அமானுஷ்யம் என்ற வார்த்தைக்கு தமிழில் இணையான சொல் என்ன உள்ளது?
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்வுகளை அமானுஷ்யம் என்கின்றனர். ( a condition where there is no indication of human presence).
இவை பெரும்பாலும் இயல்பான வாழ்வில் காணாத விசயங்களாகவும், பேய், ஆவி போன்ற நம்பிக்கைகள் தொடர்புடையதாகவும் சொல்லால், செயலால் விவரிக்க இயலாதவையாகவும் இருக்கலாம்.
இது ஆங்கிலத்தில் சூப்பர் நேச்சுரல் (supernatural) எனச் சொல்லப்படுகிறது.
சில நேரங்களில் நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை கூட நமக்கு கிலியை ஏற்படுத்தலாம். இத்தகைய உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதே 'அமானுஷ்யம்' - எனப்பட்டது.
பகுத்தறிவு தோன்றாத காலங்களில் - ஐம்புலன்களுக்குத் தென்படாத எதுவும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதான ஒரு தெய்வீக அல்லது தீமையின் ஆற்றலாகவே நம்பப்பட்டது. (சுழிக் காற்று, தானாகத் தீ எரிதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் கூட 'அமானுஷ்ய' ஆற்றல்களாகச் சித்தரிக்கப்பட்டன) .
அமானுஷ்யம் = அல் + மனுஷ்ய - என்றால் 'மனுஷ்ய அல்லாத' என்பதைக் குறிக்கிறது.
அதாவது... மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறிய எனப் பொருள்.
தமிழில் 'மனிதம் + அற்ற = மனிதமற்ற' (மனிதத் தன்மையற்ற) எனச் சொல்லலாம். ஏனெனில் மனிதன் - என்ற தூய தமிழ்ச் சொல்லிலிருந்து தோன்றிய சொல்லே மனுஷ்ய ஆகும்.
மனிதன் > மனுசன் > மனுஷன் > மனுஷ்ய.
(மனுஷ்ய = மனிதப் பண்பு, மனிதத் தன்மை) .
மனிதன், மனுசன், மனுஷன், மானுடன், மானிடன் போன்ற அனைத்து சொற்களும் ஒரே பொருள் குறிப்பனவே!
No comments:
Post a Comment