பொங்கல் பண்டிகையைக் குறிக்கும் இன்னொரு பெயர்தான் சங்கராந்தி. இதுவும் தமிழ்ப்பெயர் தான். எப்படி என்று கீழே பார்க்கலாம்.
சக்கை (=கரும்பு) + அரி (=நெல், அறுவடைசெய்) + ஆற்று (=கூட்டு, உணவளி, நடத்து) + இ = சக்கராற்றி >>> சங்கராந்தி = கரும்பையும் நெல்லையும் அறுவடைசெய்து கூட்டி உணவளித்து நடத்தப்படுவது = பொங்கல் பண்டிகை.
அறுவடைசெய்த நெல்லில் இருந்து எடுத்த அரிசியையும் கரும்பில் இருந்து எடுத்த சக்கரையையும் கூட்டி உணவாக்கிப் பிறர்க்குக் கொடுத்து மகிழும் பெருவிழாவாக நடத்தப்படுவதே பொங்கல் திருநாள் என்று அனைவரும் அறிவோம். இந்த மொத்த விளக்கத்தையும் தனக்குள் அடக்கிய தமிழ்ச்சொல்லே சங்கராந்தி
No comments:
Post a Comment