ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் தரித்த முதல் வாரத்தில் இருந்தே பெண்ணின் உடலில் beta-HCG என்ற ஹார்மோன் உண்டாகும்…ப்ரஜிஸ்ட்ரான் என்ற சுரப்பு உங்கள் உடலில் அதிகமாகும்…கருவைக் காக்க வேண்டிய கடமை இந்த சுரப்பி யை சார்ந்தது . இவை இரண்டுமே குமட்டல் வாந்தி போன்ற தொந்திரவுகளை கொடுக்கும்.. BetaHCG முதல் மூன்று மாதம் வரை morning sickness என்ற சொல்லும் வாந்தி குமட்டலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.. சுவை மாறுதல் காரணமாக சரிவர சாப்பிட முடியாததால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.. அதன் பிறகு உண்டாகும் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த சர்க்கரை மயக்கத்தைக் கொடுக்கும் மற்றும் ஏற்கனவே அப்பெண்ணுக்கு ரத்த சோகை இருப்பின் மயக்கம் ஆதலை அதிகரிக்கும்.. இது சராசரியாக கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் தொந்திரவுகள்.. இதற்கு மேல் அவரவர் உடல்நிலை சார்ந்து வெவ்வேறு தாக்கங்கள் உண்டாகும்..
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழி திருமதி.திவ்யா அருள் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment