காமா கதிர்களும் ரேடியோ அலைகளும் சுவரை ஊடுருவும் போது ஏன் சாதாரண ஒளிகளால் ஊடுருவ முடிவது இல்லை.
ஒரு சின்ன எடுத்துக்காட்டு ஒரு மழை பெய்கிறது அதில் ஒரு கொசு ஒரு சிறுவன் இருவரும் மழையை கடக்க முயற்சி செய்கிறார்கள் இப்போது என்ன ஆகும் ? அந்த சிறுவன் மழையை எளிதாக கடந்து செல்ல முடியும் காரணம் அவன் அளவில் பெரியவன் என்பதால் மழையால் பாதிக்க பட மாட்டான்.
ஆனால் கொசு கிட்ட தட்ட மழை துளி வடிவில் இருப்பதால் அதில் அடி பட்டு விழுந்து விடும்.
இதே போல ஒரு வேளை அந்த கொசு ஒரு அணு அளவில் இருந்தால் ?
அப்போது அந்த மழை துளி இடைவெளியில் அதனால் எளிதாக கடந்து செல்ல முடியும் அல்லவா ?
அப்படி தான்.. ஒரு சுவரில் உள்ள அணு அமைப்பிற்கு கிட்ட தட்ட சமமான அளவில் அலை நீளத்தை கொண்டுள்ள ஒளியின் அலைகள் சுவரால் தடுத்து நிறுத்த படுகின்றன.
ஆனால் காமா அலைகள் சுவரின் அணு அமைப்பை விட மிகசிரியவை எனவே எளிதில் கடந்து செல்கின்றன.
அதே போல ரேடியோ அலைகள் சுவரின் அணு அமைப்பை விட மிக பெரியவை எனவே அவற்றால் தடுத்து நிறுத்த முடியாமல் அவற்றை கடந்து செல்ல அனுமதிக்கினறன.
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment