உலகில் தோன்றிய மொழிகளிலேயே முதன்மை மொழி,
சிறந்த மொழி,
நம் மொழி
அதுவே
தமிழ் மொழி
நான் பொதுவாக தமிழ் மொழியை ஒரு "மர்மமான மொழி" எனக் கூறுவேன்.
ஏனென்றால் இந்த மொழியைப் பற்றி நீங்கள் புறநானூற்றில் ஆராய்ந்தால் அது தொல்காப்பியத்தைக் கைகாட்டும்.
தொல்காப்பியத்தை ஆராய்ந்தால் அது அகத்தியத்தை கைகாட்டும்..
இப்படி இந்த மொழியைப் பற்றி ஆராய ஆராய இதன் தரவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
தோன்றிய இடம் தெரியவில்லை.
பயணிக்கும் காலமோ கணக்கில் இல்லை.
நீங்கள் ஒன்றைப் படித்தால் அந்த நூலில் அந்தப் புலவர் கூறியதைப்போல.. எனக் கூறிக்கொண்டே பட்டியல் நீளும்.
உலகிலேயே ஒரு மொழியை அன்னையாக வடிவமைப்பது என்பது எங்கும் நடைபெறாத ஒன்று.
ஆனால் அதற்கும் மேலாக அந்த அன்னைக்கே ஒரு கோவில் அமைக்கப்பட்டிருப்பது தமிழ் மொழிக்கே உள்ள தனித்துவம்
தமிழ் மொழியின் ஆரம்ப கால எழுத்துக்கள், அதாவது ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து இளைஞனாவதைப் போல தமிழின் இன்றைய இளமைக்குக் காரணமான அன்றைய ஆரம்ப கால எழுத்துக்கள் இன்றும் உலகளவில் தொடர்ந்து கிடைக்கப் பெறுகின்றன.
தமிழ் என்ற வார்த்தைக்கே அழகு, இனிமை, இயற்கை என பல பொருள்கள் உள.
"தமிழ்" என்ற வார்த்தையில் வரும் 'ழ' கரத்தைப் போல எந்த ஒரு மொழியிலும் நாவை மடக்கி இனிமையாக ஒலிக்கும் எழுத்துக்கள் ஏதுமில்லை.
நீங்கள் பிற மொழிகளில் ஒரு பொருளைக் குறிக்க எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்?
1,2,3,… இப்படி விரல் விட்டு எண்ணிடலாம்.
ஆனால் தமிழ் மொழியிலோ "யானை" என்ற ஒரு பொருளை மட்டும் 44 சொற்கள் வழங்குகின்றன.
இத்தகைய மொழியை தமிழ்விடு தூது,
இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்
என்று புகழ்கிறது.
ஒரே எழுத்தைக் கொண்டு பொருள் தருவது மிகக் கடினம்.
ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் A என்ற ஒரு எழுத்துக்கு மட்டுமே ஒரு சில பொருள்கள் உள்ளன.
ஆனால் தமிழிலோ 42 எழுத்துக்கள் தனித்து நின்றே பொருள் தருவன.
தமிழ் எழுத்துக்களிலேயே மிகப்பழமையான எழுத்து முறைகளுள் ஒன்று வட்டெழுத்து.
இது இன்றும் பல கோவில்களின் சுவர்களிலும் பாறைகளிலும் காணப்படும்
இதில் சுவாரசியம் என்னவென்றால் மொழியின் ஆரம்ப காலத்திலேயே தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து வழங்கப்பட்டுள்ளது.
இதை அரச்சலூர் கல்வெட்டில் காணலாம்.
இப்படி இதன் சிறப்புகள் எண்ணிலடங்காதவையாக உள்ளது நமக்குப் பெருமை.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.அருண் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment