Pages

Tuesday, 29 December 2020

புத்தர் பற்றிய அறியப்படாத தகவல்கள்.


ஆரிய எதிர்ப்பின் ஆசான், மானுடத்தின் மாமன்னர்.

ஆரியர்களின் வர்ணாசனமிறையின் படி சத்திரிய குலத்தில் பிறந்தவர் . பாப்பணர் ஆதிக்கத்தில் இருந்த அரச குலத்தில் பாப்பணர்க்கு அடிமை சேவகம் செய்ய உலக வாழ்வு தெரியாது , மக்களது இன்னல் , இன்பம் ,இயலுமை தெரிவிக்கப்படாமல் வழர்ந்த அந்தக் காலத்து posh boy ..

அரண்மணை இலௌகீகம் , திருமணம் ,கழியாட்டம் என வாழ்ந்த அந்த சிந்திக்கும் இளைஞன் தடைமீறி நாட்டு மக்களை காண செல்கிறார். மரணம் ,நேய் , மிருகவதை ,மனிதவதை கண்டு மனம் நோகின்றார் .

சிந்திக்கின்றார் ……

ஒரு குறிப்பிட்ட மனிதக் கூட்டம் , அரசர் குல ஆதரவுடன் , அரக்கர் என பெயரிட்ட இன்னுமொரு மனிதகுலத்தை அடிமைப்படுத்தி அட்டூழியம் செய்கிறார்கள். தமது உணவிற்காக விலங்குகளை கொல்கிறார்கள். தானும் அரசனாகி அந்த கொடுமைகளுக்கு துணைபோகாது அரச உரிமையை துறந்து அரச மரத்தடி செல்கிறார். அவர் அந்தக்காலத்து இடதுசாரி ,( communist).

அடிமைபடுத்தப்பட்ட மக்களை வாழ்விற்கு நல் அறத்தை போதிக்கின்றார் . பாப்பணர் கூறும் கட்டுக்கதைகளினால் உருவான கடவுள்களை எதிர்த்து மக்களிடம் அறத்தையும் ,தர்மத்தையும் , மனிதத்தையும் , ஜீவகாருண்யத்தையும் போதிக்கின்றார். அவர் அந்தக்காலத்து பேரியாரியவாதி ( periyarist ) . அந்தக்காலத்து அம்பேத்கார் அவர் .

ஆரியர் கூட்டத்து அடக்குமுறைகளை அவர்களுள் ஒருவராக இருந்து அனுபவிக்காது , உலகில் பிறந்த அனைத்து உயிர்கள் சார்பிலும் அதிகாரத்தை , அந்தஸ்தை, ஆசையை துறந்த பொதுநலவாதி ..

சாதிமுறையை ஒழிக்க உயர் சாதி தமது சாதிய அனுகூலங்களை உதறித்தள்ளி சுயசாதியை மறுக்கவேண்டும் என பாடம் காட்டியவர் .

இது எனது பார்வையில் அந்த போதிமாதவன் ..

பின்னர் அவரது சீடர்கள் அவரை கடவுளாக்கியதும் ,பார்பணீயம் பௌத்தத்தை இந்திய நிலமிருந்து துடைத்தெறிந்ததும் வரலாறு.

உலகில் அனைவருக்கும் பொருதுதமான தத்துவத்தை பௌத்தம் எனும் வடிவில் தந்தவர் அந்த போதிமாதவன்.

No comments:

Post a Comment