Pages

Monday, 18 January 2021

எகிப்பது பிரமிடுக்கும் , தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு.


இங்கு நான் விளக்க விழையும் உலகமறியாத வியக்கத்தக்க தகவல்…பிரமிடு என்ற சொல்லின் தமிழ் மூலத்தொடர்பு குறித்தது.

பிரமிடு என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள் தான் பிரமிடுகளும் உருவாக்கி இருப்பார்கள் என்பது தான் உண்மை. 

எகிப்து பிரமிடு தமிழர்களால் உருவானது . 

ஆங்கில அகராதிகளின் விளக்கப்படி PYRAMID / பிரமிட் - என்ற சொல்லானது, 'புரமிஸ்' - என்ற கிரேக்க சொல்லின் வழி தோன்றியதாகவும், ஆனால் 'இறுதி மூலம் அறியாத ஒன்று. எங்களுக்குத் தெரியவில்லை' ( Unknown / obscure origin) எனக் கூறப்பட்டுள்ளது.

Puramis > Puramid > Pyramid…என்பதே அவர்களுக்குத் தெரிந்த விளக்கம்.

ஆனால்... புரமிஸ் என்ற கிரேக்கச் சொல், புரம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்ற வரலாறு அவர்கள் அறியாதது.

புரம் - என்ற தமிழ்ச்சொல் உயர்ந்த மாடங்களால் கொண்ட கட்டமைப்பு என்பதையும், அரசனாகிய 'கோ' குடியிருந்த கட்டிடங்களைக் கோ + புரம் = கோபுரம் என்ற பெயரால் அழைக்கப் படுவதும், இன்றைக்கும் இது வழக்கில் உள்ளது என்பதும் நாமறிந்ததே!

புரம் > புரமிஸ் என்று திரிந்தது.

தமிழ்ச் சொல்லின் கடையில் 'S' ஐ சேர்த்து இதே வகையில் தமிழிலிருந்து - கிரேக்க மொழி வழியாக ஆங்கிலம் சென்றடைந்த சொற்கள் பலவுண்டு.

அவற்றுள் சில…

  • பாழி ( நகரம்) > பாலிஸ் ( Polis / metropolis )
  • செகு ( பிரிவு) > செக்ஸ் ( Sex /section, segment)
  • கோமணம் > கும்னோஸ் ( Gumnos /Gymnasium)
  • முசிறி > முசிரிஸ் (MUSIRIS)
  • திருப்பு > த்ரபோஸ் ( tropos/ Troposphere )
  • புரை > பொரஸ் ( Poros /Porosity).
  • நீர் > நெரொஸ் ( Neros).
  • குளம் > குளஸ் ( Culus)
  • தொண்டி > தொண்டிஸ் ( Tondis)

(அறியாமையால் மேற்குலக அறிஞர்கள் இனிமேலும் இவ்வுண்மைகளை உணராதிருப்பது மிகவும் வருத்தம் தருகிறது).

தமிழ் மூல விளக்கம் : பர /புர - ஆகிய மூலங்களில் இருந்து தோன்றிய தமிழ்ச் சொற்கள் பொதுவாக - அனைத்திலும் சிறந்த ; மிக உயர்ந்த இடம் ; அல்லது உயர்ந்த பண்புகளுடன் தொடர்புடைய பொருள்படுபவற்றினைக் குறித்து அமைந்தவையாகும்.

* புரவி - உயர்ந்த மதில்களை தாண்டும் திறனுள்ள விலங்கு (குதிரை).

* புரிசை - மிக உயரமான மதிலமைப்பு.

* புரம் - உயர் குடியேற்றம், மாட வீடுகளால் நிறைந்த நகரம், தலைநகர், உயர் மாடி கட்டிடங்கள், கோயில் கோபுரம்.

பரன் தொடர்பு சொற்களில் சில :

* பரன் - என்றால் எல்லாவற்றிலும் மேலானவன் = சிவன் ; கடவுள்.

* பரம்பொருள் = மிக மேலான பண்புகளைக் கொண்டு , எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன்.

* பரம்பரை - நம் மூதாதையர் வரிசையில் முதல்நிலை.

* பரண் - வீடுகளில் உயரத்தில் அமைக்கப்படும் ஓர் கட்டுமான வசதி.

* பருந்து - மிக உயரத்தில் பறக்கும் திறனுள்ள பறவை.

* பரம் (வரம்) - ஆன்றோர்களிடத்திலோ தெய்வம் மூலமாகவோ பெறப்படும் பெரும்பேறு.




இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!


                      தமிழால் இணைவோம் !!!
                        அறிவால் உயர்வோம் !!!
                                 தமிழ் வாழ்க !!!
              அறிவியலின் தேடல் தொடரும்.
                            வலியே  " வலிமை "
                      - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment