*உயிர்மெய் எழுத்துக் காதல் கவிதை*
*க* ண்டோர் மதிமயங்கும் உன் அழகும்.,
*கா* ணாதுருகும் மெல்ல என் உயிரும்.,
*கி* ளிபோல் கீச்சிடும் நறுந்தேன் மொழியும்.,
*கீ* ரிக் களிக்குமோ எனையுன் விழியும்.,
*கு* லமகள் குரலோ கவி மழைப் பொழியும்.,
*கூ* ந்தல் காட்டுக்குள், சென்றுவர இல்லையே வழியும்.,
*கெ* ட்டுத்திரியும் மனம், அவளையே சாரும் அப்பழியும்.,
*கே* ளாயோ?பூ மனமே, ஆசையை விட் டொழியும்.,
*கை* து செய்த கன்னியே, என்நிலை உனக்கெப்படி
புரியும்.,
*கொ* டுத்தெடு, இதயத்தை
என் அன்பினாழம் தெரியும்.
*கோ* ட்டையென் நெஞ்சை,
அவளன்பே ஆட்சிபுரியும்.,
*கெள* ரவத்தை காத்திடும்
அவளொரு கலங்கரை விளக்கம்..
No comments:
Post a Comment