தை முதல் தேதியே தமிழர் புத்தாண்டு. இப்பதிவின் இறுதியில் தமிழர்கள் தை முதல் நாளையே தமிழ் ஆண்டாகக் கொண்டாடியதற்கான கல்வெட்டுச் சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி.ஐயா பழசெல்வராஜு அவர்கள்.
சித்திரை முதல் தேதியில் தமிழ் ஆண்டு துவங்காது. ஏன்?
தைத்திங்கள் முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பதை அறிவியலில் அடிப்படையிலேயே நம் தமிழ் முன்னோர்கள் அமைத்தனர்.
ஆம், தைத் திங்கள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்.
ஆதவனின் உதயம்!
ஆதவன் கிழக்கில் உதிப்பதாகப் பொதுவாக நாம் சொன்னாலும், ஆதவனின் உதயம், காலத்தைப் பொருத்து, சற்றே சரிந்து, தென்கிழக்காகவோ, அல்லது வடக்கிழக்காகவோ தான் அமையும்.
ஆதவன் தமிழ்மண்ணுக்கு மிக அருகில் உதிக்கும் நாள் தைத்திங்கள் முதல் நாள்! அதுவே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்!
தைத்திங்கள் முதல் நாள் மட்டுமே ஆதவன் தென்கிழக்குக் கோடியில் தமிழ் மண்ணுக்கும், தமிழர்களுக்கும் மிக அருகில் உதிக்கிறான்! இந்நாளையே தமிழ்ப் புத்தாண்டு என்று பண்டையத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்!
இந்நாளுக்கு அடுத்த நாள், ஆதவனின் வடகிழக்கு நோக்கிய பயணம் தொடங்குகின்றது! இதை ஆரியர்கள் சமற்கிருதத்தில் 'உத்தராயணம்' என்று குறிப்பார்கள்.
தை இரண்டாம் நாளிலிருந்து (உத்தராயணமாக) வடகிழக்கே பயணிக்கும் ஆதவன்,
சித்திரை முதல்நாள் நேர் கிழக்கே உதிக்கிறான்!
சித்திரை இரண்டாம் நாளிலிருந்து தொடர்ந்து (உத்தராயணமாக) வடகிழக்கே பயணிக்கும் ஆதவன்,
ஆடி முதல்நாள், வடகிழக்குப் பயணத்தின் எல்லை முடிவை அடைகின்றான்!
ஆடி இரண்டாம் நாளிலிருந்து ஆதவன் (தக்கிணாயணமாக) தென்கிழக்கே பயணிக்கும் ஆதவன்
ஐப்பசி முதல்நாள் மீண்டும் நேர் கிழக்கே உதிக்கிறான்!
ஐப்பசி இரண்டாம் நாளிலிருந்து தொடர்ந்து (தக்கிணாயணமாக) தென்கிழக்கே பயணிக்கும் ஆதவன்,
தை முதல் நாள், தன் தென்கிழக்குப் பயணத்தின் எல்லையான தமிழ்மண்ணுக்கு மிக அருகில் வந்து, தமிழ்ப் புத்தாண்டைத் தொடங்கி வைக்கிறான்!
நேர்-கிழக்கில் உதிப்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே!
சித்திரை 1 மற்றும் ஐப்பசி 1 என்று ஆண்டில் இருமுறை மட்டுமே ஆதவனின் உதயம் சரியான நேர்கிழக்கே அமையும்.
தை முதல் நாள் தொடங்கி, ஆதவன் வட(கிழக்கு) நோக்கி பயணிக்கும்போது (உத்தராயணம்) வரும் முதல் நேர்கிழக்குப் புள்ளிதான் சித்திரைத் திருநாள்.
வடகிழக்குப் பயணத்தின் கடைசிப் புள்ளி தான் ஆடி.
மீண்டும் தென்கிழக்கு நோக்கி வரும்வழியில், இரண்டாவதுமுறை வரும் நேர்கிழக்குப் புள்ளிதான் ஐப்பசி.
தொடர்ந்து பயணித்துத் தன் தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக அருகில் வரும்நாள் தை முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு நாள். ஒரு தமிழ் ஆண்டின் கதை இதுதான்.
சூரியன் சரியாக முதன் முறை நேர்கிழக்கு வரும் நாள் சித்திரை1 (In Astronomy science it is called Equinox)
அப்புறம் வரும் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)
மறுபடியும் நேர்கிழக்குக்கு வரும் #ஐப்பசி1 (equinox)
Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் தமிழ் முன்னோர்கள், தமிழ் மண்ணுக்கு மிக அருகில் உள்ள தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றது தூய அறிவியல்.
தை (winter solstice) - தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் பொங்கல்.சித்திரை (equinox) - ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, ஐப்பசி (equinox)-
நமது அடுத்த தமிழ்த் தலைமுறைக்கு நமது மரபுகளை நிறுவி, ஆரிய வெற்றுச் சடங்குகளைத் துரத்தி, தமிழனின் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்.
———————————
இப்பதிவுக்குப் பின்னூட்டமாக, ஐயா பழசெல்வராஜூ அவர்கள், தமிழர்கள் புத்தாண்டு தைத்திங்கள் ஒன்று என்பதற்கான ஒரு கல்வெட்டு ஆதாரத்தைப் பின்னூட்டமாகத் தந்திருந்தார்கள். அதை அப்படியே மீள்பதிவு செய்கிறேன்.
பழசெல்வராஜூ ஐயாவுக்கு மிக்க நன்றி! சரியான நேரத்தில், சரியான ஆவணத்தைத் தந்துள்ளார்கள்.
“தமிழர்கள் புத்தாண்டு தை முதல் தேதியா அல்லது சித்திரை முதல் தேதியா?” என்ற கேள்விக்கு, ‘ரத்தினச் சுருக்கமான' பதில் தரவேண்டும் என்று “தை முதல் தேதி” என்று பதில் தந்த உடனேயே திரு. வெங்கடேஷ் ராஜரத்தினம் என்பவர், ‘ஆதாரம்?’ என்று சுவற்றிலடித்த பந்துபோல் வேகமாகப் பதில் வினா எழுப்பினார்.
உடனே, இதைப்போன்றதொரு கேள்விக்குத் தந்த பதிலை உடனே மீள்பதிவு செய்தேன்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! தமிழ் ஆண்டுப் பெயர்கள் சமற்கிருதத்தில் இருக்க வாய்ப்பே இல்லை!
சித்திரை மாதம் துவங்குவதாகக் கூறப்படும் தமிழ் ஆண்டு 60 பெயர்களும் ஆரியப் பெயர்கள் என்பதால் அவை சத்தியமாகத் தமிழ் ஆண்டுகளின் பெயர்களாக இருக்க சாத்தியம் இல்லை.
பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் இனத்தின் ஆண்டுகளை எப்படி ஆரியர்கள் அழித்தனர் என்ற வரலாறைக் கண்டுபிடிக்க, இந்த வரலாற்றுக் கல்வெட்டுச் சான்று ஒரு புதிய மைல் கல்.
இக்கல்வெட்டு ஆதாரத்தில் நொட்டை சொல்ல ஓராயிரம் பி.யே. கிருஷ்ணன்-கள் ஆரியர்களிடையே உதிப்பார்கள்.
தமிழர்களது தொல்-வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்படுவது ஆரியர்களுக்கு அச்சம் கொடுக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. தமிழினம் தனது மரபுவழி வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்று விடமாட்டார்கள் அந்தப் பொறாமைக்காரர்கள். இதுதான் தமிழர்களுக்கெல்லாம் எரிச்சல் தருகிறது.
ஆரியர்கள் ஆரியர் சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நன்றாக செழிப்புடன் வாழட்டும்; தமிழர்களைத் தமிழர்கள் மரபுப்படி வாழவிடுங்கள் என்றுதான் நாம் ஆரியர்களிடம் சொல்கிறோம்.
ஆரியர்கள் மரபுகளைத் தமிழர்கள் மீது, ‘அந்த இன்னொரு பழம்தாண்ணே இது’ என்று ஆரியச் சித்திரையை தமிழர்கள் பால் திணிக்கும்போதுதான் தான் உரசல் வருகிறது.
இதில் உள்ளபடியே ஆரியர்களுக்கு என்ன பிரச்னை என்பது தமிழர்களுக்குப் புரியவில்லை.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போமே! என்ன குறைந்துவிடப்போகிறது?
ஆரியப் பிராமணர்கள் மரபைத்தான் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று சதிசெய்வதை உடனே நிறுத்தி, நல்லெண்ணத்தோடு வாழலாமே! தமிழர்களை தமிழர்தம் தொல்மரபில் பெருமையுடன் வாழவிடலாமே!
பெருந்தன்மையுடன் சிந்தித்தால், ஒரு நல்லெண்ணத்தின் துவக்கமாக இருக்கும்.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.கிருஷ்ணன்
நல்லபெருமாள் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment