முருகன் குறிஞ்சி நில தெய்வம் என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா ? சேயோன் தமிழர்களின் மூதாதை என்பதை சிந்து சமவெளி நாகரீக முத்திரையிலிருந்து கூட நிறுவ முடியும்.
முருகனை, அய்யனாரை , கருப்பண்ணசாமியை வழிபட்ட தமிழர்கள் தான் சாதிய கொடுமையின் காரணமாக பிற மதத்தை தழுவியிருக்கிறார்கள்.
இசுலாமியரும் கிறிஸ்தவரும் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்களோ இல்லை பாபரின் , ராபர்ட் கிளைவின் வாரிசோ அல்ல , அவர்களும் பெரும்பான்மை தேசிய இனமான தமிழர்கள் தான் ஐயா. அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மார்க்கம் தான் இசுலாமும் கிறித்துவமும் அவர்கள் முருகனை வழிபட்டாலும் வழிபடாவிட்டாலும் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று ஆகிவிடாது !
தாத்தா காயிதே மில்லத் பாராளுமன்றத்தில் தமிழை தேசிய மொழியாக்க வேண்டி முழங்கி கொண்டிருந்தார் அப்போது நேரு குறுக்கிட்டு என்ன மில்லத் நீங்க உருது மொழியை தானே கேட்டிருக்க வேண்டும் தமிழை முன்மொழிகிறீர்களே என்று ? அதற்கு காயிதே மில்லத் சொன்னார் "நான் அல்லாஹ் என்று அழைப்பதற்கு முன்பே 'அம்மா' என்று அழைத்தவன் …. இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி!" என்று பதிலளித்தார்.
பழனி பாபா சொல்கிறார் " நாங்கள் இங்கு தான் இருந்தோம் மதம் தான் எங்களிடம் வந்தது!" என்று … அதற்கு என்ன அர்த்தம் ? நாங்கள் தமிழர்கள் தான் மார்க்கம் தான் எங்களிடம் வந்தது என்று சொல்கிறார்!
எனக்கு தெரிந்து வைசூரி வந்த கிறித்துவர்கள் , குழந்தை வரம் வேண்டி இசுலாமியரும் மாரியம்மனுக்கு வேண்டிகொண்டு வேண்டுதல் நிறைவேற்றியதையும் பார்த்துள்ளேன். வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் நாகூர் ஆண்டவரிடமும் வேண்டிக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றும் சைவ வைணவர்களையும் பார்த்துள்ளேன்.
சந்தனக்கூடு விழாவின் போது சந்தனம் வழங்கும் சைவர்களும் உள்ளனர் , தர்காவில் காத்து கருப்பு அண்டாமல் மந்திரித்து கொள்ளும் அனைத்து மதத்தினரும் உண்டு.
இந்த கேள்வியில் சமய ஒற்றுமையை கேலி செய்து அதை சொன்ன சீமானை கோமாளியாக காட்ட மெனக்கெட்டுள்ளதையே பார்க்க முடிகிறது.
நான் எந்த மதத்தை நாளை தழுவினாலும் என் தாத்தா பாட்டன் பூட்டன் மாறப்போவதில்லையே ? , அவர்களை நான் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவர்கள் எனது மூதாதை தானே ?
இசுலாத்தை ஏற்றிருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் தந்தை சைவ மதத்தவரான இளையராஜா தானே, இல்லை என்று மறுக்க முடியுமா ?
பச்சை தெய்வம் அல் கதிர் என்ற பெயரில் முருகனை அரபியர்களும் கடவுளாக வழிபடுகிறார்கள் , தமுஸ் / தமுசித் / தமிழ் சித்தன் மற்றும் இனானா (வள்ளி) என்று மொசபொத்தோமியர்களும் வழிபட்டுள்ளனர், இப்படி உலகம் முழுவதும் முருகன் வழிபாடு இருந்திருக்கிறது !
மானுட குலத்தின் மூதாதை முருகன் என்பது மறுப்பதற்கில்லை !
No comments:
Post a Comment