பாம்பீ அல்லது பொம்பெய் அல்லது பாெம்பெயி.... நான் நீங்கள் கேள்வியில் கேட்ட பெயரையே குறிப்பிடுகிறேன்.
பொம்பெயி (Pompeii) மக்கள் என்பவர்கள் யார்?ஏன் அவர்கள் கல்லாக மாறினார்கள்? என்பவை பற்றி இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.
வரலாறு பாடப் புத்தகத்தில் நாம் மொகஞ்சதாரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்திருப்போம். இந்நகரம் மண்ணில் புதையுண்டு அழிந்து போன ஒரு நகர நாகரிகம் என்பது நாம் அறிந்ததே.... ஏறத்தாழ இதேபோன்றுதான் பொம்பெயி நகரமும் வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோய் அழிந்துபோனது.......
அப்பொழுதைய ரோம் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட நகரம் தான் பொம்பெயி... தற்போதைய இத்தாலி நாட்டின் கட்டுப்பாட்டில் காட்சி தளமாக உள்ளது பொம்பெயி.......
இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடா கடற்கரையின் அருகில் ஒரு மிகப்பெரிய மலை உள்ளது.....அது ஒரு சாதாரண மலை அல்ல பல ஆபத்துக்களை நிகழ்த்திய எரிமலை.....அந்த எரிமலையின் பெயர் வெசுவியஸ் மலை(Mount Vesuvius)...
படம்:வெசுவியஸ் எரிமலை(நன்றி:கூகுள்)
2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெசுவியஸ் எரிமலையை ஒட்டி பல நகரங்கள் இருந்துள்ளது....அதில் குறிப்பிடத்தக்க பெருநகரங்களாக பொம்பொயி (Pompeii) நகரமும், ஹெர்குலேனியம்(Herculaneum) நகரமும் ஆகும்....இங்கே பல நகரங்கள் உருவானதற்கு முக்கிய காரணம் நேப்பிள்ஸ் (Naples) கடற்கரையே.... ஆதலால் இக்கடற்கரையை ஒட்டி அப்போதைய கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை.. இருப்பினும் பொம்பெயி நகரில் மட்டும் ஏறத்தாழ 25000 பேர் வாழ்ந்திருப்பார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்....இந்த நேப்பிள்ஸ் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த நகரத்தார்கள் உணவகம், கலைநிகழ்ச்சி கூடம்,துறைமுகம், விளையாட்டு அரங்கம், பொதுக்கழிப்பிடம் என்று கட்டட அமைப்பிலும், நாகரிக வளர்ச்சியிலும் செல்வ செழிப்பாக புகழ்பெற்றிருந்தார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறாக எப்பவும் பரப்பரப்பாக இருந்து கொண்டிருந்த நேப்பிள்ஸ் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த நகர வாசிகள் .....அந்த கடற்கரையை ஒட்டியுள்ள..,நான் முதலிலே குறிப்பிட்ட வெசுவியஸ் எரிமலையால் ஏற்படும் ஆபத்தை உணரவில்லை.....ஏனெனில் வெசுவியஸ் எரிமலை அப்பொழுதைய காலகட்டத்தில் அதாவது கி.மு 79 க்கு முன்பு 40க்கும் மேற்பட்ட முறை அவ்வப்போது புகையை கக்கிய வண்ணம் இருந்தது..... இந்த எரிமலையை ஒட்டி வசிக்கின்ற மக்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணம்...., அறிவியல் வளராத காலகட்டம் என்பதால் அந்த எரிமலையை கடவுளுக்கு நிகராக அம்மக்கள் நினைத்தனர்.. கடைசியில் தான் தெரிந்தது அந்த எரிமலை கடவுள் அல்ல தங்களின் உயிரை பறிக்க வந்த எமன் என்று.......
கி.மு 79 ஆம் ஆண்டு ஒரு நாள் வழக்கம் போல் பொம்பெயி மக்களுக்கு அன்றைய விடியல் விடிந்தது....., ஆனால் அந்த விடியல் தான் இவர்களுக்கு கடைசி விடியலும் கூட..காலை 8 மணி இருக்கும் பெரும் சப்தத்துடன் வெசுவியஸ் எரிமலை புகையை கக்கியது...அந்த எரிமலையை ஒட்டி உள்ள மக்களின் அலட்சியப்போக்கால் இது "ஏதோ கடவுளின் திருவிளையாடல்" என்று நினைத்து கொண்டு தங்களது பணிகளை வழக்கம் போல் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பறவைகள் அனைத்தும் வானில் வட்டமிட்டு எச்சரிக்கை விடுகின்றது....
நண்பகல் 1 மணி இருக்கும்...கொஞ்சமாக வந்த புகை பெரும் சப்தத்துடன் கரும் புகையாக மாறி அதிக அளவில் வெளியேறுகிறது..... தற்போது மக்களுக்கு பயம் ஏற்பட்டு பரப்பரப்புடன் தப்பிக்க முற்படுகின்றனர்....கொஞ்சம் கொஞ்சமாக புகை ஏரிமலையை ஒட்டியுள்ள பொம்பெயி போன்ற நகரங்களுக்கு பரவவும் செய்தது.... எரிமலை வெடித்து நெருப்பு பிழம்புடன், எரி கற்களையும் மழையாக வாரி இறைக்கின்றது..... தப்பிக்க நினைத்த மக்கள் எரிமலையில் இருந்து வெளியிடப்பட்ட CO2 கலந்த புகையால் ஆங்காங்கே முடங்குகின்றனர்.
நண்பகல் 3 மணி இருக்கும்... தற்போது அந்த நகரம் முழுவதும், அழுகுரலும், கூச்சலுமாக இருக்கிறது....எல்லா இடமும் எறிகற்கலும், புகையும், சாம்பலுமாய் காட்சி அளிக்கிறது. CO2 வாயுவால் மக்கள் சுவாசிக்கவே சிரமப்படுகின்றனர்.... எரிமலை சீற்றம் அதிகரித்து அங்குள்ள மக்கள் ஒவ்வொருவராக இறக்கவும் செய்கின்றனர். எரிகற்கலால் அங்குள்ள மாடமாளிகைகள் அனைத்தும் தரைமட்டமாகிறது....
மாலை 5 மணி இருக்கும்....ஒட்டு மொத்த பொம்பெயி நகரமும், எரிமலை சீற்றத்தால் நரகமாக காட்சியளிக்கிறது....நகரவாசிகள் அனைவரும் இறக்கின்றனர்....அந்த இரவு விடிவதற்குள் ஒட்டுமொத்த பாெம்பெயி நகரமும் எரிமலை சாம்பலால் மூடப்படுகிறது...
இந்த எரிமலை சீற்றத்தால் பொம்பெயி நகரத்துடன், ஹெர்குலேனியம், ஒப்லொன்டிஸ் போன்ற நகரங்களும் எரிமலை சாம்பலால் மூழ்கடிக்கப்பட்டது.. மேலே வெசுவியஸ் எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை வரைபடத்தில் நிழலிட்டு காட்டப்பட்டுள்ளதை கவனித்தால் நன்கு புரியும்....... இம்மக்கள் கப்பல் மூலம் தப்பிக்க வழி இருந்தும் தப்பிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் பலத்த காற்றின் காரணமாக CO2 கலந்த எரிமலை புகை விரைவில் அங்கு பரவி இவர்களை நகர முடியாமல் செய்துவிட்டது........
சில நூறு ஆண்டுகள் ஓடியது....எரிமலை சாம்பலினால் எரிமலையை ஒட்டியுள்ள நிலப்பரப்பு வளமிக்க மண்ணாக மாறி செடி, கொடி, மரங்கள் வளர்ந்து "பச்சைப்பசெல்" என்று காட்சியளித்ததால் வெசுவியஸ் எரிமலை ஏற்படுத்திய அழிவை காலப்போக்கில் மக்களும் மறந்தனர்....அது மட்டும் இல்லாமல் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டும் அங்கு மக்கள் இன்னமும் பெரும் அளவில் வாழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றனர். இத்தாலி நாட்டின் வெசுவியஸ் எரிமலையை ஒட்டியுள்ள நகரங்களின் இன்றைய நிலை கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக மண்ணுக்குள் உறங்கி கொண்டிருந்த பொம்பெயி நகரமானது......, கி.பி 1748 இல் புதைப்பொருட்கள் தோண்டும் குழுவால் புதையலுக்காக பொம்பெயி அமைந்த பகுதியில் தோண்டுகின்றனர்....ஆனால் புதையலுக்கு பதிலாக சாம்பலால் மூடப்பட்ட எலும்பு கூடுகள்தான் கிடைக்கிறது.....இதனால் அந்நாட்டு அரசானது தொல்லியல் ஆய்வுக்கு அந்த இடத்தை உட்படுத்துகின்றனர். பல தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். முதலில் கட்டடங்களும், பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது..., பல ஆண்டுக்கு பின்புதான் இந்த மனித எலும்பு கூடுகள் பலவற்றை கண்டுபிடித்தனர்..இந்த எரிமலை விபத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் 20000த்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்..ஆனால் இதுவரை 1500க்கும் அதிகமான எலும்பு கூடுகள் மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
1800 ஆண்டுகள் ஆகியும் இந்த எலும்புக் கூடுகள் எரிமலை சாம்பலினால் போர்த்தப்பட்டு பாதுகாப்பாக இருந்துள்ளதுதான் ஆச்சரியம்...அந்த சாம்பலின் வெப்பத்தாலும், சாம்பலில் உள்ள உப்புக்களாலும் இவை மம்மிக்கள் போன்று பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது..... இருப்பினும் பல மனித எலும்பு கூடுகள் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
மற்றபடி இங்கே கேள்வியில் கேட்டுள்ளது போன்று பொம்பெயி மக்கள் கல்லாக எல்லாம் மாறவில்லை.... மாறாக கல்லாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்...அது எப்படி கல்லாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்களா.....
வரலாற்று ஆய்வாளர்கள் எரிமலை சாம்பலில் புதையுண்ட பொம்பெயி நகரை அகழ்வாராய்ச்சி செய்த போது..., எரிமலை சாம்பலினால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிக்கள் போன்ற மனித எலும்பு கூடுகளை கையாளும் போது சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு பாரிஸ் சாந்துவை(plaster of paris) கரைத்து அந்த மனித எலும்புக் கூடுகள் மீது பூசி மாேல்டிங் செய்து விட்டனர்......மேலும் இது பொம்பெயி நகர மக்கள் தங்களது கடைசிநேர உயிர் போராட்டத்தை விளக்கவும் வழிவகுக்கும். ஆதலால் தொல்லியல் ஆய்வாளர்கள் பாரிஸ் சாந்துவை தங்களது ஆய்வுக்கு ஒரு காரணியாக பயன்படுத்தியுள்ளனர். ஆய்வாளர்கள் பாரிஸ் சாந்துவை காலம் காலமாக பயன்படுத்தியும் வருகின்றனர்.... கீழே உள்ள படம் அதற்கான விளக்கத்தை தெளிவாக காட்டும்,
பொம்பெயி மக்கள் இறக்கும் போது அடைந்த வலியையும், வேதனையையும் பாரிஸ் சாந்து சேர்மத்தை பயன்படுத்தி மோல்டிங் செய்து ஆய்வாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது கல் நெஞ்சத்தையும் உருக வைத்துவிடும். கீழே சில படங்களை இணைக்கிறேன் பாருங்கள்.
⬆️ஒரு தாய் தன் குழந்தையை கடைசியாக தன் மீது சுமந்த வண்ணம் இறந்துள்ளார்.
⬆️வலியால் ஒரு அறையில் குழந்தைகள் முதற்கொண்டு துடித்து இறந்துபோன காட்சியை இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நபர் வேதனையுடன் பார்க்கும் காட்சிதான் இது..
⬆️உயிர் பயத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபடி சோகமாக அமர்ந்த நிலையில் இறந்த ஒரு இளைஞரின் காட்சி தான் இது.
⬆️தம்பதியினர் இருவர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிய வண்ணம் இறந்துபோன காட்சிதான் இது. போதும்டா சாமி நம் எதிரிக்கு கூட இது போன்ற ஒரு துயரச்சம்பவம் வரக்கூடாது.
படம்: ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொம்பெயி நகரின் வீதி....
270 ஆண்டுகளாக இத்தாலியில் தொடரும் இந்த தொல்லியல் ஆய்வானது இன்றும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கூட பொம்பெயி நகரில் துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..அதன் படம் கீழே....
மேலும் இந்திய சிற்பக்கலையுடன் ஒத்துப்போகும் ஏனைத்தந்தத்துடன் கூடிய இலட்சுமி சிலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...இன்று வரையில் கலை அரங்கம், விளையாட்டு கூடம், உணவு விடுதி, நூலகம், கோவில்கள், டைல்ஸ் பதிக்கப்பட்ட மாட மாளிகைகள், கண்கவர் ஓவியங்கள், சிற்பங்கள், பாண்டங்கள் என ஆய்வாளர்கள் பொம்பெயி நகரில் புதைபொருட்களை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.... ரோம பேரரசு செல்வ செழிப்பாக வாழ்ந்தனர் என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்களாக காட்சியும் படுத்தியுள்ளது இத்தாலிய அரசு.
உலக நாடுகள் பல இந்த ஆய்விற்காக ஆதரவு கரம் நீட்டியுள்ளது. UNESCO-வும் இந்த பொம்பெயி நகரை உலக பாரம்பரிய களமாக அறிவித்து பெருமை சேர்த்துள்ளது......
ஆதலால் முக்கியமான உலக சுற்றுலா தளங்களில் இத்தாலியில் உள்ள இந்த பொம்பெயி நகரமும் ஒன்று என்றால் அது மிகையாகாது....ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.....கோராவாசிகள் யாரேனும் வெளிச்சுற்றலா செல்ல முடிவு செய்திருந்தால் இந்த இடத்திற்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்...
நன்றி.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.இராஜபதி இரா அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment