Pages

Friday, 29 January 2021

மேஜிக் ரைஸ் (Magic Rice) பற்றிய தகவல்கள் .

இது என்னவோ இயற்கையின் மாயம்…தெலுங்கானாவில் விவசாயி ஒருவர் மேஜிக் அரிசியை விளைவித்து நல்ல அறுவடையை பார்த்துள்ளார். இந்த அரிசியின் குணாதிசயம் என்னவெனில் இதை சாதமாக அடுப்பில் வைத்து தயார் செய்ய தேவையில்லை. சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதும் சாதம் ரெடியாகிவிடுமாம்.

இதுவும் மலைப்பகுதியில் விளையும் ஒருவகை நெல்தான் இது போகா சவுல் அரிசி எனும் அஸ்ஸாம் மாநில காடுகளில் கிடைக்கக் கூடியதாகும். இந்த அரிசியை அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆண்ட 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் வம்சத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த அரிசிக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. இந்த அரிசியை தெலுங்கானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ளார்.

இந்த நெல்லை தெலுங்கானாவில் தனது நிலத்தில் 0.05 ஏக்கரில் சிறிய அளவில் பயிரிட்டார் ஸ்ரீகாந்த். சுமார் 145 நாட்கள் இதன் அறுவடை காலம் ஆகும். இந்த சிறிய இடத்தில் பயிரிட்டதன் மூலம் 5 மூட்டை விளைச்சலை இது கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். இது போன்ற சிறப்பான நெல் வகையை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகளாக முயற்சித்ததாக கூறுகிறார் ஸ்ரீகாந்த்.



No comments:

Post a Comment