அம்பலம் என்றால் மேடை, ஈசன் அண்டத்திலும், பிண்டத்திலும் ஆடுவதாய் குறிப்பார்கள் சித்தர்கள். உடனே மனிதவுருவில் ஆடுவதாய் கொள்ளக்கூடாது. இதை வள்ளலார் உபதேசத்தில் குறிக்கும்போது தெளிவாய் கூறுவார், பிரபஞ்சத்தில்(அண்டத்தில்) காரணத்தால் ஈசன் ஆடுமிடம் பரமாகாசம்(cosmic dance), பிரபஞ்சம் பெரிய மேடையாதலால் அது பேரம்பலம்.
உடம்பில்(பிண்டத்தில்) காரணத்தால் ஆடுமிடம் புருவமத்தி, இவன் இதை மூளையென்று குறித்துக்கொள்கின்றேன்(நீங்கள் வேறென்றாலும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்). புருவமத்தியே(மூளையே) ஆன்மாவின் இருப்பிடமாய் அமைந்து அதனுள் சோதியாய் நின்று ஈசன் ஆடுமிடம் சிற்றம்பலம், உடல் சிறிய மேடை ஆதலால் சிற்றம்பலம்.
ஈசன் அண்டத்தில் ஆடுவதலால் உயிருக்கொரு பயனுமில்லை, பிண்டத்தில் நின்றாடுவதால் உயிர் அனுபவப்படுகின்றது, இதை மரியாதையுடன் குறிக்கும் பொருட்டு திரு சேர்த்து திருசிற்றம்பலம் என்றனர்.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இராமேஷ் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment