Pages

Monday, 15 February 2021

உலகின் தலைசிறந்த வேத நூல்கள் " தமிழர்களின் வாழ்வியல் " தான்.

 இந்து,கிறிஸ்துவம்,இஸ்லாம் இது போன்ற பல மதங்களுக்கு இணையாக இனம்,மொழி,மதம்,சமயம்,சாதி,பேதம் என இல்லாமல் ஒரு வாழ்வியல் முறை தான் தமிழனின் வரலாறு. இதை அனைத்து உலக மக்களுக்கும் ஒரு வாழ்வியலாக எடுத்து உரைக்க வேண்டும் .



1. இன்றைய நேபாளம் , அன்றைய பாரதத்தில் இருந்து வந்த ஒருவர் தான்.கௌதம புத்தர். இவர் புத்த சமயத்தை பரப்பினார். பிறப்பு கிமு 563.

2. நாசரேத் , கலிலேயா தேசத்தில் இருந்த வந்த ஒருவர் தான் இயேசு கிறிஸ்து. இவர் கிறிஸ்துவத்தை பரப்பினார். பிறப்பு - கிமு 6 .

3. மக்கா , அரபியா தேசத்தில் இருந்து வந்த ஒருவர் தான் முகமது நபி.இவர் இஸ்லாமத்தை பரப்பினார். பிறப்பு கிபி.570.

பல மதங்களும் , சமயங்களும் இருந்தாலும் இதில் மூவரும் தான் இன்றைய மதங்களின் பெரும்பான்மையானவர்கள்.

1. புத்தர் 

நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். 

2. இயேசு 

இவரும் மக்களின் ஒழுக்கம் , செயல் , இறைநம்பிக்கை , அன்பையும், நீதியையும், தனிமனித சுதந்திரத்தை போதித்தவர்.

3. முகமது நபி 

இவரும் ஒழுக்கம் , அன்பு , இறைநம்பிக்கை , இறைச்செய்தி ,நற்பண்பு ,நற்குணம் ஆகியவைகளை போதித்தார்.

இதில் அடிப்படை உண்மை என்னவென்றால் ??

மூவரும் அவர்களுக்கு போதித்த அல்லது அறிந்து கொண்ட , மற்றும் இவர்களை சிறுவயதில் இருந்து வழிநடத்திய ஆசனோ அல்லது குருவோ யார் வேண்டும் என்றாலும் காரணமாக இருக்கலாம் இவர்களின் வாழ்க்கையை மாறியதற்கு !!!!! 

இவர்கள் தலைசிறந்தவராக உருவாக்க காரணமானவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஒரு நபரோ அல்லது இருவரோ அல்லது எண்ணிக்கையில் அடங்காத நபர்களும் இருக்கலாம். 

ஆனால் இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக இருந்து இருப்பார்கள்.

இப்பொழுது இவர்களும் ஏதோ ஒரு வழியில் , குருக்குலம் , பாடச்சாலை , கல்வி பயின்றவர்களின் மாணவனாக இருந்து  இருக்கலாம் அல்லவா !!!

சரி , நான் விடயங்களுக்கு வருகிறேன்.


தமிழ் !!!



" தமிழ் " உலக மொழியின் தாய்மொழி ஆகும். இது பல புலவர்கள் , அறிஞர்கள் , பேராசிரியர்கள் , விஞ்ஞானிகள், தொல்லியல் ,வரலாற்று அறிஞர்கள் ,  அறிவியலாளர்கள் ,  அனைவருக்கும் ஏற்றுக்கொண்ட ஒன்று.

சங்க இலக்கியங்களில் உலகின் இமயம் தொல்காப்பியம்.

தமிழில் தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம்,தமிழிலேயே எழுதப்பட்டது.

இதன் ஆண்டு கி.மு. 5320. தமிழில் 13,691 தொடை இலக்கணங்கள் உள்ளன. தமிழின் வயது 50 ஆயிரம் ஆகும்.

கவிதை ,பாடல் ,நூல்களுக்கு இலக்கணங்கள் தான் அனைத்திற்கும் முதன்மையானது . ஏனென்றால்  எழுத்துக்கள் கோர்வையாக அமையவதற்கு  இலக்கணமே காரணம்.

ஆனால் இலக்கணத்துடன் ஒரு நூல் உருவாவதற்கே 50 ஆயிரம் ஆண்டுகள் என்றால் , 

அந்த இலக்கணங்களுக்கு முன்பே இலக்கியங்களில் 50 ஆயிரம் ஆண்டு கடந்து உள்ளது.

இப்பொழுது ஒரு இலக்கணம் , இலக்கியம் உருவாவதற்கு அடிப்படையான எழுத்துக்களின் வயது

கிமு 1 லட்ச ஆண்டுகளுக்கு முன்பு.

இது ஒரு வரையறு தான் . துல்லியமாக கூற முடியாத ஆண்டுகளாக கூட இருக்கலாம்.

ஆக ஒரு எழுத்துக்கள் உருவம் பெறுவதற்கு முன்பே ஒலி வடிவங்களை பெற்று தான் ஒரு எழுத்து வடிவத்திற்கு உருமாறி இருக்கிறது. 

அப்பொழுது ஒலி வடிவத்தில் இருந்த தமிழ் மொழியின் வயதை மனித இனத்தால் கணக்கிட முடியாத ஒன்று. காரணம் கணக்கில் அடங்காத ஆண்டுகளாக இருக்கலாம். 




உலகில் தமிழ் தேசம் ( நாடு)
புனித தன்மை உடையது என்பது
உலகமே அறிந்து ஒன்று.
கடவுளின் படைப்பில் இயற்கையும் ,
இயற்கையின் படைப்பில்
தமிழ் தேசமும் என்றும் சிறப்புடையதாகும்.
நாம் அறியாதவைகள் பல ,
அதில் நாம் அறிந்தவைகள் சில !!!!!

 

இவ்வளவு பழமைகளையும் , தொன்மைகளையும் உடைய மொழி தான் தமிழ் மொழி. இதை உலகமொழியின் தாய்மொழியாக விளங்குகிறது. தமிழ் இலக்கிய , இலக்கண நூல்களும் , புராணங்களும் மற்றும் இவைகளும் 

18 சங்க இலக்கிய  நூல்கள்.


சங்க இலக்கிய நூல்கள்

எட்டுத் தொகை நூல்களையும் பத்துப் பாட்டுகளையும் கொண்டது சங்க இலக்கியம்.  பழைய உரையாசிரியர்கள் இந்த இலக்கியத்தைச் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிட்டார்கள்.   இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.  இதில் உள்ள பாடல்கள் அகம் (உள்) புறம் (வெளி) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.  சங்க இலக்கியம் இயற்கை இலக்கியமும் ஆகும். பல வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் யாவும் அதில் உள்ளன.

எட்டுத்தொகை

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.

  1. நற்றிணைஇது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.   இவற்றில் 1 பாடல் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை (234). ஒரு பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை (285). பாடல்கள்  8 – 13 வரிகள் கொண்டவை.
  2. குறுந்தொகைஇது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 4 – 8 வரிகள் கொண்டவை.
  3. ஐங்குறுநூறுஇது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.  குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகிய ஒவ்வொரு திணையிலும் நூறு பாடல்கள் கொண்டது.  ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களையும், அம்மூவனார் நெய்தற் திணைப் பாடல்களையும், கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களையும், ஓதலாந்தையார் பாலைத் திணைப் பாடல்களையும், பேயனார் முல்லைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர்.  இந்த நூலில் 2 பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை (129,130) .  பாடல்கள் 3 – 6 வரிகள் கொண்டவை .
  4. பதிற்றுப்பத்துஇது ஒரு புற நூல். சேர மன்னர்களுக்காக எழுதப்பட்ட நூல். பத்து மன்னர்களுக்காக, ஆளுக்கு 10 பாடல்கள் எழுதப்பட்டன.  ஆனால் 80 பாடல்கள் தான் நமக்குக் கிடைத்துள்ளன.   பாடல்கள் 8-56 வரிகள் கொண்டவை.
  5. பரிபாடல்இது அகமும் புறமும் கொண்ட நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  பாடல்கள் முருகனுக்கும், திருமாலுக்கும், வைகை நதிக்கும் எழுதப்பட்டன. மொத்தம் 70 பாடல்கள் எழுதப்பட்டன.  நமக்குக் கிடைத்தது 22 பாடல்கள்.  பாடல்கள் 32 – 140 வரிகள் கொண்டவை.
  6. கலித்தொகைஇது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 11 – 80 வரிகள் கொண்டவை.  ஆயர் குடியினரின் ஏறு தழுவுதல் பற்றிய விவரங்கள் இந்த நூலில் மட்டுமே உள்ளன.
  7. அகநானூறுஇது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 13 – 31 வரிகள் கொண்டவை.  மொத்தம் 200 பாடல்கள் பாலைத் திணையிலும்,  80 பாடல்கள் குறிஞ்சித் திணையிலும், 40 பாடல்கள் முல்லைத் திணையிலும், 40 பாடல்கள் நெய்தற் திணையிலும், 40 பாடல்கள் மருதத் திணையிலும் உள்ளன.
  8. புறநானூறுஇது ஒரு புற நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 4 – 40 வரிகள் கொண்டவை.  மூவேந்தர், குறு நிலமன்னர், பாணர், புலவர், விறலியர், கொடை, மறம், வீரர்கள்,  நாடு, மலை, போர், வீரத்தாய்மார்கள், இறந்த மன்னர்களின் புகழைப் பாடுதல், வாழ்க்கையின் நிலையாமை, மன்னர்க்குப் பெண் தர மறுத்தல் என்று பல செய்திகள் இதில் உள்ளன.  மேலும், பரணர், ஔவையார், கோவூர் கிழார், மாங்குடி கிழார் போன்ற பெரும் புலவர்கள் தங்களை பாணர்களாக பாவித்து பாடும் 32 பாடல்கள் உள்ளன.

பத்துப்பாட்டு

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.”

இவற்றில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள்.  ஆற்றுப்படுத்தல் என்றால் ‘வழி காட்டுதல்’ என்று பொருள்.  திருமுருகாற்றுப்படை முருகனை அடையும் வழியைக் காட்டும் நூல்.  மற்ற நான்கு ஆற்றுப்படை நூல்களும் மன்னன் ஒருவனிடம் பரிசு பெற்ற பாணன் இன்னொரு பாணனுக்கு மன்னனிடம் சென்று பரிசு பெரும் முறையை விவரமாகக் கூறுவது.  மன்னர்கள் தமிழை வளர்த்த பாணர்களின் மேல் கொண்ட அன்பையும் மதிப்பையும் நாம் ஆற்றுப்படை நூல்களில் காணலாம்.

  1. திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை): இது ஒரு ஆற்றுப்படை நூல்.  317 அடிகளைக் கொண்டது. புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் முருகனைப்பற்றி எழுதியது. முருகனுடைய அறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகள் இதில் உள்ளன.  அவை திருப்பரங்குன்றம்,  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகியவை.  முருகனுடைய 6 முகங்களின் இயல்பு, 12 கைகளின் தொழில் ஆகியவற்றைப் பற்றியும் விவரங்கள் உள்ளன.
  2. பொருநராற்றுப்படைஇது ஒரு ஆற்றுப்படை நூல்.  248 அடிகளைக் கொண்டது.  புலவர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகால் பெருவளத்தானுக்காக எழுதியது.  இதில் பாலை யாழ் மிகச் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியின் பேரழகைப் புலவர் அழகாக விவரிக்கின்றார்.   சோழ மன்னன் கரிகாலன் தன்னை நாடி வந்த பாணனுக்கு நான்கு வெள்ளைக் குதிரைகள் கொண்ட தேரைக் கொடுத்து, ஏழு அடி பின் நடந்து, பாணனைத் தேரில் ஏறக் கூறிச் சிறப்பிப்பதாகக் குறிப்பு உள்ளது.  சோழ நாட்டின் வளமும் காவிரியின் வளமும் விவரிக்கப்பட்டுள்ளன.
  3. சிறுபாணாற்றுப்படைஇது ஒரு ஆற்றுப்படை நூல்.  269 அடிகளைக் கொண்டது.  புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் குறுநில மன்னன் ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனுக்காக எழுதியது.  இந்தப் பாட்டில் சேர நாட்டின் வளம், சோழ நாட்டின் வளம், பாண்டிய நாட்டின் பெருமை, கடையெழு வள்ளல்களின் சிறப்பு யாவும் கூறப்பட்டுள்ளன.  மன்னனை நோக்கிச் செல்லும் வழியில், அவனுடைய நாட்டில் வெவ்வேறு நிலங்களில் வாழ்பவர்கள் பாணர்க்குச் செய்யும் உபசரிப்பைப் பற்றியும் அறிகின்றோம்.
  4. பெரும்பாணாற்றுப்படைஇது ஒரு ஆற்றுப்படை நூல்.  500 அடிகளைக் கொண்டது.  புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறுநில மன்னன் தொண்டைமான் இளந்திரையனுக்காக எழுதியது. இந்தப் பாட்டில், பாதையில் மாட்டு வண்டியில் செல்லும் உப்பு வணிகர், கழுதையின் மேல் பண்டங்களைக் கொண்டு செல்லும் பிற வணிகர், காட்டு மக்களின் வாழ்க்கையும் விருந்தோம்பலும், குறிஞ்சி நிலத்தில் வாழ்வோர் வாழ்க்கை முறை, இடையர் குடியிருப்பு, முல்லை நிலத்தினர் பயணிகளுக்குக் அளிக்கும் உணவு, மருத நிலத்தின் காட்சிகளும் விருந்தோம்பலும், சர்க்கரை ஆலை, மீனவர் குடியிருப்பும் விருந்தோம்பலும், அந்தணர் குடியிருப்பும் விருந்தோம்பலும், கலங்கரை விளக்கம், காஞ்சீபுரத்தின் சிறப்பு, இளந்திரையனின் சிறப்பு, அவனுடைய விருந்தோம்பல் ஆகியவற்றை நாம் காணலாம்.
  5. முல்லைப்பாட்டுஇது 103 அடிகளைக் கொண்டது.  புலவர் நப்பூதனார் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனுக்காக எழுதியது.  இந்தப் பாட்டில் மன்னனின் பாசறை, அவன் பணியில் உள்ள யவனர், பாசறையில் பணி புரியும் பெண்கள், தண்ணீர் மணி காட்டி, தன் வீரர்களை நினைத்து வருந்தும் மன்னன், மன்னனை நினைத்து ஏங்கும் அவன் மனைவி, ஏழு மாடத்து அரண்மனை, முல்லை நிலத்தின் அழகான வருணனை யாவற்றையும் காணலாம்.
  6. மதுரைக்காஞ்சிஇது 782 அடிகளைக் கொண்டது.  புலவர் மாங்குடி மருதனார் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்காக எழுதியது.   மதுரை நகரில் உள்ள கடைகள், நிகழ்வுகள் யாவற்றையும் மிகச் சிறப்பாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார் மாங்குடி மருதனார்.  இந்த நூலில் நெடுஞ்செழியனின் நால்வகைப் படையின் வலிமை,  அவனது வீரமும் சிறப்பும், பாணர்களுக்கு யானைகளையும் பொன்னால் செய்த தாமரை மலர்களை மன்னன் கொடுப்பது, பாண்டிய நாட்டின் மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல்  ஆகிய நிலங்களின் சிறப்பு, மதுரை நகரின் கோட்டையும், அகழியும், நாள் அங்காடி, இரவு அங்காடி, பௌத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்தணர் பள்ளி, நீதி மன்றம், இரவின் மூன்று சாமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், மதுரையின் ஒலிகள், தொழில் மாக்கள், மதுரையின் சிறப்பு யாவற்றையும் நாம் காணலாம்.
  7. நெடுநல்வாடைஇது 188 அடிகளைக் கொண்டது.  புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எழுதியது. மன்னனின் பெயர் கிடைக்கவில்லை.  ஆனால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்காக எழுதப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.  இந்தப் பாட்டில்  நீண்ட குளிர் காலத்தினால் துன்பத்தில் தவிக்கும் இடையர்கள், பறவைகள், குரங்குகள், மற்றும் மாடுகள், மழைக் காலத்தின் செழிப்பு, மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடும் பெண்கள், அரண்மனையைக் கட்டும் வல்லுநர், அரண்மனையின் அமைப்பு, அந்தப்புரத்தின் அமைப்பு, அரசியின் அழகிய வேலைப்பாடு அமைந்த கட்டில், அரசி கணவனை நினைத்து வருந்தும் நிலைமை, பாசறையில் மன்னனின் நிலைமை யாவற்றையும்  காணலாம்.
  8. குறிஞ்சிப்பாட்டுஇது 261 அடிகளைக் கொண்டது.  புலவர் கபிலர் ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழரின் களவு முறைத் திருமணத்தை இந்தப் பாடல் மூலம் விவரிக்கின்றார்.   தோழி தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட அன்பைப் பற்றி தலைவியின் தாயிடமும் செவிலித் தாயிடமும் கூறி, திருமணம் வேண்டுவதை ‘அறத்தோடு நிற்றல்’ என்று தமிழ்ச் சான்றோர் கூறினர்.   இந்தப் பாட்டில் தோழி ஒருத்தி தலைவியின் தாயிடம், தலைவி தலைவனைத் தினைப் புனத்தில் எப்படிச் சந்தித்தாள், காட்டு யானையிடமிருந்து தலைவன் அவர்களை எப்படிக் காப்பாற்றினான்,  தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வாறு அன்பு ஏற்பட்டது,  தலைவன் எவ்வாறு திருமணத்தை நாடுகின்றான், தலைவன் கொடூரமான பாதையில் இரவில் தனியே வருவதால் அவனுக்குத் துன்பம் நேரிடும் என்று தலைவி வருந்துகின்றாள், என்றெல்லாம் விவரமாகக் கூறுகின்றாள்.  கண்கள் சிவக்க அருவியில் குளித்து விட்டு 99 மலர்களால் தலைவியும் தோழியும் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் காட்சி சிறப்புடையது.
  9. பட்டினப்பாலைஇது 301 அடிகளைக் கொண்டது.   புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தானுக்காக எழுதியது.  காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிய விவரங்கள் நிறைந்த நூல் இது.  இந்தப்பாட்டில் சோழ நாட்டின் வளமை, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, முனிவர்கள் வாழும் தவப் பள்ளிகள், மறவர்களின் விளையாட்டுக் களம், பரதவர் இருப்பிடம், காவிரிப்பூம்பட்டினத்தின் இரவு நிகழ்ச்சிகள், வரி வசூலிப்பவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி, மாளிகைகள், பல்வேறு கொடிகள், உழவர், அந்தணர், வணிகர் ஆகியோர் பற்றிய விவரங்கள், ஊரின் செல்வம், கரிகாலனின் போர்த் திறமை, யாவற்றையும் நாம் காணலாம்.
  10. மலைப்படுகடாம் (கூத்தராற்றுப்படை): இது ஒரு ஆற்றுப்படை நூல்.  583 அடிகளைக் கொண்டது.  புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் குறுநில மன்னன் நன்னன் வேண்மானுக்காக எழுதியது.   இந்தப்பாட்டில் பாணர் குடும்பம் பல்வேறு இசைக் கருவிகளை சுருக்குப் பைகளில் கட்டிக் கொண்டு செல்வது, நன்னனின் சிறப்பு, நவிர மலையின் தன்மை, பாதையில் உள்ள நல்லதும் பொல்லாததும், கானவர் குடியும் விருந்தோம்பலும், நன்னனின் மலை நாட்டுச் செல்வம், இரவில் பயணம் கூடாது என்ற அறிவுரை, கவணிடமிருந்து தப்புதல், வழுக்கி விழாமல் பாதையில் செல்லுதல், இறைவனைத் தொழுது செல்லுதல், இரவில் குகையில் தங்குதல், மலைப் பாம்பிடமிருந்து தப்பித்தல், மலை மக்களின் விருந்தோம்பல்,  மலையின் ஒலிகள், வழியில் காணும் கோட்டைகளும் நடு கற்களும், உதவும் மறவோர், சிற்றூரின் விருந்தோம்பல், உழவர்களின் உதவி, நன்னனின் அரண்மனை, நன்னனின் கொடைத் தன்மை யாவற்றையும் நாம் காணலாம்.

கற்காலம் முதல் பண்டைய காலம் ,  சங்கக்காலம் தொடர்ந்து 































இதை தாண்டி இன்னும் பல கோடிக்கணக்கான நூல்களும் , பாடல்களும் , கடவுள் பாடல்களும் இருக்கிறது தமிழ் மொழியில் !!!!!

இதில் இல்லாத ஒன்றையா அந்த மூவர்கள் கூற போகிறார்கள். நிலைபாடு என்னவென்றால் , இவர்கள் மூவரையும் விட பலக்கோடிக்கணக்கான புலவர்களும் , அறிஞர்களும் இருந்து இருக்கிறார்கள் என்பது பல சான்றுகளும் , சுவடுகளும் உள்ளது.வரலாறு என்பது பல தொன்மைகளையும் உள்ளடக்கியது என்பதற்கு தமிழ்மொழியும் , தமிழர்களும் ஒரு சான்று.







எதோ ஒரு நாட்டில் பிறந்து , வளர்ந்து அவரவர்களுக்கு என்னென்ன தெரியுமோ அல்லது கற்றதையோ அல்லது கற்க முயன்றதையோ பற்றி தான் இவர்கள் பரப்பி இருக்கிறார்கள்.

தொன்மையும் , வரலாற்றும் மறந்த எத்தனையோ தமிழர்களும் இன்றுவரை பல மதங்களிலும் , சமயங்களிலும் இருக்கிறார்கள்.


 நேபாளம் ,கலிலேயா , அரபியா தேசத்தில் இருந்து வந்தேறியவர்கள் மற்றும் வந்தேறியவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் சீடர்கள் , தூதர்கள் , போதகர்கள் என பலவகைகளாக என் மரபுவழியில் இருக்கும் நபர்களையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறார்கள். இதை தவறு இன்று கூறவில்லை.ஆனால் என் குலம் , என் இனம் , என் மரபு , அனைத்தையும் மறக்கடித்து , அன்னிய மற்றும் அயலான்களின் பழக்கவழக்கங்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது கூட அறியாத தமிழர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை உணர்த்த எண்ணுகிறேன்.

உலகில் முதன் முதலில் தோன்றிய மனித இனம் தமிழர்கள். இதை தமிழர்களும் , உலகமும் அறியும். மரபுவழியை மறந்தவர்களை மீட்க தான் போராடுகிறேன். 

சரி !!! என் இலக்கு தமிழர்களை மீட்பது மற்றும் தமிழர்களின் வாழ்வியலை உலகம் அறிய செய்து அனைவரிடத்திலும் தமிழர்களின் வாழ்வியலை அவரவர் வாழ்க்கையின் இலக்கணமாக அமைய விரும்புகிறேன். 

நான் கூறுவது தவறு என்றால் , தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் தோழர்களே.

நான் இவ்வாறு கூறுவது தவறு என்றால் , அந்த மூவரும் போதித்ததும் , தோற்றுவித்ததும் , மார்க்கமாக உருவாக்கியது தவறு தான்.

உலகில் உள்ள ஒவ்வொரு நபர்களையும் மாற்றுவது என் பணி அல்ல , காரணம் மூவர் செய்த தவறை நான் செய்ய விரும்பவில்லை. 

ஒவ்வொரு நபர்களையும் அவர்களின் வாழ்க்கையின் வாழ்வியலை கற்பிப்பது தான் என் பணி.

1. பகவத் கீதை நூல் 

2.புத்த சமய நூல் 

3.கிறிஸ்துவம் விலிலியம் நூல்

4. இஸ்லாமின் திருக்குர்ஆன் நூல்


இந்த நூல்கள் அனைத்தும் என் மரபுவழியில் முன்னோர்களின் நகல் நூல்கள் அதாவது ஆங்கிலத்தில் ( Copy And Paste). இதை நான் ஏற்க மாட்டேன்.என் மரபு வழி தமிழர்களை ஏற்க விட மாட்டேன்.  என் மரபு , என் இனம் ,என் மொழி இவைகளுக்காக நான் போராடுவேன்.இதை எதிர்க்கவோ அல்லது என் மரபுவழி வந்தவர்களை வைத்து எதிர்த்தலோ அவர்களையும் எதிர்பேன்.

என் இனத்திற்கும் , என் மரபுக்கும் , என் மொழிக்கும் எதிராக என் மக்களே வந்தாலும் நான் அவர்களை எதிர்க்க துணிவேன்.

மேலே கொடுக்கப்பட்ட ஒளிப்பட வரிசையின் இலக்கிய , இலக்கண நூல்களுக்கு இணையாக மத நூல்கள் நிற்க இயலாது. 

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் , மதங்களை தவிர்த்து , தன் வாழ்க்கையின் வாழ்வியலை கற்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.  தமிழர்களின் வாழ்வியல் பற்றி உலகம் ஒருநாள் புரிந்தும் , அறிந்தும் கொள்ளும் என்று நம்புகிறேன். 

உலக மக்களிடம் தமிழ் உணர்வுகளையும் , வாழ்வியலை விதைக்கிறேன். தமிழும் ,தமிழர்களும் உலகபொதுமறை என்பது உலகம் அறிய வேண்டிய நாட்கள் இன்னும் சில தினங்களில் !!!!!!!

முதற்றாய் மொழி மூலமொழி தமிழ் , உலகம் முழுவது உருண்ட தமிழ். 

உலகின் தலைசிறந்த வேத நூல்கள்

 " தமிழர்களின் வாழ்வியல் "  தான்.



சைவ சித்தாந்தம் ஒன்றை சொல்கிறது கடவுள் அருள் என்பது எப்போதும் கஸ்டத்தை தீர்ப்பது அல்ல கஸ்டத்தை தீர்ப்பதற்கோ கடந்துவருவதற்கோ உண்டான மன மற்றும் அறிவு பலத்தை தருவது. எளிமையாக சொன்னால் கடவுள் அருள் என்பது ஒருவரின் தேவையை அடைவதற்கான சிந்தனை அவ்வளவே..

உலகில் பரிமண வளர்ச்சியில் மனிதனை இறுதியாக படைத்ததற்கு காரணம் ?பரிமாண வளர்ச்சி இறுதியாக உருவான ஒரு இயற்கை உயிரினம் மனிதன் தான்.மனிதனுக்கு மட்டுமே அனைத்து உயிர்களையும் வாழ வைக்க தகுதி உண்டு.

காரணம் 

மனிதன் இவ்வுலகில் உள்ள உயிரினங்களையும் , இயற்கையும் பாதுகாக்கவும் , வளர்ச்சி அடையவும் செய்ய இயலும் என்பதே உண்மை.

மனிதனால் மட்டும் அனைத்தையும் காக்க இயலும் என்பது தான்.

அதாவது தன்னைதானே காத்துக்கொண்டு , மற்ற உயிரினங்கள் மீது பாதுகாப்பும் , அன்பு சாட்டவும் மனிதனால் மட்டுமே முடியும்.

ஆனால் இந்த பரிமணத்தில் ஒவ்வொரு ஆண்டுகளாக மேற்கொண்ட வளர்ச்சியில் ,மனிதன் மேலும் வளர்ச்சி அடைய செய்தது இயற்கையின் வரபிரசாதம்.

                                      நன்றி

                     தமிழால் இணைவோம் !!!
                       அறிவால் உயர்வோம் !!!
                               தமிழ் வாழ்க !!!
            அறிவியலின் தேடல் தொடரும்.
                         வலியே  " வலிமை "
                   - அய்யனார் (வால்வரின்)..














No comments:

Post a Comment