Pages

Tuesday, 3 April 2018

சர்வதேசஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.

ஏப்ரல் 2 ஆம் தேதி !!!!!! 

--------------

(WORLD AUTISM AWARENESS DAY)

 *சர்வதேசஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.*


*நோக்கம்:-*
-----------
'ஆட்டிசம்' குறைபாடுகள் பற்றி பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

உலகின் வளர்ச்சி அடைந்த  நாடான அமெரிக்காவில் 166 பேருக்கு ஒருவருக்கும், சுவிட்சர்லாந்து 100 பேரில் ஒருவருக்கும் இந்த ஆட்டிசம் குறைபாடு காணப்படுகிறது.

இந்தியாவில், சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 *ஆட்டிசம்:-*
----------
ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு( Development disability) மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாத ஒரு குறைபாடு.

பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் துவங்கும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள்.

இன்னதென்று வகைப்படுத்த இயலாது பல வித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும் 'ஆட்டிசம்' மருத்துவரீதியாக ஒரு *Spectral Disorder* என அழைக்கப்படுகிறது.

*ஆட்டிசத்தின் தன்மைகள் :*
--------------
சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள்.

அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது.

 சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள்.

மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை.

தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை,உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் (PRETEND PLAY) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள்.

புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு.

*ஆட்டிசம் பாதிப்பு:-*
--------------
ஆட்டிசம் பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது.

*நமது கடமைகள்:-*
--------------
பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட 'ஆட்டிசம்' பற்றியோ, அந்தக் குறைபாடுள்ள நபர்களை கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளை கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்ய வேண்டும்.

*ஆட்டிசத்தின் அறிகுறிகள்:*
-----------------------
ஆரம்பக் கட்டத்திலேயே 'ஆட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது.

ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான் ' ஆட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

*சில உதாரணங்கள்:*
--------------
நடத்தை ரீதியான அறிகுறிகள்,

கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
தாமதமாகப் பேசத் தொடங்குதல்
விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ / உணரவோ அறியாதிருத்தல்
சமவயதுள்ள நபர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் அல்லது அந்த உறவை  நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்.
   
*காரணம்:-*
-----------
தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல்.

மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு.

செக்ரடின் என்ற ஹார்மோன் குறைபாடு.

 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல,  அதை ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், உருவாக்கிட நம்மால் மட்டுமே முடியும்.
--------------
 *நமது இந்தியாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கடவுளின் குழந்தைகள்.*
*அவர்களுக்கு செய்யும் தொண்டு நாம் கடவுளுக்கு செய்யும் தொண்டு.*


*ஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள்*

அந்நாளில், வாய்ப்பு உள்ளவர்கள் உங்கள் ஆடை நீல வண்ணத்தில் இருக்குமாறு பார்த்து அணியுங்கள் (பேஸ்புக்கில் ப்ரேபைல் படமாகக்கூட வைத்துக்கொள்ளலாம்)

ஏன் நீலம்?

ஆட்டிச பாதிப்புக்கு உள்ளாகுபவர்களில் நான்கில் மூவர் ஆண் பிள்ளைகளே. ஆண்களுக்கான வண்ணமாக நீலம் சொல்லப்படுகிறது. அதனால்தான் நீலம்.

*நாம் ஏன் அணியவேண்டும்.*

இணையத்தில் உலா வரும் உங்களுக்கு ஆட்டிசம் பற்றிய தெளிவு இருக்கலாம். ஆனால் இணையத்தில் இல்லாத மக்கள் இங்கே நாட்டில் அதிகம்.. அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும். ஆட்டிச நிலையாளர்களை புரிந்துகொண்டு நாம் நடக்கவும் இது உதவக்கூடும்.

*நாம் நீல ஆடை அணிந்தால் எப்படி உதவமுடியும்?*

நீங்கள் நீல வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களைப்போலவே பலரும் அணிந்திருக்கிறார்கள்.நீலவண்ணத்தில் ஆடை உடுத்தாத ஒருவர் உங்களிடம், “என்னன்னு தெரியல.. இன்னிக்கு நிறையபேரு ப்ளூ ட்ரஸுல பார்க்கிறேன்” என்று சொன்னால்..நீங்கள் அவர்களுக்கு ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் பற்றியும், ஆட்டிச நிலையாளர்களைப்பற்றியும், அவர்களை நாம் புறக்கணிக்கக்கூடாது என்பது பற்றியும் சொல்லிப்புரிய வைக்கலாம்.

*இப்படி செய்தால்..?*

இப்படியே பலரும் ஆட்டிசம் பற்றி பேசுவதால், வரும் காலங்களில் ஆட்டிசநிலையாளர்கள் பற்றிய ஒரளவேணும் இங்கே புரிதல் ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது ஆசை.இச்சமூகத்தில் ஆட்டிச விழிப்புணர்வுக்கு நாம் எடுத்துவைக்கும் முதல் படியாக உங்களில் நீலவண்ண ஆடை அமையட்டும்.




(இந்தியா உட்பட, உலகின் பல இடங்களில் ஏப்ரல் 2ஆம் தேதி, அரசு கட்டிடங்கள் நீலவண்ணத்தில் மின்னுகின்றன)

No comments:

Post a Comment