியம் - பி.ஏ.,
மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,
மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் - பி.பி.ஏ.
மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம்.,மாஸ் மீடியா - பி.ஏ.
கணிதவியல் - பி.எஸ்சி.,
கம்ப்யூட்டர் பயன்பாட்டுடனான கணிதவியல் - பி.எஸ்சி., மெக்கானிக்கல்

இன்ஜினியரிங் - பி.இ.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சுயநிதி) - பி.இ.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு) - பி.இ.,
மெக்கட்ரானிக்ஸ் - மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி.இ.,
மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் - பி.எஸ்சி.,
மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் - பி.இ.,
நுண்ணுயிரிகள் - பி.எஸ்சி.,
மைனிங் இன்ஜினியரிங் - பி.இ.,

இசை - பி.ஏ.,
நாட்டியம் - பி.ஏ.,
நியூக்ளியர் இன்ஜினியரிங் - பி.இ
நர்சிங் - பி.எஸ்சி.,ஊட்டச்சத்து - பி.எஸ்சி
உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் - பி.எஸ்சி.,
ஊட்டச்சத்து உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை - பி.எஸ்சி.,
ஆக்குபேஷனல் தெரபி - பி.எஸ்சி.,(ஹானர்ஸ்)
ஆக்குபேஷனல் தெரபி - பி.ஓ.டி.,
ஆப்டோமெட்ரிஸ்ட் - பி.எஸ்சி.,ஆப்டோமெட்ரி - பி.ஆப்ட்.,
காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழில் நுட்பம் - பி.டெக்.,
பெட்ரோலியம் டெக்னாலஜி - பி.டெக்.
பெட்ரோலியம் இன்ஜினியரிங் - பி.இ.
பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் நுட்பம் -

பி.டெக்.,
பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி - பி.பார்ம்.,
பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பம் - பி.டெக்.,
பார்மாசுட்டிகல் தொழில் நுட்பம் - பி.டெக்.,
பார்மசூட்டிக்கல்ஸ் - பி.பார்ம்.,பார்மகாக்னோசி - பி.பார்ம்.,
பார்மகாலாஜி - பி.பார்ம்.,தத்துவவியல் - பி.ஏ.,
உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு - பி.எஸ்சி.,
இயற்பியல் - பி.எஸ்சி.யிர்
தாவரவியல் மற்றும் பயிர் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
பயிர் தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி.,
அரசியல் அறிவியல் - பி.ஏ.,
பாலிமர் டெக்னாலஜி - பி.டெக்.
பிரின்டிங் டெக்னாலஜி - பி.இ.
உற்பத்தி பொறியியல் - பி.டெக்.
உற்பத்தி பொறியியல் - பி.இ.
உற்பத்தி பொறியியல் (சான்ட்விச்) - பி.இ.
உளவியல் - பி.ஏ.,உளவியல் - பி.ஏ.,
புனர்வாழ்வு அறிவியல் - பி.ஆர்.எஸ்.சி.,
மதம், தத்துவம், சமூகவியல் - பி.ஏ.,
ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி - பி.டெக்.,
ரப்பர் டெக்னாலஜி - பி.டெக்.
ஊரக வளர்ச்சி - பி.எஸ்சி.,
கிராம வளர்ச்சி அறிவியல் - பி.எஸ்சி.,
சமஸ்கிருதம் - பி.ஏ.,
சமஸ்கிருத இலக்கியம் - பி.ஏ.,
சான்ஸ்கிரிட் விஷாரத் - பி.ஏ.
சமூக அறிவியல் - பி.எட்.,
சமூகப் பணி - பி.எஸ்.டபிள்யூ.,
சமூகவியல் - பி.ஏ.,
புள்ளியியல் - பி.எஸ்சி.,
தமிழ் - பி.லிட்.,
தமிழ் மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
தெலுங்கு இலக்கியம் - பி.ஏ.,
டெக்ஸ்டைல் வேதியியல் - பி.டெக்.,
டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - பி.இ
டெக்ஸ்டைல் டெக்னாலஜி - பி.டெக்.

சுற்றுலா - பி.ஏ.,
சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை - பி.எஸ்சி.,
பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை - பி.ஏ.,

யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.யு.எம்.எஸ்.,
உருது இலக்கியம் - பி.ஏ.,(அலங்கார்)
வேதா - பி.ஏ.
கால்நடை அறிவியல் - பி.வி.எஸ்சி.,
விலங்கியல் - பி.எஸ்சி.,

            தமிழால் இணைவோம் !!!
            அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
    அறிவியலின் தேடல் தொடரும்.
              " வலியே வலிமை "
             -ஐய்யனார் (வால்வரின்).

திருப்பதி உண்மையில் ஒரு முருகர் கோயில் தான் !!!!

திருப்பதி உண்மையில் ஒரு முருகர் கோயில் தான் !!!! 



 திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா?

 *எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்?

 *எந்த பெருமாளுக்கு ஈஸ்வரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது?

 *எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?

*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

 *எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா? (படத்தில் பார்க்க)

 *கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ?

*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?

 *சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீரா?

 *பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இருக்காதே?

 *தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா?

 சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன;
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'வேங்கடத்து நெடியோனைப்' பாடுகிறார். அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார். சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம்கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரசமுத்திரையோடு பூட்டு போட்டாராம்; மறுநாள் காலை திறந்துபார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்;

 சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனராம்; உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தலமாக்கிவிட்டார்களாம். ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள், ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீஸில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம்கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860கோடி வருமானம் ஈட்டியுள்ளது;

 இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது; எல்லாம் தெலுங்கருக்குத்தான். திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளஹஸ்தி) போனது; (நல்லவேலை ம.பொ.சி படைவீடான திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;

 திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்களாவன, சந்திரகிரி (தமிழர் - 60 %), சித்தூர் (தமிழர்- 65%), குப்பம்(தமிழர்-60 %), நகரி(தமிழர்-55%), புங்கனூர்(தமிழர்-50%), சத்தியவேடு(தமிழர்-70 %), திருக்காளத்தி(தமிழர்-65 %), புத்தளப்பட்டு(தமிழர் -55%), திருப்பதி(தமிழர்-55 %), பல்லவனேறி(தமிழர்-50 %), நெல்லூர்(தமிழர்-55 %), கோவூர்(தமிழர்-60%), உதயகிரி(தமிழர்-55%) ... 1300களில் நாய்க்கெராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார் நுழையவில்லை; காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது; கோவிலைக் கட்டியவன் உன் பாட்டன் ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை 'ஜருகண்டி' என்று பிடித்துத் தள்ளுவான்; பாலாஜி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது வடயிந்தியன் பாலாஜி என்ற பெயரை வைப்பான்; தமிழன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு திரிகிறான்;

 இருநூறாயிரம் (2லக்சம்) தமிழனைக் கொன்றுதள்ளிய ராஜபக்ச மாமியார் வீட்டுக்கு வருவதுபோல திருப்பதி வந்துபோவான்; அவன் தமிழகத்திற்கு வந்துபோனால்கூட எவனும் கேட்கமுடியாது. உலகிலேயே பெரிய முருகன் சிலை மலேசியாவில் பத்துமலையில் உள்ளது; இப்போது அதற்கு அருகிலேயே ராமர்கோவிலும் ஹனுமான் சிலையும் வந்தாயிற்று. சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் சிலையைச் செய்து அனுப்பியவன் தமிழன்; ஆனால் அங்கே வெந்நீர் ஊற்றிக் கொலைசெய்யப்பட்டான் ஒரு தமிழன்; தமிழன் என்றதும் மலையாளி கொலையாளி ஆகிவிடுகிறான்; கேரளாவில் மலைமலையாக தங்கம் கிடைத்த பத்மநாபசுவாமி கோவில் கடைசி அறை திறக்கப்படவில்லை; அந்த அறையில்தான் தங்கம் தமிழருக்குச் சொந்தம் என்று நிறுவும் சான்றுகள் உள்ளதாக தமிழுணர்வாளர்கள் கூறுகின்றனர்; தங்கத்தை மலையாள அரசு வைத்துக்கொண்டது; கண்ணகிக் கோவில் தமிழக எல்லைக்குள் உள்ளது ஆனால் மலையாள காவல்துறை அங்கே பண்ணுகிற அட்டூழியம் தமிழன் எவ்வளவு கையாலாகாதவன் என்று நிறுவுகிறது; கண்டியை 'நுவர' என்றாக்கி சிங்களவன் வைத்துக்கொண்டான்; 'சமணவெள்ளைக்குளத்தை' 'ஸ்ரவணபெலகோலா' என்றாக்கி கன்னடவன் வைத்துக்கொண்டான்; தஞ்சை பெரியகோயில் சோழர்காலத்து ஓவியங்களுக்கு மேலேயே நாய்க்கெர்கள் ஓவியம் வரைந்து சோழர் கல்வெட்டுகளைத் திருத்தி பெயர்த்து தமிழ் வரலாற்றை அழிக்க முயன்றுள்ளனர்; குமரி அன்னை கோயிலை விட விவேகானந்தர் பாறையும் காந்தி மண்டபமும் பரவலாகிவிட்டது; ராமேசுவரத்தில் எங்கே திரும்பினாலும் வடயிந்தியன் நிற்கிறான்; கேட்டால் எல்லாரும் ஹிந்துவாம்; ஹிந்து என்ற வார்த்தையே 1829ல் ஆங்கிலேயன் உருவாக்கியது என்று தெரியுமா? ஆசியாவிலேயே பெரிய கோபுரம் திருவரங்கத்தில்(சிறிரங்கம்) அமைத்து, சீனாவில் கேண்ட்டான்(cantan) அருகே குப்ளாய்கான்(1300கள்) காலத்தில் சிவன்கோவில் கட்டி, உலகிலேயே பெரிய வழிபாட்டுத் தளமான அங்கோர்வாட்டை (கம்போடியாவில்) எழுப்பி, தஞ்சை பெரியகோவிலும் மதுரை மீனாட்சி கோவிலும் இன்றும் வானாளவ நிற்குமாறு பேரரசு செலுத்திய தமிழினமா இன்று இப்படிக் கேடடைந்துவிட்டது? உன்னைக் கடவுளும் காப்பாற்றவில்லை. கடவுளை நீயும் காப்பாற்றவில்லை.

