1. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது?
பாதரசம்
விளக்கம்::
நீர்ம நிலையில் உள்ள உலோகம் பாதரசம் மட்டுமே. பாதரசம், இதளியம் அல்லது இதள் (mercury) என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இதன் வேதியியல் குறியீடு Hg. இது திரவ நிலையில் காணப்படும்.
இரசத்தின் அணுவெண் 80. இதளியம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது.
இது பளுமானி, அழுத்தமானி, வெப்பநிலைமானி ஆகியவற்றில் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி கொல்லிகள், இலத்திரனியல் உபகரணங்கள், மின்குமிழ்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இதளியம் பயன்படுத்தப்படுகிறது. பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன.
எனினும் இதளியம் விசத்தன்மை மிக்கது.
2. எலும்பு !!!

X - கதிர்கள் செல்ல முடியாத ஊடகம் கீழ்கண்டவைகளில் எது?
எலும்பு
விளக்கம்::
எக்சு கதிர்கள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் .
இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சி என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.வலிமையான X-கதிர்களால் பொருட்களை ஊடுருவ முடியும். இப்பண்பே மருத்துவத் துறையில் X-கதிர்ப் படங்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையின் போதும் இத்தொழிற்பாடே பயன்படுத்தப்படுகின்றது.எனினும் எக்ஸ் கதிர்கள் எலும்புகளை ஊடுருவிச் செல்லாது. அதனால் தான் இவைகள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன.
3 . கீழ்க்கண்டவற்றுள் ஜெட் விமான வேகத்தைக் குறிக்கும் அலகு எது?
விளக்கம்::
ஜெட் விமான வேகத்தைக் குறிக்கும் அலகிற்கு மாக் நம்பர் என்று பெயர். மாக் நம்பர் என்பது ஒலியின் வேகத்துக்கும். விமானத்தின் வேகத்துக்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.
4. இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இடம் எங்கு உள்ளது?
நாசிக்
விளக்கம்::
இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக்கில் அச்சடிக்கப் படுகிறது.
5. உலகளவில் பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டு முன்னிலையில் இருக்கும் இரு நாடுகள் எவை?
ஜப்பான், அமெரிக்கா
விளக்கம்::
உலகளவில் பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் இரு நாடுகள் ஜப்பானும், அமெரிக்காவும் தான்.
6. உலக அளவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் எவை?
ரஷ்யா, சீனா
விளக்கம்::
உலகளவில் சிமெண்ட் உற்பத்தியில் இன்றைய தினம் வரையில் முன்னணியில் உள்ள இரு நாடுகள் என்று பார்த்தால் அது ரஷ்யாவும், சீனாவும் தான்.
7. "இரு வகை பார்வை மூக்குக் கண்ணாடியை (Bifocal Lens)"
கண்டுபிடித்தவர் யார்?
பெஞ்சமின் பிராங்க்ளின்
விளக்கம்:
Bifocals கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடி இருகுவியக் கண்ணாடி எனப்படுகிறது. இதன் இரு வில்லைகளிலும் மேலேயுள்ள பகுதியின் குவியத் தூரம் (fical length) ஒரு அளவாகவும், கீழேயுள்ள பகுதியின் குவியத் தூரம் வேறோர் அளவாகவும் அமைந்திருக்கும். இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது.
8. வாஸ்கோடகாமாவின் கல்லறை எங்கு உள்ளது?
கொச்சி
விளக்கம்:
வாஸ்கோடகாமாவின் கல்லறை கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ளது.
9. முதன் முதலில் டைப் ரைட்டரைக் கண்டு பிடித்தவர் யார்?
மிட்டர் ஹோபர்
விளக்கம்:
முதன் முதலில் டைப் ரைட்டரைக் கண்டு பிடித்தவர் மிட்டர் ஹோபர். இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்.
10. கொம்புள்ள கோள் என்று எதற்குப் பெயர்?
வெள்ளி கிரகம்
விளக்கம்:
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
11. இரட்டைப் பிறவி எனக் கூறும் வண்ணம், ஒரே உருவ, எடை கொண்ட கோள்கள் எவை?
பூமி, வெள்ளி
விளக்கம்:
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும்.
வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது.
12. திடீர் திடீரென தோன்றி மறையும் நட்சத்திரங்களுக்கு என்ன பெயர்?
நோவா
விளக்கம்:
திடீர் திடீரென தோன்றி மறையும் நட்சத்திரங்களுக்கு நோவா என்று பெயர். விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும்.
13. புயல் மணிக்கு எத்தனை மைல் வேகத்தில் வீசும்?
40 மைல் வேகம்
விளக்கம்:
குறைந்த வளியமுக்கப் பிரதேசத்தை நடுவில் கொண்ட அயனமண்டலத்தில் ( வெப்பமண்டலத்தில்) உருவாகும் ஒரு சூறாவளி வகையே வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது பொதுவாக வெப்பம் கூடிய அயனமண்டச் சமுத்திரங்களில் தோன்றும். இது இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும் முகில்களால் ஆக்கப்பட்டிருக்கும். வெப்பமண்டலம் அல்லது அயனமண்டலம் என்பது இச் சூறாவளி தோன்றும் புவியியற் பிரதேசத்தைக் குறிக்கும். இது தோன்றும் இடத்தையும் அதன் காற்றுப் பலத்தையும் கொண்டு அதனைப் பலவகையில் வேறுபடுத்தலாம்.
14. சிங்கம் எவ்வளவு தூரம் தாண்டும்?
12 மீட்டர்
விளக்கம்:
சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. அழிந்து வரும் விலங்குகளான இவைகள் சாதாரணமாக 12 மீட்டர் தாண்டக் கூடியது.
15. "உயிரினங்களின் தோற்றம்" என்னும் நூலை எழுதியவர் யார்?
சார்லஸ் டார்வின்
விளக்கம்:
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.
16. உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுவது எது?
பாக்டீரியா
விளக்கம்:
பாக்டீரியா தான் உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுகிறது. இதன் வயது நாலரை கோடி ஆண்டுகள் ஆகும். பாக்டீரியா என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய பா'க்டீரியொன் என்பதில் இருந்து வந்தது. பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள் போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன.
No comments:
Post a Comment