Pages

Wednesday, 3 February 2021

மதபோதகர்,மதவாதி,சாமியார்,இறைதூதர் போன்றவர்களின் மூலமாக தான் கடவுள் சாமானிய மனிதனை அருள்புரிவாரா? இவர்கள் இல்லாத காலங்களிலும் கடவுள் நம்பிக்கை பெரிதும் காணப்பட்டது.ஆதிதமிழர்களின் வாழ்க்கையில் இவர்கள் யாரும் இல்லையே

 




மதபோதகர் − கடவுளைவிட கடவுளை அடையும் வழிகளாக சடங்குகளை வழிபடுபவர், சடங்குகளில் பல மூடநம்பிக்கைகளாக இருந்தாலும் அதுதான் கடவுளைவிட மேலான சொர்க்கத்தின் வழியாக கடும் பிரச்சார போக்கு கொண்டவர்.

மதவாதி − கடவுள், மதம் பற்றியெல்லாம் தன்னளவில் எந்த நம்பிக்கையும் இல்லாத போலிகள் ஆனால் மதத்திற்கும், மதம் சொல்லும் கடவுளுக்கும் யாராலோ மிகப் பெரிய ஆபத்து என அரசியல் செய்து ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க சதா முயலும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்.

சாமியார்கள் − மர்மமானவர்கள், சிலர் கார்பரேட் ரேஞ்சுக்கு பணபலம் படைத்தவர்கள், பலர் ஏதுமறியா பிச்சைக்காரர்கள்.

இறைத்தூதர் − சிலர் ஞானிகள். சிலர் ஏதோ ஒரு கடவுளை வலியுருத்துபவர்கள்.

தன்னை முற்றிலும் அறிவதன் மூலம் கடவுளை அறிவதே ஞானம். அதற்கு முதலில் அறத்துடன் வாழ்வதே சிறந்த வழி. மனித அறம் அனைவரும் அறிந்ததே, யார் சொல்லியும் தெரியவேண்டியதில்லை. உணர்ந்து நடந்தால் பூமிதான் சொர்க்கம், வாழ்வே இன்பம்.



ஆம்.. ஆதித்தமிழர்கள் என்றல்ல உலகின் எந்த மதத்திலும் தொடக்க காலத்தில் இப்படி இல்லவேயில்லை.. அதற்கான காரணம் ஒரு மதம் வலுப்பெற மக்கள் தேவைப்பட்டன் மதங்கள் வலுவேறியப்பின் அதனுள் சிலர் ஏகோபித்த கூட்டத்தை சேர்த்து மதத்தை திரிக்கின்றனர்..

இவற்றுள்

மதவாதி என்பது மதத்தை சார்ந்தவன் என்று பொருள்படும் அவர்கள் அவ்வளவு தீங்கானவர்கள் இல்லை பகுத்தறிவுவாதி என்பது போல் மதவாதியும் குறியீட்டு சொல்தான்..

மத போதகர் என்பவரின் கடமை மதத்தின் கொள்கைகளை சிந்தனைகளை சித்தாந்தங்களை விளக்கி போதிப்பது. ஒரு மதம் பழக இவர்கள் உதவுகிறார்கள் ஒரு லெக்சரரைப் போல..

சாமியார் என்பவரின் கடமை ஆன்மீக ஞானத்தை மக்களுக்கு கொடுப்பது. இன்று அவ்வாறு இருப்பவர்கள் சொச்சத்திலும் சொச்சம்.

இறைதூதர் - இவ்வாறு ஒருவர் இருக்கவே வாய்ப்பில்லை அப்படி உண்மையான இறைதூதர் என்றார் அவரால் கடவுளை நிச்சயம் காட்டமுடியும். ஆனால் இறைதூதர் என்பது இறைவனை அல்லது இறைசிந்தனையை மற்ற மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர் என்றாவார்.

சைவ சித்தாந்தம் ஒன்றை சொல்கிறது கடவுள் அருள் என்பது எப்போதும் கஸ்டத்தை தீர்ப்பது அல்ல கஸ்டத்தை தீர்ப்பதற்கோ கடந்துவருவதற்கோ உண்டான மன மற்றும் அறிவு பலத்தை தருவது. எளிமையாக சொன்னால் கடவுள் அருள் என்பது ஒருவரின் தேவையை அடைவதற்கான ஐடியா அவ்வளவே..




இந்த பதிவுக்கு உதவிய தோழர் திரு. சரவணன். L அவர்களுக்கும் , மற்றும் தோழர் திரு.பவித்திரன் கலைச்செல்வன் அவர்களுக்கும் மிக்க நன்றி !!!

                   தமிழால் இணைவோம் !!!
                    அறிவால் உயர்வோம் !!!
                            தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                      வலியே  " வலிமை "
                - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment