தமிழில் தென்னை மரம் என்றும் ஆங்கிலத்தில் coconut tree என்றும் அழைக்கிறார்கள், ஏன்? தேங்காய் மரம் என்று தானே அழைக்கப்பட வேண்டும்?
முதலில் ஒரு புரிதலோடு தொடர்வோம் :
எனக்குத்தெரியும் என்பது அறிவாகும்
எனக்குத்தான் தெரியும் என்பது ஆணவமாகும்
எனக்கு மட்டும் தான் தெரியும் என்பது அழிவாகும்
முதலில் coconut tree என்றாலென்னவென்று பார்ப்போமா ?
co என்பது company, companian என்பதன் சுருக்கம் . [இன்று இளையோரிடையே வழக்கில் இருக்கும் ப்ரோ (Bro = Brother )வைப் போல ]
இதன் பொருள் = கூட்டு, கொத்து
conut =கூட்டாக, கொத்தாக இருக்கும் விதை/கொட்டை
coconut = கொத்துக்கொத்தாக இருக்கும் கொட்டை
coconut tree = கொத்துக்கொத்தாக இருக்கும் கொட்டை யுள்ள மரம் ..
இது மிகப்பொருள் உள்ளப் பொருத்தமான பெயர்தான் அவர்களைப் பொருத்த வரையிலும் .
அவ்வளவுதான் !
’அறியாதவன் இவன், அறிவில்லாதவன்’ இவன் என்று பிறரைப் பார்க்காமல் , அவனை அறிந்துகொள்ளும் நோக்கில் பார்த்தோமேயானால் மேலும் கற்கலாம் என்பது பொதுக்கருத்து :))
இப்பொழுது தேங்காய் -க்கு வருவோம் !
#தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் - நன்னூல்
$நாய் பெற்ற தெங்கம்பழம் - பழமொழி நானூறு
- இன்றிருக்கும் தேங்காய்க்கு சங்கக் காலத்தில் இருந்த பெயர் தெங்கங்காய் ,
# சொல்முதலின் இருகுறில் சேர்ந்து நெடிலாகும் . குறிப்பாக இரண்டில் ககரம் இருக்கும் சொல் . மேலும் கூடுதல் விளக்கம் இணைப்பில்பொழுது, போது ஆகிய இரண்டு சொற்களுக்கும் ஒரே அர்த்தமா?
தெங்கு + அம் + காய் = தெங்கங்காய் = தேங்காய்
இங்கு ; தெங்க = தே
மேலும் ஒரு சான்று :
மன்னிப்பு = மாப்பு ( இங்கு : மன்னி = மா)
இப்பொழுது தென்னை -க்கு வருவோம் !
அது ஒரு பெயர்க்காரணச் சொல்
தென் + ஐ = தென்னை = ( தெற்கு / மரங்களில்) அழகானது இது )
தென் — தெற்கு, அழகு
தீர்வு :
- நாம், மரம்பார்த்துப் பேரிட்டிருக்கிறோம்
- அவர்கள், காய்ப்பார்த்துப் பேரிட்டிருக்கிறார்கள்
- — அவரவர் பார்வை, அவரவர் கோணம் - ., ஏற்பதே சிறப்பு
அவ்வளவே :)
No comments:
Post a Comment