Pages

Thursday, 20 December 2018

தூய தமிழ் சொற்கள் ஆறு !!! கணினி/கணனி கலைச்சொற்கள் | A முதல் Z வரை

இணையம் கணணி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை ஆங்கில அகரவரிசையை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்தியுள்ளோம். ஆங்கில எழுத்துக்களை அழுத்துவதன் மூலம் வரிசையை காணலாம்.




குறிப்பிட்ட சொல்லை தேடுவது கடினமாக இருந்தால்… சொல்லின் முதல் எழுத்தை அழுத்தி பின்னர் ctrl+f  இல் சொல்லை தட்டச்சு செய்து இலகுவாக கண்டுகொள்ளலாம்.

 உதாரணமாக தேடும் சொல் “Access”  என்றால்… “A” வரிசையை அழுத்தி பின்னர் ctrl+f ஐ அழுத்தி அதில் Access  என தட்டச்சு செய்தால் இலகுவாக இனங்காணலாம்.
இங்கு இடம்பெற தவறிய சொற்களையும், இங்கு இடம்பெற்றிருக்க கூடிய தவறான சொற்களையும் இனங்கண்டால் எமக்கு உடனடியாக தெரிவிக்கவும். புதிய சொற்களை இணைக்க “இதை சொடுகவும்.”


A


Access அணுக்கம்
Accuracy துல்லியம்
Action செயல்
Activate இயக்கு
Active cell இயங்கு கலன்
Active file நடப்புக் கோப்பு
Activity செயல்பாடு
Adapter card பொருத்து அட்டை
Adaptor பொருத்தி
Address முகவரி
Address bus முகவரி பாட்டை
Address modification முகவரி மாற்றம்
Addressing முகவரியிடல்
Administrator நிர்வாகி
Album தொகுப்பு
Algorithm language நெறிப்பாட்டு மொழி
Algorithm நெறிமுறை
Alignment இசைவு
Allocation ஒதுக்கீடு
Alpha testing முதற்கட்ட சோதனை
Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு
Alphabetical அகர வரிசைப்படி
Alphanumeric எண்ணெழுத்து
Ambiguation கவர்படுநிலை
Amplified பெருக்கப்பட்ட
Analog representation ஒப்புமை மீள்வடிவாக்கம்
Analog ஒப்புமை
Analytical Engine பகுப்பாய்வு பொறி
Animation அசைவூட்டம்
Anonymous அநாமதேய
Anti-virus நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
Appearance தோற்றம்
Append பின்சேர்
Applet குறுநிரல்
Application level பயன்பாட்டு நிலை
Application programmer பயன்பாட்டு நிரலாளர்
Application programming பயன்பாட்டு நிரலாக்கம்
Application programs பயன்பாட்டு நிரல்கள்
Application service provider பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
Application software பயன்பாட்டு மென்பொருள்
Application செயலி
Architecture கட்டமைப்பு
Archive file காப்பகக் கோப்பு
Archive gateway காப்பக நுழைவாயில்
Archive காப்பகம்
Archiving காப்பகப்படுத்தல்
Area search பரப்பில் தேடல்
Arithmetic எண் கணிதம்
Array processor அணிச் செயலி
Array அணி
Arrow key திசை விசை/திசை குறி
Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
Assembler பொறிமொழியாக்கி
Assembly Language பொறி மொழி
Audio blog ஒலிதப்பதிவு
Audio ஒலிதம்
Auto block தானியங்கித் தடை
Auto restart தானியக்க மீள்தொடக்கம்
Automated data processing தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
Automatic தன்னியக்க
Auxiliary equipments துணைக்கருவிகள்
Auxiliary function துணைச்செயற்கூறு
Auxiliary memory துணை நினைவகம்
Auxiliary operation துணை செயல்பாடு
Auxiliary storage துணை தேக்கம்
Availability கிடைத்தல்
Axes அச்சுகள்.




Back up காப்புநகல்/காப்புநகலெடு
Background பின்னணி
Backspace பின்நகர்வு
Bar chart பட்டை வரைப்படம்
Bar code பட்டைக்குறிமுறை
Bar code scanner பட்டைக்குறிமுறை வருடி
Bar printer பட்டை அச்சுப்பொறி
Basic அடிப்படை
Batch processing தொகுதிச்செயலாக்கம்
Beta அறிமுகப் பதிப்பு
Binary Code இரும குறிமுறை
Binary device இருமக் கருவி
Binary digit இரும இலக்கம்
Binary number இரும எண்
Binary operation இரும செயற்பாடு
Binary system இரும கட்டகம்
Bit map display நுண் படக் காட்சி
Bit map scanning நுண் பட வருடி
Bit mapped screen நுண் பட திரை
Bit values நுண்மியின் மதிப்புகள்
Bit நுண்மி
Bitmap நுண் படம்
Bit-mapped font நுண் பட எழுத்துரு
Blank character வெற்றுரு
Blank page வெற்றுப்பக்கம்
Blanking வெறுமைப்படுத்தல்
Block தடை
Blog வலைப்பதிவு
Blog info வலைப்பதிவு தகவல்கள்
Blog tools வலைப்பதிவுக் கருவிகள்
Blogger வலைப்பதிவர்
Blogger circle வலைப்பதிவர் வட்டம்
Blogging வலைப்பதிதல்
Bookmark புத்தகக் குறி
Boot தொடக்கு
Border கரைகள்
Branching கிளைப்பிரிதல்
Bridge இணைவி
Broadband அகலப்பட்டை
Browser உலாவி
Browsing உலாவுதல்
Buddy நண்பர்
Bug வழு
Bug report வழு அறிக்கை
Bus பாட்டை


C



Cache தேக்கம்
Calculating கணக்கிடல்
Calculation கணக்கீடு
Calculator mode கணிப்பான் நிலை
Calculator கணிப்பான்
Cancel தவிர்
Capacity கொள்திறன்
Carriage return ஏந்தி மீளல்
Catalog விவரப்பட்டியல்
Category பக்கவகை
CD burning குறுவட்டு எரித்தல்
CD player இறுவட்டு இயக்கி
Center மையம்/நடுவம்
Central processing unit (CPU) மையச் செயலகம்
Central processor மையச் செயலி
Chain printer தொடர்ப்பதிப்பான்
Change மாற்றல்/மாற்று
Channel தடம்
Character வரியுரு
Character code வரியுருக் குறி
Character map வரியுரு வரைப்படம்
Character recognition வரியுரு அறிதல்
Character set வரியுருக்கணம்
Character string வரியுருச்சரம்
Chart வரைப்படம்
chat அரட்டை
Checkbox தேர்வுப்பெட்டி
Chips சில்லுகள்
Clear துடை
Click சொடுக்கு
Clipboard மறைப்பலகை
Close மூடு
Closed file மூடப்பட்ட கோப்பு
Cloud computing முகிலக் கணிப்பு
Collection திரட்டல்
Color coding வண்ணக் குறிமுறை
Color graphics வண்ன வரைகலை
Color வண்ணம்/நிறம்
Column split நெடுவரிசைப் பிரிப்பு
Column நெடுவரிசை
Command key கட்டளை விசை
Command கட்டளை/ஆணை
Comment கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
Comments moderation கருத்துரை மட்டுறுத்தல்
Common storage பொதுத்தேக்கம்
Common பொது
Communication link தொடர்பு இணைப்பு
Communication processor தொடர்பு செயலகம்
Communication satellite தொடர்பு செயற்கைக்கோள்
Communication software தொடர்பு மென்பொருள்
Communication protocols தொடர்பு நெறிமுறைகள்
Community portal சமுதாய வலைவாசல்
Compact disc (CD) குறுவட்டு/இறுவட்டு
Comparative operator ஒப்பீட்டு இயக்கி
Compare ஒப்பிடு
Comparison ஒப்பிடுதல்
Compilation தொகுப்பு
Compiler தொகுப்பி
Complier language தொகுப்பு மொழி
Component உறுப்புக்கூறு
Compress அழுத்து/அமுக்கு
Computer engineer கணிப் பொறியாளர்
Computer game கணினி விளையாட்டு
Computer graphic கணினி வரைகலை
Computer language கணினி (நிரல்) மொழி
Computer motherboard கணினி தாய்பலகை
Computer network கணினி வலையமைப்பு
Computer operation கணினிச் செயல்பாடுகள்
Computer program கணனி நிரல்
Computer resources கணினி வளங்கள்
Computer user கணினி பயனர்
Computer utility கணனி பயனமைப்பு
Computer கணினி
Computerization கணினிமயமாக்கல்
Computerized data base கணினிமய தரவு தளம்
Computerized data processing கணினிமய தரவு செயலாக்கம்
Computing கணினிப்பணி
Condition நிபந்தனை/நிலை
Configuration அமைவடிமம்
Connectors இணைப்பான்கள்
Console முனையம்
Constants மாறிலிகள்
Content policy உள்ளடக்கக் கொள்கை
Contributions பங்களிப்புகள்
Contributor பங்களிப்பாளர்/பங்களிப்போர்
Control key கட்டுப்பாட்டு விசை
Control panel கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
Control program கட்டுப்பாட்டு நிரல்
Control statement கட்டுப்பாட்டுக்கூற்று
Control structure கட்டுப்பாட்டு உருவம்
Control system கட்டுப்பாட்டு கட்டகம்
Control unit கட்டுப்பாட்டு பிரிவு
Conversion மாற்றம்
Convert மாற்று
Cookie நினைவி
Copy protection நகல் காப்பு
Copy பிரதி/நகல்
Copyright status பதிப்புரிமை நிலை
Copyright பதிப்புரிமை
Core storage வளையத் தேக்கம்
Cost analysis விலைப் பகுப்பாய்வு
Cost benefit analysis விலை பயன் பகுப்பாய்வு
Cost effectiveness விலை பயன் திறன்
Create உருவாக்கு
Crop செதுக்கு
Current events நடப்பு நிகழ்வுகள்
Cursor சுட்டி
Curve fitting வளைக்கோட்டுப் பொருத்தம்
Custom software தனிப்பயன் மென்பொருள்
Customize விருப்பமை/தனிப்பயனாக்கு
Cut வெட்டு
Cyber மின்வெளி



Dashboard கட்டுப்பாட்டகம்
Data தரவு
Data catalog தரவு விவரப்பட்டியல்
Data flow தரவுப் பொழிவு
Data processing தரவுச் செயலாக்கம்
Database தரவுத்தளம்
Decimal digit பதின்ம இலக்கம்
Decimal number பதின்ம எண்
Decimal point பதின்ம புள்ளி
Decimal பதின்மம்
Decode குறிமுறை நீக்கு/நீக்கி
Decompress விரிவாக்கு
Default முன்னிருப்பு/இயல்பிருப்பு
Definite திட்டமிட்ட/தெளிவான
Delete அழி
Deletion அழித்தல்
Description விவரணம்/விளக்கம்
Design வடிவமைப்பு
Desktop computer மேசை கணினி
Desktop முகத்திரை
Destination அடையுமிடம்
Developer மேம்படுத்துனர்
Device கருவி
Diagram விளக்கப்படம்
Digital எண்மின்
Disambiguated தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
Disambiguation தெளிவாக்கம்/தெளிவாக்கல்
Discovery கண்டறி/கண்டறிதல்
Discuss கலந்தாலோசி
Disk drive வட்டு இயக்கி
Display name தோற்றப்பெயர்
Distribute வினியோகி/வினியோகப்படுத்து
DNS கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
Document ஆவணம்
Documentation ஆவணமாக்கம்
Domain கொற்றம்/ஆள்களமையம்
Domain Name System கொற்றப் பெயர்க் கட்டகம்
Double click இரட்டைச் சொடுக்கு
Download பதிவிறக்கம்
Drag இழு
Driver இயக்கி
Drum plotter உருளை வரைவு
Drum printer உருளை அச்சுப்பொறி
Drum scanner உருளை வருடி



E-book மென்நூல்
Edit தொகு/மாற்று
Edit profile சுயவிபரத்தை மாற்று
Editor தொகுப்பாளர்
Educational software அறிவியல் மென்பொருள்
Effective பயன்விளையத்தக்க
Effects விளைவுகள்
E-governance மின்-அரசாண்மை
Electrical signal மின் சமிக்ஞை
Electronic மின்னணு
E-mail மின்னஞ்சல்
Embedded பொதிந்துள்ள
Emulation போலச்செய்தல்
Encoding குறியாக்கம்
Encyclopedia கலைக்களஞ்சியம்
End முடிவு
Equation சமன்பாடு
Erase அழி
Eraser அழிப்பான்
Expansion slots விரிவாக்க செருகுவாய்கள்
Expiry கெடுமுடிவு/காலாவதி
Extended info விரிவாக்கப்பட்ட தகவல்
External links வெளி இணைப்புகள்
External search engine வெளித்தேடுபொறி

F



FAQ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Features அம்சங்கள்
Field புலம்
File கோப்பு
File management கோப்பு மேலாண்மை
File share கோப்பு பகிர்வான்
File sharing கோப்பு பகிர்தல்
Find கண்டறி/தேடு
Firewall தீயரண்
Firmware நிலைப்பொருள்
Flat monitor தட்டை திரையகம்
Floppy drive நெகிழ் வட்டு
Flow chart நெறிமுறை விளக்கப்படம்
Folder கோப்புறை
Font எழுத்துரு
Font and word processor எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
Font name எழுத்துரு பெயர்
Footer அடிப்பாகம்
Formal language வடிவ மொழி
Format வடிவம்/வடிவூட்டம்
Formatting வடிவமைத்தல்
Formula சூத்திரம்
Free software இலவச மென்பொருள்
Function செயற்கூறு/செயற்பாடு



Gallery காட்சியகம்
Gateway நுழைவாயில்
Global dashboard கோளக் கட்டுப்பாட்டகம்
Global Positioning system கோள இருப்பிடக் கட்டகம்
Grammar checker இலக்கணத் திருத்தி
Graphic வரையியல்/வரைகலை
Group குழுமம்
Guest விருந்தினர்


Hand held devices கையடக்கக் கருவிகள்
Hand held Scanner கையடக்க வருடுபொறி
Handwriting recognition கையெழுத்து அறிதல்
Hard disc வன்வட்டு
Hardware வன்பொருள்
Header தலைப்பு
Help center உதவி மையம்
Help group உதவி குழுமம்
High speed computer அதிவேகக் கணினி
Higher level language உயர்நிலை மொழி
Home முகப்பு
Homepage முகப்புப்பக்கம்
Horizontal line கிடைக்கோடு
Host computer புரவலர் கணினி
Hyphenation சொல் பிரித்தல்


I


Icon உருச்சின்னம்/படவுரு
Identity அடையாளம்
iDNS வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
iDomain வலைக்கொற்றம்
Ignore புறக்கணி
Image படிமம்
Import இறக்கம்
Incompatible முரண்பாடு
Indefinite திட்டமிடாத
Index சுட்டெண்
Index variable சுட்டுமாறி
Information தகவல்
Information data தகவல் தரவு
Information super highways தகவல் மீப் பெருவழிகள்
Information technology தகவல் தொழில்நுட்பம்
Input unit உள்ளீட்டுப் பகுதி
Insert உள்ளிடு/செருகு
Install நிறுவு
Installation நிறுவுதல்
Integrated chips சுற்றமைப்புச் சில்லுகள்
Integrated circuit chips ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
Inter language மொழியிடை
Interactive sites ஊடாட்ட தளங்கள்
Interests ஆர்வங்கள்
Interface இடைமுகம்/இடைமுகப்பு
Internal உள்ளக
Internal error உள்ளகத் தவறு
International பன்னாட்டு
International (DNS) பன்னாட்டுக் (கொப்பெகம்)
Internet இணையம்
Internet protocol address இணைய நெறிமுறை முகவரி
Internet protocol (IP) இணைய நெறிமுறை
Internet service provider (ISP) இணையச் சேவை வழங்குனர்
Interpreter வரிமொழிமாற்றி/இடைமாற்று
Invalid செல்லாத/செல்லுபடியாகாத
Invention கண்டுப்பிடிப்பு
Italic text சாய்வெழுத்து
Iteration பன்முறைச் செய்தல்

J


Java script ஜாவா ஆணைத்தொகுதி 


K


Key விசை
Keyboard விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
Keypad விசைத்தளம்
Keyword குறிப்புச்சொல்


L


Landscape அகலவாக்கி
Laptop computer மடிக்கணினி
Layout தளவமைப்பு
LCD Monitor (Liquid Crystal Display) திரவ பளிங்குத் திரையகம்
Left click இடதுச் சொடுக்கு
Lexing error தொகுத்தல் தவறு
License உரிமம்
Light pen எழுதுகோல்
Line கோடு/வரி
Link இணைப்பு/தொடுப்பு
List பட்டியல்
Live நேரடி
Log in புகுபதி/உற்புகு
Log out விடுபதி/வெளியேறு

M



Machine language பொறிமொழி
Machine translation எந்திர மொழிபெயர்ப்பு
Magnetic disk காந்த வட்டு
Magnetic tape காந்தா நாடா
Main Page முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
Maintenance page மேலாண்மைப் பக்கம்
Management ஆளுமை/முகாமைத்துவம்
Mechanical calculator எந்திர கணிப்பான்
Media ஊடகம்
Media player ஊடக இயக்கி
Memory unit நினைவகப் பகுதி
Memory நினைவகம்
Menu பட்டியல்
Metadata தரவு விவரம்
Micro processor நுண் செயலி
Microphone ஒலிவாங்கி
Modem இணக்கி
Moderation மட்டுறுத்தல்
Moderator மட்டுறுத்துனர்
Monetize மதிப்புடைச்செய்
Monitor கணித்திரை/திரையகம்
More features கூடுதல் அம்சங்கள்
Motherboard தாய்ப்பலகை
Mouse சொடுக்கி
Multimedia பல்லூடகம்
Multitasking பல்பணியாக்கம்
My account எனது கணக்கு

N


Natural language இயற்கை மொழி
Navigation வழிசெலுத்தல்
Negative எதிர்வு
Network பிணையம்/வலையமைப்பு
Networking வலைப்பின்னல்
Neutral point of view நடுநிலைநோக்கு
New post புதிய இடுகை
Non-terminals முடியா முனையங்கள்
Notation குறிமானம்
Note குறிப்பு
Number எண்
Numeral எண் முறை

O


Object பொருள்
Offline இணைப்பறு/இணைப்பின் வெளியே
Online இணைப்பில்
Operating system இயங்குக் கட்டகம்
Option தேர்வு
Orphaned pages உறவிலிப் பக்கங்கள்
Other languages பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
Outsourcing அயலாக்கம்


P


Package பொதி
Packets பொட்டலங்கள/பொதிகள்
Page layout பக்க வடிவமைப்பு
Page views பக்கப் பார்வைகள்
Page பக்கம்
Panel பலகை
Paperless office தாளில்லா அலுவலகம்
Paragraph பந்தி
Parallel processing computers இணைச் செயலாக்க கணினிகள்
Parent category முதன்மை பக்கவகை
Password கடவுச்சொல்
Paste ஒட்டு
Patch பொருத்து
Peripherals உபகரணங்கள்
Permission அனுமதி
Personal Computer தனி கணினி
Photograph புகைப்படம்
Picture படம்
Piracy களவுநகலாக்கம்
Plug in சொருகு/சொருகி
Pointer சுட்டு
Portable Printer கையடக்க அச்சுப்பொறி
Portal வலைவாசல்
Post இடுகை
Posting இடுகையிடல்
Posts இடுகைகள்
Preferences விருப்புத்தேர்வுகள்
Presentation அளிக்கை
Press அமுக்கு
Preview முன்தோற்றம்
Principals கோட்பாடு
Print அச்சிடு
Printer அச்சுப்பொறி
Privacy தனிக்காப்பு/தனிமறைவு
Problem சிக்கல்/பிரச்சினை
Processor செயலி
Program நிரல்
Programmers நிரலர்கள்
Programming language நிரலாக்க மொழி
Prompt தூண்டி
Protect காப்புச்செய்
Protection log தடைப்பதிகை
Protocols நெறிமுறைகள்
Proxy Server பதில் சேவையகம்
Public domain பொதுக்கொற்றம்/பொதுக்களம்
Publications வெளியீடுகள்
Publish பதிவிடு/வெளியிடு
Publisher பதிப்பாளர்
Publishing பதிப்பிடல்


Q


Query வினா/வினவல்


R



RAM (Random access memory) நினைவகம்
Random Page ஒழுங்கிலாப் பக்கம்
Recent changes அண்மைய மாற்றங்கள்
Recovery tool மீட்சி கருவி
Redirects வழிமாற்றிகள்
Redo செய்தது தவிர்/திரும்பச்செய்
Reference desk எடுகோள் மேடை
Reference எடுகோள்
Refresh புதுப்பி
Reinstall மீள்நிறுவு
Release வெளியீடு
Remember me என்னை நினைவில் வை
Removal அகற்றல்
Remove அகற்று
Replace மீள்வை
Reprogramming மறுநிரலாக்கம்
Required வேண்டப்பட்ட/தேவைப்பட்ட
Reset மீட்டமை
Restore மீள வை/ மீள்வி
Result விளைவு
Review மீளாய்வு
Revision புதிபித்தல்/திருத்தம்
Right click வலச்சொடுக்கு
Root மூலம்
Root directory மூல அடைவு
Router வழிச்செயலி
Row குறுக்கு வரிசை/நிரை
Rule விதி/விதிமுறை



S


Save சேமி
Save as என சேமி
Scanner வருடுபொறி
Screensaver திரைக்காப்பு
Search தேடு/தேடல்
Search engine தேடு பொறி
Search query தேடல் வினா
Search தேடல்/தேடு
Section பகுதி
See also இவற்றையும் பார்
Select தேர்வுசெய்
Sensor உணரி
Server வழங்கி
Sessions அமர்வுகள்
Setting அமைப்புகள்
Share my profile எனது சுயவிவரத்தை பகிர்
Shared files பகிரப்பட்ட கோப்புகள்
Shareware பகிர்மானம்
Shortcut குறுவழி/குறுக்குவழி
Show all எல்லாம் காண்பி
Shutdown அணை/மூடு
Sign in புகுபதிகை/புகுபதிவு
Sign off விடுபதிகை/விடுபதி
Sign out வெளியேறு
Single click தனிச் சொடுக்கு
Sister Projects பிற திட்டங்கள்
Site feed தள ஓடை
Socket பொருத்துவாய்
Software மென்பொருள்
Software package மென்பொருள் பொதி
Sorting algorithms தீர்வு நெறிகள்
Sorting and searching வரிசையாக்கமும் தேடலும்
Sound Card ஒலிக்கிரமி
Source code மூலவரைவு
Source மூலம்
Space வெளி/இடைவெளி
Spacing இடைவெளியிடல்
Spam எரிதம்
Speaker ஒலிப்பெருக்கி
Special pages சிறப்பு பக்கங்கள்
Specification விவர வரையறை
Spell checker சொற்பிழை திருத்தி
Split பிரிப்பு
Spooler சுருளி
Spreadsheet விரித்தாள்
Standard நியமம்/தரப்பாடு
Standardisation தரப்படுத்துதல்
Stats புள்ளிவிவரங்கள்
String literals சர மதிப்புருக்கள்
Structured programming கட்டுரு நிரலாக்கம்
Stub குறுங்கட்டுரை
Subtitle துணையுரை
Suffix பின்னொட்டு
Super Computer மிகுவேகக் கணினி/மீக்கணினி
Support உதவி
Syntax error தொடரமைப்புத் தவறு
Sysop முறைமைச் செயற்படுத்துனர்
System operator கட்டக இயக்குநர்
System programmer கட்டக நிரலாளர்
System கட்டகம்

T



Tab தத்தல்
Technology தொழில் நுட்பம்
Template வார்ப்புரு
Terminal முனையம்
Terms of service சேவை விதிமுறைகள்
Text formatting உரை வடிவம்
Text to speech உரையை பேச்சாக்குதல்
Text to voice உரையைக் குரலாக்குதல்
Theme தோற்றக்கரு
Theory தேற்றை
Thesis தேற்று
Time zone நேரவலையம்
Title தலைப்பு
Toolbar கருவிப்பட்டை
Top level domain உயர் மட்டக் கொற்றம்
Transistor திரிதடையம்
Trash குப்பை


U


Uncategorized வகைப்படுத்தப்படாதவை
Undo செய்தவிர்/செய்ததைத் தவிர்
Unit பிரிவு
Update இற்றைப்படுத்து
Upgrade மேம்படுத்து/மேம்படுத்தல்
Upload பதிவேற்று
URL (இணைய) முகவரி
User பயனர்
User account பயனர் கணக்கு
User’s guide பயனர் வழிக்காட்டி
Utility பயனமைப்பு


V


Vandalism நாசவேலை
Variable மாறி/மாறுப்படுகிற
Version பதிப்பு
Video blog ஒளிதப் பதிவு
Video ஒளிதம்/காணொளி
View profile சுயவிவரம் காண்பி
View பார்வை
Viewer பார்வையாளர்
Virtual server மெய்நிகர்ச் சேவையகம்
Virus நச்சுநிரல்
Visitor வருகையாளர்
Voice mail குரலஞ்சல்
Voice recognition குரலறிதல்/குரல் இணங்காண்பி
Volume ஒலியளவு

W


Watch list கவனிப்புப் பட்டியல்
Watch கவனி
Website இணையத்தளம்
Window சாளரம்
Wireless கம்பியில்லா
Wish list விருப்பப்பட்டியல்
Wizard வழிகாட்டி
Word processor சொற் செயலி
Working environment பணிச்சூழல்
Worksheet பணித்தாள்
Workstation பணிநிலையம்
World Wide Web (WWW) வைய விரிவு வலை


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 28 November 2018

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்நூல். 


*எட்டுத்தொகை நூல்கள்*
(வேறு பெயர்கள்)
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை

*நற்றிணை*
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்

*குறுந்தொகை*
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.

*ஐங்குறுநூறு*
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை

*பரிபாடல்*
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.

*கலித்தொகை*
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்

*அகநானூறு*
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு

*புறநானூறு*
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.

*பத்துப்பாட்டு நூல்கள்*:

*திருமுருகாற்றுப்படை*
1.முருகு
2.புலவராற்றுப்படை.

*பொருநராற்றுப்படை **
           இல்லை

*சிறுபாணாற்றுப்படை*
1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்

*பெரும்பாணாற்றுப்படை*
1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.

*மலைபடுகடாம்*
1.கூத்தராற்றுப்படை.

*குறிஞ்சிப்பாட்டு*
1.பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு

*முல்லைப்பாட்டு*
1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.

*பட்டினப்பாலை*
1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு

*நெடுநல்வாடை*
1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).

*மதுரைக்காஞ்சி*
1.மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.

*பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்*
*வேறு பெயர்கள்*

*நாலடியார்*
1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.

*நான்மணிக்கடிகை*
1.துண்டு
2.கட்டுவடம்.

*களவழி நாற்பது*
1.பரணி நூலின் தோற்றுவாய்

*திருக்குறள்"*
1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் 10.பயன்(நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்

*பழமொழி நானூறு*
1.பழமொழி
2.உலக வசனம்.

*முதுமொழ்க்காஞ்சி*
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.

*கைந்நிலை*
*ஐந்திணை அறுபது*

*ஐம்பெருங்காப்பியங்கள் வேறுபெயர்*

*சிலப்பதிகாரம்*
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.

*மணிமேகலை*
1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.

*சீவகசிந்தாமணி*
1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச்bg 6.செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
7.இயற்கை தவம்
8.முதல் விருத்தப்பா காப்பியம்
9.சிந்தாமணி
10.தமிழ் இலக்கிய நந்தாமணி

*குண்டலகேசி*
1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 15 November 2018

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

📒 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் - பகுதி III
📒 அடிப்படை உரிமைகள் விதி 12 - 35
📒 விதி க்கு வேறுபெயர்  ஆங்கிலத்தில் - Art
📒 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது - அமெரிக்கா
📒 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை - சொத்துரிமை
📒 சொத்துரிமை பற்றி கூறும் விதி - 31
📒 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது - 44 ச.தி. (1978)
📒 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி - 300A
📒தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் - 6
1. சமத்துவ உரிமை (விதி 14 - 18)
🔺விதி 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
🔺விதி 15 - சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை
🔺விதி 16 - அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
🔺விதி 17 - தீண்டாமை ஒழிப்பு
🔺விதி 18 - பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)
2. சுதந்திர உரிமை (விதி 19  - 22)
🔺விதி 19 - உரிமைகள்
* பேச்சுரிமை
* சங்கம் அமைக்கும் உரிமை
* இந்தியவில் எங்கும் செல்ல உரிமை
* இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை
* எந்த தொழிலையும் செய்யும் உரிமை
* ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை
🔺விதி 20 - குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
🔺விதி 21 - தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை
🔺விதி 22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 - 24)
🔺விதி 23 - சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை
🔺விதி 24 - குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது
4. மத உரிமை (விதி 25 - 28)
🔺விதி 25 - 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு
5. கல்வி கலாச்சார உரிமை (விதி 29 - 30)
🔺விதி 29 - சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை
🔺விதி 30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை - விதி 32
🔺விதி 32 - இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்
இந்த விதி கூறும் பேராணைகன் - 5
1.ஹேப்பிஸ்கார்பஸ் - ஆட்கொனர் நீதிபேராணை
2. மான்டமஸ் - செயலுறுத்தல் நீதிபேராணை
3. ப்ரோஹிபிசன் - தடையுறுத்தும் நீதிபேராணை
4. கோவாரண்ட் - நெறிமுறையுறுத்தல் நீதிபேராணை
5. செர்சியோரைய - தகுதி முறை வினவும் நீதிபேராணை.

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 13 November 2018

கந்த சஷ்டி கவசம் அறிவியல் விளக்கம்

கந்த சஷ்டி கவசம் அறிவியல் விளக்கம் 


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் நம் தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

Sunday, 4 November 2018

உங்கள் கண்களை கவரும் 10 கற்கள் மற்றும் கனிமங்கள் - பாகம் 1.

உங்கள் கண்களை கவரும் 10 கற்கள் மற்றும் கனிமங்கள்.

இயற்கை ஒரு வரப்பிரசாதமாகும் இயற்கை நமக்கு பல அதிசயங்களை அளித்திருக்கிறது. அவை ஒன்றுதான் தற்போது நீங்கள் காணப்போகும் கற்கள். இந்த அரிய வகை கற்கள் மற்றும் கனிமங்கள் மாற பல ஆயிரம் வருடங்கள் தேவைப்படுகின்றது. நீங்கள் காணப்போகும் இந்த கற்கள் மிகவும் வண்ணமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கக் கூடியது. அப்பேர்பட்ட 10 அழகிய கற்கள்.

சன்செட் தீ ஓபல்:



அமிலஸ் ஜியோட்:



ரோஸ் குவார்ட்ஸ் ஜியோட் : 



பர்மிஸ் டூர்மலைன்:



மின்னல் ரிட்ஜ் பிளாக் ஓபல் : 



ஃப்ளுரைட்:



மலாச்சியிலுள்ள கிறைசோகோலா:



ரோடோக்ரோஸிட்:



டைட்டானியம் குவார்ட்ஸ்:



அசுராய்ட்: 




        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



தஞ்சைப் பெரிய கோவிலை கட்ட முக்கிய பங்கு வகித்தவர்ளின் பெயர் என்ன ?

தஞ்சைப் பெரிய கோவிலை கட்ட முக்கிய பங்கு வகித்தவர்கள்.





தஞ்சை பெரிய கோயில் ஆனது ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கின்றது கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.

கலை வடிவிலும் சரி ஆன்மீக வடிவிலும் சரி, இந்த கோவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது, உலகத்தின் முக்கியம் பாரம்பரிய சின்னமாக முக்கிய UNESCOவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலானது ராஜராஜ சோழன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது .

இந்த கோவிலை கட்ட ராஜராஜசோழன் உடன் முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்பதைப் பற்றியே இந்த செய்தி !!!

· இந்த கோவிலை கட்ட முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்றால் முதலாம் ஆனவன் ராஜராஜ சோழன்.

· வேத சோழ குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.

· மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன்.

· இளைத்த சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்.

· இக்கோவிலுக்கு கணக்கற்ற நகைகளையும், செப்புத் திருமேனிகளையும் கொடையாக அளித்த சகோதரி ராஜராஜனின் தங்கை குந்தவை ஆவாள்.

· திருச்சுற்று மாளிகையில் கட்டிய ராஜராஜ சோழனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் எனக் கூறப்படும் மும்முடி சோழ பிரம்மராயன்.

· பெரிய கோவிலின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஸ்ரீகாரியம் பொய்கை நாடு கிழவன்.

· ஆதித்ய சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.

· ராஜகுரு ஈசான சிவ பண்டிதர்.

· கோவிலின் குருக்களாக இருந்த சைவ ஆச்சாரியார் பவண பிடாரன்.

· கற்களில் எழுத்து வெட்டி வைத்த சாத்தான்குடி வெள்ளாளன் இறைவி பாருலுடையன்.

இவர்கள் அனைவருக்கும் பெரியகோவிலின் வாய்ப்பிலும் வளர்ப்பிலும் மிகுந்த பங்குண்டு.

தமிழால் இணைவோம் !!!          அறிவால் உயர்வோம் !!!                   தமிழ் வாழ்க !!!     அறிவியலின் தேடல் தொடரும்.                வலியே  " வலிமை "         - அய்யனார் (வால்வரின்)..

சீன குழந்தையின் மழலை திருக்குறள்.


உலகில் தோன்றிய முதல் மனித இனம்
" குமரின் " என்னும் தமிழன்.
இன்று உள்ள மூக்கடலையும் சூழ்ந்த தமிழ்நாடு !!!!
அன்றேய இரண்டே கடலாக இருந்த சொர்க்க பூமி
" குமரிக்கண்டம் ".
இதில் உருவான ஒட்டுமொத்த உலகமே இன்று பல உண்மைகளை புதைக்கிறது.
நம் தந்தையான இலெமுரியன் என்னும்  குமரியன் மகளே இந்தியா !!!!
தந்தையை அழிக்க எண்ணுகிறாள் என்பது வருத்தமாக இருக்கிறது.
ஆனால் உலகம் அவர்களின் தந்தையை காக்க முயற்சிக்கிறது.
தமிழின் மரபு இன்றுவரை பல நாட்டில் பரவி உள்ளது.
உதாரணமாக இந்த சீனா நாட்டில் நமது பெருமையை காணுங்கள்.
சீன குழந்தையின் மழலை திருக்குறள்.
இரண்டே அடியில் உலகை அடக்கியவன்
எம் பாட்டன் வள்ளுவன் வாழ்க.
உலகை ஆண்ட முதல்  மாமன்னன் திரு.வள்ளுவன்.
கடவுளின் மொழியே தமிழ்.
       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
          தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 28 October 2018

தமிழில் நமக்கு பலவகையான தகவல்களை உருவாக்கி நூலகம் வடிவில் ஒரே கோப்பு .

https://drive.google.com/file/d/1W6Hdn2TKYYZV2iXm4bFheRikAlhh8GyG/view?usp=drivesdk



இதில் 8600 புத்தகங்கள் உள்ளன. புத்தக தலைப்பின் அருகில் பதிவிறக்கம் என இருக்கும். அதை சொடுக்கினால் புத்தகம் பதிவிறங்கும்.
        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
               தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

பூண்டு நன்மைகள் ருசியாக சமைக்கும் சமையல் வல்லுனர்கள்

பூண்டு 



பூண்டு மருத்துவத்தின் பரிசு.
உணவுகளே மருந்தாக மாறுகிறது.
இன்றை தலைமுறை குழந்தைகள் பூண்டு சாப்பிடுவது இல்லை.
காரணம் இதில் உள்ள காரமான சத்துகள் தான்.
இதை சமையல் வல்லுனர்கள் சமைக்க  பயன்படுத்துவதை போல் !!!
நம்முடைய குழந்தைக்கு சமைத்தால் பூண்டு சுவையாக இருக்கும்.
குழந்தைகளும் இதை நன்கு ருசித்து உண்ணுவார்கள்.
மேலும் இந்த  காணொளியில் உள்ள நன்மைகளை காணுங்கள்.
பயன் பெறுங்கள்.
        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
            வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 25 October 2018

உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??

கேள்வி :

 உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??



பதில் :

வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம்.
உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல. 
அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .
அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism .

உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள் கேட்டது போல வலியை உணராத உயிரிகளாக பிறப்பது உண்டு ஆனால் அந்த குழந்தைகள் அதிக நாள் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வது இல்லை. 
வலி எனும் சர்வைவல் மெக்கானிஸம் உயிர் வாழ மிக முக்கியம் .

உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசரம் என்று மூளை உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் வலி.
உடலில் ஏதாவது ஒரு பகுதி காயமடைந்தால் அந்த பகுதியில் இருந்து சிக்னல் நமது மூளைக்கு செல்கிறது என்பதை நாம் அறிவோம்.
இதில் ஒரு சின்ன ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாம் உணர்வதைப் போல வலி என்கின்ற ஒன்றை அந்த அடிபட்ட பாகம் நமக்கு தருவதில்லை.
அவைகள் இப்படி ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்ற தகவலை மூளைக்கு நரம்புகள் மூலமாக அனுப்பி வைக்கின்றன அவ்வளவு தான். அதை ஆராய்ந்து பார்த்து வலி என்கின்ற உணர்வை நமக்கு கொடுப்பது மூளையின் வேலை தான்.

ஒரே மாதிரியான காயத்திற்கு ஒரே மாதிரியான வலியை மூளை தருவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.
அவைகள் அந்த வலி தொடர்புடைய பழைய வரலாறு புரட்டி பார்க்கின்றன அந்த மனிதனின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
காயம் ஏற்பட்ட சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன இவையெல்லாம் வைத்து அலசி ஆராய்ந்து எவ்வளவு வலியை எப்போது தரவேண்டும் என்று மூளை முடிவு செய்கிறது.
உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் மிக கடுமையாக அடி பட்டாலும் அந்த விளையாட்டு முடியும் வரை அவன் அந்த வலியை உணராமல் இருப்பது பல முறை நடக்கிறது.
அது வரை விளையாடி கொண்டு இருந்தவன் விளையாட்டு முடிந்த பின் காலை ஊன்ற கூட முடியாமல் அவதி படுவதை பார்க்கலாம்.
பலமுறை சுறாவால் கடிபட்டு கையை இழந்தவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.

அடியே பட்டு இருந்தாலும் மூளை தகவலை கொடுக்கவில்லை என்றால் வலியை நாம் உணர மாட்டோம் என்பதை போல இந்த உண்மை தலைகீழாக நடப்பதும் உண்டு .
அதாவது எந்த காயமும் இல்லாத ஓரிடத்தில் காயம் இருப்பதாக மூளை சொல்ல முடியும் சிலநேரம் குழம்பிப்போய் அப்படி சொல்வது உண்டு.
 ஒரு போரில் ராணுவ வீரன் தனது கால் கட்டை விரலில் கடுமையான வலி இருப்பதாக இரவு முழுவதும் கதறிக் கொண்டு இருந்த கதையைச் சொல்வதுண்டு என்ன ஆச்சரியம் என்றால் அவரது முழு காலையே வெட்டி எடுத்து விட்டார்கள் .
ஆனால் அவன் தொடர்ந்து தனது கால் கட்டைவிரலில் கடுமையான வலி இருப்பதாக சொல்லி கொண்டே இருந்தான்.
ஆம் இல்லாத கட்டைவிரலில் வலியை உணர வைக்க கூட மூளையால் முடியும்.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் அதிக வலியை உணர்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.
அதற்கு காரணம் ஆண்களைவிட பெண்கள் அதிக  உணர்வுகளை கொண்டிருப்பது தான்.
நம்மைப் போலவே பாலூட்டி விலங்குகள் வலியை உணரும் போது முகத்தில் உணர்வுகளை காட்டுகின்றன.
ஊர்வன வகுப்பை சேர்ந்தவர்கள் வலியை உணர்ந்தாலும் அவைகளால் உணர்வை காட்ட முடிவதில்லை. ஆனால் வலியை மறக்கடிக்கும் மருந்துகள் நம்மை போலவே அவைகள் உடம்பிலும் வேலை செய்கிறது.

சரி ஒரு கேள்வி ...
எறும்புகள் போன்ற சிறு பூச்சிகள் வலியை உணருமா?
பலவகையான பூச்சிகள் வலியை ஏதும் உணர்வது இல்லை என்பதுதான் உண்மை.
காரணம் வலி சிக்னலை மூளைக்கு அனுப்பும் நரம்பமைப்பு போன்ற கட்டமைப்பு ஏதும் அவைகள் உடலில் இருப்பதில்லை.

வலியின் அளவை அளக்க முடியுமா அதற்கான அளவீடு ஏதும் உண்டா ??
ஆம் உண்டு வலியின் அலகு dol. (வலிக்கான Latin வார்த்தை dolor இல் இருந்து வந்தது )  பல இடங்களில் del என்று குறிப்பிடுவதை பார்க்கலாம்..
இதை எப்படி அளக்கிறார்கள்.??
தொழில்நுட்பம் கொஞ்சம் வளராத காலத்தில் வலியை அளப்பதற்கு கையில் நிஜமாக சூடு வைத்தார்கள் அதன்பின் சிறிது நாட்களுக்கு கையில் அழுத்தத்தை கொடுத்து அளந்து பார்த்தார்கள்.. 
நல்ல வேளையாக இப்பொது எளிய வழியை கண்டுபிடித்து விட்டார்கள். இப்போது அதை எப்படி அளக்கிறார்கள் தெரியுமா ?
வலி நேரத்தில் மூளையை படம் பிடிப்பதன் மூலம்.
அந்த நேரத்தில் மூளை கொண்டிருக்கும் சென்ஸ் கவனிப்பதன் மூலம் அந்த நேரம் உடல் உணரும் வலியின் அளவை கணக்கிட முடியும். .
 (உடல் முழுக்க வலியைக் கொடுக்கும் மூளையில் வலி உணரும் நரம்புகள் இல்லை மூளையை அப்படியே வெட்டி எடுத்தாலும் கூட மனிதனுக்கு துளியும் வலிக்காது )

வலியை உணராத படி இருப்பது நல்ல உடலுக்கு அறிகுறி அல்ல அது ஒரு நோய் அந்த நோயின் பெயர் congenital insensitivity to pain with anhidrosis, அதாவது சுருக்கமாக CIPA .
இந்த நோயாளிகள் துளியும் வலியை உணர்வது இல்லை.

மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னதாக தெரியவில்லை நீங்கள் கேட்டது போல உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??

விடை : 
நாம் நினைப்பதைப் போல வலியில்லாமல் இன்பமாக இருந்து இருக்காது மாறாக வாழ்வதே கடினமாக இருந்திருக்கும் என்பது தான் சுருக்கமான விடை.

சரி நண்பர்களே... உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி ...
வலியை உணராத நோய் இருப்பதைப் பற்றி சொன்னேன் இதற்கு எதிரான ஒரு நோய் ஒன்று உண்டு.
அந்த நோய் இருப்பவர்களை உடலில் மெதுவாகத் தொட்டாலோ சீண்டினாலும் என் தலையைக் கோதினாலோ கூட வலியால் துடிப்பார்கள் அந்த நோயின் பெயர் என்ன தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் விடையை கடைசி கமண்ட் இல் சொல்கிறேன்.

இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Friday, 12 October 2018

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது தவறான செய்தி

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது.
இன்றை சமுதாயத்தில் ஏற்பட்ட வதந்தி இது. ஆனால்
பண்டைத் தமிழர்கள் ஆயிரமாயிரம் மூலிகை வேர்களை பற்றி அறிந்தவர்கள்.
மூலிகை மருந்துகளை தயாரித்து அதை நோயாளிகளுக்கு  அளித்து நோய்களை நீக்கினார்கள் ஆதி மருத்துபவர்கள்.
அப்படி இருக்கையில்  எப்படி ஒரு பழமொழியில் ஆயிரம் பேர்களை கொன்றவன் வைத்தியன் ஆக முடியும்.
 இது தவறான மற்றும்
 பொய்யானது என்று  இதுவரை யாரும் அறிந்தது உண்டா ????
இதற்கு உண்மையான ஆதாரம் காண்போம்.
உண்மையில் ஆதி வைத்தியன் மூலிமை வேர்களை வைத்தே அதிகப்படியான மருந்துகளை உருவாக்குகிறார்கள்.
அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
அதன் உண்மையான பொருள் தான் !!!!!


" ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியவன் " என்ற பழமொழியின் பொருள்.
 இது போன்ற தவறாகவும் , முரண்பாடாக கூறிய பழமொழிகளை  புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.
அதுவே பழமொழி ஆகும்.

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Wednesday, 10 October 2018

குளிர் ஏற்படும்போது நமது உடல் நடுங்குவது ஏன்?

குளிர் ஏற்படும் போது நமது உடல் நடுங்குவது ஏன்?


 இனி மழை நாட்கள்,  பிறகு அதைத் தொடர்ந்து குளிர் நாட்கள் என சீசன் மாறப்போகிறது. 


மழையோ, குளிரோ எதுவாக இருந்தாலும் நம் உடல் ஓரளவு தான் தாங்கிக் கொள்கிறது. அதிகமானால் நம்மையும் மீறி உடல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது.

 அதிலும்,   குழந்தைகள், முதியவர்கள்,  உடல் நலம் குன்றியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  

இரண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். 


இந்த நடுக்கம் எப்படி, எதனால் ஏற்படுகிறது? பார்ப்போம். 


நம் உடலில்,  மூளையின்,  ஒரு அங்கமாக 'ஹைப்போதலாமஸ்' ஆனது, மூளையின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ளது. 

இந்த ஹைப்போதலாமஸ் - இல் உள்ள உஷ்ண  சீரமைப்பு  மையம் தான்,  நம் உடலின் உஷ்ண நிலையைக் கண்காணிக்கிறது. 

நம் உடலில் முக்கிய அங்கம் வகிக்கும் தண்டுவடமும், சருமமும் தான் உடலின் வெப்ப நிலையைப் பற்றி ஹைப்போதலாமஸுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்களுக்கு, வெப்பமானியை அக்குளில் வைத்தால்,  36.5 டிகிரி செல்சியஸ் என்றும், நாவின் கீழ் வைத்தால் 36.7 டிகிரி செல்சியஸ் இருக்கும் இதன் சராசரிதான் நமது உடலின் வெப்பநிலை (Body temperature )


நம் உடலில் வெப்பம் அதிகமாகி விட்டாலோ, குளிர் அதிகமாகி விட்டாலோ, ஹைப்போதலாமஸிற்குத் தகவல் சென்றடைந்த உடன், சம்பந்தப்பட்ட   நரம்பணுக்கள்  துரிதமாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றன. 

இந்த மாற்றத்தினை அறிந்து கொண்ட உஷ்ண சீரமைப்பு மையமானது, தன் சேவையை உடனே தொடங்கி விடுகிறது. உஷ்ணம் அதிகமானால் அதைக் குறைக்கவும், உஷ்ணம் குறைந்தால் அதை அதிகப்படுத்தவும் செய்கிறது. 


சூடு அதிகமாக இருக்கும்பொழுது , ஹைப்போதலாமஸ் ஆனது நம் தசைகளை இறுக்கவும், விரிவடையவும் ஆணை இடுகிறது. அதனால்,  தசை நார்கள் சுருங்கி விரிவடைந்து, அதிகப்படியான வெப்பத்தை, வியர்வையாக வெளியேற்றி விடுகிறது. 


உடலின் வெப்பநிலை  மிகவும்  குறைந்து விட்டால்,  ஹைப்போதலாமஸ் ஆனது  நடுக்கம் கொடுக்கும்படி,  தசைகளுக்கு ஆணையிடுகிறது. 

 உடனே உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கி விடுகிறது. இந்த நடுக்கத்தின் பொழுது, சருமத்தின் துளைகள் சுருங்கவும் ஆணையைப் பெறுவதால்,  குளிர் நேரத்தில் உஷ்ணத்தினை  வெளியே விடாமல் பாதுகாக்கிறது. 


உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்த நடுக்கம் உண்டாகிறதல்லவா? அப்பொழுது ஸ்வெட்டரும்,  போர்வையும் தரும் வெப்பத்தை நம்மால் பெற முடிகிறது. நமக்கு அதிக உஷ்ணத்தினால் வியர்வை உண்டாவதும், அதிக குளிரினால் நடுக்கம் உண்டாவதும், நம் உடலை சீரான வெப்ப நிலையில் வைப்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாறுதல்களால், நம் அவய அங்கங்களான,  மூளை,  தண்டுவடம்,  இதயம், கல்லீரல்,  கணையம்,  சிறுநீரகம் மற்றும் செரிமான உறுப்புகள் யாவையுமே சீரான வெப்ப நிலையில் ஒழுங்காகச் செயல்படுகின்றன. 


உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் பாலூட்டிகள் , பறவைகள், வெப்ப ரத்தப் பிராணிகள் எனவும், அப்படி வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியாத முதலை, ஆமை,  தவளை போன்றவை குளிர் ரத்தப் பிராணிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 


நம் மூளையானது, ஒரு வினாடிக்கு பல மில்லியன் ஆணைகளை நம் அங்கங்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு அருமையான, அற்புதமான ஒரு அங்கத்தை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறார். நம் உடலை எத்தனை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது? யோசித்துப் பாருங்கள்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

என் பார்வையில் நாம் விட வேண்டிய முதல் தீய குணம்:

என் பார்வையில் நாம் விட வேண்டிய முதல் தீய குணம்: 


நான் தான் என்ற அகம்பாவம்.

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.

எனவே நான் தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.
நம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்! அகம்பாவத்தால் அழிந்தவர்கள்
ஏராளம்! ஏராளம்!

      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Tuesday, 9 October 2018

7 என்ற எண்ணில் இவ்வளவு பெருமையா ???


7  என்ற எண்ணில் இவ்வளவு பெருமையா ???

எண் ஏழின் சிறப்புக்கள்:

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரி பூரணம் என பொருள் படும்.

ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.

காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

எண் ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு,
 இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007

2. எழு குன்றுகளின் நகரம் ரோம்.

3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்.

4. மொத்தம் ஏழு பிறவிகள்.

5. ஏழு சொர்க்கம் ( குரான் )

6. ஏழு கடல்கள்.

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில் நிறங்கள் (VIBGYOR).

8. ஏழு வானங்கள்  (Qur'an)

9. ஏழு முனிவர்கள் (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி) 11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு

17. கீழுலகம் ஏழு நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

19. மொத்தம் ஏழு தாதுக்கள்

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு

24. அகப்பொருள் திணைகள் ஏழு

25. புறப்பொருள் திணைகள் ஏழு

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு

27. கடை ஏழு வள்ளல்கள்

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)

29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழு தான்

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான் உள்ளது.

31. ஏழு மலையான் தமிழர்களின் கடவுளான  -  திருப்பதி முருகனை குறிக்கும்.

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு

33. உடலை கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்) .


      தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 28 September 2018

அற்புதமான விசில் மொழி.


இந்த அற்புதமான காணொளி காணுங்கள்.
அதிகபடியான கருத்துகளையும் , ரகசியங்களை வெளிபடுத்தும் அற்புதமான விசில் மொழி.
இன்று சில நாடுகளில் இதை குழந்தைகளுக்கு கற்று தருகிறார்கள்.
         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Friday, 21 September 2018

ஒரு சின்ன நூலகத்தையே உங்களுக்கு வழங்குகிறேன் !!!!

435 நூல்கள் PDF என்னும் கோப்புகளின் வடிவத்தில் உள்ளது. 

இனி உங்கள் கைகளில் !!!

கீழே உள்ள இணைப்பின் மூலம் சென்றால் ஒவ்வொரு கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் இருக்கிறது. மொத்தம் 435 நூல்கள் தமிழன் தொன்மை நிறைந்த 
நூல்களே !!! 
தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும்.


https://drive.google.com/file/d/1ORPP2JJX7Z1-IB67Zezf3WSfLhJhXlCL/view?usp=drivesdk

    தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

காவியமும் , ஓவியமும் கட்டுரை !!!!

காவியமும் , ஓவியமும் கட்டுரை !!!!
கி.வா.ஜகந்நாதன் அவர்களின் படைப்பு உடைய கோப்பு கீழே உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://sendanywhe.re/7A80WZAJ

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

பல்லவர்கள் காலத்து ஓவியங்கள் !!! பாண்டியர் காலத்து ஓவியங்கள் !!!! பழைய காலத்தின் பொக்கிஷம் !!!

பல்லவர்கள் காலத்து ஓவியங்கள் !!! பாண்டியர் காலத்து ஓவியங்கள் !!!!
பழைய காலத்தின் பொக்கிஷம் !!!
கீழே உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் வசதி இணைப்பு இருக்கிறது.
http://sendanywhe.re/5E0BRWLL

தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Thursday, 20 September 2018

தண்ணீருக்கு உயிர் உள்ளது !!!!! அதற்கும் உணர்வுகள் இருக்கிறது !!!

தண்ணீருக்கு உயிர் உள்ளது !!!!!  அதற்கும் உணர்வுகள் இருக்கிறது !!!


சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, நுண்ணோக்கிகளில் நீர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. வழங்கப்பட்ட முடிவுகள் ஆச்சரியமானவை.
இது ஒரு நம்பகமான கதை அல்லது கதை அல்ல.
ஆனால் உண்மை !!!
காரணம் இது இயற்கை !!!!
பொய்களையும் , செயற்கைகளை எதிர்க்க கூடிய சக்தி தான் இயற்கை !!!!!

தண்ணீர் நம் வார்த்தைகளில் வெளிப்படும் ஒவ்வொரு குரல் ஒலிகளை புரிந்து கொள்கிறது.
அதன் உடைய அமைப்பு அதாவது மூலக்கூறு மாற்றம் காண கூடும் !!!
தண்ணீர் நம்முடைய வார்த்தைகளின் சக்தியை உணர்கிறது.
ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர் மசரு எமோடோ இதை நம்புகிறார். அவருடைய நம்பிக்கைக்கு ஆதாரமுண்டு.

பிரார்த்தனை இல்லாமல் தூய தண்ணீர்.
மூலக்கூறு அமைப்பு சீர்குலைந்துள்ளது.
வேண்டுதல் செய்த பிறகு நீர் மூலக்கூறு.
இது நன்கு அற்புதமான கட்டமைக்கப்பட்ட அமைப்பாக உருவாகிறது.

மெல்லிசை ஒலிக்கு 
பிறகு நீர் மூலக்கூறு.
 கனமாகவும் , உற்சாகவும்
 வெளிப்படுவது  தெரிகிறது.

 சீர்கேடு உள்ள மூலக்கூறு கட்டமைப்பு.
நீர் மூலக்கூறு, பாரம்பரிய ஒலி உபயோகத்திற்கு முன் தோன்றியது.
 நன்றாக கட்டமைக்கப்பட்ட தெரிகிறது.

ஒரு நிமிடம் காத்திருங்கள். நாம் தண்ணீரை உண்டாக்கவில்லை !!!!
ஆனால் நம் உடலில் 72% நீர் உள்ளது.
உங்கள் வார்த்தைகள் உங்கள் சொந்த உடலில் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் அற்புதமான காணொளி !!!


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Sunday, 16 September 2018

பொது அறிவு களஞ்சியம்

பொது அறிவு களஞ்சியம்


1. தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.

2. ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

3. துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

4. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

5. ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது.

மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

6. சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

7. ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும்.
அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

8. குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

9. சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை).

பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

10. சுக பிரசவம் அல்லாமல் !!!
தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் .
அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

11. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

12. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

13. நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

14. தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

15. காட்டுக்கு ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் .
ஆனால் அதன ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான்.
 வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.

16. மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

17.  “ லங்கா வீரன் சுத்ரா  ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

18. தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

19. இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

20. காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

21. குளிர் காலத்தில் குயில் கூவாது.

22. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

23. லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

24. கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

25. கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

26. யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து,  அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

27. கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.

28. மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

29. 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

30. ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

31. வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

32. ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

33. தமிழ் நாட்டின் தலைவர் திரு.பெரியார் பொது கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார்.
அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

34. ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

35. தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே , குங் ஃபூ வீரர் ஆனார் – புருஸ்லீ.

36. சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

37. விமானத்தில் இருக்கும்
கருப்பு பெட்டி !!!! ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

38. சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

39. யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

Sunday, 9 September 2018

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் !!!

வெறும்  வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத  உணவுப் பொருட்கள் !!!


1 . சோடா 

இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

2 . தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

3 . மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

4 . ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது.  அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

5 . காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

6 . காபி

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

7 . டீ

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

8 . தயிர் 

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

9 . வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

10 . சர்க்கரைவள்ளிக் கிழங்கு 

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி விடும்.


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

Saturday, 8 September 2018

மகாபாரதம் மர்மங்கள் !!! கிருஷ்ணருக்கு அர்ஜுனனை விட சகுனியை அதிகம் பிடிக்க காரணம்.

கிருஷ்ணருக்கு அர்ஜுனனை விட சகுனியை அதிகம் பிடிக்க காரணம் !!!


மகாபாரத போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சகுனி. காந்தாரியின் சகோதரனான சகுனி தன் சகோதரிக்கும், தன் குடும்பத்திற்கும் குரு வம்சத்தால் ஏற்பட்ட அவமானத்திற்கும், கொடுமைகளுக்கும் குரு வம்சத்தை அழிக்க எண்ணினார். அதற்காகவே கௌரவர்களுக்கு சிறுவயது முதலே மனதில் தீய எண்ணங்களை வளர்த்து வந்தார். இறுதியில் குருஷேத்திர போரை ஏற்படுத்தி தன் இலட்சியத்தில் வெற்றியும் கண்டார்.

