வீடு வாங்குவோர் பத்திரம்.... பத்திரம்
_______________________________________
வீ டு வாங்குவோர் அவற்றின் பத்திரங்களையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். தாய் பத்திரம், கிரைய பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ் எல்லாவற்றின் அசல் பத்திரங்களையும் பாதுகாப்பாக வைக்கவும். இந்த ஆவணங்களின் அசல் பிரதிகளை நகல் எடுத்து வைக்க வேண்டும். இந்த ஆவணங்களை வீட்டில் பாதுகாக்க முடியாவிடில் பேங்க் லாக்கரில் வைக்கலாம். இந்த ஆவணங்களை ஒப்பந்தம் இல்லாத இடத்தில் அடகு வைப்பது, வெளிநபரிடம் கொடுப்பது, யாருடைய கடனுக்கோ கேரண்டி கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது செய்து இந்த ஆவணங்களில் மோசடி செய்ய நாமே வழி ஏற்படுத்தக்கூடாது. விற்பனை குறித்த பத்திரப்பதிவு முடிந்துவிட்டநிலையில் கிடைக்கும் கிரைய பத்திரம் ரொம்ப முக்கியமான ஆவணம். ஒரு வேளை அது தொலைந்து போகும் பட்சத்தில் என்ன செய்வது?
கிரைய பத்திரம் தொலைந்தது உறுதியானபட்சத்தில் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். ஆவணம் தொலைந்த தகவலை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிட வேண்டும். இதற்குபிறகு மாற்று பிரதி ஆவணம் வாங்க சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் கிரைய பத்திரம் காணாமல் போனது குறித்த காவல் துறைக்கு நீங்கள் அளித்த புகார், அந்த ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனும் காவல் துறையின் கடிதம், பத்திரிகையில் இது குறித்து நீங்கள் அளித்த விளம்பரம், இதன் மூலம் எந்த விவரமும் கிடைக்கவில்லை என்பதை உறதி செய்யும் நோட்ரி பப்ளிக் அளித்த சான்றிதழ் ஆவணம், மனையின் சர்வே எண் குறித்த விவரம், கிரைய பத்திரத்தின் நகல் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைகளுக்குப் பின் பிரதி ஆவணம் கிடைக்கும். ஒருவேளை உங்கள் ஒரிஜினல் ஆவணம் கிடைத்துவிட்டால் சார்பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
_______________________________________
வீ டு வாங்குவோர் அவற்றின் பத்திரங்களையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். தாய் பத்திரம், கிரைய பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ் எல்லாவற்றின் அசல் பத்திரங்களையும் பாதுகாப்பாக வைக்கவும். இந்த ஆவணங்களின் அசல் பிரதிகளை நகல் எடுத்து வைக்க வேண்டும். இந்த ஆவணங்களை வீட்டில் பாதுகாக்க முடியாவிடில் பேங்க் லாக்கரில் வைக்கலாம். இந்த ஆவணங்களை ஒப்பந்தம் இல்லாத இடத்தில் அடகு வைப்பது, வெளிநபரிடம் கொடுப்பது, யாருடைய கடனுக்கோ கேரண்டி கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது செய்து இந்த ஆவணங்களில் மோசடி செய்ய நாமே வழி ஏற்படுத்தக்கூடாது. விற்பனை குறித்த பத்திரப்பதிவு முடிந்துவிட்டநிலையில் கிடைக்கும் கிரைய பத்திரம் ரொம்ப முக்கியமான ஆவணம். ஒரு வேளை அது தொலைந்து போகும் பட்சத்தில் என்ன செய்வது?
கிரைய பத்திரம் தொலைந்தது உறுதியானபட்சத்தில் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். ஆவணம் தொலைந்த தகவலை பத்திரிகையில் விளம்பரமாக வெளியிட வேண்டும். இதற்குபிறகு மாற்று பிரதி ஆவணம் வாங்க சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் கிரைய பத்திரம் காணாமல் போனது குறித்த காவல் துறைக்கு நீங்கள் அளித்த புகார், அந்த ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனும் காவல் துறையின் கடிதம், பத்திரிகையில் இது குறித்து நீங்கள் அளித்த விளம்பரம், இதன் மூலம் எந்த விவரமும் கிடைக்கவில்லை என்பதை உறதி செய்யும் நோட்ரி பப்ளிக் அளித்த சான்றிதழ் ஆவணம், மனையின் சர்வே எண் குறித்த விவரம், கிரைய பத்திரத்தின் நகல் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைகளுக்குப் பின் பிரதி ஆவணம் கிடைக்கும். ஒருவேளை உங்கள் ஒரிஜினல் ஆவணம் கிடைத்துவிட்டால் சார்பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment