தூங்கும்போது நாம் செய்யும் இந்த 4 தவறுகள்,உடலுக்கு ஆபத்தானது என்பதை மறந்துவிடாதீர்கள்!
வணக்கம் நண்பர்களே,
ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு
7-8 மணி நேரம் உறங்க வேண்டும்.
அப்பதான் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் அனைவருக்கும் சரியான முறையில் தூங்க வேண்டும்.
இன்று அதை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.எவ்வாறு சரியான முறையில் உறங்க வேண்டும் என்று,இந்த தவறுகளை மீண்டும் திரும்பவும் செய்யாமல் தூங்கினால் உடல் நன்றாக இருக்கும்.
தூங்கும் போது வலது பக்கத்தில் தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால் !!!
கால்களை மடக்கிக்கொண்டு தூங்குவதை விருப்பமாக கொண்டவர்கள்,
மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கால்களை மடக்கி தூங்குவதற்கு பதிலாக கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து கொண்டு தூங்கலாம்.
சிலர் சாப்பிட்டவுடன்
தூங்குவதை பழக்கமாக வைத்திருப்பார்கள்.
அவ்வாறு உடனடியாக உறங்குவது கூடாது.
சிலர் வேலை பார்த்துட்டு தாமதமாக வந்து இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டு தூங்க இருப்பவர்கள் என்ன செய்வது என்று கேட்பார்கள்.
அப்படி யாராவது இருந்தால் அவர்கள் இடது பக்கமாக உறங்கவேண்டும்,
அப்பொழுது தான் உணவு மெதுவாக வயிற்றுக்குள் சென்று செரிக்க ஆரம்பிக்கும்.
வலது பக்கம் உறங்கினால் உணவு வேகமாக செரிக்க வயிற்றினுள் சென்றுவிடும்.
இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
எப்பொழுதும் சாப்பிடும் போது மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுதல் வேண்டும்.
ஏனெனில் அப்பொழுதுதான் வாயில் சுரக்கும் நீர் சாப்பாட்டுடன் கலந்து வயிறு சென்று நன்றாக செரிக்கும்.
இதுவே சரியான முறை.
ஆனால் நம்மில் பலர் இதை பின்பற்றுவதில்லை.
குழந்தைகளை இப்பொழுதிருந்தே மெதுவாக சாப்பிட பழக்கினால் தன அவர்கள் சாப்பிடும் சாப்பாடு செரிமானமும் ஆகும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வர்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment