Pages

Friday, 30 October 2020

இந்திய நாடு ஏன் தமிழ்நாட்டை அதாவது தமிழ் தேசத்தை கண்டு ஏன் மிரள்கிறது !!!!


இந்த பதிவில் எனது விடையுடன் சேர்த்து இந்தியாவின் பிறமாநில மக்கள் தமிழ்நாட்டின் மீது வைத்து இருந்த பல கருத்துகளை நான் கீழயே இணைத்து இருக்கும் கணணொளியில் பகிர்ந்து இருப்பார்கள், மிகவும் சுவார்ஸமாக இருக்கும் எனது விடையுடன் சேர்த்து தவறாமல், நீங்கள் அந்த காணொளியும் பார்க்கப்போகிறீர்கள் :-

  • தமிழ்நாடு மாநிலம் வரலாற்று சிறப்புக்கு உரியது என்றும் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் என்பதை இந்தியா நன்கு அறியும்.
  • தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரிகமும் உலகில் பழமையானது என்று இந்திய மக்களும், நாடும் அறியும்.
  • இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மொழி எல்லையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று இந்தியா நன்கு அறியும்.
  • அதனால், மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு, போன்ற வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதையும் இந்தியா நன்கு அறியும்.
  • தமிழ்நாடு இல்லையென்றால் இந்தியாவின் ஜிடிபி சரிந்துவிடும் என்பதையும் இந்தியா நன்கு அறியும். காரணம் வேளாண்மை, தானியம் , தேயில்லை, காப்பி, ரப்பர் போன்ற பலவற்றை மற்ற மாநிலம் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமிழ்நாடு என்பதை இந்தியா நன்கு அறியும்.
  • சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி :-தமிழ்நாடு மாநிலம் "Good Governance Index" தரவரிசை படி முதலில் சிறந்து விளங்குவதாக புள்ளிவிவரத்தை அரசு வெளியிட்டது.
  • இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இங்கு பொதுப்போக்குவரத்து, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் சிறந்து விளங்குவதாக மற்ற மாநில மக்களே கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
  • முழுமையாக இந்த காணொளியில் பார்க்கவும்,

ஆக, எனது கருத்து என்னவென்றால் : இந்தியா தமிழ்நாட்டை "எப்படி ஒரு கட்டடம் எழுப்புவதற்கு பல தூண்கள் தேவைப்படுகிறதோ, அதுபோல இந்தியா என்ற நாட்டை கட்டடம் போல எழுபவதற்கு தமிழ்நாடு என்ற தூண் நிச்சயம் இந்தியாவுக்கு தேவை". தமிழ்நாட்டை பல தூண்களை போலத்தான் இந்தியா பார்க்கும், இதுவே உண்மை.



No comments:

Post a Comment