சகுனியை துரியோதனன் மற்றும் கௌரவர்கள் தவிர வேறு யாரும் விரும்பமாட்டார்கள் என்று நாம் அறிவோம். ஆனால் அது உண்மையில்லை. ஏனெனில் கௌரவர்களை விட சகுனி மீது மனதிற்குள் அதிகம் நேசம் வைத்திருந்த ஒருவர் இருந்தார். அவர் வேறுயாருமல்ல நமது வாசுதேவ கிருஷ்ணர்தான். இது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் இருந்த நட்பு மிகவும் இரகசியமானது. கிருஷ்ணர் ஏன் சகுனி மீது அன்பு பாராட்டினார் என்பதை இங்கு பார்க்கலாம்.

துரியோதனன் பற்றி மகாபாரதம் படித்த அனைவருமே நன்கு அறிவோம். மகாபாரத போருக்கு காரணமாக பலர் இருந்தாலும் அதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது துருயோதனனுக்குள் இருந்த கர்வமும், இராஜ்ஜிய ஆசையும்தான். கௌரவரர்களில் மூத்தவரான துரியோதனன் அதர்மியாக இருந்தாலும் மகாவீரன். பலத்தில் பீமனுக்கு இணையானவன், கதாயுதப்போரில் பீமனை விட ஒருபடி மேலே சிறந்தவன் என்று கூட சொல்லலாம். அதற்கு காரணம் துரியோதனனின் குருவாக இருந்த பலராமர்தான். இந்த பலராமர் வேறு யாருமல்ல, பகவான் கிருஷ்ணரின் சகோதரன்தான்.

கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமர்தான் துவாரகையின் மன்னனாக இருந்தார். கிருஷ்ணர் எப்படி திருமாலின் அவதாரமாக பிறந்தாரோ, அதேபோல பலராமர் ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்தார். திருமால் அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுத்த போதெல்லாம் ஆதிசேஷனும் அவருடன் சேர்ந்தே அவதாரம் எடுத்தார். திருமாலின் இராம அவதாரத்தில் இலட்சுமணனாக அவதரித்தது ஆதிசேஷன்தான். பலராமர்தான் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கதாயுத குருவாக இருந்தார். ஆனால் தன் சிறப்பான ஆற்றல் மூலம் அவரின் விருப்ப சீடனாக மாறினான் துரியோதனன்.

தனக்கு விருப்பமான சீடனை தன் சகோதரிக்கு மணம் முடிக்க விரும்பினார் பலராமர். ஆனால் நாராயணனின் முடிவு வேறு மாதிரி அல்லவா இருந்தது. அவர் தான் தங்கையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனை செய்தும் காட்டினார். இதனால் அவமானமடைந்த துரியோதனன் பலராமருடன் கோபித்து கொண்டு சென்றுவிட்டான்.

பாண்டவர்களின் வனவாசம் முடிந்து அவர்கள் தாங்கள் இழந்த இராஜ்ஜியத்தை மீட்க பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தார்கள். ஆனால் சகுனியின் தந்திரமும், துரியோதனின் கர்வமும் இணைந்து பேச்சுவார்த்தை முயற்சிகளை தோல்வியடைய செய்தார்கள். கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைதான். இறுதியில் போர் என முடிவெடுத்த பின் இருபுறமும் படைகளை திரட்ட தொடங்கினர்.

பாண்டவர்கள், கௌரவர்கள் இருவரும் தங்கள் சேனையை பலப்படுத்தும் பொருட்டு தங்கள் நட்பு இராஜ்ஜியங்களிடம் உதவி கேட்க முடிவிசெய்தார்கள். அதன்படி மிகப்பெரிய நாராயணி சேனையை கொண்ட துவாரகையிடம் உதவி கேட்க இருதரப்பினரும் முடிவு செய்தனர். ஆனால் துரியோதனன் மீண்டும் பலராமரிடம் சென்று உதவி கேட்க தயங்கியபோது சகுனி நாம் நாராயணி சேனையை பெறாவிட்டால் அர்ஜுனன் கிருஷ்ணன் மூலமாக எளிதில் படையை பெற்றுவிடுவான் எனக்கூறி அவன் துரியோதனன் மனதை மாற்றினான்.


பல ஆண்டுகளுக்கு பிறகு பலராமரை சந்திக்க செல்வதால் அவரின் மனதை கவரும்படி எதாவது பரிசு கொண்ட செல்ல வேண்டுமென்று விரும்பினான் துரியோதனன். எனவே பல இடங்களில் தேடி எவருக்கும் கிடைக்காத ஒரு மாயக்கண்ணாடியை வரவழைத்தான். அந்த கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால் அந்த கண்ணாடியை பார்த்தால் அதில் நமது முகம் தெரியாது நமக்கு மிகவும் பிடித்த நபர் யாரோ அவர்களின் முகமே தெரியும். அந்த அற்புத மாயக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு தன் குருவான பலராமரை சந்திக்க கிளம்பினான் துரியோதனன்.

துவாரகைக்கு வந்த துரியோதனனையும், சகுனியையும் மனமார வரவேற்றார் பலராமர். ஆனால் அவரின் மனதிற்குள் துரியோதனன் சூதாட்ட மண்டபத்தில் செய்த செயல்களுக்குகாக அவனுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. எனவே அவனை விளையாட்டாக கதை போருக்கு அழைத்தார். துரியோதனனும் அதற்கு ஒப்புக்கொள்ள இருவருக்குள்ளும் யுத்தம் தொடங்கியது. பலராமர் தன் கோபம் தீர துரியோதனனை சண்டையில் துவம்சம் செய்தார். இறுதியாக அவனுக்கு தண்டனை வழங்கிய மனநிறைவோடு அவனை விடுவித்தார்.

சண்டை முடிந்தவுடன் தன் குருவுக்கு தான் கொண்டு வந்திருந்த மாயக்கண்ணாடியை பரிசளித்தான் துரியோதனன். அதன் சிறப்பை அறிந்த பலராமர் மிகவும் மகிழ்ச்சியடைந்து துரியோதனனுக்கு நன்றி கூறினார். அதன் பின் அனைவரும் அந்த கண்ணாடியில் அவரின் முகங்களை பார்த்தனர். அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த நபர்களின் முகமே தெரிந்தது. இறுதியாக கிருஷ்ணர் கண்ணாடியில் முகம் பார்த்தார். அனைவரும் அர்ஜுனனின் முகம்தான் தெரிய போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்க கண்ணாடியில் தெரிந்ததோ சகுனியின் முகம். அதன் காரணம் யாருக்குமே புரியவில்லை, அனைவரும் கண்ணாடியில்தான் பிரச்சினை என்று கூறினார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் மௌனமாய் புன்னகைத்தார். ஏனெனில் அந்த கண்ணாடி காட்டியது உண்மைதான் என்று பகவான் கிருஷ்ணர் மட்டுமே அறிவார்.

இதற்கு காரணம் நாம் எப்பொழுதும் யாரை அதிகம் விரும்புவோம்? நம்முடைய இலட்சியம் நிறைவேற உதவி செய்பவர்களைத்தானே. கிருஷ்ணருடைய அவதாரத்தின் நோக்கமே பூமியில் மக்கள் தொகையை குறைத்து அதர்மத்தை அழிப்பதுதான். அதற்கு உதவி செய்தது யார் என்று பார்த்தால் சகுனிதானே. அப்படி பார்த்தால் அர்ஜுனன் தானே கண்ணாடியில் தெரிந்திருக்க வேண்டும் என உங்கள் மனதிற்குள் கேள்வி எழலாம். ஆனால் அர்ஜுனன் கிருஷ்ணருடைய கருவியாக மட்டுமே இருந்தானே தவிர காரணமாய் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் குருஷேத்திர போருக்கு காரணமாக இருந்து தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற தனக்கே தெரியாமல் பல உதவிகள் செய்த சகுனியின் மீது கிருஷ்ணர் அன்பு பாராட்டியதில் தவறில்லையே.

Friday, 7 September 2018

உடலின் மொழி புரிந்து கொள்வோம்.

உடலின் மொழி புரிந்து கொள்வோம்.


1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்


       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.
உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.


       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

         தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..