மனித கணினி சகுந்தலா தேவி
அமேசான் பிரைமில் இப்போ ஒரு பயோ பிக் படம் ஓடி கொண்டு இருக்கிறது சகுந்தலா தேவி என்று அதை பார்த்தீர்களா ?
மனித மூளையின் அபார ஆற்றலை அபூர்வ திறனை மனிதனுக்கு அவ்வபோது நினைவூட்ட சில அபூர்வ குழந்தைகள் இப்பூமியில் பிறப்பது உண்டு அப்படி ஒரு அபூர்வ பெண்மணி தான் சகுந்தலா தேவி.
கணித மேதை ராமானுஜம் பற்றி அறிந்த பலருக்கும் இவரைப் பற்றி தெரியாமல் இருப்பது வருத்தம் தான்.இவரை பற்றி அறிய ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடித்து திரைப்படமாக வர வேண்டி உள்ளது.ஆம் "shakunthala devi " எனும் பயோ பிக்கின் ட்ரைலர் நல்ல வரவேற்பை அடைந்ததை தொடர்ந்து தான் இணையத்தில் இவரை பற்றிய தேடல் அதிகம் ஆகி பலரும் இவரை பற்றி அறிய தொடங்கி உள்ளனர்.
இந்த அபூர்வ குழந்தை பெங்களூரில் 1929 நவம்பர் 4-ம் தேதி ஒரு ஏழைக்கு பிறந்தது. இவரது அபூர்வ திறமையை இவரது தந்தை இவரது 3 ஆம் வயதிலேயே கண்டு கொண்டது இவரது அதிர்ஷ்டம் .
மைசூரில் இவரது திறமையை இவர் வெளி படுத்திய போது இவருக்கு வயது வெறும் 6 மட்டுமே.
அப்படி என்ன தான் திறமை இருந்தது இவரிடம் ?
கணிதத்தில் கற்பனை பண்ண முடியாத அளவு திறமை கொண்டவர் சகுந்தலா தேவி. இவரை தொடக்கப்பள்ளியில் சேர்த்தபோதே உயர் கல்விக்கான கணக்குகளை போட ஆரம்பித்தார் இவர். அந்த திறமை இவரை வானொலியில் சிறப்பு விருந்தினராக அழைத்து பேசும் அளவு சிறப்பாக இருந்தது. எந்த அளவு பெரிய கணக்கையும் வினாடி நேரத்தில் மனதிற்குள் போட்டு விடும் திறமை வாய்ந்தவர் இவர்.
மைசூரில் ஆரம்பித்த இவரது பயணம் பிறகு உலகம் பூராம் பரவ தொடங்கி உலகில் உள்ளோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தொடங்கியது.
1944 இல் லண்டன் சென்று அங்கு நடந்த கணித புதிர் போட்டியில் கலந்து கொண்டு அதகள படுத்தி "யாரு யா இந்த பொண்ணு " என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அவரது மூளையின் அபார ஆற்றல் கணினியை பின்னுக்கு தள்ளும் அளவு இருந்தது தான் காரணம்.
ஒரு உதாரணம்....
1977 ஆம் ஆண்டு அது...அமெரிக்காவில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் அந்த கணிதப் போட்டி நடந்து கொண்டு இருந்தது. 201 என்ற எண்ணுக்கான 23-வது மூலம் என்ன என்று கேட்க பட்டார் சகுந்தலா.. அதற்கு அவர் ‘546,372,891’ என்ற பதிலை சொல்ல எடுத்து கொண்ட நேரம் 50 வினாடிகள். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் இந்த விடை சரிதானா என்பதைக் கண்டறிய அப்போது பயன்படுத்தப்பட்ட நவீன கணினி (UNIVAC 1101 computer) இதற்கு நான்கு நிமிடம் எடுத்து கொண்டது.
அப்புறம்..
1980-ல் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணினியால் ரேண்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பதிமூன்று இலக்க எண்களைக் கொண்ட (7,686,369,774,870 × 2,465,099,745,779) எண்களைப் பெருக்கி 28 விநாடிகளிலேயே =18,947,668,177,995,426,462,773,730 எனப் பதிலளித்தார். இந்த நிகழ்வு அவருக்கு கின்னஸ் உலக சாதனையாளர் பட்டத்தை தேடி கொடுத்தது.
ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...
1950-ல் பிபிசி தொலைக்காட்சி நிருபர் லெஸ்லி மிட்செல் சகுந்தலாதேவியைப் பேட்டி எடுத்து கொண்டு இருந்தார். அது ஒரு நேரடி ஒளிபரப்பு . கணிதம், காலண்டர் கணிதம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, சகுந்தலா அளித்த பதில் தவறு என்றார் லெஸ்லி.
சகுந்தலா தேவி துளியும் யோசிக்காமல் அது தவறாக இருக்க வாய்ப்பு இல்லை உங்க கணினியை சரி பாருங்கள் என்றார். இதை பிபிசி மறுத்தது. ஆனால் பிறகு ஆராய்ந்து பார்த்த போது தவறு பிபிசி தரப்பில் என்று நிரூபிக்க பட்டது. மீண்டும் ஒரு முறை மனிதர்களை மலைக்க வைத்தார் சகுந்தலா.
கணினியை தோற்கடித்த அவரை அனைவரும் "human computer " என்று ஆச்சரியத்துடன் அழைத்தனர். ஆனால் என்ன விசேஷம் என்றால் அவருக்கு இந்தப் பட்டப் பெயர் சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் மிக சிறப்பானது.
"மனிதனின் மூளை எதனுடனும் ஒப்பிட முடியாத அதிசயம் அதை போய் ஒரு கம்பியூட்டர் உடன் ஒப்பிட்டு எனது மூளையை தாழ்த்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை..."
பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என்பது இவரது இன்னோரு முகம்.
இவரைப்பற்றி குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்தவர் இவர் ஆம் இவர் அதிகம் படித்தவர் அல்ல. இவர் பள்ளிக்கு சென்றது மூன்று மாதம் தான் என்பது நம்ப முடியாத விஷயம்.
இவர் பள்ளி செல்லா தவறாக இருந்தாலும் கணிதத்தை எளிமையாக விளக்கும் புத்தங்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ‘Book of Numbers’, ‘Mathability: Awaken the Math Genius in Your Child’, ‘In the Wonderland of Numbers’ உள்ளிட்ட பத்துப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கணிதம் மட்டுமல்லாது ‘Perfect Murder’ என்ற க்ரைம் நாவலையும் அவர் எழுதியுள்ளார்.
இவர் 83 வயது வரை வாழ்ந்தார்
இந்த ஆச்சர்ய பெண்மணி வாழ்க்கை அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய ஒன்று.
இவரை பற்றி படம் எடுத்து மக்களுக்கு இவரை கொண்டு சேர்த்த பட குழுவிற்கு வாழ்த்துக்கள் பல.
இவரது வாழ்க்கையை விளக்கும் bio pic
அமேசான் பிரைமில் ஜூலை 31 ரிலீஸ் ஆகி ஓடி கொண்டுள்ளது கண்டிப்பாக பாருங்கள்.
மனித மூளையின் அபார தன்மையை நினைத்து மீண்டும் அதிசயியுங்கள்..
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர் திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment