Pages

Friday, 23 October 2020

உலகின் முதல் சக்கரவர்த்தி,

 பிரெஞ்சு பிரளயம் நெப்போலியனை தவிர, சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட எந்த அரசராவது இருக்கிறாரா?

உலகின் முதல் சக்கரவர்த்தி, மன்னாதி மன்னன், அரசர்க்கரசர் பெயர் ஹமுராபி. காலம் கிமு 1750 (3750 ஆண்டுகளுக்கு முன்)

சுமேரிய நாகரிகத்தில் தனிச் சிறப்பு பெற்றவர்.

உலகிற்கு சட்டங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

(சுமேரியர்கள்.,

  • சக்கரத்தைக் கண்டுபிடித்தனர்.
  • சூரிய வருடத்தை காலகட்டமாகக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள்.
  • இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின.
  • சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன)

அனைவரும் கூடும் இடங்களில் சட்டங்களை ஒரு நடுகல் தூணில் அன்றைய பாபிலோனிய மொழியான அக்கேடியனில் பொறித்து வைத்தார் ஹமுராபி.

(ஹமுராபி இயற்றிய சட்டங்கள் பொறிக்கப்பட்ட, பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள நடுகல்)

சட்டங்கள் பொறிக்கப்பட்ட நடுகல்லின் மேல் சாமாஷ் கடவுளிடம் இருந்து ஹமுராபி, சட்டங்களை பெறுகின்றவாறு செதுக்கப்பட்டது.

ஹமுராபியின் காலம், பண்டைய பாபிலோனுடைய பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் சிறப்பித்து சொல்லப்படுகிறது

அம்முராபியின் சில சட்டங்கள்:

  • சட்டம் 59: ஒரு மனிதன் உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு தோட்தத்தில் ஒரு மரம் வெட்டினால் அவன் அரை மானா(பபிலோனிய அளவுமுறை) வெள்ளி அபராதமாக செலுத்த வேண்டும்.
  • சட்டம் 55:ஒரு மனிதன் அவனது பாசன கால்வாயை திறந்து அவன் கவனக்குறைவால் அடுத்தடுத்த வயல்கள் பாதிக்கப்பட்டால் அவன் அவர்களுக்கும் சேர்த்து தானியங்களை தர வேண்டும்.
  • சட்டம் 168:ஒரு மனிதன் தனது மகன் செய்த குற்றத்திற்காக அவனது சொத்துரிமையை நீதிபதிகள் முன்னிலையில் நீக்கலாம் மற்றும் மகன் குற்றம் செய்யவில்லை என்றால் வழக்கைத் தள்ளுபடி செய்யலாம்.
  • சட்டம் 169: ஒருவன் தன தந்தைக்கு எதிராக குற்றம் இழைத்தால் முதல் தடவை மன்னிக்கலாம் அனால் இரண்டாம் முறை அவனது சொத்துரிமை நீக்கப்படும்
  • சட்டம் 8: ஒருவன் ஒரு கால்நடை,ஆடு,கழுதை அல்லது ஒரு பன்றி அல்லது ஒரு ஆடு திருதினால், திருடன் அதற்காக முப்பது மடங்கு பணம் செலுத்த வேண்டும் அப்பணம் கடவுள் அல்லது நீதிமன்றதிற்கு சொந்தமாகிவிடும்.அவை அரண்மனையை சேர்ந்தவருடைய விலங்கெனில் அவன் பத்து மடங்கு பணம் செலுத்த வேண்டும்.திருடனிடம் அபராத பணம் இல்லை எனில் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
  • சட்டம் 195: ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் பிரச்சனைப்பட்டால் அவனுடைய கைகள் வெட்டப்பட வேண்டும்.
  • சட்டம் 196: கண்ணுக்கு கண் பிடுங்கப்படுதல் வேண்டும்.
  • சட்டம் 197: யாராவது ஒருவனுடைய எலும்புகளை முறித்தால், அவனுடைய எலும்பும் முறிக்கப்பட வேண்டும்.
  • சட்டம் 218-219: ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையால் ஒரு மனிதன் பலத்த காயம் அடைந்தாலோ மரணம் அடைந்தாலோ,பார்வையிழந்தலோ மருத்துவரின் விரல்கள் வெட்டப்படும்.அதுவே வேறு ஒருவரின் அடிமை இறந்தால் அவருக்கு இன்னொரு அடிமையை வாங்கித்தர வேண்டும்.
  • சட்டம் 229-232: ஒரு கட்டிடம் சரியாக கட்டப்படாமல் அதிலுள்ளவர்கள் இறந்தால் அக்கட்டடத்தை கட்டியவர் கொள்ளப்படுவர்.அதேபோல் கட்டிட உரிமையாளரின் மகன் இறந்தால் கட்டிக் கொடுப்பவரின் மகனும் கொல்லப்பட வேண்டும்.பொருட்சேதம் மட்டும் எற்பட்டால் புது வீடு கட்டி கொடுத்தால் போதுமானது.
  • சட்டம் 21: ஒருவன் அத்துமீறி ஒரு வீட்டிற்குள் புகுந்தால் எல்லார் முன்னிலையிலும் அவனை தூக்கிலிடலாம்.

அடுத்தது…

சந்திரகுப்த மௌரியன், பண்டைய இந்தியாவின் முதல் சக்ரவர்த்தி. காலம் கிமு. 300 (2300 ஆண்டுகளுக்கு முன்). சாணக்கியர் வித்திட்ட முதல் இந்தியப் பேரரசுதான் இவரது மௌரியப் பேரரசு.

அஷோகன்

மௌரிய வம்சத்தின் புகழ் மிக்க பேரரசர். காலம் கிமு 250 (2250 வருடங்களுக்கு முன்). கலிங்கப் போரினால் மனம் மாறி, மதம் (பெளத்தம்) மாறினார். புத்த மத வளர்ச்சிக்காகவே வாழ்ந்தார்.

இராஜராஜ சோழன்

சோழப் பேரரசின் ஈடு இணையற்ற மாமன்னர். காலம் கிபி 1000 (1000 ஆண்டுகளுக்கு முன்) இராசராசசோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் பொற்காலம். ஆட்சி முறை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம், நுண்கலை, இராணுவம் என பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

தஞ்சை பெரிய கோயில், இவரது பெயரை, புகழை இன்றும் என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

அக்பர்

ஜலாலுதீன் முஹம்மது அக்பர். காலம் கிபி 1550 (450 வருடங்களுக்கு முன்). பல திறமைகள் நிறைந்த முகலாயப் பேரரசர். பிறப்பு பாலைவனத்தில் நிகழ்ந்தது. நாடற்ற ஹுமாயூனுக்கு மகனாகப் பிறந்தார் இந்த பாபரின் பேரன். படிப்பறிவு அற்றவர். பீர்பாலின் உற்ற நண்பர். பாபர் நினைத்ததை அக்பர் முடித்தார். இந்திய மண்ணில் முகலாயப் பேரரசை வலிமையாக நிறுவினார்.


No comments:

Post a Comment