Pages

Sunday, 31 January 2021

கணினி விசைப்பலகை ஏன் வரிசையாக இல்லை என்பதன் விளக்கம்.


  • கணினி விசைப்பலகை எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் கலைந்துள்ளன !!! 
  • கணினியின் கீ-போர்டு ல் உள்ள எழுத்துகள் Alphabetic வரிசையில் இல்லாமல் கலைந்து இருப்பதற்கான காரணம் உள்ளது.
  • கணினி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் கீ போர்டானது abcd எனும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே அமைந்திருந்தன.
  • அப்படி இருந்ததால் அதில் தட்டச்சு செய்ய சற்று சிரமமாக இருந்ததை உணர்ந்தனர்.
  • அதனால் அவற்றை மாற்ற முடிவு செய்தனர்.
  • பலமுறை முயற்சி செய்த பின் இந்த வடிவத்தை உருவாக்கினர்.
  • அது சரி இந்த வடிவத்தை ஏன் உருவாக்கினார்கள்? என்ற கேட்டால், இதற்கு ஒரு காரணம் உண்டு.
  • பொதுவாக நீங்கள் கீ போர்டின் இடப்பக்க மேல் மூலையில் காணும்போது உள்ள எழுத்து Q.
  • அதைப் போன்றே கீழ்ப்பக்க இடமூலையில் உள்ள எழுத்து Z.
  • இவ்வாறு ஒவ்வொரு எழுத்தும் பயன்படுத்தப்படும் முறைகளை வைத்து அதனை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
  • Q மற்றும் Z எழுத்துகளை நாம் ஆங்கிலத்தில் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவோம்.
  • ஆனால் ASDFGHJKL முதலிய எழுத்துக்களை அதிகமாக பயன்படுத்துவோம்.
  • அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துக்களான ASDFGHJKL முதலியவற்றை ஒரே வரிசையில் கொண்டு வந்தனர்.
  • நடுவரிசை எழுத்துகள்தான் பெரும்பாலான வார்த்தைகளில் இடம் பெற்றிருக்கும்.
  • மட்டுமன்றி அதில் அடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொத்தானுக்கு மேல் உள்ள மற்றும் கீழ் உள்ள எழுத்துகள் ஒன்றோடோன்று வார்த்தைகளில் பெரும்பாலும் இணைந்து வரக்கூடியதாக இருக்கும்.
  • இப்போது நீங்கள் ஒரு கீபோர்டை பார்த்தால் அதில் ஒவ்வொரு எழுத்துகளுக்கு அருகில் உள்ள எழுத்துகள் தான் பெரும்பாலும் அவற்றின் அருகில் வரும்.
  • உதாரணமாக, A க்கு அருகில் S உள்ளதென்றால் பெரும்பாலும் A எழுத்திற்கு அடுத்த எழுத்தாக S வரும் என்பதை வைத்து அதை உருவாக்கியுள்ளனர்.
  • இவ்வாறு ஆங்கிலத்தில் பொதுவாக எந்தெந்த எழுத்துகள் அதிகமாக இணைந்து வரும், எந்தெந்த எழுத்துகள் குறைவாக வரும் முதலியவற்றை ஆராய்ந்து இவ்வகையை உருவாக்கியுள்ளனர்.
  • இவ்வாறு வார்த்தைகளின் அடிப்படையில் எழுத்துகளை வைத்துள்ளமையால்தான் அவை கலைந்து உள்ளன.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !!!

                 தமிழால் இணைவோம் !!!
                   அறிவால் உயர்வோம் !!!
                         தமிழ் வாழ்க !!!
          அறிவியலின் தேடல் தொடரும்.
                       வலியே  " வலிமை "
                 - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment