திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 90 சதவீதம் தமிழே.. 90 சதவீதத்தை எட்டிய மறைக்கும் முயற்சி..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 90 சதவீதம் தமிழிலேயே உள்ளன.
அவற்றை மறைக்கும் முயற்சிகளும் 90 சதவீதத்தை எட்டிவிட்டன என்பது தனிக்கதை.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது "மதராஸ் மனதே" என சென்னைக்கும் தெலுங்கர்கள் சொந்தம் கொண்டாடிய போது "திருப்பதியா சென்னையா" எனும் இரண்டே இரண்டு ஆப்ஷன்கள் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையற்ற காரணத்தால் திருப்பதியை ஆந்திரத்திற்கு விட்டுக்கொடுத்து சென்னையைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ம.பொ.சி மட்டும் போராடாமல் இருந்திருந்தால் தமிழ்க்கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு திருத்தணி முருகன் தெலுங்கு பேசிக்கொண்டிருந்திருப்பார்.
திருப்பதியைப் பெற்றிருந்தால் சென்னையை இழந்திருக்கும் தமிழ்நாடு. திருப்பதி எனும் திருவேங்கடத்தையும் மீட்பதே தனது இலக்கு என்றிருந்தார் ம.பொ.சி.
எல்லை மீட்புப் போராளி சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தைப் போற்றி, திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த தினத்தை வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளனர் தமிழ் தேசிய ஆதரவாளர்கள்.
No comments:
Post a Comment