புறநானூற்றுத் திணைகள்
பகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்
காஞ்சி :
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவது காஞ்சித் திணையாகும்
கைக்கிளை :
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர்
தும்பை :
பகை வேந்தர்கள் இருவரும் வெற்றி ஒன்றையே இலக்காக் கொண்டு கடும் போர்ப் புரிவது தும்பைத் திணையாகும்
நொச்சி :
பகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும்
பாடாண் :
பாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், மறம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும்
பெருந்திணை :
பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர்
பொதுவியல் :
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறபப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும்
வஞ்சி :
பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைத்தலையிலே சூடிப் போரிடப் புகுவது வஞ்சித் திணையாகும்
வாகை :
போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணையாகும்
வெட்சி :
பகை நாட்டின்மீது போர் தொடங்குமுன் அந்நாட்டில் உள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன் வெட்சிப்பூச் சூடிய தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்துவரச்செய்வது வெட்சித் திணையாகும்.
No comments:
Post a Comment