பொதுவாக தமிழர்கள் இந்தியா, மலேசியா , இலங்கை மற்றும் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
ஆனால் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் தமிழரகள் இன்றும் நம் கலாச்சார உணர்வுகளோடு வாழ்கின்றனர்.
அந்த தீவின் பெயர் தான் ரீயூனியன் தீவு.
இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒரு தீவாகும்.
இந்த தீவு இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் தீவுக்கு அருகில் உள்ளது.
இந்த தீவில் சுமார் 8.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
அதில் 2.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
1827 இல் பிரெஞ்சு காலனியின் ஆதிக்கத்தில் இன்றைய புதுச்சேரி இருந்தது.
அப்போது காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் ரீயூனியன் தீவில் இருந்த கரும்பு தோட்டத்திற்கு தீவிற்கு வேலைக்கு சென்றனர்.
மேலும் புதுசேரி மற்றும் ரீயூனியன் தீவு பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் விசா பாஸ்போர்ட் போன்ற பிரச்சனை இல்லை.
பின்னர் கொஞ்ச வருடம் கழித்து அவர்கள் எல்லோருக்கும் பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டது.
அங்கு இருந்த தமிழர்களும் பிரெஞ்சு மக்களாக ஏற்கப்பட்டனர்.
கலாச்சாரம்!
இங்கு வாழும் மக்கள் பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாச்சார கலவையுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக தமிழர்கள் மக்கள் தொகை குறைந்து வந்தாலும், தங்களால் முடிந்த வரை, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றி, பின்பற்றி வருகிறார்கள் ரியூனியன் தீவை சேர்ந்த தமிழர்கள்.
விழாக்கள்!
இன்றளவும் இங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடி தான் வருகின்றனர். மேலும், இவர்கள் கரகம், காவடி ஆட்டங்கள் போன்ற கலைகளையும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.
ரீயூனியனில் உள்ள ஒரு இந்துக் கோவில்
இந்த ரீயூனியன் தீவில் இரண்டு எரிமலைகள் இருக்கின்றன. இந்த எரிமலைகள் நூறு தடவைக்கு மேல் எரி குழம்பை கக்கியிருக்கின்றன
No comments:
Post a Comment