அறிவியல் அதிசயம், உடல் உறுப்புக் குறைபாட்டிற்கு !!! சிலிகான் அடிப்படையிலான மாற்று மருத்துவம்.

அறிவியல் அதிசயம், உடல் உறுப்புக் குறைபாட்டிற்கு !!! சிலிகான் அடிப்படையிலான மாற்று மருத்துவம்.

கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
 தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?



சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான். சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

ஓம் நமசிவாய !!!
இந்து மதம் யாரையும் ஏமாற்றுவது இல்லை .... தவறு செய்தால் தண்டனை உண்டு என போதிப்பது இந்து மதம் மட்டுமே ... இங்கு பாவ மன்னிப்பு கிடையாது ... " கன்பெஷன் " என்ற ஏமாற்றுவேலைக்கு இந்து மதத்தில் இடமில்லை ... அவனவன் செய்த தவறுகளுக்கு ஏற்ப அவனவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே ..





                     
          தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 22 April 2018

*உயிர்மெய் எழுத்துக் காதல் கவிதை* !!!!

*உயிர்மெய் எழுத்துக் காதல் கவிதை* 


*க* ண்டோர் மதிமயங்கும் உன் அழகும்.,

*கா* ணாதுருகும் மெல்ல என் உயிரும்.,

*கி* ளிபோல் கீச்சிடும் நறுந்தேன் மொழியும்.,

*கீ* ரிக் களிக்குமோ எனையுன் விழியும்.,

*கு* லமகள் குரலோ கவி மழைப் பொழியும்.,

*கூ* ந்தல் காட்டுக்குள், சென்றுவர இல்லையே வழியும்.,

*கெ* ட்டுத்திரியும் மனம், அவளையே சாரும் அப்பழியும்.,

*கே* ளாயோ?பூ மனமே, ஆசையை விட் டொழியும்.,

*கை* து செய்த கன்னியே, என்நிலை உனக்கெப்படி
புரியும்.,

*கொ* டுத்தெடு, இதயத்தை
என் அன்பினாழம் தெரியும்.

*கோ* ட்டையென் நெஞ்சை,
அவளன்பே ஆட்சிபுரியும்.,

*கெள* ரவத்தை காத்திடும்
அவளொரு கலங்கரை விளக்கம்..

இந்த பூமியில் மிக விலை உயர்ந்த பொருள் !!! எதிர்ப்பொருள் ( anti-matter )

இந்த பூமியில் மிக விலை உயர்ந்த பொருள். 

anti-matter



எதிர்ப்பொருள் (anti-matter) என்பது இப் பேரண்டத்தில் (பிரபஞ்சத்தில்) எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். இது பொருளுக்கு இணையானதும் நேர்எதிரானதும் ஆகும். பொருளும் எதிர்ப்பொருளும் சேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்துப் (annihilation) பேராற்றல் வெளிப்படும்.

ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் ஒரு எதிர்த்துகள் உண்டு. எ.கா: எலக்ட்ரானின் எதிர்த்துகள் பாசிட்ரான் ஆகும். இவை இரண்டும் ஒரே நிறை உடையவை. ஆனால் எலக்ட்ரான் (எதிர்மின்னி) எதிர்மறை மின்சுமையும் பாசிட்ரான் நேர்மறை மின்சுமையும் பெற்றுள்ளன.

பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைக்கதைகளில் எதிர்ப்பொருளைப் பயன்படுத்தி உள்ளனர். டான் பிரௌன் எழுதிய ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலில் எதிர்ப்பொருள் உலகை அழிக்கவல்ல ஆயுதமாய் சித்தரிக்கப்படுகிறது.

பிரபஞ்சத் துவக்கம் சமஅளவு பொருளும் சமஅளவு எதிர்ப்பொருளும் சேர்ந்து ஒன்றையொன்று அழித்துக் கொண்டதால் உண்டான பெருவெடிப்பினாலேயே என்று நம்பப்படுகிறது.

          தமிழால் இணைவோம் !!!
          அறிவால் உயர்வோம் !!!
                 தமிழ் வாழ்க !!!
      அறிவியலின் தேடல் தொடரும்.
             " வலியே வலிமை "
          -ஐய்யனார் (வால்வரின்).
              

கணிதத்தின் புள்ளியியல் !!! சமன்பாடு புதிரை பூர்த்தி செய்யும் சிறுவனின் புத்திக்கூர்மை !!

கணிதத்தின் புள்ளியியல் சமன்பாடுகளை
சரியாக பயன்படுத்திய , புதிர்களை  பூர்த்தி செய்யும் புத்திசாலி சிறுவன்.
கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
 தமிழ் வாழ்க !!!
      அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
     -ஐய்யனார் (வால்வரின்).

             



Saturday, 21 April 2018

மின்சாரத்தை வர்ணம் சாயம்( பெயிண்ட் ) கொண்டு மின்சாரத்தை மின்பொருள்களில் பயன்படுத்தும் தொழில் நுட்பம்.

மின்சாரத்தை வர்ணம் சாயம் (பெயிண்ட்) கொண்டு மின்சாரத்தை மின்பொருள்களில் பயன்படுத்தும் தொழில் நுட்பம். 

கீழே உள்ள காணொளியை கண்டு மகிழுங்கள்.

                தமிழால் இணைவோம் !!!
                 அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
           அறிவியலின் தேடல் தொடரும்.
                     " வலியே வலிமை "
                -ஐய்யனார் (வால்வரின்).
             

மெதுவடை செய்யும் இயந்திரம் கருவி !!!!

தமிழர்களின் மெதுவடை உலகம் அறிந்த ஒன்று !!!!
கிபி.நூற்றாண்டில் சிறந்த சிற்றுண்டி பொருள் இதுவே.
அதிகப்படியான மாவுச்சத்து ,
புரதச்சத்துகளை கொண்ட உளுந்து உள்ள எலும்புகளை ஒட்டவும் , வலிமைப்படுத்தவும் நன்கு உதவுகிறது.
இதை இன்றைய தொழில்நுட்பத்தில் கைகள் படாமல் , ஒரே அளவாக அதுவும் ஒரே சுவையாக அனைத்து வடைகளை உருவாக்க கூடியது இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது.


             
               தமிழால் இணைவோம் !!!
               அறிவால் உயர்வோம் !!!
                     தமிழ் வாழ்க !!!
       அறிவியலின் தேடல் தொடரும்.
                  " வலியே வலிமை "
               -ஐய்யனார் (வால்வரின்).

Friday, 20 April 2018

பட்டு நூல் உற்பத்தி செய்யும் விதம்.

பட்டு  நூல்  உற்பத்தி செய்யும் விதம்.

கீழே உள்ள காணெளியை கண்டு மகிழுங்கள்.


         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
    அறிவியலின் தேடல் தொடரும்.
             " வலியே வலிமை "
            -ஐய்யனார் (வால்வரின்).

வண்ணங்களின் தமிழ்ப் பெயர்கள்.

வண்ணங்களின் தமிழ்ப் பெயர்கள்.


150 வண்ணங்களின் பெயர் தமிழில் :


1. அடர் சிவப்பு - Cramoisy
2. அடர் நீலம் - Perse / Smalt
3. அடர் மஞ்சள் - Gamboge
4. அயிரை/ அசரை - Sandy colour
5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic
6. அருணம் - Bright red, colour of the dawn
7. அவுரி(நிறம்) - Indigo
8. அழல் நிறம் - Reddish colour of fire
9. ஆழ் சிவப்பு - Cinnabar
10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret
11. ஆழ் பழுப்பு - Brunneous
12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine
13. ஆழ்சிவப்பு - Cramoisy
14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine
15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous
16. இருள் சிவப்பு - Puccoon
17. இருள்சாம்பல் - Slate
18. இள மஞ்சள் - Flavescent / Primrose
19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous
20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour
21. உறைபால்(நிறம்) - Whey
22. எண்ணெய்க்கறுப்பு - Dark black colour
23. எலுமிச்சை - Citreous
24. ஒண்சிவப்பு - Cardinal
25. ஒளிர் செஞ்சிவப்பு - Phoeniceous
26. ஒளிர் செம்மை - Coccineous
27. ஒளிர் வெண்கலம் - Aeneous
28. ஒளிர் வெண்கலம் (நிறம்) - Aeneous
29. ஒளிர்சிவப்பு - Puniceous
30. ஒளிர்மஞ்சள் - Sulphureous / Vitellary
31. கசகசாச் சிவப்பு - Ponceau
32. கடல்நீல (நிறம்) - Ultramarine
33. கடற்பச்சை - Cerulean
34. கத்தரிநீலம் - Periwinkle (நித்திய கல்யாணி)
35. கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour
36. கரு (நிறம்) - Sable
37. கருஞ்சிவப்பு - Porphyrous / Purpureal
38. கரும்பச்சை - Corbeau
39. கருமை - Nigricant / Nigrine
40. காயாம்பூ (நிறம்) - Purple colour
41. காளிமம் - Black colour
42. கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour
43. குங்குமச் சிவப்பு - Vermeil
44. குங்குமப்பூ(நிறம்) - Croceate / Saffron
45. குரால் - Dim, tawny colour
46. குருதிச்சிவப்பு - Erythraean / Sanguineous / Incarnadine
47. குருதிச்செம்மை - Vermilion
48. கோமேதக(நிறம்) -Topaz
49. சருகிலை (நிறம்) - Filemot
50. சாம்பல் - Cinerious
51. சாம்பல் பச்சை - Caesious / Sage
52. சாம்பல் மஞ்சள - Isabelline
53. சுடர் (நிறம்) - Flammeous
54. சுடுமண் (நிறம்) - Terracotta
55. சுதை வெண்மை - Cretaceous
56. செக்கர் - Reddish sky
57. செங் கருநீல (நிறம்) - Violet / Violaceous
58. செங்கருப்பு - Piceous
59. செங்கல்மங்கல் - Dim red colour
60. செங்கற்சிவப்பு - Lateritious / Testaceous
61. செந்தீவண்ணம் - Colour of glowing fire
62. செந்தூரச்சிவப்பு - Minium
63. செப்புநிறம் - Dark red colour
64. செம்பட்டை - Brown colour of hair
65. செம்பவளம் (மிகு சிவப்பு) - Deep red colour, Crimson colour
66. செம்பழுப்பு - Sinopia / Sorrel
67. செம்பு - Copper colour
68. செம்பூச்சி - Kermes
69. செம்பொன் - Titian
70. செம்மஞ்சள் - Jacinthe
71. செவ்வல் (செந்நிறம்) - Redness
72. சோணம் - Red colour, crimson colour
73. தசை (நிறம்) - Sarcoline
74. தவிட்டுநிறம் - Brown, dun colour
75. திமிரம் - Colour of Darkness
76. தும்பை நிறம் - Pure white colour
77. துமிரம் - Deep red colour
78. துரு (நிறம்) - Ferruginous
79. துருச் சிவப்பு - Rubiginous
80. துவர் (சிவப்பு) - Scarlet Red colour
81. துவரி (காவிநிறம்) - Salmon colour
82. தூயபழுப்பு - Sepia
83. தெள்ளுப்பூச்சி (நிறம்) - Puce
84. நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn
85. நல்சிவப்பு - Coquelicot
86. நறுமஞ்சள் - Lutescent
87. நன்மஞ்சள் - Luteolous
88. நன்னிறம் - White colour
89. நீல (நிறம்) - Azuline
90. நீல மணி - Sapphire
91. நீலச்சாம்பல் - Glaucous / Cesious / Gridelin / Lovat
92. நீலச்சிவப்பு - Amaranthine / Solferino
93. நீலப்பச்சை - Turquoise / Viridian
94. பச்சை - Chlorochrous
95. பசுமை - Virid
96. பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut
97. பழுப்பு மஞ்சள் - Fulvous
98. பழுப்புச் சிவப்பு - Castaneous / Rufous / Russet / Umber
99. பழுப்புச்சாம்பல் - Greige / Taupe
100. பளீர்சிவப்பு - Stammel
101. பனிவெண்மை - Niveous
102. பாணிச்சாய் (கள்போன்ற முத்துநிறம்) - Colour of a class of pearls, resembling that of toddy
103. பால்வண்ணம் - White colour
104. புகர் நிறம் - Tawny / Tan
105. புகைக்கரி - Fuliginous
106. புள்ளிச் சாம்பல் - Liard grey
107. புற்பச்சை - Prasinous
108. புறவு (நிற) - Columbine
109. பூஞ்சல் (மங்கனிறம்) - Brownish colour
110. பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour
111. பூவல் - Red colour
112. பைந்நீல(நிறம்) - Teal
113. பைம்பொன் - Chrysochlorous
114. பொன் மஞ்சள் - Goldenrod
115. பொன்மஞ்சள் - Luteous
116. பொன்மை - Aurulent
117. மகரம் - Pink colour
118. மங்கல் பழுப்பு - Fuscous
119. மங்கல் பழுப்பு - Khaki
120. மங்கல்பச்சை - Eau-de-nil
121. மஞ்சள் - Xanthic / Icterine / Icteritious
122. மஞ்சள் பச்சை - Chartreuse / Zinnober
123. மஞ்சள் பழுப்பு - Lurid / Ochre
124. மஞ்சள்சிவப்பு - Wallflower
125. மணிச்சிவப்பு - Rubious
126. மணிநிறம் - Dark blue colour, as of sapphire
127. மயில்நீலம் - Pavonated
128. மரகதப்பச்சை - Smaragdine
129. மருப்பு (தந்தம்) - Eburnean
130. மல்லிகை மஞ்சள் - Jessamy
131. மாமை - Dark-brown colour
132. முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime
133. முத்துச்சாம்பல் - Griseous
134. வளர்பச்சை - Virescent
135. வாதுமை (நிறம்) - Ibis
136. வான் நீலம் - Cyaneous
137. விண் நீலம் - Celeste
138. விழி வெண்மை - Albugineous
139. வெங்காயப் பச்சை - Porraceous
140. வெண்சாம்பல் - Hoary
141. வெண்மங்கல் - Leucochroic
142. வெண்மஞ்சள் - Ochroleucous
143. வெளிர் நீலம் - Azure
144. வெளிர் பச்சை - Celado
145. வெளிர் மஞ்சள் - Nankeen
146. வெளிர் மஞ்சள் பச்சை - Tilleul
147. வெளிர்நீலம் - Watchet
148. வெளிர்பழுப்பு - Suede
149. வெளுப்பு - Albicant
150. வைக்கோல் (நிறம்) - Stramineous

             தமிழால் இணைவோம் !!!
              அறிவால் உயர்வோம் !!!
                     தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
              " வலியே வலிமை "
                  -ஐய்யனார் (வால்வரின்).

Thursday, 19 April 2018

தொழிலாளர் விதிகள் !!!!

தொழிலாளர் விதிகள்


பிரிவு 66(1)(b) 1948 ன் படி பெண்கள் எந்த ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும் காலை 6 மணிக்கு முன்பாகவோ அல்லது இரவு 7 மணிக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்க கூடாது

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் சுமார் 30 வேலை நாட்கள் பணிபுரிந்திருந்தாலே போனஸ் பெற தகுதியானவர்

ஆண்டு இறுதி கணக்கு முடிந்த 8 மாத காலத்திற்குள் போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு அளித்திருக்க வேண்டும்

கூடுதல் நேர வேலை செய்பவர்களுக்கு சாதாரண நேரத்தில் கணக்கிடபடும் தொகையை விட இரண்டு மடங்கு கூடுதலாக தர வேண்டும் 

உப்பும் ,,,,,தேனும் ,,,,,நோயும் ... !!!!!!

உப்பும் ,,,,,தேனும் ,,,,,நோயும் ..........


நாம் தினமும் பயன் படுத்தும் உப்பை பற்றி தகவல் தான் இந்த பதிப்பு .. உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .
உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம் ...

உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?

இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..

ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...

தேன்....

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .

ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..

மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ

1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .

2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .

3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )
இனிப்பை வைத்து வைத்யும் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ...

நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .
தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....

அகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...

நன்றி.

கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் !!!


கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் !!!



நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம்.மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற் பலன்கள் பெற்று வாழலாம்.

சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன? CONSUMER RIGHTS

நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன? CONSUMER RIGHTS !!!



பிறந்த குழந்தை முதல்,  முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பதும் , அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

ஒவ்வொரு நாடும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

நுகர்வோர் பிரச்சினைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக, அதிக செலவில்லாமல் தீர்வும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

சரியான வரையறையின்படி, நுகர்வோர் என்பவர் யார்? அதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  


நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அதற்குரிய முழுத்தொகையைக் கொடுத்துப் பெறுபவர், அதற்குரிய விலையில் ஒரு பகுதியை செலுத்தி, மற்றொரு பகுதியை பின்னர் தருவதாகக் கூறிப் பெறுபவர், பணம் தருவதாகச் சொல்லியோ அல்லது தவணை முறையில் செலுத்தியோ பெறுபவர் எவரும் நுகர்வோர் ஆவார். மேலும் பொருளையோ அல்லது சேவையையோ தான் பணம் கொடுத்து வாங்காமல், அதை மேற்கூறிய முறையில் வாங்கியவரின் முறையான அனுமதியோடு பயன்படுத்தும் நபரும் நுகர்வோர் ஆவார்.

சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும்.

 உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நோக்கத்துடன் கொள் முதல் செய்யும் வியாபாரிகள், சேவை அளிப்போர் நுகர்வோர் ஆகமாட்டார்கள். ஆனால் சுயவேலைவாய்ப்புக்காக, தமது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக பொருட்களை வாங்கும் நபர்கள் நுகர்வோர் ஆவார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண் தனது சுயதொழிலுக்காக தையல் எந்திரம் வாங்குவது.

சரி, நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

* உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரநிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

* பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

* நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

* நுகர்வோருக்கான விழிப்புணர்வைப் பெறும் உரிமை.

* நுகர்வோர், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.

கல்லூரிச் சான்றிதழ் , பள்ளி சான்றிதழ் தொலைந்து போனால் !!!!

கல்லூரிச் சான்றிதழ் ,

பள்ளி சான்றிதழ் தொலைந்து 

போனால் !!!!

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ, அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீவிபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, நீண்டநாள் வைத்திருந்த காரணத்தால் கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்புக்குச் செல்ல, அரசின் தொழிற்கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயது சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இது. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ் பெறுவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பள்ளிச் சான்றிதழ் தொலைந்து போனால்:

• பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்து போனால் எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம்.
• விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் ’பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது’ என்றச் சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.
• இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:

• கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றை வழங்குவர்.
• அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.
• பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தை செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
• பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்த பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.
• அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.
• பின்னர் காவல்நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம், ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
• இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
• மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
• கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
• விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.
• இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.
• விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.

பின் குறிப்பு:

பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாக பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

மேலே சொன்னபடி செய்யுங்கள். அல்லது வாங்க மறுத்தால், தர மறுத்தால், நீங்கள் பதிவு தபால் அஞ்சல் ஒப்புதல் அட்டையோடு அனுப்புங்கள். அதன் பின், இரு வாரம் கழித்து, உங்கள் மனு மீதான நடவடிக்கை பற்றி, தகவல் சட்டம் மூலம் கேட்கலாம். 

பூமி தான் உண்மையான​ தண்ணீர் கிரகம் !!!!

 பூமி தான் உண்மையான​ தண்ணீர் கிரகம் !!!!


           தமிழால் இணைவோம் !!!
           அறிவால் உயர்வோம் !!!
                 தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
                " வலியே வலிமை "
                     -ஐய்யனார் (வால்வரின்).

Tuesday, 17 April 2018

இயற்கை உயிரினத்தின் தாய்மை காக்கும் ஆற்றலின் அதிசயம்.

இயற்கை உயிரினத்தின் தாய்மை காக்கும் ஆற்றலின் அதிசயம்.
ஒரு குருவி ஒன்றை காணொளியில் காணுங்கள்.
அந்த குருவின் தாய்மை அரிதானவை.
         

தமிழால் இணைவோம்!!!!
அறிவால் உயர்வோம்!!!!
 தமிழ் வாழ்க!!!!
அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).
               

மனிதன் அறியாத உயிரினங்கள் !!!!

மனிதன் அறியாத உயிரினங்கள்!!!!

கடவுளின் படைப்பில் அனைத்தும் தலை சிறந்ததே !!!!

காணொளியை காணுங்கள்.



தமிழால் இணைவோம் !!!! 
அறிவால் உயர்வோம்!!!!!
 தமிழ் வாழ்க!!!!
அறிவியலின் தேடல் தொடரும்.
"வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)

             

மீன் முட்டைகளின் அரவணைப்பு !! மீன்களின் தந்தை மற்றும் தாய் பாசம்.

மீன் முட்டைகளின் அரவணைப்பு !!மீன்களின் தந்தை மற்றும் தாய் பாசம்.


தமிழால் இணைவோம் !!!!
அறிவால் உயர்வோம் !!!!
தமிழ் வாழ்க !!!!
அறிவியலின் தேடல் தொடரும்.
            " வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).

ஓம் நமசிவாய என்ற பொருளின் விளக்கம் இஸ்லாமிய மனிதரின் பொன்வரிகள்.

ஓம் நமசிவாய என்ற கடவுளின் அற்புத மந்திரத்தின் பொருளையும் , அதன் விளக்கத்தை ஒரு இஸ்லாமிய மனிதரான ஒரு முதியாரின் பொன்வரிகளை காணுங்கள்.


தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
அறிவியலின் தேடல் தொடரும்.
         " வலியே வலிமை "
       -ஐய்யனார் (வால்வரின்)

Friday, 13 April 2018

அற்புதமான பறக்கும் கார் !!!சிறந்த அறிவியல் தொழில்நுட்பம்.

அற்புதமான பறக்கும் கார் !!! சிறந்த அறிவியல் தொழில்நுட்பம்.


தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  அறிவியலின் தேடல் தொடரும்.
              " வலியே வலிமை "
               -ஐய்யனார் (வால்வரின்)

Thursday, 12 April 2018

அற்புதமான தொழில்நுட்பம் !!!சிறிய வகையான இருசக்கர வண்டி

அற்புதமான தொழில்நுட்பம் !!!சிறிய வகையான இருசக்கர வண்டி.


தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

அறிவியலின் தேடல் தொடரும் !!!!!
           " வலியே வலிமை "
            -ஐய்யனார் (வால்வரின்)

Wednesday, 11 April 2018

தஞ்சை பெரியக்கோவில் புதுப்பித்த பிறகு தற்போதைய காணொளி !!!

1000 ஆண்டு முன்பு கட்டப்பட்ட கோயில் இது. உலக அதிசயத்தில் மூத்த வயது உடையது.

85 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்றுநடந்த
கங்கைகொண்டசோழபுரக்கோவிலின்
திருக்குடமுழுக்கின்
காணொளிக்காட்சியின் முன்னோட்டம் இது.

பிரத்யேகமாக flying cameraகொண்டெல்லாம் படமாக்கியுள்ளார்கள்.

கோயிலை நிர்மாணித்த
ராஜேந்திரச்சோழனே அந்த கோவிலை
இப்படிப்பட்டதோர் அழகானகோணத்தில்
கண்டிருக்க வாய்ப்பில்லை.👇👇


தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்)


கண்களுக்கு தெரியாத ஆபத்தான பூச்சி.

இது மாமர மரங்களில் காணப்படும் அரிய பூச்சி. அது ஒரு நபரை கடித்தால் 4 மணி நேரத்திற்குள் இறந்துவிடும். எனவே மாமர இலைகளை வெறுமையாய் கழிக்க வேண்டாம். குழந்தைகள் மரத்தின் அருகே விளையாட அனுமதிக்காதீர்கள்.
கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

அறிவியலின் தேடல் தொடரும் !!!!
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).

Tuesday, 10 April 2018

மனித குலம் அறியாத ஆபத்தான ஒட்டுண்ணி !!!!

மனித குலம் அறியாத ஆபத்தான ஒட்டுண்ணி !!!!

அதிகமான தீய விளைவுகளை ஏற்படுத்த கூடியது.
ஒரு மீன் இனத்தில் நாக்கில் உருவாகும் இந்த ஒட்டுண்ணியை காணொளி மூலம் காணுங்கள்.

!!!!!! நன்றி !!!!! 

தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

அறிவியலின் தேடல் தொடரும்
" வலியே வலிமை "
-ஐய்யனார் (வால்வரின்).


பாண்டவர்கள் !!! ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் நாம் அறியாத கௌரவர்களின் நூறு பேர் பெயர்கள் !!!



பாண்டவர்கள் !!!
 ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் கௌரவர்கள் நூறு பேர் :
1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai.

           தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

             !!!!!!!!!  நன்றி !!!!!!!!

