பால் , நீர்

1. பாலைக் காய்ச்சும் போது அது ஏன் பொங்குகின்றது?
பால் என்பது நீர், புரதம், மாப்பொருள், கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய ஒரு கலவை ஆகும்.
பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதனால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.
நீரின் கொதிநிலை 100 பாகை செல்சியஸ் ஆகும். ஆனால், பாலில் இருக்கின்ற கொழுப்பானது 50 பாகை செல்சியசிலேயே உருக ஆரம்பித்து விடுவதுடன் இந்த கொழுப்பானது மெல்லிய படலமாக மாறி பாலின் மேற்பரப்பில் காணப்படும்.
எந்த ஒரு திரவத்தையும் கொதிக்க வைக்கும் போது அந்த திரவத்தில் காற்றுக் குமிழ்கள் மேலே வரும்.
இதேபோல்,பாலை கொதிக்க வைக்கும் போதும் காற்றுக் குமிழ்கள் மேற்பரப்பில் உருவாகும்.
இதேவேளை, பாலின் மேற்பரப்பில் கொழுப்பு உருகி படலமாக படிவதால் காற்றக் குமிழ்கள் வெளியேறுவதை அது தடை செய்யும்.எனவே, சிறிய காற்றுக் குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி கொழுப்பு படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகின்றது.
இப்போது ஒரு சந்தேகம் எழுந்துள்ளதா?
2. பாலை தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கும் போது ஏன் பொங்குவதில்லை?
பாலை ஒரு மேசைக்க கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் கொழுப்பினால் படலம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும் எனவே, உருவாகும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும் அதனால், பால் பொங்குவதில்லை.
இப்போது மற்றுமொரு சந்தேகம் எழுந்திருக்குமே!
3. நீரை கொதிக்கவைக்கும் போது ஏன் நீர் பொங்குவதில்லை?
நீரில் கொழுப்போ, மாப்பொருளோ, புரதங்களோ இல்லை.
எனவே மேற்பரப்பில் எந்த படலமும் படியாது. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம்.
எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..

1. பாலைக் காய்ச்சும் போது அது ஏன் பொங்குகின்றது?
பால் என்பது நீர், புரதம், மாப்பொருள், கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய ஒரு கலவை ஆகும்.
பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதனால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.
நீரின் கொதிநிலை 100 பாகை செல்சியஸ் ஆகும். ஆனால், பாலில் இருக்கின்ற கொழுப்பானது 50 பாகை செல்சியசிலேயே உருக ஆரம்பித்து விடுவதுடன் இந்த கொழுப்பானது மெல்லிய படலமாக மாறி பாலின் மேற்பரப்பில் காணப்படும்.
எந்த ஒரு திரவத்தையும் கொதிக்க வைக்கும் போது அந்த திரவத்தில் காற்றுக் குமிழ்கள் மேலே வரும்.
இதேபோல்,பாலை கொதிக்க வைக்கும் போதும் காற்றுக் குமிழ்கள் மேற்பரப்பில் உருவாகும்.
இதேவேளை, பாலின் மேற்பரப்பில் கொழுப்பு உருகி படலமாக படிவதால் காற்றக் குமிழ்கள் வெளியேறுவதை அது தடை செய்யும்.எனவே, சிறிய காற்றுக் குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி கொழுப்பு படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகின்றது.
இப்போது ஒரு சந்தேகம் எழுந்துள்ளதா?
2. பாலை தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கும் போது ஏன் பொங்குவதில்லை?
பாலை ஒரு மேசைக்க கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் கொழுப்பினால் படலம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும் எனவே, உருவாகும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும் அதனால், பால் பொங்குவதில்லை.
இப்போது மற்றுமொரு சந்தேகம் எழுந்திருக்குமே!
3. நீரை கொதிக்கவைக்கும் போது ஏன் நீர் பொங்குவதில்லை?
நீரில் கொழுப்போ, மாப்பொருளோ, புரதங்களோ இல்லை.
எனவே மேற்பரப்பில் எந்த படலமும் படியாது. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம்.
எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. வடிவேல் அவர்களுக்கு !!!!
திரு. வடிவேல் அவர்களுக்கு !!!!
மிக்க நன்றி !!!!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment