நீரின்றி அமையாது உலகு என்பர்….
தண்ணீரை வைத்து மற்ற பொருட்களை சுத்தம் செய்த காலம் போய் நாம் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
எந்த கடைக்கு சென்றாலும் இது ஓல்ட் பேஷன், அல்லது ப்ரெஷா இல்லையா?? இந்த வசனங்கள் அடிக்கடி நாம் காதில் ஒலிக்க கூடியவை.
மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றான தண்ணீர், நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது, எவ்வளவு பழமையான தண்ணீரை நாம் அருந்துகிறோம் என யோசித்தது உண்டா???
நம் சோலார் சிஸ்டம் உருவாதற்கு முன்னர் உருவான தண்ணீரை நாம் குடிக்க முடியுமா??
அறிவியல் ஆய்வின்படி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு காஸ்மிக் மேகங்களில் மத்தியில் மிதக்கும் பனிப்புள்ளிகள் மூலம் உருவானது கடல் என கூறுகின்றனர்.
இது நம் சோலார் சிஸ்டம் உருவாதற்கு முன்னர் உருவானது எனவும் கூறுகின்றனர்.
இவ்வளவு பழமையான தண்ணீர் இந்த பூமியில் உள்ளது. இன்றும் நாம் இதனை உபயோகிக்க வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். நாம் குடிக்கும் தண்ணீர் சோலார் சிஸ்டம் உருவாதற்கு முன்னர் உருவானதாக கூற இருக்க வாய்ப்புண்டு.
அடுத்து முறை தண்ணீர் அருந்தும்போது அது எவ்வளவு பழமை வாய்ந்தது என கொஞ்சம் சிந்தித்து அருந்துங்கள்.
No comments:
Post a Comment