Pages

Sunday, 22 April 2018

*உயிர்மெய் எழுத்துக் காதல் கவிதை* !!!!

*உயிர்மெய் எழுத்துக் காதல் கவிதை* 


*க* ண்டோர் மதிமயங்கும் உன் அழகும்.,

*கா* ணாதுருகும் மெல்ல என் உயிரும்.,

*கி* ளிபோல் கீச்சிடும் நறுந்தேன் மொழியும்.,

*கீ* ரிக் களிக்குமோ எனையுன் விழியும்.,

*கு* லமகள் குரலோ கவி மழைப் பொழியும்.,

*கூ* ந்தல் காட்டுக்குள், சென்றுவர இல்லையே வழியும்.,

*கெ* ட்டுத்திரியும் மனம், அவளையே சாரும் அப்பழியும்.,

*கே* ளாயோ?பூ மனமே, ஆசையை விட் டொழியும்.,

*கை* து செய்த கன்னியே, என்நிலை உனக்கெப்படி
புரியும்.,

*கொ* டுத்தெடு, இதயத்தை
என் அன்பினாழம் தெரியும்.

*கோ* ட்டையென் நெஞ்சை,
அவளன்பே ஆட்சிபுரியும்.,

*கெள* ரவத்தை காத்திடும்
அவளொரு கலங்கரை விளக்கம்..

No comments:

Post a Comment