ஈசனை வணங்கினால் அனைத்து கடவுளையும் வணங்குவதற்கு சமம் என்பதன் விளக்கம்.
மற்ற நெறிகளில் மீது வெறுப்பில்லாமல், ஈசனை அறிந்து மற்றநெறிகளின் உண்மையை அறிய விருப்பமென்றால் ஆம், சமம்.
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே
சிவனொடு ஒப்புடைய தெய்வம் தேடினும் இல்லையென்ற திருமூலரே
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
வைணவத்தில் தலையில் சடாரி வைப்பார்கள், சைவத்தில் ஆடவல்லான் தூக்கிய திருவடியை அடியார்கள் தலையில் வைப்பான் ஈசன், இந்த இரண்டுமே ஒரே பொருளை குறிக்கின்றது.
கால் என்கின்ற காற்று, மறக்கருணையின் போது காலனாய் உடலினை அழிக்கவும் செய்யவும் அறக்கருணையின் போது முத்திக்கு வழிசெய்யும்.
சடகோபன் எப்படி சடமான(மறக்கருணை) காற்றை கோபித்துக்கொண்டாரோ, அதைப்போன்றே மறக்கருணையை நீக்கி அறக்கருணை செய்தலே தூக்கிய திருவடி இந்த இரண்டின் தத்துவமும் ஒன்றுதான். ஏழு சொர்க்க வாசலை கடந்தது போனாலும், எழும்பர சென்றவனை காணச்சென்றாலும் ஒன்றுதான். என்ன சைவம் தத்துவத்தை விரிவாக பேசும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment