Pages

Monday, 12 July 2021

சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதற்கு சிறந்த சான்று.

 சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை முதலில் நினைவில் நிறுத்தி சில பதிவுகளை இங்கு பகிர்கிறேன்.

இன்றும் அதை பலர் 2,000 - 3000 என்று நம்பினால் குழப்பம் வரும். மத்திய அரசு இதை 2014 க்கு முன்பே 7,000 - 8000 வருட நாகரீகம் என்று அறிவித்து விட்டது

--------------------------------------------

சிந்து சமவெளி நாகரீகம் பலதரப்பட்ட மக்களை கொண்ட நாகரீகம். அதாவது cosmopolitan நாகரீகம்.

அதில் தமிழ் நாகரீகமும் ஒன்று.

அதனால் தான் அதில் சிலவற்றை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

1. இந்த ஆய்வை மேற்கொண்ட பொழுது வங்காள ஆய்வாளர் இது திராவிடர் நாகரீகம் என்றார் ( தமிழ் ).

8000 வருடங்களுக்கு முன் திராவிட மொழியில் தமிழ் தான் இருந்தது.

2. பல ஆய்வு அறிஞர்கள் அங்கு இருக்கும் எழுத்துக்களை ஆய்வு செய்து ஆளுக்கு ஒரு மொழியை கூறுகிறார்கள்.

ஒருவர் கூறுவதை மற்றொருவர் மறுக்கும் இடமும் உண்டு.

3. இந்த சிக்கலுக்கு விடை கிடைக்க பாலகிருஷ்ணன் (IAS ) அவர்கள் செய்த ஆய்வு பல குழப்பங்களுக்கு தெளிவான ஒரு தீர்வை கொடுத்து உள்ளது.

அவர் ஆய்வில் கூறியது

1. மனிதன் தான் நகர்ந்து செல்லும் இடத்திற்கு தன் ஊர் பெயர் மற்றும் தன் கடவுளையும் எடுத்து சொல்லுவான்.

அப்படி எனில் இந்த சிந்து பகுதியில் குடியேறிய மக்கள் தங்கள் ஊர் பெயரை கொண்டு வந்து இருப்பார்கள் தானே?

அதே போல இங்கிருந்து வெளியேறிய மக்கள் ஊர் பெயரை கொண்டு சென்று இருப்பார்கள் தானே?

2. நம் அதிர்ஷ்டம் இந்த இரண்டு கேள்விக்கும் விடைகள் கிடைத்தது தான்.

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், குஜராத் என்று மிக நீண்ட பரப்பளவு கொண்டு சிந்து நாகரீகத்தில் அணைத்து இடத்திலும்

தமிழ் ஊர் பெயர்கள் ஏகப்பட்ட பெயர்கள் இருந்தன.

சரி அந்த ஊர் பெயர்கள் ஏன் வேறு மொழி பெயராக இருக்க கூடாது என்ற கேள்வியும் வாதத்திற்க்கு வைத்தால் ...

ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமே உரிய "நைல்" நதி பெயர் போல தமிழர்கள் மட்டும் உரிமை கொண்டாடக் கூடிய பெயர்கள் ஆன

தொண்டி - முசுரி - வஞ்சி ஊர் பெயர்கள் சிந்து வெளி பகுதியில் இருந்தன. அதுவும் தமிழகத்தில் எந்த அமைப்பில் இருந்தனவோ அதே அமைப்பில் இருந்தன.

இது தமிழர்களை தவிர யாரும் உரிமை கொண்டாட முடியாது சான்று.

3. கீழடி ஆய்வு நமக்கு சிந்து வெளியின் நாகரீகத்தை தமிழருடையது என்று வலிமையான சான்று கூறியது.

காரணம் கீழடியில் கட்டப்பட்ட செங்கல்லும் சிந்து வெளி செங்கல்லும் ஒன்றே என்பது தான்.

ஆப்கானிஸ்தான் முதல் குஜராத் வரை கட்டப்பட்ட அணனத்து கட்டடங்களின் செங்கற்கள் ஒரே அளவில் இருக்கும்.

இந்த இரண்டாவது சான்றை தமிழர்கள் தவிர வேறு யாரும் இதுவரை காண்பிக்கவில்லை

4. சிந்து வெளி பகுதியின் தொழில் - விவசாயம்.

விவசாய செய்ய தேவையான பாண்டங்கள், கருவிகள் செய்த மக்கள்

வணிகர்கள் இந்த மூன்று பெரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த சமூக அமைப்பு ......

இந்த அமைப்பு அப்படியே இன்றும் தமிழகத்தில் தான் இருக்கிறது.

வேளாளர்கள், குயவர்கள், நகரத்தார் என்று ஒன்றாக அப்படியே இன்றும் வாழ்கிறார்கள்.

வடநாட்டவர்கள் எழுத்தை தங்களுடையது என்று உரிமை கொண்டாடினால்... அவர்கள் வாதம் அடிபட்டு போகும் இடம் ..

- அவர்கள் விவசாயத்திற்கு மதிப்பு கொடுத்ததில்லை. அதை கீழ்நிலை தொழிலாக வைத்து இருந்தார்கள்

- குயவர்கள் மிகவும் இவர்களிடம் துன்பம் அனுபவித்தவர்கள்

ஆகையால் இந்த இரண்டு பண்பாட்டு காரணங்கள் அவர்களை உரிமை கொண்டாட அனுமதிக்காது.

தமிழர்கள் நிலை வேறு

- விவசாயம் உயர் தொழில். உழவனை நம்பியே உலகம் பின் செல்கிறது என்ற கோட்பாடு

- குயவர்களை - "அரசன்" என்று புகழும் சங்க பாடல் ..

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறு வெண் பல்லி போல, தன்னொடு

சுரம் பல வந்த எமக்கும் அருளி,

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி 5

அகலிதாக வனைமோ

நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

- புறநானூறு 256 ஆவது பாடல்

- நகரத்தார் (வணிகர் ) தமிழ் போற்றி தான் வந்தது.

இப்படி சிந்துவெளி நாகரீகத்தை அப்படியே வாழ்வில் இன்றும் கொண்ட ஒரு நாகரீகம் தமிழ் தான்.

எங்கள் ஊரில் பானை செய்பவர்கள் சாபத்திரிக்கு ஆளாக கூடாது அதற்கு பரிகாரம் இல்லை என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது

ஏன் என்றால் அவர்கள் தான் முன்பு கடவுளுக்கு சிலை செய்து அதற்கு உயிர் கொடுத்தவர்கள்.

அவர்கள் உரிமை பறிக்கப்பட்டன.

5. கொங்கு மக்களின் கூட்டங்களின் பெயர்கள், நகரத்தார் மக்களின் கூட்டங்களின் பெயர்கள் :

கொங்கு மக்களின் கூட்டங்களின் பெயர்கள் .. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதியின் இன்றும் ..

நகரத்தார்களின் கூட்டங்களின் பெயர்களில் உள்ள ஊர் பெயர்கள் இன்றும் ...

மிக மிக வலிய ஆதாரமாக நமக்கு கிடைத்து இருப்பது, இன்றைய கொங்கு மக்கள் அவர்களின் கூட்டங்களின் பெயர்கள் அப்படியே

ஆப்கானிஸ்தான், -> பாகிஸ்தான் -> குஜராத், -> கர்நாடக, -> தமிழ்நாடு என்று வரிசையாக வருகிறது.

கொங்கு பகுதியில் அம்மக்களின் கூட்டங்களின் பெயர்களின் ஊர்கள் இருக்கும் அல்லது அதற்கு என்று ஒரு ஊர் இருக்கும்.

இந்த கூட்டங்களின் பெயர்கள் தாங்கிய ஊர்கள் தான் ஆப்கானிஸ்தான் முதல் தமிழகம் வரை கிடைத்து உள்ளது.

இதே போல நகரத்தார் மக்களின் கூட்டத்தின் பெயர்களும் கிடைத்து உள்ளன.

இந்த விவசாய குடிகள், வணிக குடிகள் தமிழ் குடிகள் என்பதால் நமக்கு மிக வலிமையான ஆதாரமாக சிந்து வெளி பகுதியில் தமிழர்கள் அதிகம் இருந்தனர் என்பது தெளிவாக புரிகிறது.

இதில் சரியான வரலாற்று ஆதாரம், கொங்கு மக்களும், நகரத்தாரும் தாங்கள் கொங்கு தேசத்தின் பூர்விக குடிங்கள் இல்லை என்ற வரலாற்றை எழுதி வைத்ததால் இதை கண்டுபிடிக்க முடிந்தது

சிந்து வெளி பகுதியில் இருக்கும் ஒரு சிற்பமும் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்த இரு மிருகங்களுடன் சண்டையிடும் இந்த வீரனின் சிலை.

தமிழர்கள் சிந்து பகுதியில் இருந்ததற்கான இன்றைய நிகழ்கால சான்று இது

தமிழர்களின் விளையாட்டான "ஜல்லிகட்டு" சிந்து பகுதியில் எவ்வளவு அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள் பாருங்கள்.


சிந்துவெளி பகுதியில் கண்ணகி சார்ந்த தரவுகள் இருக்கின்றன என்பது கூடுதல் ஆதரமாக உள்ளது

1. கோவலனை கொன்ற பாண்டியன் செழியனின் பெயரில் ஊருக்கு (cheliyan walla )

2. கண்ணகிக்கு கோவில் எடுத்த சேரன் செங்குட்டுவனின் பெயரில் ஊர் ( kuttwann walla )

3. கண்ணகி என்ற பெயர் உள்ள ஊர் (பாகிஸ்தானிலும்)

4. புகார், பூம்புகார் என்று கண்ணகி பிறந்த ஊரின் பெயர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன

5. வஞ்சி - கண்ணகி உயிர் பிரிந்த இடம்

6. கூடுதல் சிறப்பாக கோவலனின் தந்தை பெயர், மாசாத்துவான் என்பது மாச்சத் ( machchat ) என்று பாகிஸ்தானில் இருக்கிறது.

இமயம் முதல் தென்குமரி வரை என்று சும்மா சங்க இலக்கியங்கள் கூறவில்லை.

அதற்கு சான்று இந்த ஊர் பெயர்களே உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 2018 ஆம் ஆண்டில் மட்டும் 24,710 பேர் கண்ணகி என்ற பெயரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள்

என்ன காரணத்தினாலோ பாரதி கூட

சிலப்பதிகாரத்தை, திருக்குறளை, கம்பராமாயணத்தை தமிழர்கள் காப்பாற்றினால் போதும் தமிழை யாரும் அழிக்க முடியாது என்று கூறினார் என்று தெரியவில்லை ஆனால் ஒரு பெரிய வரலாற்று பொக்கிஷமாக நமக்கு சிந்துவெளியையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் ஒரு கருவியாக சிலப்பதிகாரம் உள்ளது

——————

இந்த 8,000 வருட வரலாறு

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!

(காடுகாண் காதை,சிலப்பதிகாரம்)

சிலப்பதிகாரம் சொன்னதற்கு சான்றாக இருக்கிறது சிந்து வெளியும், கீழடியும்.

இதில் சிறப்பான செய்தி அந்த சிந்து வெளி மக்களின் கூட்டம் இன்று நகரத்தார்களாக, கொங்கு மக்களாக உயிர்ப்புடன் இன்றும் இருப்பது தான்.

30 ஆண்டுகள் ஆய்விற்கு பிறகு வந்த இந்த நூல் அவ்வளவு ஆதாரங்களை கொடுத்து உள்ளது.