       அறிவியலின் தேடல் தொடரும்.
              " வலியே வலிமை "
                     -ஐய்யனார் (வால்வரின்)

Saturday, 7 April 2018

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 90 சதவீதம் தமிழே.. 90 சதவீதத்தை எட்டிய மறைக்கும் முயற்சி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 90 சதவீதம் தமிழே.. 90 சதவீதத்தை எட்டிய மறைக்கும் முயற்சி..!!



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 90 சதவீதம் தமிழிலேயே உள்ளன.
அவற்றை மறைக்கும் முயற்சிகளும் 90 சதவீதத்தை எட்டிவிட்டன என்பது தனிக்கதை.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது "மதராஸ் மனதே" என சென்னைக்கும் தெலுங்கர்கள் சொந்தம் கொண்டாடிய போது "திருப்பதியா சென்னையா" எனும் இரண்டே இரண்டு ஆப்ஷன்கள் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையற்ற காரணத்தால் திருப்பதியை ஆந்திரத்திற்கு விட்டுக்கொடுத்து சென்னையைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ம.பொ.சி மட்டும் போராடாமல் இருந்திருந்தால் தமிழ்க்கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு திருத்தணி முருகன் தெலுங்கு பேசிக்கொண்டிருந்திருப்பார்.
திருப்பதியைப் பெற்றிருந்தால் சென்னையை இழந்திருக்கும் தமிழ்நாடு. திருப்பதி எனும் திருவேங்கடத்தையும் மீட்பதே தனது இலக்கு என்றிருந்தார் ம.பொ.சி.
எல்லை மீட்புப் போராளி சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தைப் போற்றி, திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த தினத்தை வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளனர் தமிழ் தேசிய ஆதரவாளர்கள்.

உலக மக்களை நடுங்க வைக்கும் மிகவும் துரதிஷ்டமான எண்கள் எவை தெரியுமா?

உலக மக்களை நடுங்க வைக்கும் மிகவும் துரதிஷ்டமான எண்கள் எவை தெரியுமா?

மூடநம்பிக்கைகள் நிறைந்த உலகில் சில நம்பர்கள் மிகவும் துரதிஷ்டமானவை என கருதப்படுவதால் சிலர் அதனை பயன்படுத்துவதில்லை.
இதில், முதல் இடத்தில் இருப்பது நம்பர் 13.
நம்பர் 13

இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுடன் 13 ஆளாக சேர்ந்து அமர்ந்து உணவருந்தியுள்ளார். அதன்பின்னர் தான் அவர் சிலுவையில் அறையப்பட்டார். எனவே உலகளவில் கிறிஸ்துவர்களை பொறுத்தவரை நம்பர் 13 என்பது துரதிஷ்டமான எண் என கருதப்படுகிறது,
இன்று வரை, பாரீஸ் கலாசாரத்தை பொறுத்தவரை நம்பர் 13 என்பது துரதிஷ்டமான எண் எனவே கருதுகிறார்கிறார்கள்.
இந்த நாளில் வீட்டை விட்டு செல்லாதிருப்பது, புதிய தொழில் தொடங்கமாட்டார்கள்.



நம்பர் 4

பெரும்பாலான ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவில், நம்பர் 4 மிகவும் துரதிஷ்டமான நம்பர் என கருதப்படுகிறது. ஏனென்றால், நம்பர் 4, இறப்பிற்கான ஒலியை குறிக்கிறது,
எனவே இதனை அவர்கள் தவிர்க்கிறார்கள். சீனாவில் கட்டிடங்களின் 4 வது, 13 வது, 14 வது மற்றும் 24 வது மாடிகளைக் காண முடியாது.
நோக்கியா, சாம்சங், சோனி போன்ற பெரிய நிறுவனங்களும் கூட அவர்களது மொபைல் தயாரிப்பில் 4 வது தொடரைத் தவிர்க்கின்றன. உதாரணமாக, சோனி எக்ஸ்பீரியா Z3 + சோனி எக்ஸ்பீரியா Z4 க்கு பதிலாக தொடங்கப்பட்டது.


நம்பர் 24

ஜப்பான் நாட்டு மக்களை பொறுத்தவரை நம்பர் 24 என்பது மிகவும் துக்கமான மற்றும் ஆபத்தான நம்பர் ஆகும். மேலும் 43 ஆம் நம்பரையும் இவர்கள் துரதிஷ்டமாக கருதுகிறார்கள்.



நம்பர் 17

இந்தியர்களை பொறுத்தவரை 17 என்பது துரதிஷ்டமான நம்பர் ஆகும். (1+7=8). 8 என்பது சனி கிரகத்தால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு நம்பர் ஆகும்.
மேலும், இத்தாலி மக்களுக்கும் 17 நம்பர் துரதிஷ்டமானது, ரோமானிய எண்களின்படி, 17 என்பது XVII ஆகும். VIXI என்ற வார்த்தை, உங்களது வாழ்க்கை முடிந்துவிட்டது (My Life Is Over)என்பதை குறிக்கிறது.



நம்பர் 7

நம்பர் 7 என்பது இறந்துபோன ஆத்மாக்களை விடுவித்தல் என்பதை குறிக்கிறது, எனவே இதனை துரதிஷ்டான நம்பர் என கருதுகிறார்கள்.