தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களே, அக்காலத்தில் பழைய இரும்பு மற்றும் பழைய சாமான்களை வாங்கி விற்பனை செய்யும் மறுசுழற்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இத்தகையத் தொழிலில் பெரும்பாலும் இவ்வூர்க்காரர்களே ஈடுபட்டுச் சிறந்து விளங்கினர். தமிழகமெங்கும் பரந்து விரவியிருந்த காயல்பட்டினத்துக் காரர்கள் காயலூரான், காயலான் - போன்ற பொதுப் பெயர்களால் அழைக்கப் பட்டனர்.
இதன் காரணமாகவே - அவர்களின் கடைக்கு காயலான் + கடை = காயலாங்கடை என்று பெயர் வந்தது.
- காயல் + ஊரான் > காயலூரான் > காயலான்.
" பழைய... ஈயம் பித்தா…ளைக்குப்
பே.. ரீச்சம் பழமே.." - என்ற புகழ்பெற்ற வாசகம் அவர்கள் தந்ததே!
இந்த பதிவுகளை வழங்கிய என் மதிப்பிற்குரிய தோழர்
திரு.இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment