Pages

Tuesday, 26 March 2019

சிவனுக்கு சொந்த ஊர் இதுதான்…

சிவனுக்கு சொந்த ஊர் இதுதான்…



சிறப்பு மிக்க சிவத்தலங்களுள் முக்கியமான முதன்மையான ஸ்தலம் உத்திரகோசமங்கை. உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில் என்னும் பெரு மைமிக்க கோயில் இது. சிவனின் அடி முடி காண முடியாது என்பதற்கேற்ப இத்தலத்தின் பெருமையும் சிறப்பும் சொல்ல சொல்ல நீண்டுக் கொண்டே இருக்கும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி… காசியில் இறந்தால் முக்தி.. திருவண்ணா மலையாரை நினைத்தாலே முக்தி. ஆனால் உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது. 1087 தலம் இருந்தாலும் இது தான் நடராஜருக்கு சொந்த ஊர் என்கிறார் மாணிக்கவாசகர். இந்த ஆலயத்தில் மட்டும் மாணிக்கவாசகருக்கு தனி சன் னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வேதவியாசர், மிருகண்டு முனிவர், அரு ணகிரிநாதர், பராசரர் போன்ற மாமுனிகள் இத்தல ஈசனிடம் அருள் பெற்றுள் ளனர்.. திருவிளையாடற்புராணத்தில் வரும் வலைவீசி மீன்பிடித்த படலம் இத்தலத்தில் நிகழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆதிகாலத்தில் உருவான முதல் கோயில் இது. ஆதி சிதம்பரம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நடராஜர் இங்கு ஆடிய பிறகே சிதம்பரத்தில் ஆடினார் என்றும் சொல்கிறார்கள். மகா பாரதப் போர் கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. அதன் பிறகே கலியுகம் பிறந்தது. அனால் கலியுகம் பிறப்பதற்கு முன்பே மகாபாரதத்திற்கு முந்தைய காலமான இராமா யணக் காலத்திலேயே இந்தக் கோவில் இருந்ததற்கான கல்வெட்டு குறிப்புக்கள் உள்ளன. சூரியன், சந்திரன், செவ்வாய் என மூன்று கிரகங்கள் மட்டுமே இத்தலத்தில் இருப்பதால் நவக்கிரகங்கள் 9 என்று அறியப்படாத காலத் திலேயே உருவாக்கப்பட்ட தலம் என்பது நிரூபணமாகிறது..

இராவணனின் மனைவி மண்டோதரி இத்தலத்து இறைவனை வணங்கி சிவபக்தனான இராவணனை இத்திருத்தலத்தில் மணம் புரிந்தாள் என்பதால் இக்கோயில் இராமாயண காலத்திலேயே இருந்ததாக அறியலாம்.

சிவப்பெருமான் உமையவளுக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இது. உத்தரம் என்பது உபதேசம் கோசம் என்பது ரகசி யம் மங்கை என்பது பார்வதி தேவி. இவை மூன்றும் இணைந்து உத்தர கோச மங்கை என்னு பெயரை பெற்றுள்ளது. இறைவன் இறைவிக்கு வேதத்துடன் நாட்டியமும் காட்டி அருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மங்களநாதர். இறைவி மங்கள நாயகி. இந்த ஆலயத்தில் மட்டும் இறைவனும் இறைவியும் தனித் தனியாக தனி சன்னிதியில் காட்சி தருகிறார்கள். விமானம், கோபுரம் கூட தனி தனியாக உள்ளன.

மூலவர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் உருவானவர். இந்த சுயம்பு லிங்கம் 3000 வருடங்களுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மூன்று மூர்த்தங்கள். மங்களேஸ்வரர், மங்களேஸ்வரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே (நடராசர்) மரகதப்பச்சை, தீர்த்தமும் பச்சை. தல விருட்ச மான இலந்தை மரமும் (3000 வருடங்களுக்கு முந்தையது) பச்சை என மூன் றும் ஒற்றுமையாக அமைந்திருக்கிறது..

இங்கு ஐந்தரை அடி உயரமுள்ள நடராசர் திருமேனி மரகதத்தால் ஆனது. உலகிலேயே பெரிய மரகதக் கல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார் கள். மரகதம் மிகவும் மென்மையானது. விலை மதிப்பில்லாதது… சாதாரண ஒலி கூட மரகதத்தை உதிர வைக்கும் என்று சொல்வதால் அதற்கு ஊறு ஏற் படாமல் சந்தனக்காப்பு இடப்படுகிறது. அதனாலே இச்சிலையானது உளி கொண்டு செதுக்காமல் மனத்தால் நினைத்து உருவாக்கப்பட்டது என்றும் சில ஆன்மிக பெரியவர்கள் சொல்வதுண்டு.

வருடம் முழுவதும் சந்தனக்காப்பில் காட்சியளிக்கும் மரகத நடராஜர் வருடம் ஒருமுறை ஆருத்ரா தரிசனத்தில் மட்டுமே சந்தனக்காப்பு களைந்து தரிசிக்க முடியும். உச்சிக்காலத்தில் நடைபெறும் லிங்க அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும். நித்ய அபிஷேகத்துக்கும், சாமி உற்சவ உலாவுக்கும் பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலையும் உண்டு நடராஜர் கோயிலுக்கு பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனியாக உள்ளது.

இந்தக் கோயிலின் மற்றுமொரு விசேஷம் தாழம்பூ சாற்றி வழிபடும் முறை. சிவனின் அடிமுடி காண பிரம்மாவும், விஷ்ணுவும் செல்வதற்கு முன்பே இத்தலம் உருவாக்கப்பட்டதால் தாழம்பூவுக்கு இத்தலத்தில் தோஷ மில்லை என்று சொல்கிறார்கள்…பொய்யுரைத்த தாழம்பூவுக்கு சிவன் சாப விமோசனம் கொடுத்ததால் இத்தலம் சாப விமோசனம் அளிப்பதை உணர்த் தும் தலம் என்றும் சொல்கிறார்கள்.
இயன்றபோது உத்தரகோசமங்கை சென்று மங்களேஸ்வரரை தரிசித்து வாருங்கள். மங்களம் உண்டாகும்.


        தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment