Pages

Thursday, 7 January 2021

'தமிழே தெரியாத ஆரிய சமஸ்கிருதப் பூசாரிகளுக்குத் தமிழ்க் கடவுள்கள் முருகன், சிவபெருமான், திருமால் திருக்கோயில்களில் என்ன வேலை?"





  • முருகன் தூயதமிழ்க் கடவுள்!
  • சிவபெருமான் தூய தமிழ்க் கடவுள்!
  • திருமால் தூய தமிழ்க் கடவுள்!
  • இக்கடவுளர்கள் மூவருமே ஆரிய வேதத்தில் சொல்லப்படாத தூய தமிழ்க் கடவுளர்கள்! தமிழ்நாட்டில், சமஸ்கிருதம் மட்டும் தெரிந்த கடவுள்கள் யாரும் இல்லை. தமிழ் தெரியாத கடவுள்கள் எவரும் இல்லை.

தமிழ்நாட்டில் எந்த சமஸ்கிருதக் கடவுளுக்கும் தமிழ் மன்னர்கள் கோயில் கட்டியிருக்கவில்லை. தமிழ்க் கடவுள்களுக்கு மட்டுமே, இங்கு திருக்கோயில்கள், கற்றளிகள் உண்டு.

‘திருமுறைகண்ட சோழன்’ மாமன்னன் ராசராசன்!

மாமன்னன் ராசராசன்-தான்

  • பூட்டிவைத்து கரையான் அரிக்கவைத்துப் பாழ்படுத்திய ஆரியத் தில்லைவாழ் பூசாரிகளின் சதிவலைப் பிடியிலிருந்து
  • பன்னிரு திருமுறைகளை மீட்டெடுத்துப் பதிப்பித்தான்.

அதனால், “திருமுறைகண்ட சோழன்” என்று தமிழர்களால் போற்றப்படுகிறான் மாமன்னன் இராசராசன்.

‘திருமுறைகண்ட சோழன்' மாமன்னன் ராசராசன்

  • ‘பவனப்பிடாரன்' என்ற பன்னிரு திருமுறைகளும் அறிந்த தமிழனிடம்தான்
  • சிவபெருமானின் திருமேனியை முப்போதும் தீண்டிப் பூசை செய்யும் பூசகர் திருப்பணியை

ஒப்படைத்தான்.

பிற்கால விஜயநகர அயலான் ஆட்சியில் ஒண்ட வந்த சமஸ்கிருதப் பூசாரிகளைக் கோயிலுக்குள் விட்டு விட்டு இன்று தமிழர்களும், தமிழ்க் கடவுளர்களும் திருதிருவென்று முழிக்கிறார்கள்!

இந்த ஆரிய சமஸ்கிருதப் பூசாரிகள், 'யக்ஞம் செய்து சொர்க்கம் காட்டுகிறேன்' - பேர்வழி என்று தமிழக மன்னர்களைக் கையில் போட்டுக்கொண்டு, கோயிலில் நுழைந்தார்கள்.

தமிழ்க்கடவுள் முருகனை எப்படி ஆரியக் கடவுள் சுப்பிரமணியன் ஆக்கி, திருச்செந்தூர்க் கோயிலைக் ஆரியமயமாக்கிய கயமைத்தனத்தை இங்கு காணொளியில் காணுங்கள்!

'தெய்வம் உன்னுது! மந்திரம் என்னுது!'ன்னு கோல்மால் செய்து கோயில்களைக் கைப்பற்றி உள்ளனர் என்பதை நாசூக்காக ஆன்மீகப் பேச்சாளர் அறிஞர் சுகி.சிவம் உரித்துத் தொங்கவிடுகிறார் கேளுங்கள்!

தமிழக எல்லையைத் தாண்டி, எங்காவது ஆரியப் பூசாரிகள் கட்டிய சிவாகம முறைப்படியான ஆகமக் கோயில்கள் உண்டா?

பிறகு எப்படி ஆகமங்கள் சமஸ்கிருதத்தில் வந்தன?

தெலுங்கர்களான விஜயநகர மன்னர்கள், மராட்டிய சபோஜி மன்னர்கள் காலத்தில், தஞ்சை சரஸ்வதிமஹால் உள்ளிட்ட இடங்களில் வைத்து, சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன தமிழர்களின் திருக்கோயில் ஆகமங்கள்!

மொழி பெயர்த்ததும் தமிழ் மூல நூலை அழித்தனர்.

ஆகமங்களை மட்டுமா தமிழ் மூலத்தில் அழித்தார்கள்?

  • தமிழ்க் கடவுளர்களின் பெயர்களையும்,
  • தமிழ்க் கடவுளரின் திருக்கோயில் தமிழ்ப் பெயர்களையும்,
  • ஊர்களின் தமிழ்ப் பெயர்களையுமல்லவா

ஒரு சேர அழித்தார்கள்?

காட்டாக, பழமலைநாதர் விருத்தகிரீஸ்வரர் ஆனார்; திருமறைக்காடர் வேதாரன்யீச்வரர் ஆனார். இப்படியே, ஒவ்வொரு ஊரும், கோயிலும், தமிழ்ப் பெயர்களை இழந்தன.

ஆரியர்கள் தமிழகத் தெய்வங்களையும், தமிழக சமயங்களையும், வேதச் சாயம் பூசிய முறை பின்வருமாறு:

தமிழ்க் கடவுள் முருகன் = பிராமணர்களுக்கு சுகம் தரும் சுப்பிரமண்யன்;

தமிழ்க் கடவுள் சிவபெருமான்/சேயோன்/கறைமிடற்றன் = ஆரிய வேதக் கடவுள் ருத்திரன்.

தமிழ்க் கடவுள் திருமால் = ஆரிய வேதக் கடவுள் விஷ்ணு, நாராயணன்.

அவை எல்லாம் முன்பு இருந்தது போல மீண்டும் பெயர் மாற்றம் தமிழில் செய்யப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில், தமிழ்த் தெய்வங்களுக்கு, தமிழாகம முறைப்படி,

  • திருமுறைகளையும், திருநாலாயிரமும் சாற்றி,
  • பூசை நடத்தத் தெரியாத சம்ஸ்கிருத ஆரியப் பூசாரிகள், தமிழ்ப் பன்னிரு திருமுறைகள் கற்றுக்கொண்டு, தமிழர் திருக்கோயில்களில் வேலை செய்ய வேண்டும்.

அவர்கள் தமிழில் பூசை நடத்த மறுத்தால், வேலையிலிருந்து வெளியேற வேண்டும்!

தமிழர்களுக்கும், தமிழர் கடவுளர்களுக்கும் இடையில்,

  • இருவருக்கும் புரியாத, மக்கள் பேச்சு வழக்கு ஒழிந்து அழிந்த மொழி சமஸ்கிருதத்தில் உளறிக் கொட்டி, தெய்வத் தமிழ் மொழியைக் கோயில் கருவறைக்குள் நுழையவிடாமல் திருக்கோயில்களைத் தீண்டவிடாமல் தமிழர்களைத் தீட்டு என்று அவமானப்படுத்தும்

முறையற்ற அடாவடித்தனம் செய்பவர்கள் பிடியிலிருந்து கோயில்கள் மீட்கப்படவேண்டும்.

முறையாக, திருமுறைகளையும், திருநாலாயிரமும் கற்றுக்கொண்டு (ACQUIRED RE-SKILLS), திரும்பி வந்தால்,இடம் காலியாக இருந்தால் மட்டும் மீண்டும் வேலை கொடுக்கலாம்!



No comments:

Post a Comment