இயற்பியலில் உராய்வு விசைப் பற்றிப் படிக்கும் போது சறுக்கு கோணம் (angle of repose) என்ற பாடம் வரும்.
சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருள் கிடைத்தள பரப்புடன் சாய்தளம் ஏற்படுத்தும் எக்கோணத்தில் நகரத் தொடங்குகிறதோ அக்கோணமே சறுக்கு கோணம் எனப்படும் என்று தான் பாடபுத்தகங்களில் இருக்கும். இந்த வரையறையை நீங்கள் படிக்கும் போது சறுக்கு கோணம் என்றால் என்ன என்பதை உங்கள் மனதில் காட்சிப் படுத்த முடிகிறதா?
பெரும்பாலும் இல்லை என்ற பதில் வரும் எனறே நினைக்கிறேன்.
மணலை ஒரு இடத்தில் குவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கோணத்திற்கு பின்னர் மணல் சரியத்தொடங்கும். மணல் சரியத்தொடங்கும் அதிகபட்ச கோணத்தை தான் சறுக்கு கோணம் என்று அழைக்கிறோம். தானியங்களை மிகப்பெரிய குவியங்களாக குவிக்கும் போது சரிவுக்கோணத்தை கணக்கில் எடுத்துக் கொள்வர்.
இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
வீட்டு கூரைகளை சரியான சறுக்கு கோணத்தில் அமைத்தால் மழைநீர் மற்றும் பனி விரைவாக வளிந்தோடும். எந்த கோணத்தில் எளிதாக வளிந்தோடுகிறதோ அந்த கோணம் தான் சறுக்கு கோணம்.
இப்போது சறுக்கு கோணம் என்றால் என்ன என்றும் அதை எதற்காக படிக்கிறோம் என்றும் உங்களுக்கு புரிந்திருக்கும்.
குழந்தைகள் விளையாடும் சறுக்கு பலகையின் சாய்வு சறுக்கு கோணத்தை விட அதிகமாக இருந்தால் குழந்தைகள் வேகமாக சறுக்கி வருவார்கள்.
எறும்புகளை உணவாக உட்கொள்ளும் குழிநரி அல்லது குள்ளாம்பூச்சி (antlion) எனப்படும் ஒரு வகையான பூச்சி இனம் மணற்பரப்பில் சிறு சிறு குழிகளை ஏற்படுத்தியிருக்கும். அந்த குழியின் சாய் கோணம் சறுக்கு கோணத்துக்கு சமமாக அமைக்கப்பட்டிருப்பதால் எறும்பு போன்ற பூச்சிகள் அந்த குழிகளுக்கு அருகில் சென்றால் குழிக்குள் சறுக்கி விழுந்து விடும். காத்திருக்கும் குள்ளாம் பூச்சி இனம் அதனை கொன்று சாப்பிட்டு விடும். " குள்ளம் பூச்சி " கூட சறுக்கு கோணத்தின் பயனை தெரிந்து வைத்திருக்கிறது.
பூச்சியால் கூட புரிந்து கொள்ள முடிந்த சறுக்கு கோணம் மனிதர்களுக்கு புரியாதா?
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment