Pages

Saturday, 24 October 2020

தென்னை மரம் அல்லது தேங்காய் மரம் ஏது சரியான சொல்.

 தமிழில் தென்னை மரம் என்றும் ஆங்கிலத்தில் coconut tree என்றும் அழைக்கிறார்கள், ஏன்? தேங்காய் மரம் என்று தானே அழைக்கப்பட வேண்டும்?

முதலில் ஒரு புரிதலோடு தொடர்வோம் :

எனக்குத்தெரியும் என்பது அறிவாகும்

எனக்குத்தான் தெரியும் என்பது ஆணவமாகும்

எனக்கு மட்டும் தான் தெரியும் என்பது அழிவாகும்


முதலில் coconut tree என்றாலென்னவென்று பார்ப்போமா ?

co என்பது company, companian என்பதன் சுருக்கம் . [இன்று இளையோரிடையே வழக்கில் இருக்கும் ப்ரோ (Bro = Brother )வைப் போல ]

இதன் பொருள் = கூட்டு, கொத்து

conut =கூட்டாக, கொத்தாக இருக்கும் விதை/கொட்டை

coconut = கொத்துக்கொத்தாக இருக்கும் கொட்டை

coconut tree = கொத்துக்கொத்தாக இருக்கும் கொட்டை யுள்ள மரம் ..

இது மிகப்பொருள் உள்ளப் பொருத்தமான பெயர்தான் அவர்களைப் பொருத்த வரையிலும் .

அவ்வளவுதான் !

அறியாதவன் இவன், அறிவில்லாதவன்’ இவன் என்று பிறரைப் பார்க்காமல் , அவனை அறிந்துகொள்ளும் நோக்கில் பார்த்தோமேயானால் மேலும் கற்கலாம் என்பது பொதுக்கருத்து :))


இப்பொழுது தேங்காய் -க்கு வருவோம் !

#தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் - நன்னூல்

$நாய் பெற்ற தெங்கம்பழம் - பழமொழி நானூறு

  • இன்றிருக்கும் தேங்காய்க்கு சங்கக் காலத்தில் இருந்த பெயர் தெங்கங்காய் ,

# சொல்முதலின் இருகுறில் சேர்ந்து நெடிலாகும் . குறிப்பாக இரண்டில் ககரம் இருக்கும் சொல் . மேலும் கூடுதல் விளக்கம் இணைப்பில்பொழுது, போது ஆகிய இரண்டு சொற்களுக்கும் ஒரே அர்த்தமா?

தெங்கு + அம் + காய் = தெங்கங்காய் = தேங்காய்

இங்கு ; தெங்க = தே

மேலும் ஒரு சான்று :

மன்னிப்பு = மாப்பு ( இங்கு : மன்னி = மா)


இப்பொழுது தென்னை -க்கு வருவோம் !

அது ஒரு பெயர்க்காரணச் சொல்

தென் + ஐ = தென்னை = ( தெற்கு / மரங்களில்) அழகானது இது )

தென் — தெற்கு, அழகு

தீர்வு :

  • நாம், மரம்பார்த்துப் பேரிட்டிருக்கிறோம்
  • அவர்கள், காய்ப்பார்த்துப் பேரிட்டிருக்கிறார்கள்
  • — அவரவர் பார்வை, அவரவர் கோணம் - ., ஏற்பதே சிறப்பு

அவ்வளவே :)

No comments:

Post a Comment