Pages

Wednesday, 30 December 2020

பூந்தமல்லி - பூவிருந்தவல்லி மருவிய பெயரும் , பொருளும்.

 பூந்தமல்லி - பூவிருந்தவல்லி எது சரி?

பூந்தமல்லி, பூவிருந்தவல்லி இரண்டும் வெவ்வேறு பொருள் குறிப்பன ஆகும்.

பூந்தண்மலி - என்ற பழந்தமிழ்ப் பெயரே தற்காலத்தில் பூந்தமல்லி என வழங்கப்படுகிறது.

  • பூ = மலர்கள்.
  • தண் = குளிர்ந்த,
  • மலி = மிகுந்த / நிறைந்த /அதிக அளவு.

குளிர்ந்த மலர்கள் மலிந்து மிகுந்த இடம் என்பதே பூந்தண்மலி... என்ற காரணப் பெயர் நமக்கு உணர்த்துகிறது. (இன்றைக்கும் மலர்கள் நிரம்பிய ஏரிகளும், குளங்களும் நிறைந்த ஊர்தான் பூந்தண் மலி) .

பூந்தண்மலி என்ற இவ்வூரை 'புலியூா்க் கோட்டத்து பூந்தண்மலி” என்றே முதலாம் பராந்தகன் காலக் (கி.பி.907−954) கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும், இங்கு அமைந்துள்ள பள்ளிவாசல்
ஒன்றின் அடித்தளம் கற்களில் “
புலியூா்க் கோட்டத்துப் பூந்தண் மலி நெடுஞ் செழிய விண்ணகா் ” என்று பொறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம். (விண்ணகா் என்பது இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளைக் குறிப்பதாகும்).

இப்பள்ளி வாசல் சுமாா் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோல்கொண்டா சுல்தானால் கட்டப்பட்டது.

இத்தலத்தில் திருக்கச்சி நம்பிகள் நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் பூக்கள் கொண்டு சென்றதால் புஷ்பமங்கலம் என்றும் பூ இருந்தவல்லி என்றும் பெயர் பெற்றது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தாயார் பெயர் பூவிருந்தவல்லி. பூவில் இருந்து தோன்றியவள் என்பதால் இந்தப் பெயர் வந்தது. ஆக அழகான, இயற்கையான பெயர் கொண்ட பூந்தண்மலி அல்லது பூவிருந்தவல்லி என்று பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது.



இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


Tuesday, 29 December 2020

மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றி தகவல்கள்.


பரிணாம வளர்ச்சியில் வல்லவர் சார்லஸ் டார்வின்.

  • சார்லஸ்டார்வின் தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.
  • 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள்தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர்.
  • தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22 வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு நீண்ட பயணம் மேற்கொண்டார்.
  • டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.
  • மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.
  • ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.
  • மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்.
  • பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.
  • டார்வின் முன்வைத்த கருத்தின் மீது எழுந்த விவாதங்கள் பரிணாமக் கருத்தாக்கத்தை ஏற்பதற்கு விரைவுபடுத்தியது.
  • இவரின் இக்கொள்கைகள் மதவாதிகளின் போதனைக்கு எதிராக அமைந்தது, அதனாலேயே முதலில் அதை எதிர்க்க தொடக்கினர்.
  • அறிவியலாளர்கள் கூட இக்கொள்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது இக்கொள்கையை நாத்திக வாதிகளும் தேவைப்படும் பொது கம்முனிச வாதிகளும் கையில் எடுத்து கொள்கின்றனர்.

ஓர் உயிரின் மாற்றம் என்பது மரபணுவில் (Gene) ஏற்படும் மாற்றமே,

  • பரிணாமத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, ஓன்று நுண் பரிணாமம் (Micro Evolution), மற்றொன்று பாரிய கூர்ப்பு (Macro Evolution),
  • இதில் முதல் வகையான Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும். அதற்கான காரணிகளாவண: Mutation, மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.

மாறுந்தன்மை (Mutation):

  • இதில் மாருந்தன்மை (mutation) என்பதே அதிகமாக நிகழகூடிய ஓன்று, வேதிபொருள்களின் தாக்கம், கதிர்களின் தாக்கம் மற்றும் Virus களின் தாக்கம் போன்ற காரணங்களால் மரபில் (DNA வில்) ஏற்படும் சிறு மாற்றங்களே இந்த mutation என்பதற்கு உதாரணம். இவைகள் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று.

மரபணு திருத்தம் செய்தல் (DNA Repair):

  • இது போன்ற மாற்றங்களை சரி செய்வே உடலில் DNA repair என்ற ஒரு வளர்சிதை மாற்ற வேதிவினை (Metabolishm) நடைபெறும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனம்பெருக்குவதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகிறன. சில நேரங்களில் இந்த வேதி வினையின் திறன் குறையும் பொது தான், மனிதனிடம் இந்த Micro Evolution மாற்றங்கள் நடைபெறும்.
  • பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதற்கு ஒரு ஆணி தரமான ஒரு விசயமே, இந்த DNA Repair என்பது தான், ஒவ்வொரு மனிதன் உடலிலும் அது போல அணைத்து விதமான விலங்குகள் உடலிலும் இந்த DNA Repair என்ற வளர்சிதை மாற்ற வேதிவினைநடைபெறுகிறது, இதனுடைய வேலை விலங்குகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களை அதாவது மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே.
  • இதை புரியும் படி சொல்ல வேண்டுமானால், மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல் படுகிறதோ, அதையே ஒரு உதாரணமாக சொல்லலாம். இது மனிதனை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது, அதனுடைய திறன் குறைகயில்தான் மனிதனுக்கு நோய்கள் வருகின்றன. அதே போல தான் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே இந்த வகையான வேதி வினையின் வேலை. உதாரணமாக RAD54 என்ற ஒரு புரதம் இந்த வேலைகளை செய்கிறது.
  • இதில் இரண்டாம் வகையான Macro Evolution, அப்படியெனில் ஒரு உயிரினம் முழுவதுமாக மற்றொரு உயிரினமாக மாறுவது, இது உடனே ஏற்படுவது இல்லை, இந்த மாற்றத்திற்கு லட்ச கணக்கான வருடம் தேவை படும் என்பது அவர்களின் கருத்து, இப்படி ஒரு பரிணாமம் இதுவரையில் எங்கும் எப்போதும் நடந்தது இல்லை, அதற்கான ஆதாரங்களோ படிமங்களோ இது வரையில் இல்லை.
  • ஆக உயிரினத்தின் உடலில் உள்ள மாற்றங்களை சரி செய்ய உடலிலேயே ஒரு அமைப்பு இருந்து அதை ஒரு வேலையாக செய்து கொண்டுருக்கின்றது, ஒரு உயிரின் சிறு மாற்றத்திற்கே வேலை இல்லாத பொழுது, ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுகிறது என்பது மிகுந்த வேடிக்கையான ஒன்று.
  • நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அறிவியல் வேறு தற்பொழுது உள்ள அறிவியல் வேறு, ஏனெனில் டார்வினுக்கு DNA பற்றியும், மரபியல் பற்றியும் நன்கு அறிவதற்கு வாய்ப்பு இல்லை, அன்றைய தினம் இருந்த விஞ்ஞானம் அப்படி.
  • இதில் முக்கியமாக பதிய பட வேண்டிய கருத்து எது எனில் தற்பொழுது வரை இக்கொள்கை நிரூபிக்க பட்டதா என்றால் ‘இல்லை’ என்பதே உண்மை.

நன்றி.

தண்ணீர் எத்தனை ஆண்டுகள் பழமையானது


நீரின்றி அமையாது உலகு என்பர்….

தண்ணீரை வைத்து மற்ற பொருட்களை சுத்தம் செய்த காலம் போய் நாம் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

எந்த கடைக்கு சென்றாலும் இது ஓல்ட் பேஷன், அல்லது ப்ரெஷா இல்லையா?? இந்த வசனங்கள் அடிக்கடி நாம் காதில் ஒலிக்க கூடியவை.

மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றான தண்ணீர், நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது, எவ்வளவு பழமையான தண்ணீரை நாம் அருந்துகிறோம் என யோசித்தது உண்டா???

நம் சோலார் சிஸ்டம் உருவாதற்கு முன்னர் உருவான தண்ணீரை நாம் குடிக்க முடியுமா??

அறிவியல் ஆய்வின்படி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு காஸ்மிக் மேகங்களில் மத்தியில் மிதக்கும் பனிப்புள்ளிகள் மூலம் உருவானது கடல் என கூறுகின்றனர்.

இது நம் சோலார் சிஸ்டம் உருவாதற்கு முன்னர் உருவானது எனவும் கூறுகின்றனர்.

இவ்வளவு பழமையான தண்ணீர் இந்த பூமியில் உள்ளது. இன்றும் நாம் இதனை உபயோகிக்க வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். நாம் குடிக்கும் தண்ணீர் சோலார் சிஸ்டம் உருவாதற்கு முன்னர் உருவானதாக கூற இருக்க வாய்ப்புண்டு.

அடுத்து முறை தண்ணீர் அருந்தும்போது அது எவ்வளவு பழமை வாய்ந்தது என கொஞ்சம் சிந்தித்து அருந்துங்கள்.

புத்தர் பற்றிய அறியப்படாத தகவல்கள்.


ஆரிய எதிர்ப்பின் ஆசான், மானுடத்தின் மாமன்னர்.

ஆரியர்களின் வர்ணாசனமிறையின் படி சத்திரிய குலத்தில் பிறந்தவர் . பாப்பணர் ஆதிக்கத்தில் இருந்த அரச குலத்தில் பாப்பணர்க்கு அடிமை சேவகம் செய்ய உலக வாழ்வு தெரியாது , மக்களது இன்னல் , இன்பம் ,இயலுமை தெரிவிக்கப்படாமல் வழர்ந்த அந்தக் காலத்து posh boy ..

அரண்மணை இலௌகீகம் , திருமணம் ,கழியாட்டம் என வாழ்ந்த அந்த சிந்திக்கும் இளைஞன் தடைமீறி நாட்டு மக்களை காண செல்கிறார். மரணம் ,நேய் , மிருகவதை ,மனிதவதை கண்டு மனம் நோகின்றார் .

சிந்திக்கின்றார் ……

ஒரு குறிப்பிட்ட மனிதக் கூட்டம் , அரசர் குல ஆதரவுடன் , அரக்கர் என பெயரிட்ட இன்னுமொரு மனிதகுலத்தை அடிமைப்படுத்தி அட்டூழியம் செய்கிறார்கள். தமது உணவிற்காக விலங்குகளை கொல்கிறார்கள். தானும் அரசனாகி அந்த கொடுமைகளுக்கு துணைபோகாது அரச உரிமையை துறந்து அரச மரத்தடி செல்கிறார். அவர் அந்தக்காலத்து இடதுசாரி ,( communist).

அடிமைபடுத்தப்பட்ட மக்களை வாழ்விற்கு நல் அறத்தை போதிக்கின்றார் . பாப்பணர் கூறும் கட்டுக்கதைகளினால் உருவான கடவுள்களை எதிர்த்து மக்களிடம் அறத்தையும் ,தர்மத்தையும் , மனிதத்தையும் , ஜீவகாருண்யத்தையும் போதிக்கின்றார். அவர் அந்தக்காலத்து பேரியாரியவாதி ( periyarist ) . அந்தக்காலத்து அம்பேத்கார் அவர் .

ஆரியர் கூட்டத்து அடக்குமுறைகளை அவர்களுள் ஒருவராக இருந்து அனுபவிக்காது , உலகில் பிறந்த அனைத்து உயிர்கள் சார்பிலும் அதிகாரத்தை , அந்தஸ்தை, ஆசையை துறந்த பொதுநலவாதி ..

சாதிமுறையை ஒழிக்க உயர் சாதி தமது சாதிய அனுகூலங்களை உதறித்தள்ளி சுயசாதியை மறுக்கவேண்டும் என பாடம் காட்டியவர் .

இது எனது பார்வையில் அந்த போதிமாதவன் ..

பின்னர் அவரது சீடர்கள் அவரை கடவுளாக்கியதும் ,பார்பணீயம் பௌத்தத்தை இந்திய நிலமிருந்து துடைத்தெறிந்ததும் வரலாறு.

உலகில் அனைவருக்கும் பொருதுதமான தத்துவத்தை பௌத்தம் எனும் வடிவில் தந்தவர் அந்த போதிமாதவன்.

எண்ணெய், தைலம் - இரண்டுக்கும் என்ன வேறுபாடு


எள் - என்ற தானியம் தந்த சொல் 'எண்ணெய்'.

எள்ளின் மறுபெயரான 'திலம்' தந்த சொல்
தைலம்.

மாட்டின் பாலில் இருந்து பெறப்பட்ட நெய்தான் நம் முன்னோர்கள் முதலில் கண்டறிந்து பயன்படுத்திய நெய். மிருதுவான, கொழகொழப்பான திரவங்களை அதன் நெகிழும் பண்பையொட்டி 'நெய்' எனப் பெயரிட்டழைத்தனர். வெண்மையாக இருக்கின்ற நெய், வெண்ணெய் ஆனது .

தாவர எண்ணெய் கண்டுபிடிக்கப்படாத -
அன்றைய காலங்களில் சமையல், மருத்துவம் மட்டுமல்லாது அனைத்து உபயோகத்திற்கும் பசுவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பிற்காலத்தில் தாவர வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் நுட்பத்தின் மூலம் எள்ளிலிருந்தும் நெய் எடுக்கப்ப்பட்டது. இவ்வாறு எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யே காலப்போக்கில் எண்ணெய் என்ற பெயர் பெற்றது.

எள் + நெய் = எண்ணெய்.

எண்ணெய் = எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் கொழுப்பைக் குறித்த எண்ணெய் எனும் சொல், பிற்காலத்தில் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.

துக்கடா : சங்க காலம் தொட்டே எள் பற்றிய குறிப்புகள் தமிழில் பலவுண்டு. எள் பற்றிய வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பார்க்கையில் தமிழர்களின் வாழ்வில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளானது இரண்டறக்கலந்த ஒரு பண்டம் என்பதும் புலனாகிறது.

* எள்ளல் = கேலி செய்தல், மட்டம் தட்டுதல்.
* எள்ளி நகையாடுதல் = நகைப்புரியவனாக்குதல், அவமானப்படுத்தல்.
* எள் அளவும் ஐயம் இல்லை = கொஞ்சம் கூட ஐயமில்லை.
* ஏழைக்கேற்ற எள்ளுருண்டை= மிகவும் மலிவான பொருள்
* கூட்டத்தில் எள் போட இடம் இல்லை = நெருக்கமான கூட்டம், கொஞ்சமும் இடமில்லை.
அவ்வளவு கூட்டம்!
* எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும் = எள் நசுக்கப்பட்டு எண்ணெய் வெளியேறும்.

அமானுஷ்யம் என்ற வார்த்தைக்கு தமிழில் இணையான சொல்

 அமானுஷ்யம் என்ற வார்த்தைக்கு தமிழில் இணையான சொல் என்ன உள்ளது?

மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்வுகளை அமானுஷ்யம் என்கின்றனர். ( a condition where there is no indication of human presence).

இவை பெரும்பாலும் இயல்பான வாழ்வில் காணாத விசயங்களாகவும், பேய், ஆவி போன்ற நம்பிக்கைகள் தொடர்புடையதாகவும் சொல்லால், செயலால் விவரிக்க இயலாதவையாகவும் இருக்கலாம்.

இது ஆங்கிலத்தில் சூப்பர் நேச்சுரல் (supernatural) எனச் சொல்லப்படுகிறது.
சில நேரங்களில் நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை கூட நமக்கு கிலியை ஏற்படுத்தலாம். இத்தகைய உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதே 'அமானுஷ்யம்' - எனப்பட்டது.

பகுத்தறிவு தோன்றாத காலங்களில் - ஐம்புலன்களுக்குத் தென்படாத எதுவும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதான ஒரு தெய்வீக அல்லது தீமையின் ஆற்றலாகவே நம்பப்பட்டது. (சுழிக் காற்று, தானாகத் தீ எரிதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் கூட 'அமானுஷ்ய' ஆற்றல்களாகச் சித்தரிக்கப்பட்டன) .

அமானுஷ்யம் = அல் + மனுஷ்ய - என்றால் 'மனுஷ்ய அல்லாத' என்பதைக் குறிக்கிறது.

அதாவது... மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறிய எனப் பொருள்.

தமிழில் 'மனிதம் + அற்ற = மனிதமற்ற' (மனிதத் தன்மையற்ற) எனச் சொல்லலாம். ஏனெனில் மனிதன் - என்ற தூய தமிழ்ச் சொல்லிலிருந்து தோன்றிய சொல்லே மனுஷ்ய ஆகும்.

மனிதன் > மனுசன் > மனுஷன் > மனுஷ்ய.
(மனுஷ்ய = மனிதப் பண்பு, மனிதத் தன்மை) .

மனிதன், மனுசன், மனுஷன், மானுடன், மானிடன் போன்ற அனைத்து சொற்களும் ஒரே பொருள் குறிப்பனவே!

திருக்குறளுக்கு நிகரான வேறு நூல் வேற்று மொழிகளில் எதுவும் இருக்கிறதா?

 

  • திருக்குறளுக்கு இணையான நூல் என உலகில் எதுவும் இல்லை.
  • வேண்டுமென்றால் விதிவிலக்காக நாலடியாரைப் பரிந்துரைக்கலாம்.
  • நாலடியாரும் திருக்குறளுக்கு ஓரளவு பொருந்தும் வகையில் கருத்துக்கள் உள்ளன.
  • எனினும் திருக்குறளுக்கு நாலடியார் இணை என்றால் அதற்கு வாய்ப்பில்லை.
  • உதாரணத்துக்கு கூறினால், பிற நூல்களின் கருத்துக்களுக்கும் திருக்குறளின் கருத்துகளுக்கும் கண்களுக்கு எட்டாத தொலைவு எனில் நாலடியாருக்கு மட்டும் கண்ணுக்கு மட்டும் எட்டிய தொலைவு. அவ்வளவுதான்.
  • நான் ஏன் நாலடியாரை ஓரளவுக்கு திருக்குறளுடன் ஒப்பிடுகிறேன் என்றால் திருக்குறள் கூறும் அதே கருத்துகளை நாலடியார் கூறினாலும் திருக்குறள் அளவுக்கு சுருக்கமாகவும் மிக நுட்பமாகவும் உணர்த்தும் அளவுக்கு சமண முனிவர்கள் அதை இயற்றவில்லை.
  • சமண முனிவர்கள் பலரின் கருத்துக்களின் இணைவே நாலடியார்.
  • திருக்குறள் ஒரே ஒருவரது தெளிவான கருத்தை உடையது.
  • அப்படிப் பார்த்தால் திருக்குறளுக்கு இணையாக நூல் உலகில் எதுவுமே இல்லை.


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் 

திரு. அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!



       தமிழால் இணைவோம் !!!

         அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..

பட்டினம் என்பதன் தமிழ் பொருள் என்ன?

பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரங்களைக் குறிக்கும். இது நெய்தல் நிலம் தொடர்புடைய பண்டைய சொல்.
நாகப்பட்டினம்,விசாகப்பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் , பூம்புகார்பட்டினம் , முசிறிப்பட்டினம் ,மதராசபட்டினம் அனைத்தும் பண்டைய புகழ்பெற்ற நகரங்களாம்.
(
பட்டினப் பாலை - தமிழ் விக்கிப்பீடியா).

பட்டினம், பட்டி, பட்டு, பேடு, பேட்டை - அனைத்தும் பள் - என்ற மூலம் தந்தவை.

சரி...பட்டணம் எப்படி வந்தது?

அண் - என்ற அடிச்சொல் அடுத்திருத்தலைக் குறிக்கும்
அண் > அண்முதல். அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.

பட்டு + அணம் = பட்டணம்.

பல பட்டி/பட்டுகளுக்கு அண்மையாக இருப்பது 
பட்டணம் ஆனது. இது பிற்காலத்தில் உருவான இடப்பெயராகும்.



இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் 

திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!



        தமிழால் இணைவோம் !!!

         அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா

 கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா என்ற வினாவிற்கு உங்களது விளக்கத்தைத் தருக?

முட்டை முதலில் பின்பே கோழி.

டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாட்டின் ( evolutionary biology )படி கோழியல்லாத வேறு பறவைகள் மூலம் கோழி முட்டை தோன்றி, அந்த கோழி முட்டையிலிருந்தே கோழி தோன்றியது. இக் கருத்தினையே அறிவியலாளர்கள் (Stephen Hawking, Christopher Langan...) வலியுறுத்துகின்றார்கள்.

எனவே இனியும் இக் கேள்விக்குப் பதில் தேடுவது கடினமானதல்ல.

வைத்தியர் என்பது தமிழ் பொருள்.

 

சொல் உருவாக்கத்தில்...
கர, காரச் சொற்கள் காரமாகத் திரிவதை - இதற்கு முன்பே பல உதாரணங்களில் கண்டிருக்கிறோம்.

ஏகம் > ஐக்கியம்.
சிவம் > சைவம்.
விண்ணவம் > வைணவம்.
மிதிலை > மைதிலி.
தீரம் > தைரியம்.
வீரம் > வைராக்கியம்.
சீலம் > சைலம்.
பித்து > பைத்தியம்.

இதே வகையில்... வித்தை - என்ற சொல்லின் திரிபே வைத்தியம்.

  • வித்தை > வைத்தியம்.

வித்தை - என்பது தந்திரம், திறன் போன்ற பொருள் குறித்தது. ( Skill, art). தொடக்கத்தில் பொதுப் பெயராக அமைந்த இச்சொல் 'வைத்தியம்' - என உருமாறி பின்னர் - மருந்துகளைத் திறம்படக் கையாளும் மருத்துவரின் - மருத்துவத் திறன் தொடர்பான தனிச்சொல்லாக நிலை பெற்றது.

வைத்தியம் செய்பவர் - வைத்தியர் ஆனார்.

துக்கடா :

வில் - என்ற மூலத்திலிருந்து உருவான சொல் வித்தை ஆகும்.
ஆதிமனிதன் காடுகளில் சுற்றித் திரிந்த காலங்களில் '
வில்' - என்கிற கருவியே அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதற்கென அவர்கள் முறையாகப் பயிற்சி மேற்கொண்டு வில்வித்தையில் சிறந்தவர்களாக இருந்தனர். அத்தகைய பயிற்சியே 'வித்தை' எனப்பட்டது.

வில் ஓச்சும் திறனைக் கொண்ட சிறந்த வீரர்களை 'வித்தை' யில் சிறந்தவன், வித்தைக்காரன், வில்லாளி எனப் போற்றிப் புகழ்ந்தனர்.

பிற்காலங்களில் வில்லெய்தும் கலை போர்க்கலையாக உருவெடுத்தது. இதிகாசங்களில் நடைபெற்ற போர்களிலும் வில்வழி சண்டை செய்வதே முதன்மையாக இருந்திருப்பதைக் காணலாம்.


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் 

திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


       தமிழால் இணைவோம் !!!

         அறிவால் உயர்வோம் !!!

                  தமிழ் வாழ்க !!!

     அறிவியலின் தேடல் தொடரும்.

               வலியே  " வலிமை "

        - அய்யனார் (வால்வரின்)..