இதை பற்றி யோசித்த பாரதி கூட சொன்னது
தமிழ் -> தமிழர் -> பாரத தேசம்
அதாவது முதலில் வீடு பின் சமூகம் பின்னர் தேசம்.
தமிழை நாம் வீட்டில் பேணாமல் ஒரு வலிமையான பாரத தேசத்தை படைக்க முடியாது.
ஏன் தாய் ( தாய்மொழி ) மேல் பற்று இல்லாதவனுக்கு நாட்டின் மேல் பற்று வராது என்ற உளவியல் காரணம் தான்.
இங்கு பாரதி தமிழ் என்று சொன்னாலும் அதை ( தாய் மொழி ) என்று எடுத்துக்கொண்டால் புரிந்து கொள்ளலாம்.
------
இதை வேறு ஒரு வரலாற்று நிகழ்வோடு பொருத்தி சொல்கிறேன்
வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த பொழுது தமிழ்நாட்டில் ( மெட்ராஸ் ஸ்டேட் ) இருந்த ராணுவ வீரர்கள் போருக்கு செல்லும் பொழுது செய்யும் முழக்கம் என்ன தெரியுமா "வெற்றி வேல் வீர வேல் " எ---ன்பது தான்.
காரணம் இந்த தாய்மொழியின் தான் ஒருவனுக்கு எழுச்சியை கொடுக்கிறது. இதை அறிந்து வெள்ளையர்கள் அதை மாற்றவே இல்லை
அதே போல பஞ்சாபில் இருக்கும் ராணுவ வீரர்கள் பஞ்சாபியில் தான் முழக்கம் இடுவார்கள்.
----
அதனால் முதலில் நீங்கள் தமிழனாக இருப்பது தான் தகுதி.
No comments:
Post a Comment