தினவு + அட்டு = தினவட்டு என்பதே பேச்சு வழக்கில் தெனவட்டு > தெனாவட்டு என்றாகியது .
தினவு = அதீதமான உணர்ச்சி, அடக்க இயலாத உணர்வு, அரிப்பு.
அட்டு > அட்டுதல் = சேர்த்தல், கூட்டுதல், மிகுத்தல்.
தினவட்டு - என்றால் மிகுந்த, கட்டுக்கடங்காத கோபம், திமிர், ஆணவத்தைக் குறிக்கும்.
தெனாவட்டு = அதிகமான திமிர், தைரியம், அடங்க மறுக்கும் நிலை, இறுமாப்பு.
ஆங்கிலத்தில் இதனை
Arrogance, pluck, courage போன்ற சொற்களால் குறிப்பிடலாம்.
இகரச் சொற்கள் பாமர வழக்கில் எகரமாக மருவி வழங்கப்படுவது இயல்பான ஒன்றே!
தினம் > தெனம்
தினந்தினம் > தெனந்தெனம்
தினை > தெனை.
திகட்டு > தெகட்டு.
திவசம் > தெவசம்.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.இரவீந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment