கேள்வி : விண்ணியலை பற்றி முழு அறிவு எனக்கு கிடையாது,ஆர்வம் மட்டுமே உண்டு.
இருப்பினும் சிறு வயதிலிருந்தே ஒரு சில சந்தேகங்கள்.
விண்கற்கள் ஆஸ்ராயுடுகள் பற்றி படித்தேன்..
1)அந்த கல் மற்ற கிரகங்களை போல் அல்லாது காந்த ஈர்ப்பு விசைக்கு ஆட்படும் முன்னே எவ்வாறு நகர்கிறது?
2) நமது பால்வெளி அண்டத்தில் கிரகங்கள் நிலையாக நிற்காது சுழல காரணம் சூரியனின் ஈர்ப்பு விசையா?அப்படியெனில் அந்த ஈர்ப்பு விசைக்கும் ஒரு எல்லை உண்டு தானே?அந்த எல்லை தாண்டி இது போல கற்கள் நிலையாக நில்லாது நகருவது எப்படி?
விடை :
முதலில் அந்த விண்கற்கள் எப்போ எங்கே எப்படி உண்டானது என்று பார்ப்போம் .
நமது சூரிய குடும்பம் உண்டான கால கட்டத்திலேயே கிட்ட தட்ட 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உண்டானவை இந்த பாறைகள் . குறிப்பாக செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இவைகளை நிறைய காணலாம் . ஒரு பெல்ட் போல இவைகள் சுற்றி வருகின்றன. அந்த இடத்தில் அந்த காலத்தில் ஏதோ சிறு கிரகங்கள் போல அவைகள் உருவாக பார்த்து இருக்கின்றன. ஆனால் ஒரு வலிமையான தாதா பக்கத்தில் வேறு குட்டி தாதா வை உண்டாக அனுமதிக்க மாட்டார் அது போல கோள்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் நிலாக்கள் மிக நெருக்கமாக இருக்க அனுமதிபது இல்லை அவைகளின் ஈர்ப்பு அந்த நிலாவை துண்டாக்கி வெற்று பாறையாக ஆஸ்ட்ராயிடுகளாக மாற்றி விடும் (நமது நிலா ஒரு காலத்தில் அப்படி ஒரு அபாயமான நெருக்கத்தில் இருந்தது தான். நல்ல வேளை கொஞ்சம் கொஞ்சமாக அது நகர்ந்து தூரே சென்றதால் தப்பித்தது . அதன் நகர்வு இன்னும் தொடர்கிறது )
சனியை சுற்றும் அந்த வளையங்கள் என்ன தெரியுமா ?? சனிக்கு மிக நெருக்கமாக இருந்த நிலா அதன் ஈர்ப்பு காரணத்தால் பல ஆயிரம் துண்டாக சுக்கு நூறாக உடைந்த குட்டி குட்டி பாறை கற்கள் தான் அவை.
இப்படி செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையில் மற்றும் அதற்க்கு வெளியேயும் இப்படி பாறையாக சுற்றி திரியும் மொத்த ஆஸ்டிராயுடுகளின் மொத்த மாஸ் நமது நிலாவை விட குறைவு தான். ஆனால் பூமியில் மோதி பூமியை அழிக்கும் ஆற்றல் அவைகளுக்கு நிறையவே உண்டு.
சரி இப்போது கேள்விக்கு வருவோம்.
அவைகள் தனியாக எப்படி நகர்கின்றன.
விடை : கோள்கள் சூரியனில் ஈர்ப்பில் நகர்வது போல சுற்றி வருவது போல தான் அவைகளும் சூரியனின் ஈர்ப்பில் சுற்றி வருகின்றன அவைகளுக்கு ஒழுங்கான கோள வடிவமும் ஒழுங்கான சுழற்சியும் கிடையாது ஆனால் ஒரு கிரகம் தனக்கே உரிய சுற்றுவட்ட பாதை கொண்டிருப்பதை போல அவைகளும் பாதை கொண்டிருக்கின்றன.
என்ன பிரச்னை என்றால் வேறு கோள்கள் கொண்டுள்ள அதே பாதையில் சில விண்கற்கள் தங்கள் பாதையை வைத்து உள்ளன. ஆம் நமது பூமியின் சுற்ற வட்ட பாதையையே தமது சுற்று வட்ட பாதையாக கொண்டுள்ள பல விண்கற்களும் இருக்கின்றன. அவை பூமி பாதையிலேயே சுற்றி கொண்டும் இருக்கின்றன ஆனால் அவைகளின் வேகமும் பூமியின் வேகமும் ஒன்று அல்ல அதனால சுற்றி கொண்டே வரும் ஒரு கல் தீடீரென பூமியில் ஈர்ப்பு எல்லைக்குள் நுழையலாம் அப்போது அதீத வெப்பம் மற்றும் ஈர்ப்புடன் பூமி வழிமண்டலத்துக்குள் அவை ஊடுருவதால் வழியிலேயே எரிந்து விடும். ஆனால் அளவில் மிக பெரிய கற்கள் எப்போது வேணா நுழையும் வாய்ப்பும் உண்டு அப்படி ஏதும் நுழைந்து விட்டால் அடுத்த கட்டுரைக்கு நாம் இல்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு.
No comments:
Post a Comment