இட்லி , தோசை - தமிழர்கள் உணவுகளா? அவற்றின் பெயர்கள் எப்படி வந்தன?
இட்லி, தோசை - என்ற
இரண்டு தமிழ்ப்பெயர்களையும் புரிந்து கொள்ள - அதனை ஒத்த மற்ற தமிழர்களின் உணவுகளையும் முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்பம் - என்பது நீராவியில் வேகவைத்த உணவுகளின் பொதுவான பெயராகும். ( அப்பு - என்றால் நீரைக் குறித்த சொல்.
புட்டப்பம்,இடியாப்பம், தோயப்பம் , ஊத்தப்பம். .. என்பன சில.
✔ இடியப்பம் / இடியாப்பம் - அரிசி மற்றும் இதர தானியங்களை இடியப்ப உரல் கொண்டு இடித்து செய்யப்பட்டதே இடியப்பம்.
பின்னர் இடித்தல் இல்லாத வகையில் - மாவை அரைத்து குழித்தட்டுகளில் செய்யப்பட்ட அப்பம் = இடிலியப்பம் எனப்பட்டது.
இடித்தல் + இலாத + அப்பம் = இடி + இல் + அப்பம் =-> இடிலியப்பம்.
இடிலியப்பமே -> இடிலி -> இட்லி எனப் பின்னர் சுருக்கமாகப் பெயர் பெற்றது.
✔ தோசை - என்பது தோய் - தோய்த்தல் என்ற வினையிலிருந்து தோன்றிய பெயராகும்.
அரைத்த மாவைப் புளிக்க வைக்கும் முறை தோய்த்தல் ஆகும்.
தோயப்பம் = தோயை என்பதே பின்னர் தோசை எனத் திரிந்தது.
ஆக…இடிலியப்பம்= இட்லி ஆனதும் ,
தோயப்பம் = தோசை ஆனதும் இதன் மூலம் அறியலாம்.
ஊத்தி செய்த அப்பம் = ஊத்தப்பம் என்பதை விளக்க வேண்டியதில்லை.
ஒத்த சொல் திரிபுகள் :
ய ச திரிபுகள் தமிழில் இயல்பானவை.
- தோயை — தோசை.
- பாயனம் -> பாசனம்.(நீரைப் பாய்ச்சுவது)
- முயல் -> முசல்.
- மயிர் -> மசிர்.
- மயக்கம் -> மசக்கை.
- நேயம் -> நேசம்.
- தேயம் -> தேசம்.
No comments:
Post a Comment